Showing posts with label rss. Show all posts
Showing posts with label rss. Show all posts

Tuesday, May 20, 2014

அல்லாஹ் நாடினால்,மோடி இஸ்லாம் தழுவுவார்?

நம் உயிரினும் மேலான நம் பெருமானார் ஸல் அவர்களை கொல்ல வந்தவர்கள் தான் உமர் ரலி அவர்கள்.ஆனால் அவர்கள்தான் இஸ்லாத்தின் இரும்புத் தூணாய் ஆகிப் போனார்கள்.

முஸ்லிம்களை கொன்று குவித்து துவம்சம் செய்த ஸெங்கிஸ்கான் இறுதியில் இஸ்லாத்தை ஏற்றார்.

ஸ்விஸ்ஸில் மினாரா கட்ட தடை கண்டவர்,இன்று இஸ்லாத்தை ஏற்று,ஐரோப்பாவிலேயே முதல் இஸ்லாமிய கட்சியை தொடங்கியுள்ளார்.

பாபர் பள்ளியை தகர்த்த பலர் இன்று இஸ்லாத்தை ஏற்று - பல பள்ளிகளை கட்டிக் கொண்டுள்ளனர்.

இன்னும் பல சாட்சிகள் ................

இறைவன் நாடினால்,நாளை நரேந்திர மோடியும் புனித இஸ்லாத்தை ஏற்று - பல ஆயிரம் பள்ளிவாசல் கட்டப்படவும்,முதல் முஸ்லிம் பிரதமர் என பெயரெடுக்கவும் செய்யலாம்,rss அமைப்பு ரசூலுல்லாஹ் சேவக் சங் என மாற்றம் பெறலாம்.அல்லாஹ்வுக்கு எதுவும் முடியும்,எல்லாமும் முடியும்.

நாம் செய்ய வேண்டியது,பொறுமை,தொழுகை,துவா.எனவே,யாரையும் திட்டுவதும்,பழிப்பதும் மிக தவறு.அல்லாஹ் நம்மை வழி
நடத்த போதுமானவன்.

Saturday, November 13, 2010

தீவிரவாத செயலில் கைதான இந்துக்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்

 நாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இந்துக்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களிடம் இது குறித்து  அவர் பேசுகையில், முஸ்லீ்ம்களை தேச விரோதிகள் என்று தொடக்கத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். கூறி வருகிறது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைதான இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸுடன் தொடர்பு கொண்டவர்களாக உள்ளனர். இதற்கு ஆர்.எஸ்.எஸ். என்ன பதில் சொல்லப் போகிறது.
 

முஸ்லீம்கள் தீவிரவாதத்தைப் பரப்புகிறார்கள், ஆதரிக்கிறார்கள், அடைக்கலம் தருகிறார்கள் என்று கூறுகிறது ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைதானால் சதி நடக்கிறது என்று கூக்குரலிடுகிறது.  நாட்டில் நிலவும் வறுமையை ஒழிக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். முஸ்லீம்களும் அவர்களுடன் கை கோர்த்து நாட்டை வலிமைப்படுத்த பாடுபட வேண்டும் என்றார் திக்விஜய் சிங்,

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!