Friday, November 29, 2013

மோடி ஒரு கொலைகார வெறிநாய் - குமுதம்!

மோடி ஒரு கொலைகார வெறிநாய் - குமுதம்!

மோடி இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை - ‍‍ குமுதம்

நரேந்திரமோடி எனும் நரமாமிச பட்சினியின் கண்ணசைவில் குஜராத்தில் கரிக்கட்டைகளாக ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் மகா கோரமான‌ இனப்படுகொலை நடந்தது.

ஆனால் இந்த மகா கோரமான‌ முஸ்லீம் இன படுகொலையின் சூத்திரதாரி மோடி இன்னும் 'கதாநாயகனாக' வலம்வந்து கொண்டிருக்கிறார்.

இந்த மோடி இருக்கவேண்டிய இடம் எது? என்று கடந்த 7 -11 -2007 அன்று குமுதம் அரசு கூறியது.
 
http://vanjoor-vanjoor.blogspot.com/2013/11/blog-post_28.html

Tuesday, November 26, 2013

அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல் இந்தியர் கைது

அமெரிக்காவில் யூதர் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, சந்தேகப்ப டும்படியான நபர்கள் யாரேனும் இருந்தாலோ அல்லது இனவெறி நோக்கத்தாலோ அந்த நபர்கள் மீது குத்து விட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்து கின்றனர். இதற்கு ‘நாக் அவுட் அட்டாக்ஸ்’ என்று பெயர்.சமீபகாலமாக இவ்வகையான நாக் அவுட் தாக்குதல்கள் அதி கரித்திருக்கின்றன. இதனிடையே, அம்ரித் மாராஜ் (28) என்ற இந்திய வம்சாவளி இளைஞர், 24 வயது யூத இளைஞரை இனவெறி நோக்கத்தோடு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அவருடன் மேலும் மூவர் சேர்ந்து தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான யூதர், குல்லா அணிந்தி ருந்தார்.
மேற்காசிய இனத்துக்கு எதிரான கோஷத்துடன் மாராஜ் தாக்குதலில் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ரூ. 47 ஆயிரம் ரொக்க ஜாமீனில் மாராஜ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுபோன்ற 6 நாக்அவுட் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை குறித்து விசாரிக்கப்படுவதாகவும் நியூ ஹாவென் பகுதி போலீஸார் தெரிவித்துள்ளனர். -பி.டி.ஐ

 http://tamil.thehindu.com/world/

சங்கரராமன் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு: நடுக்கத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்

புதுச்சேரி: காஞ்சி சங்கராச்சாரியாரியார் ஜெயேந்திரர் மீதான சங்கரராமன் கொலை வழக்கில் நாளை புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.
சங்கரராமன் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்து வந்தார். சங்கர மடத்தில் ஜெயேந்திரர் பொறுப்பில் நடைபெறும் தில்லு முல்லுகளை கண்டுபிடித்து அரசுக்கு கடிதம் அனுப்பிக் கொண்டே வந்தார். இதனால் ஜெயேந்திரர் தரப்புக்கும் சங்கரராமன் தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சங்கரராமன் 2004ம் ஆண்டு வரதராஜ பெருமாள் கோயிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் தொடக்கத்தில் சிலர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் அவர் தாங்கள் போலி குற்றவாளிகள் என்றும் தங்களை சிலர்தான் சரணடைய வைத்தனர் என்று சொல்லப் போக வழக்கு விஸ்வரூபம் எடுத்தது.
பின்னர் பிரேம்குமார், டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், சக்திவேல் ஆகிய போலீஸ் அதிகாரிகள் அடங்கிய டீம் நடத்திய நடத்திய தீவிர விசாரணையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் சுந்தரேச அய்யர், ரகு, கே.எஸ்.குமார், ரவுடி அப்பு உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கதிவரன் என்பவர் அண்மையில் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் நடைபெற்ற இந்த வழக்கை புதுச்சேரிக்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் தரப்பு வழக்கு போட்டது. இதனால் இந்த வழக்கு புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது.
அத்துடன் இந்த வழக்கு தொடங்கிய உத்திரமேரூர் நீதிமன்றம், செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றங்களில் ஜெயேந்திரருக்கு எதிராக சாட்சி சொன்ன 187 பேரில் 82 பேர் நாங்கள் போலீஸ் பயமுறுத்தியதால் ஜெயேந்திரருக்கு எதிராக சாட்சி சொன்னோம் என புதுவை நீதிமன்றத்தில் சொன்னார்கள்.
ரவுடிகளுக்கும் ஜெயேந்திரருக்கும் உள்ள தொடர்புகளை பற்றி சொன்ன அப்ரூவர் ரவிசுப்ரமணியனும் பல்டி சாட்சியானார். அதேபோல் கொலையாளிகளை நேரில் பார்த்ததாக சொன்னவர்களில் சங்கரராமனின் மனைவி பத்மாவும் மகள் உமாவும் மகன் கணேஷும் அடக்கம். அவர்களும் கூட தங்களுக்கு எதுவும் தெரியாது என பிறழ் சாட்சியாகி விட்டனர்.
மேலும் புதுச்சேரியில் வழக்கை விசாரித்த நீதிபதி ராமசாமியை ஜெயேந்திரர் தரப்பு வளைத்தது. இது தொடர்பாக இளம்பெண் ஒருவர் நீதிபதி ராமசாமி, ஜெயேந்திரர் ஆகியோருடன் பேசும் தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி பெரும்பரப்பை ஏற்படுத்தியது. அதனால் அந்த நீதிபதி மாற்றப்பட்டார்.
கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் தேதி பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று நீதிபதி முருகன் அறிவித்தார்.
இதனால் நாளை குற்றம்சாட்டப்பட்டோர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நாளை வழங்கப்பட இருக்கும் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Monday, November 25, 2013

அமர்ந்திருக்க வேண்டாம்

  1. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!