Showing posts with label தமிழ் நாடு. Show all posts
Showing posts with label தமிழ் நாடு. Show all posts

Wednesday, May 18, 2011

விழித்துக்கொண்ட முஸ்லிம்கள், அலறும் அரசியல் கட்சிகள்

அசாம் மற்றும் கேரளா சட்டசபை தேர்தலில், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் முஸ்லிம் மக்கள், மதம் சார்ந்த கட்சிக்கு இம்முறை ஓட்டளித்திருப்பது, முன்பு எப்போதும் நடக்காதது என்று, அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில், மவுலானா பத்ருதின் அஜ்மல் குவாஸ்மி தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, 75 இடங்களில் தனித்து போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில், குனாலிகுட்டி தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 24 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றது. அசாமில், எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அளவிற்கு, அதிக இடங்களில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும், இக்கட்சிகள், அதிகாரம் படைத்த கட்சிகளாக, இம்முறை உருவெடுத்துள்ளன.


முஸ்லிம் சமுதாய கட்சிக்கு, அந்த சமுதாயத்தினரின் ஓட்டு என்ற நிலை உருவாகியுள்ளது. அசாமில் முஸ்லிம்கள் 30 சதவீதமும், கேரளாவில் 25 சதவீதமும் உள்ளனர். வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து, இச்சமுதாய மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும், இக்கட்சி தலைவர்கள், அதிகளவில் கவனம் செலுத்தி உள்ளனர்.இந்த மாநிலங்களுக்கு மாறாக, மேற்குவங்கத்தில், எப்போதும், இடது சாரி கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வந்த முஸ்லிம்கள், சமீபத்திய தேர்தலில், திரிணமுல் தலைமையிலான கூட்டணிக்கு ஓட்டுகளை அளித்துள்ளனர். அதேசமயம், அசாம் மற்றும் கேரளா தேர்தல் முடிவுகளை முன்னிறுத்தி, அதிகளவில் விளம்பரம் செய்தால், இந்த மாநிலங்கள், தவறான முன் உதாரணங்களாக மாறிவிடும் என்று அரசியல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பீகார் மாநிலத்திலும், முஸ்லிம்கள் அதிகம். கடந்தாண்டில், அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஓட்டுகள் அனைத்தும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பக்கம் சாய்ந்தன. இதே நிலைமை தான் இம்முறை மேற்குவங்கத்திலும் பிரதிபலித்துள்ளது.



அதேபோன்று தமிழகத்திலும் முஸ்லிம்களின் பாரம்பரியமான் திமுக ஒட்டு வங்கியை மனித நேய மக்கள் கட்சி உடைத்து,அதிமுக அணிக்கு பெற்றுத்தந்ததால் திமுக தோற்றுப்போனது என்ற திமுகவின் புலம்பலும் கவனிக்கத் தக்கது.

விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்பதை முஸ்லிம்கள் இந்திய அளவில் நன்கு உணரத்தொடங்கியுள்ளனர்.இது ஒரு நல்ல முன்னேற்றம்.

Sunday, April 18, 2010

ஏப்.30: ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க கடைசிநாள்

ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க 30 ந் தேதி கடைசி நாள். அவர்கள் அரசு டாக்டரிடம் பெற்ற மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று இந்திய ஹஜ் குழுவின் துணைத்தலைவர் அபூபக்கர் தெரிவித்தார்.

இந்திய ஹஜ் குழுவின் துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தியாவில் இருந்து புனித பயணமான ஹஜ் பயணத்திற்கு வருடந்தோறும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் போகிறார்கள். ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஹஜ் பயணத்திற்கு ஒவ்வொரு நாட்டில் இருந்தும் எத்தனை பேர் வரவேண்டும் என்று நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த வருடம் முதல் கூடுதலாக 25 ஆயிரம் பேரை இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்ல அனுமதிக்குமாறு முதல் அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் முறைப்படி சவுதி அரசுக்கு அனுப்பப்பட்டது.
இதற்காக கடந்த மார்ச் மாதம் ஜித்தாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சவுதி அரசு அதிகாரிகளிடம் வற்புறுத்தி உள்ளேன். 25 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைக்க உள்ளது. அதற்கான எழுத்துப்பூர்வமான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க 30  ந்தேதி கடைசி நாள். அதாவது அந்தந்த மாநில ஹஜ் கமிட்டிக்கு விண்ணப்பம் வந்து சேர்ந்திட வேண்டும்.

ஹஜ் யாத்திரைசெல்வோரின் ஆரோக்கிய நிலைமை குறித்து மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அப்போது எடுத்த புதிய முடிவு வருமாறு:
ஹஜ் பயணிகள் தங்களது உடல் நலம் குறித்து அரசு மருத்துவர்களிடம் பெற்ற மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டியது கட்டாயம். உடல் நலம் அல்லது மன நலம் குன்றி இருப்போரால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
மத்திய மந்திரி பிரபுல் பட்டேலை சந்தித்து அவர் எடுத்த முடிவின் படி ஹஜ் பயணம் செல்வோர் அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்து நேரடியாக ஹஜ் செல்ல அழைத்துச் செல்லப்படுவார்கள்.

ஹஜ் யாத்திரிகர்கள் தங்கும் இடத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹஜ்பயணம் தொடர்பான புத்தறிவு பயிற்சி முகாம் நடத்தப்படும். இதில் குடிநீர் தட்டுப்பாடு, இட சிக்கனம், மக்காவின் பயணவழித்தெளிவு, ஹஜ் சடங்குகள், உடைமை பாதுகாப்பு, பயணிகளின் உடல் நலக்குறைபாடு முதலியவை பற்றி ஹஜ் பயணிகளிடம் விளக்கிக்கூறப்படும்.

ஹஜ் பயணிகள் குறைந்த அளவில் லக்கேஜ்களை கொண்டுசெல்லவேண்டும். நாட்டில் உள்ள டூர் ஆபரேட்டர்கள் ஒருங்கிணைந்து வழிகாட்டுனர் குழுவை ஜித்தா விமான தளத்தில் இருக்கும்படி உரிய ஏற்பாடு செய்யவேண்டும். அவர்களை மக்காவில் உள்ள விடுதியில் இலவசமாக தங்க வைக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அபூபக்கர் தெரிவித்தார்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!