Showing posts with label சலீம் நானாவும் பசீர் காக்காவும். Show all posts
Showing posts with label சலீம் நானாவும் பசீர் காக்காவும். Show all posts

Thursday, March 19, 2009

தண்ணீர் பந்தல்!!!

"யாரு வர்றா, லெக்கு தெரியலையே?"முனுமுனுத்த சலீம் நானாவைப் பார்த்த பஷீர் காக்கா சொன்னார்," அஸ்ஸலாமு அலைக்கும் சலீமு,பாத்து ரொம்ப நாள் ஆனதுல யாருன்னு புரியலையா?.

"வ அலைக்கும் சலாம், ஆமாம்,காக்கா,இம்புட்டு நாளா எங்க போனீங்க?

"அட அதுவா, புள்ள காலேஜுக்கு படிக்க போறான்,அவனுக்கு எந்த காலேஜில சேத்தா
நல்லது,நல்ல ஹாஸ்டல் எது?இப்படி தேடி கண்டு புடிச்சு சேத்து விட்டு இன்னக்கித்தான் மதராஸ்லெந்து வந்தேன்,அதான்"

"நல்ல காரியம்தான் பண்ணி இருக்கீக"சலீம் நானா தலையாட்டிக்கொண்டார்.

"வெயில் காலம் ஆரம்பித்துட்டது,கரண்ட் வேற இல்ல,தேர்தல் வேற நெருங்குது,தி மு க இதுனால தோத்தாலும் ஆச்சரியப்பட ஒன்னும் இல்லை"சலீம் நானா சொல்லிக் கொண்டிருக்கும்போது,பஷீர் காக்கா இடை மறித்தார், "நமக்கு ஏன் அரசியல் சலீம்,எவன் ஜெயிச்சாலும்,தோத்தாலும் நமக்கு ஒண்ணுதான்.ஆனா,நம்ம அல் அமீன் பள்ளிவாசல் விஷயத்துல எந்த பயலும் தலை இடாம,பிரச்னை பண்ணாம,நமக்குள்ள உரிமையை யாரு தர்ரானோ,அவனுக்கு வேணா ஒட்டு போடலாம்.சரி,கோடை கால மேட்டருக்கு வருவோம்,இந்த அனல் வெயிலுக்கு எனக்கு ஒரு யோசனை தோனுது சலீம்"

என்ன காக்கா சொல்லுங்க?

"நம்ம ஊர்ல இருக்குற ஒவ்வொரு பள்ளி வாசல் பக்கத்துலயும்,அந்தந்த பள்ளிவாசல் மஹல்லா சார்புல ஒரு மோர் பந்தல் அமைச்சி,மோர்,சர்பத் போன்ற பானங்கள் வச்சி, மக்களுக்கு கொடுக்கலாம்.இது ஒரு பெரிய நன்மையா அமையும்,அது மட்டுமில்லாம,நம்ம மக்களுக்கு பள்ளிவாசல் தொடர்பு கிடைக்க வைக்க ஒரு வாய்ப்பாவும் அமையும்.அது மட்டு மில்லாம ,மாற்று மத மக்களிடம் அழகிய முறையில் மார்க்கத்தை எடுத்து வைக்கலாம்."

"ஆஹ்ஹா,அருமையான யோசனை காக்கா, இந்த நல்ல விஷயத்த பள்ளிவாசல் நிர்வாகம் மட்டுமில்ல, அதிரை பைத்துல் மாலும் சேர்ந்து பண்ணலாமே"

"அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர்"
செக்கடி பள்ளியின் பாங்கோசை காற்றில் தவழ,இருவரும் பள்ளிவாசலுக்கு நடையை கட்டினர் லுஹர் தொழுக!!!
--------------------------------------------

விபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!