Showing posts with label ஒபாமா. Show all posts
Showing posts with label ஒபாமா. Show all posts

Saturday, September 11, 2010

அமெரிக்காவில் இஸ்லாம்! கோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா?-ஒபாமா கேள்வி?தொடர் 3

ஒரு இந்துக் கோவிலை, ஒரு சர்ச்சை, ஒரு யூத ஆலயத்தைக் கட்டலாம் என்றால் ஏன் ஒரு மசூதி கட்டுவதற்கு நாம் எதிர்ப்பு [^] தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்கள் விமானம் கொண்டு தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதன் 9வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இரட்டைக்கோபுரம் இருந்த இடத்திற்கு அருகே ஒரு இஸ்லாமிய வழிபாட்டு மையம் கட்டப்படவுள்ளது. ஆனால் இதற்கு அமெரிக்கர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதிபர் ஒபாமா, நிச்சயம் அங்கு மசூதி கட்டப்படும் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் இரட்டைக் கோபுர தாக்குதல் [^] சம்பவ நினைவு தினத்தையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஒபாமா கூறியதாவது...

நியூயார்க் மசூதி விவகாரம் குறித்து நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவரது மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது அமெரிக்கா [^]. 

இந்த பூமியில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. அனைவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கலாம்.

ஒரு இடத்தில் உங்களால் சர்ச் கட்ட முடியும்போது, ஒரு யூத ஆலயம் கட்ட முடிகிறபோது, ஒரு இந்துக் கோவிலை கட்ட முடியும் என்கிறபோது, ஏன் ஒரு மசூதியையும் கட்ட முடியாது.

செப்டம்பர் 11 சம்பவத்தில் பலியான அனைவருக்காகவும் நான் அனுதாபப்டுகிறேன். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நான் முன்பு சந்தித்துள்ளேன். அவர்களது இழப்பும், துயரமும் நீண்டது, அவ்வளவு சீக்கிரம் அடங்க முடியாதது என்பதை நான் உணர்கிறேன், அவர்களது சோகத்தில் நானும் பங்கேற்கிறேன். அனைத்து அமெரிக்கர்களும் இந்தசோகத்தில் பங்கேற்கின்றனர் என்றார் ஒபாமா

Sunday, April 25, 2010

அமெரிக்காவில் இஸ்லாம்! முஸ்லிம் தொழிலதிபர்கள் மாநாடுஅதிபர் ஒபாமா ஏற்பாடு !! தொடர் 2

உலகின் 5 கண்டங்களைச் சேர்ந்த 55 நாடுகளுக்கும் மேற்பட்ட 275 மிகப்பெரிய முஸ்லிம் தொழிலதிபர்கள் பங்கேற்கும் 2 நாள் உலக மாநாட்டை அமெரிக்கா அடுத்த வாரம் நடத்துகிறது. 

அமெரிக்க வரலாற்றில் முஸ்லிம்களை மட்டும் அழைத்து நடத்தும் முதல் தொழில் முனைவோர் மாநாடு இதுதான்.

இந்த மாநாட்டை அதிபர் பராக் ஒபாமா ஏற்பாடு செய்திருக்கிறார். முஸ்லிம்களுக்கு அமெரிக்க அரசு மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பது முதல் நோக்கமாக இருந்தாலும் உலகின் முன்னணி முஸ்லிம் தொழிலதிபர்களுடன் அமெரிக்கா நேரடியாகத் தொடர்பு கொண்டால் அது வாணிபம் பெருக மிகுந்த உதவியாக இருக்கும், அதன் மூலம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பும் வருவாயும் பெருகும் என்பவை பிற நோக்கங்களாகும்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் பேசவிருக்கிறார்கள். அடுத்த முஸ்லிம் தொழிலதிபர்களின் கருத்துகளையும் இருவரும் கேட்பார்கள். ராணுவத் தகவல் தொடர்புக்கான தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் இந்த மாநாட்டு ஏற்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறார். முஸ்லிம் நாடுகளுடன் வலுவான வர்த்தக உறவு அவசியம் என்று அமெரிக்க அரசு கருதுவதாக சர்வதேச வர்த்தகத்துக்கான துணைச் செயலர் பிரான்சிஸ்கோ சாஞ்சஸ் தெரிவிக்கிறார். 

2008-ம் ஆண்டில் முஸ்லிம் நாடுகளுடன் அமெரிக்கா நடத்திய வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 16 லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் என்று சாஞ்சஸ் தெரிவிக்கிறார். வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, சுமுகமான நல்லுறவு ஆகியவற்றுக்கு இந்த மாநாடு பெரிதும் உதவும் என்பதால் அமெரிக்கா இதில் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறது என்பது மாநாட்டுக்கான ஏற்பாடுகளிலிருந்து அறிய முடிகிறது.

இனி--------

இன்ஷா அல்லாஹ்,

அடுத்த பதிவில்.... 

Wednesday, November 5, 2008

அமெரிக்காவின் புதிய அதிபர் முபாரக் ஹுசைன் ஒபாமா!

அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பராக் ஒபாமா தேர்தெடுக்கப்பட்டுள்ளார.கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க மக்கள் தற்போது சவால்களை எதிர்நோக்குகிறார்கள் என்றும் அமெரிக்க மக்களின் கவலைகளை தாம் கவனத்தில் எடுப்பதாகவும் வெற்றி பெற்ற பிறகு தமது ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.

அமெரிக்க மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது தொடர்பில் தான் அமெரிக்க மக்களிடம் உண்மையாக நடந்து கொள்வேன் என்றும் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் நாட்டு மக்கள் அனைவரின் ஆதரவும் தேவை என்றும், ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள் வரும் போது மக்களிடம் கருத்துக்களை கேட்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது வெற்றியானது நாட்டில் மாறுதல் ஏற்படுவதற்கான ஒரு உண்மையான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் கருத்து வெளியிட்டுள்ளார் பராக் ஒபாமா.

இராக் மற்றும் அமெரிக்காவிடையே புதிய பாதுகாப்பு உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், அமெரிக்கப் படைகள் தமது நாட்டிலிருந்து வெளியேற ஒரு திட்டமிட்ட கால அட்டவணை தேவை என்பதை இராக் முன்னெடுத்து வருகிறது. எனவே இந்த நிலைப்பாட்டை பொறுத்த வரை தற்போது அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ள ஜான் மெக்கெயினை விட அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா அவர்கள் நெருக்கமாக இருப்பதாக இராக்கியர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் இராக்கின் முன்னுரிமைகளை விட அமெரிக்காவின் முன்னுரிமைகள் என்ன என்பது குறித்துதான் புதிய அதிபரின் கொள்கைகள் இருக்கும் என்கிற கவலைகளும் இருக்கின்றன.

ஒபாமா அவர்களின் வெற்றியை இராக் வரவேற்றுள்ள போதிலும், மற்ற அரசியல்வாதிகள் நாடு இன்னமும் ஸ்திரத்தன்மை இல்லாத ஒரு நிலையில் இருக்கும் வேளையில் அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம் எனக் கோரியுள்ளனர்.

ஆப்கானிய அதிபர் தமது நாட்டின் ஆதரவு அமெரிக்காவுக்கு உண்டு என்றும், தமது அரசு அமெரிக்க அரசை பெருமளவு சார்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார். ஆப்கானின் மிக சக்தி வாய்ந்த கூட்டணி நாடாகவும் அந்நாட்டுக்கு பெரிய அளவில் உதவிகளை அளிக்கும் நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு துருப்புகளால் ஆப்கானிய பொதுமக்கள் கொல்லப்படுவது மேலும் அதிகரிக்கின்றன என்கிற கூறப்படுகின்ற நிலையிலும், மக்களிடையே இது தொடர்பில் விரக்தி மேலோங்கி வரும் நிலையிலும் ஆப்கான் அதிபரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

அமெரிக்க நிறுவனங்களின் வேலைகள், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படாமல், அமெரிக்காவுக்கு உள்ளேயே செய்யப்படுவதை தாம் ஊக்குவிக்கப்போவதாக ஒபாமா அவர்கள் கூறியிருப்பது, இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் பெருகிவந்த அவுட்சோர்சிங் துறையை பாதிக்கக்கூடும் என்றும், இது இந்திய நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் அதிபர் தேர்ததலோடு நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளதை ஆப்பிரிக்காவிலுள்ள மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
தென்னாப்பிரிக்காவின் அதிபர் தொடக்கம், சோமாலியாவின் அதிபர் வரை ஆப்பிரிக்காவின் பல தேசத்து தலைவர்கள் தமது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துள்ளனர்.

ஒபாமாவின் வெற்றி, உலகத்தை மேம்பட்ட ஒரு வாழ்விடமாக்க விழையும் கனவை அனைவராலும் காண முடியும் என்பதை வெளிக்காட்டியுள்ளது என்று நெல்சன் மண்டேலா கருத்து கூறியுள்ளார்.

பராக் ஒபாமாவின் தந்தையின் நாடான கென்யாவில் வியாழக்கிழமை அவரது வெற்றியை கொண்டாடும் முகமாக தேசிய விடுமுறையாக அதிபர் ம்வாய் கிபாக்கி அறிவித்துள்ளார்.

அதிபராக அவர் பதவியேற்றுக் கொள்ள இன்னமும் 75 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில், தமது புதிய ஆட்சியில், பாதுகாப்பு, நிதித்துறை, வெளியுறவுச் செயலர் உட்பட பல்லாயிரம் அதிகாரிகளை அவர் தேர்தெடுத்து நியமிக்க வேண்டியுள்ளது. புதிய அரசு எப்படிபட்ட புதிய பாதையில் செல்லப் போகிறது என்பதில் அடுத்த 70 நாட்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

ஆக,ஸ்பானிஷ் பேசும் மக்கள்,அயல்நாட்டை சேர்ந்த அமெரிக்க வாழ் மக்கள்,எல்லா நாடுகளையும் சேர்ந்தமுஸ்லீம் மக்கள்,ஆப்ரோ-அமெரிக்க (கறுப்பின)மக்களின் பேராதரவு,மற்றும் வெள்ளை இன மக்களின் ஆதரவும் ஒபாமாவுக்கு கிடைத்து,அதிபர் ஆகிவிட்டார்.அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பதவி அளிக்கிறான்.அப்பதவியை அவர்கள் இப்போது எப்படி பயன் படுத்தப் போகிறார்கள்,அதன் மூலம் எல்லா மக்களின் நலன்களும் பேணப்படுமா என்பதே இப்போதிய கேள்வி?

புதிய அதிபருக்கு உலக முஸ்லிம்கள் மற்றும் அதிரை மக்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!