Sunday, January 25, 2009

முதுமை ஒரு அழையா விருந்தாளி!

(சகோ.ஜாஹிர் எழுதிய கருத்தில் கவர்ந்து இழுக்கப்பட்டதால் இந்த சின்ன கவிதை)
முதியோர் சொல் வார்தையும் ,முது நெல்லிகாய்யும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்-இது ப(கி)ழ மொழி!
----------------------------------------------------------------------------
அன்று...
சுருக்கு பையிலிருந்து தோல் சுருங்கிய கையில் வாப்பிச்சா எடுத்து தரும் அந்த 10 நாயா பைசா,தந்த சந்தோசம்!
உம்மாவின் உம்மாவும்,அவர்களின் உம்மாவும் தந்த(முத்தம்) உம்மாக்களின் அன்பு எச்சில் ஈரம் இன்னும் நெற்றியிலும்...கண்ணத்திலும்!
முதியோர் என்ற அந்த(பெருசு???)பெரியோர்கள் நமக்கு நேச,பாசம் காட்டிய நண்பர்கள் நம்முடன் இன்று இல்லாமல் போன பின்..
பாட்டி கதைகளும்,பக்குவ வைத்தியமும், அன்பு(தாத்தா)அப்பா தந்த கலுக்கோனா,கல்லுக்குச்சி மிட்டாயும் அன்னியமானதுவே!
நேற்று வரை நடந்தது நடந்தவையாகவும் கடந்தவையாகவும் இருந்துவிட்டுப்போகட்டும்..
இனியெனும் நம் தாய்,தந்தையர்களுக்கு சில நேரமேனும் ஒதுக்குவோம்.
இல்லையெனில், நமக்கு நாளைய தலைமுறை நேரம் ஒதுக்காமல் ஒதுங்கியே போகும்.
பின்.....
நம் வயதீக காலம் நான்குக்கு, எட்டு சுவருக்குள்ளேயே அடங்கி போகும்.

by(சகோ.முஹம்மது தஸ்தகீர்)
adiraipost

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!