Friday, December 28, 2018

லைட்டுப் போடுங்கள்,பாதுகாப்பு பேணுங்கள்

அதிரையின் அழகான நீண்ட தெருக்கள்,நாற்பதுக்கும் 
மேற்பட்ட பள்ளிவாசல்களின் அணிவகுப்புக்கள்,தன்னலம் 
கருதாமல்,பொது நலம் பேணி,ஏழைக்காக உழைக்கும் 
செல்வந்தர்கள் இப்படி இன்னும் பல அருமைகளைக் கொண்ட ஊர் 
அதிராம்பட்டினம்.


இப்போது,கஜா புயல் பாதிப்புக்குப்பின்,சாலைகளில் உள்ள மின்சார கம்பங்களில்
உள்ள லைட்டுக்கள் எரிவதில்லை. அதே போன்று பல வீடுகளில் உள்ள வெளி வாசல் 
விளக்குகள் எரிவதில்லை.அதனால் பல தெருக்கள் கும்மிருட்டாக,சமூக விரோத செயல்களில்
ஈடுபடுவோருக்கு வசதியாக உள்ளது. குறிப்பாக,புதுமனைத் தெரு,CMP லைன் போன்ற 
தெருக்கள் அதிக இருட்டாக இருப்பதால் எந்த நேரமும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புண்டு. தங்கள் பொன்னான உயிரையும்,உடமைகளையும்,கற்பையும் பாதுகாத்துக் கொள்ள,உங்கள் வீட்டு
வெளிவாசல் விளக்குகளைப் போட்டு வையுங்கள்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!