Showing posts with label வர்ணாசிரமம். Show all posts
Showing posts with label வர்ணாசிரமம். Show all posts

Friday, July 1, 2011

வர்ணாசிரமம், ஹிந்துத்துவா நமக்கு தந்த பரிசு! மேலவளவு!

 மறக்க முடியுமா மேலவளவை. இங்குதான்வர்ணாசிரம ஹிந்து ஆதிக்க வெறியர்களால் ஆறு தலித் சகோதர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இந்த ஜாதி வெறியர்கள் எப்படி தோன்றினார்கள், இவர்களிடம் ஜாதி என்ற அந்த விஷ வித்தை விதைத்து எது என்று பார்த்தால் அதுதான் ஹிந்துதுவாவின் அடிப்படை கொள்கை சித்தாந்தமான வர்ணாசிரம கொள்கை.

இந்த கொள்கைதான் ஒரு சாதாரண மனிதனை ஜாதி வெறி கொண்டவனாக மாற்றி ஆறு அப்பாவி உயிர்களை கொன்று குவிக்க காரணமாக அமைந்தது அன்று என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் முருகேசன்.

இவர் மற்றும் துணைத்தலைவர் மூக்கன் மற்றும் இதே ஊரைச் சேர்நத ராஜா, செல்லத்துரை, பூபதி, சேவுகமூர்த்தி ஆகிய ஆறு பேரும் கடந்த 1997 ஜூன் 30ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அங்கு தீயில் எரிந்து குடிசை வீடுகளுக்கான நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் மீண்டும் ஊருக்குச் சென்ற போது ஆறு பேரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மேலவளவில் மணி மண்டபம் கட்டப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் இங்கு தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினருக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளது.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!