Showing posts with label சாமியார். Show all posts
Showing posts with label சாமியார். Show all posts

Sunday, November 21, 2010

அறிவை அடகு வைக்கும் நிலை ........


படத்தில் இருப்பது புட்டபருத்தி சாய்பாபா! இந்த சாமியார் ஒரு டுபாகூர்  என்பதை பிபிசி செய்தி நிறுவனம், விடியோ ஆதாரத்துடன்வெளி்யிட்டு இவனின் உண்மை முகத்தை மக்களுக்கு தோலுரித்து காட்டி இருக்க, இந்திய நாட்டின் முதல் குடிமகனாக கருதப்படும் குடியரது தலைவர் இந்த சாமியாருக்கு கூன் போடும் காட்சி நேற்று சாமியாரின் பிறந்த நாளையோட்டி நடைபெற்ற மகளீர் நிகழ்ச்சியில் நிகழ்ந்துள்ளது.
இதில் இன்னும் கொடுமையான விசயம் என்வெனில் 23 ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த சாமியாரின் பிறந்தாள் விழாவுக்கு பாரத நாட்டின் பிரதர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறாராம்.
இந்த சாமியார் மக்களை ஏமாற்றுகிறான் என்பதை பிபிசி வீடியோவை பார்க்கும் பாமரனும் புரிந்து கொள்வான் என்றிருக்க பாரத பிரமருக்கும் குடியரசு தலைவருக்கு புரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.
நாட்டின் தலைவர்கள் சாமியார்களிடம் தங்களது அறிவை அடகு வைக்கும் நிலை மாறினால் தான் நாடு முன்னேறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து..

Tuesday, March 2, 2010

த்தூ!

பிரபல தமிழக சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள அவருடைய பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

அந்த வீடியோ காட்சியில் ஆசிரமம் போல் காணப்படும் அங்கு சாமியாரும் நடிகை ரஞ்சிதாவும் ஒரு அறையில் உள்ளனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதை தொடர்ந்து விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் வீடியோ காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்த செய்திகள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, கடலூர் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் நித்தியானந்தா சாமியாரின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து அங்கு ஒட்டப்பட்டு இருந்த அவரின் படங்களை கிழித்தெறிந்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாமியாரின் படத்தை கிழித்தவர்கள், நித்யானந்த சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரின் ஆசிரமத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!