Showing posts with label உம்மும்மா. Show all posts
Showing posts with label உம்மும்மா. Show all posts

Sunday, January 25, 2009

முதுமை ஒரு அழையா விருந்தாளி!

(சகோ.ஜாஹிர் எழுதிய கருத்தில் கவர்ந்து இழுக்கப்பட்டதால் இந்த சின்ன கவிதை)
முதியோர் சொல் வார்தையும் ,முது நெல்லிகாய்யும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்-இது ப(கி)ழ மொழி!
----------------------------------------------------------------------------
அன்று...
சுருக்கு பையிலிருந்து தோல் சுருங்கிய கையில் வாப்பிச்சா எடுத்து தரும் அந்த 10 நாயா பைசா,தந்த சந்தோசம்!
உம்மாவின் உம்மாவும்,அவர்களின் உம்மாவும் தந்த(முத்தம்) உம்மாக்களின் அன்பு எச்சில் ஈரம் இன்னும் நெற்றியிலும்...கண்ணத்திலும்!
முதியோர் என்ற அந்த(பெருசு???)பெரியோர்கள் நமக்கு நேச,பாசம் காட்டிய நண்பர்கள் நம்முடன் இன்று இல்லாமல் போன பின்..
பாட்டி கதைகளும்,பக்குவ வைத்தியமும், அன்பு(தாத்தா)அப்பா தந்த கலுக்கோனா,கல்லுக்குச்சி மிட்டாயும் அன்னியமானதுவே!
நேற்று வரை நடந்தது நடந்தவையாகவும் கடந்தவையாகவும் இருந்துவிட்டுப்போகட்டும்..
இனியெனும் நம் தாய்,தந்தையர்களுக்கு சில நேரமேனும் ஒதுக்குவோம்.
இல்லையெனில், நமக்கு நாளைய தலைமுறை நேரம் ஒதுக்காமல் ஒதுங்கியே போகும்.
பின்.....
நம் வயதீக காலம் நான்குக்கு, எட்டு சுவருக்குள்ளேயே அடங்கி போகும்.

by(சகோ.முஹம்மது தஸ்தகீர்)
adiraipost

Saturday, January 24, 2009

சின்ன சின்ன அன்பில்தானே...........

நான் ஓவ்வொறு முறையும் ஊர்வரும்போது சில பெரியவர்களிடம் "மெனக்கட்டு" போய் பேசிக்கொண்டிருப்பேன், இதை எழுத இது போன்ற நம் ஊர் முதியவர்களின் மெளன அழுகையும் காரணம்.அப்போதெல்லாம் அவர்களின் குறைபாடு லிஸ்ட் ரொம்ப நீளமாக இருக்கும். இதன் காரணம்தான் என்ன என்றால் இது பெரும்பாலும் பிரச்சினை possasivenessலிருந்து ஆரம்பித்ததாக இருக்கும்.


இவர்களின் குறை பெரும்பாலும் "பொட்டியோட நேரா பொண்டாட்டி வீட்டுலெ போயி எறங்கிட்டான் வாப்பா' ...இப்படித்தான் இருக்கும். நாம் இப்போது internet உலகத்தில் இருக்கிறோம் , ச்மயங்களில் "நானோ" டெக்னாலஜி பற்றி பேசக்கற்றுகொண்டோம், ஆனால் நமது சின்னவயதில் நம்மை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி வாசலில் நின்ற இதுபோன்ற எத்தனையோ உயிர்களின் உல்லத்தை புரிந்து கொள்ளத்தவறிவிட்டோம்.

நம் ஊரில் எல்லோருக்கும் சம்பாதிப்பதின் முக்கியத்துவம் தெரிந்து விட்டது. இந்த நவீன காலத்தின் தாக்கம் [ தாக்கம் தவறல்ல] சில சமயங்களில் நம் கூட இருந்த முதியவ்ர்களை [அப்பா..உம்மும்மா/ராத்தம்மா, வாப்புச்சி உறவுகள்....அல்லது உங்கள் தாயாக கூட இருக்கலாம்] நம்மையும் அறியாமல் ஒதுக்கி விட்டோமா என கேட்கத்தோன்றுகிறது.

இந்த முதியர்களின் புழக்கத்தை அதிகம் போனால் ஒரு 40X50 ல் சுருக்கிவிட்டோம்

பெரும்பாலான பெரியவர்களை நாம் கல்யாணம்/காது குத்து / சுன்னத் மஜ்லீஸ்களில் " வாழ்ந்த மனுசிலெ..அவ்வொ கையாலெ மாலெ போடச்சொல்லுங்க" என்ற வசனத்துக்கு மட்டும் பயன்படுத்துகிறோம். அல்லது நோயில் விழுந்தால் கஞ்சி / மாத்திரை கொடுக்கும்போது
மட்டும் விழிக்கிறோம்.

வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்களுக்கு இதுவொரு வேண்டுகோள்..முடித்தால் இவர்களுக்கு நோய்க்கும் / பிணிக்கும் பார்க்கும் அமபாசிடர்களை அழைக்கும்போது கொஞ்சம் காற்றோற்றமான பகுதியில் கொஞ்சம் நிப்பாற்றி உலகத்தின் விசாலம் காட்டுங்கள்..முடிந்தால் உங்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் அவர்களின் கேட்டராக்ட் விழுந்த கண்களும், ரத்தம் சுண்டிப்போய் சுருங்கிய விரல்களும் எப்படி ஏணியாய் இருந்தது என்று அவர்கள் காது பட சொல்லுங்கள்.

அந்த முதியவர்களை அழைத்துக்கொண்டு குளுமணாலிக்கும்,கொடைக்கானலுக்கும் அழைத்துபோக சொல்லவில்லை. அட்லீஸ்ட் பக்கத்தில் இருக்கும் அதிராம்பட்டினத்து கடற்கரை, கொஞ்சம் தூரப்போனால் ராஜாமடத்துபாலம் [ அங்கு உட்கார்ந்து அந்தி சாயும் பொழுதை ரசித்துப்பாருங்கள்] ...இப்படி அழைத்துசெல்ல பேரன் இருக்கிறான் / மகன் இருக்கிறான் .என்ற சூழ்நிலை இருந்தாலே இந்த வயதானவர்களின் கடைசிகாலம் கொஞசமாவ்து சந்தோசம் கலந்து இருக்கும்.

"அப்படி ஒன்றும் ஒதுக்கவில்லை அவர்களை" என்ங்கிறீர்களா?..வாழ்துக்கள்...எப்படி
இப்படி வேறுபட்டு அனுசரனையாய் இருக்கிறீர்கள் என்று எழுதுஙகள். வரும் சந்ததியினருக்கு ஒரு reference கிடைக்கும்.

வீட்டுப்பிரச்சினைகளில் இவர்கள் சம்பந்த பட்டிருந்தால் ..தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு பிரச்சினையை விசாரிக்காதீர்கள்.சமயங்களில் காலம் மிகத்தாமதமாக் சில விசயங்களை உணர்த்தும்..அது வரை அந்த முதியவர்களும் உயிருடன் இருக்க வேண்டும். அவர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை சந்தோசமாக வைத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.


சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கிறது.

by zakir hussain
adiraipost

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!