Wednesday, February 23, 2011

முரட்டுப்பயலே, முரட்டுப்பயலே சேதி கேளடா?


வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, "டிவிபார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும்உடலில் பருமனும் கூடும் எனஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம், "டிவி'  பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துஅசோசம் சமூக மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது.  சென்னைமும்பைடில்லிபாட்னாசண்டிகார் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த ஆறு முதல் 17 வயது வரையிலான 3,000 பிள்ளைகளிடமும், 3,000 பெற்றோரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தைகள் வாரத்திற்கு 35மணி நேரத்திற்கு அதிகமாக, "டிவிபார்ப்பதால்அவர்கள் மனதளவிலும்,உடலளவிலும் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைகள் முரட்டு தனத்துடனும்அதிக உடல் பருமனுடனும் இருப்பர்.  அவர்களுக்கு படிப்பதிலும் கவனம் சிதறும். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக, "டிவிபார்ப்பதால்இந்த விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக "டிவிபார்ப்பது தான் உடல் நலத்திற்கும்மன நலத்திற்கும் பாதுகாப்பானது.  பெரும்பாலான பெற்றோர்தங்களது குழந்தைகள், "டிவி'யில் வரும் விளம்பரங்களைப் பார்த்து,  சத்துக் குறைவான  உருளைக்கிழங்கு சிப்ஸ்குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

"டிவிநிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளும்நாகரிகமற்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவதாக, 90 சதவீத பெற்றோர் ஒப்புக் கொள்கின்றனர். 12 முதல் 18 வயது வரையிலான 54 சதவீத பிள்ளைகள்,தங்களது பெற்றோருடன் அமர்ந்து, "டிவிபார்ப்பதையே விரும்புகின்றனர். "ரியாலிட்டி ÷ஷா'க்களை 76 சதவீத பேர் விரும்புகின்றனர்.  பெரும்பாலான, "டிவிநிகழ்ச்சிகளில் வன்முறைஆபாசம் உள்ளிட்டவை தலை தூக்கியுள்ளதாகவும்அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், 60 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் வன்முறை பாதைக்கு செல்வதற்கு, "டிவிநிகழ்ச்சிகள் தூண்டுகின்றன என்று 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!