Showing posts with label டிவி. Show all posts
Showing posts with label டிவி. Show all posts

Wednesday, February 23, 2011

முரட்டுப்பயலே, முரட்டுப்பயலே சேதி கேளடா?


வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, "டிவிபார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும்உடலில் பருமனும் கூடும் எனஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம், "டிவி'  பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துஅசோசம் சமூக மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது.  சென்னைமும்பைடில்லிபாட்னாசண்டிகார் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த ஆறு முதல் 17 வயது வரையிலான 3,000 பிள்ளைகளிடமும், 3,000 பெற்றோரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தைகள் வாரத்திற்கு 35மணி நேரத்திற்கு அதிகமாக, "டிவிபார்ப்பதால்அவர்கள் மனதளவிலும்,உடலளவிலும் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைகள் முரட்டு தனத்துடனும்அதிக உடல் பருமனுடனும் இருப்பர்.  அவர்களுக்கு படிப்பதிலும் கவனம் சிதறும். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக, "டிவிபார்ப்பதால்இந்த விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக "டிவிபார்ப்பது தான் உடல் நலத்திற்கும்மன நலத்திற்கும் பாதுகாப்பானது.  பெரும்பாலான பெற்றோர்தங்களது குழந்தைகள், "டிவி'யில் வரும் விளம்பரங்களைப் பார்த்து,  சத்துக் குறைவான  உருளைக்கிழங்கு சிப்ஸ்குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

"டிவிநிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளும்நாகரிகமற்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவதாக, 90 சதவீத பெற்றோர் ஒப்புக் கொள்கின்றனர். 12 முதல் 18 வயது வரையிலான 54 சதவீத பிள்ளைகள்,தங்களது பெற்றோருடன் அமர்ந்து, "டிவிபார்ப்பதையே விரும்புகின்றனர். "ரியாலிட்டி ÷ஷா'க்களை 76 சதவீத பேர் விரும்புகின்றனர்.  பெரும்பாலான, "டிவிநிகழ்ச்சிகளில் வன்முறைஆபாசம் உள்ளிட்டவை தலை தூக்கியுள்ளதாகவும்அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், 60 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் வன்முறை பாதைக்கு செல்வதற்கு, "டிவிநிகழ்ச்சிகள் தூண்டுகின்றன என்று 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  

Saturday, October 2, 2010

கல்விக்கும், குடும்ப கலங்கத்துக்கும் வழிவகுக்கும் சினிமா, "டிவி

பெற்றோர்களின் எதிர்ப்பு பயந்து காதல் ஜோடிகள் போலீஸ் ஸ்டேஷன்களில்
தஞ்சம் புகுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. நாகரீகத்தில் வளர்ச்சிகாணும் போதெல்லாம் ஆனந்தம் கண்ட நாம்அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சில நேரங்களில் வருந்த வேண்டியுள்ளது. போதாக்குறைக்கு சினிமா,"டிவி'போன்றவை இளம் பெண்கள்,இளைஞர்களை சீரழித்து வருகின்றன. படிக்கும் வயதில் காதல் என்ற பெயரில் கல்வியை கோட்டை விடும் சிறிசுகளின் செயல் சமீப காலமாகஅதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலைபார்ப்போர் அதிகம் உள்ளனர். அம்மாவின் அரவணைப்பு கிடைக்கும் அளவுக்கு அப்பாவின் கண்டிப்பு கிடைப்பதில்லை. இதனாலேயே மாணவிகள் சிலர் தவறான பாதைக்கு செல்கின்றனர். இன்னும் சில இடங்களில் பெற்றோரின் பொறுப்பின்மை குழந்தைகளை சீரழிவுக்கு அழைத்து செல்கிறது. "டிவி'யில் ஒளிபரப்பாகும் தொடர்களை தங்கள் மகளுடன் உட்கார்ந்து பார்க்கும் தாய்மார்களுக்குஅதனால ஏற்படும் விபரீதம் புரிவதில்லை. இன்று சினிமாவை மிஞ்சும் அளவுக்கு காமமும்,குரோதமும் தொடர்களில் தான் ஒளிபரப்பாகிறது. இதனால் மாணவிகளின்மனம் திசை மாறி ,காதல் வலையில் சிக்கிவிடுகின்றனர். அதன் பின் பெற்றோரை உதாசினப்படுத்தி வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகளும் சினிமா மற்றும் "டிவிகளில் கண்முன்னே காட்டிவிடுகின்றனர். இதற்காக சட்டரீதியாக செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைக்கின்றனர். இதையை தங்களின் காதலுக்கு போதனையாக எடுத்துக்கொண்டு மாணவிகள் பலரும் காதலனுடன் படி தாண்டுகின்றனர். எல்லாம் அறிந்த பெற்றோரும் வேறு வழியின்றி தனது பெண்ணை கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்கின்றனர். பெண்ணேதன்னை விரும்பியவரை திருமணம் செய்து கொண்டு கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்துவிடுகிறார். அதன் பின் பெற்றோர் தலையில் அடித்துக்கொண்டு அழுதுபுலம்புகின்றனர். இது தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பிரச்னை ஏற்பட்ட பிறகே,அதை தடுக்க பெற்றோர் முன்வருகின்றனர். அதே அக்கறையை தங்கள் குழந்தைகளின் கண்காணிப்பிலும்வளர்ப்பிலும் காட்டினால் இது போன்ற கசப்பான சம்பவங்களை தடுக்கலாமே. கல்விக்கும்குடும்ப கலங்கத்துக்கும் வழிவகுக்கும் சினிமா, "டிவி'போன்றவற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதால் இது போன்ற கசப்பான அனுபவங்களையும் தவிர்க்கலாம்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!