Sunday, November 21, 2010

அறிவை அடகு வைக்கும் நிலை ........


படத்தில் இருப்பது புட்டபருத்தி சாய்பாபா! இந்த சாமியார் ஒரு டுபாகூர்  என்பதை பிபிசி செய்தி நிறுவனம், விடியோ ஆதாரத்துடன்வெளி்யிட்டு இவனின் உண்மை முகத்தை மக்களுக்கு தோலுரித்து காட்டி இருக்க, இந்திய நாட்டின் முதல் குடிமகனாக கருதப்படும் குடியரது தலைவர் இந்த சாமியாருக்கு கூன் போடும் காட்சி நேற்று சாமியாரின் பிறந்த நாளையோட்டி நடைபெற்ற மகளீர் நிகழ்ச்சியில் நிகழ்ந்துள்ளது.
இதில் இன்னும் கொடுமையான விசயம் என்வெனில் 23 ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த சாமியாரின் பிறந்தாள் விழாவுக்கு பாரத நாட்டின் பிரதர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறாராம்.
இந்த சாமியார் மக்களை ஏமாற்றுகிறான் என்பதை பிபிசி வீடியோவை பார்க்கும் பாமரனும் புரிந்து கொள்வான் என்றிருக்க பாரத பிரமருக்கும் குடியரசு தலைவருக்கு புரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.
நாட்டின் தலைவர்கள் சாமியார்களிடம் தங்களது அறிவை அடகு வைக்கும் நிலை மாறினால் தான் நாடு முன்னேறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து..

2 comments:

  1. இந்திய இறையாண்மையை வேடதாரி சாமியார்களின் பக்த கோடிகள்தானே ஆட்சி செய்கிறார்கள் !

    எதனையும் கான்பித்து சாமியாட்சி செய்வதில் இவர்களே முன்னிருப்பவர்கள் !

    காரணம் சொல்வார்கள் அறிவை அடமானம் வைத்து எதுவும் கிடைக்காதேன்னு ! :)

    ReplyDelete
  2. உண்மையை ஜீரணிக்க முடியாத எந்த ஆன்மாவும் இப்படி கபடவேடதாரிகளை வரவேற்கவே செய்யும் என்பது தெளிவான உண்மை.

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!