Showing posts with label மன்சூர் அலி. Show all posts
Showing posts with label மன்சூர் அலி. Show all posts

Thursday, August 27, 2009

இதுதான்,இதுவேதான்,இது மட்டுந்தான்,ஒரே நேர்வழி!!!

இறைநம்பிக்கையில் மூட நம்பிக்கைகளைக் கண்ட சிந்தனையாளர்கள், இறைவனை மறுத்து நாத்திகக் கொள்கையைத் தழுவிக் கொண்டனர்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

"மனித அறிவு வளர்ச்சியடையாத - முற்காலத்தில் - உலகில் இயற்கையாக நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் - மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி அல்லது சக்திகளைக் காரணம் காட்டி வந்தான் - அன்றைய மனிதன்!

"ஆனால் மனித அறிவு வளர்ச்சி அடைந்து பல நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும் இயற்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் இறைவனே காரணம் என்று கூறுவது - மனித அறிவின் பிற்போக்குத் தனத்தையே காட்டுகிறது.

"விஞ்ஞானம் - இயற்கைப் பெருவெளியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லா அற்புதங்களுக்கும் காரணம் கண்டு பிடித்துச் சொன்ன பின்பும் எல்லாவற்றுக்கும் காரணம் இறைவன்.... இறைவன்.... என்று சொல்கின்ற பிற்போக்குத் தனத்தை என்னென்று சொல்வது?

"இதனை விடுத்து விஞ்ஞானம்.... விஞ்ஞானம்.... என்ற முற்போக்குக் கொள்கையை (POSITIVISM) மனிதன் ஏற்கும் போதே - நோய் பிடித்த சமுதாயத்தை (SICK SOCIETY) உயிர்த்துடிப்புள்ள சமுதாயமாக (DYNAMIC SOCIETY) மாற்றிட முடியும்!"

இதுவே மேற்கத்திய சமூகவியலாளர்களின் (SOCIOLOGISTS) தீர்க்கமான கருத்து!

உயிர்த் துடிப்புள்ள சமுதாயத்துக்கு அவர்கள் சுட்டிக் காட்டுவது - இன்றைய மேலை நாடுகளை!

அங்கே எல்லாரும் படித்திருக்கிறார்கள்!

அங்கே எல்லாரும் அறிவியல் வழியாகவே (SCIENTIFIC THINKING) சிந்திக்கிறார்கள்.

அங்கே மூட நம்பிக்கைகள் குறைவு!

அவர்கள் தொழில்நுட்பத்தில் வானளாவிய சாதனைகள் புரிகின்றார்கள்!

அவர்கள் தாம் உலகையே வழி நடத்திடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்கள்!

சுருங்கச் சொல்லின் - அவர்கள் தான் பூவுலக சுவர்க்கத்தை மேற்குலகில் நிர்மாணித்திருக்கிறார்கள்!

அவர்கள் காட்டும் "பூவுலக சுவர்க்கத்தை" "ஆ" வென வாய் பிளந்து பார்க்கின்ற நம்மவர்கள், அதே மேற்குலகக் கோட்பாடுகளை இங்கே இறக்குமதி செய்தால் நாமும் ஒரு சுவர்க்கத்தை உருவாக்கிடலாம் என்று மன்க் கோட்டை கட்டுகிறார்கள்!

தாழ்வு மனப்பான்மை பிடித்துப் போய் மேலை நாடுகளைக் காப்பியடிக்கத் துடிக்கின்ற நவீன தலைமுறையினர்க்கு, மேற்குலகம் அனுபவிக்கின்ற அவலங்களைப் படம் பிடித்துக் காட்டுதல் அவசியம்.

அமெரிக்காவில் ஹைட்ரஜன் குண்டை (HYDROGEN BOMB) தயாரித்த அமெரிக்க விஞ்ஞானி J.R. OPPENHEIMER - அவர்களின் கூற்றுப் படி - மனிதன் - கடந்த 40 நூற்றாண்டுகளில் தொழில்நுட்பத்தில் அடைந்த வளர்ச்சியை விட இருபதாம் நூற்றாண்டின் 40 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி மிக அதிகம்!

இந்த தொழில் நுட்பம் மனிதனுக்கு செய்து கொடுத்த வசதிகள் எண்ணிலடங்காதவை.

கணினி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் உலகையே ஒரு பெரிய கிராமமாகச் சுருக்கி விட்டிருக்கின்றது.

மனித உறுப்புகளை மாற்றுவது, சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாக மாறிக் கொண்டிருக்கிறது.

தூக்கத்தைக் குறைத்து - மனித ஆயுளை நீட்டிக்கச் செய்கின்ற ஆராய்ச்சி மும்முரமாக நடந்து கொண்டிருகிறதாம்.

செயற்கை முறையில் DNA - வைத் தயாரித்து "நாம் விரும்பும்" குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியுமாம்!

தொழில் நுட்பம் தந்த பொருளாதார வளர்ச்சி மேலும் மனிதனை சுக போக வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

அமெரிக்கர்கள் விடுமுறையைக் கழிக்க என்று - ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் தொகை பில்லியன் டாலர்கள் கணக்கில்!

மேலை நாடுகளில் - மனிதனின் வாழ்க்கைத் தரம் 1800 - ல் இருந்ததை விட ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறதாம்! அப்படியானால் - அவர்களுடைய மகிழ்ச்சி ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது, அவர்களுடைய வாழ்க்கை ஐந்து மடங்கு அர்த்தமுள்ளதாக ஆக்கப் பட்டிருக்கின்றது என்றா பொருள்?

அது தான் இல்லை!

மேற்குலக நாடுகளில் ஆண்டு தோறும் நடக்கும் குற்றங்கள் மில்லியன் கணக்கில் பதிவு செய்யப் படுகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாகரிகம் அடைந்த நாடுகளில் மதுவின் வளர்ச்சி வேகம் பயமுறுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. மதுவின் இந்த வளர்ச்சியில் பெண்களுக்கும் பங்குண்டு. மது குடிப்பதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்.

ஆபாசப் படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முன்னணி வகிப்பவை மேற்குலக நாடுகளே! இப்படிப் பட்ட படங்களுக்கென்றே தனிப்பட்ட திரையரங்குகள் உள்ளனவாம். இயந்திர மயமான வாழ்க்கையை விட்டு - சற்றே வெளியேறி - இளைப்பாற நினைப்பவர்களைக் கவர்ந்து இழுக்கிறதாம் - இந்த ஆபாசப் படங்கள்.

சூதாட்டங்களும் - மனித நாகரிகத்தோடு சேர்ந்து வளர்ந்திருக்கின்றன! உலகின் மிகப் பெரும் சூதாட்ட நகரங்கள் (GAMBLING CITIES) அனைத்தும் "நாகரிக மயமான" நாடுகளில் தாம் அமைந்திருக்கின்றன.

போதைப் பொருட்களைப் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும், அதற்கு அடிமையாகி விட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

நாகரிகத்துடன் தற்கொலை செய்து கொள்வதும் வளர்ந்துள்ளது! தொழில் மயமாதல், நகர் மயமாதல், குடும்பங்கள் உடைந்து போதல் - இம்மூன்று காரணிகளும் அதிகரிக்க அதிகரிக்க தற்கொலையும் அதிகரிக்கிறதாம்.

மன நோயால் பீடிப்பவர்களின் எண்ணிக்கையும் அப்படித்தான். உலகத்திலேயே அதிகமான மன நோய் நிபுணர்கள் இருப்பது ஹாலிவுட்டில் தானாம்.

போதுமா சகோதரர்களே!

இறை மறுப்பும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கல்வித் திட்டமும் , அறிவியல் தொழில் நுட்பமும், மனிதனுக்குச் சாதித்துக் கொடுத்தவை இவை தான்!

இதனையே இங்கே இறக்குமதி செய்யத் துடிக்கின்றனர் மேல் நாட்டு மோகம் கொண்ட நம்மவர்கள்.

இன்றைய உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கின்ற - மனித வாழ்வில் - அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் ஆற்றல் எந்தக் கொள்கைக்கு இருக்கிறது?

அது இஸ்லாத்துக்கு மட்டுமே இருக்கின்றது என்பது தான் மறுக்க இயலாத உண்மை!

மேலை நாட்டவர்கள் இஸ்லாத்தை "பயங்கரவாதத்துடன்" ஒப்பிட்டுப் பேசிடுவதில் அவர்களுக்கு இருக்கின்ற உள் நோக்கத்தை ஏன் நம்மவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது?

யார் யார் எல்லாம் இஸ்லாத்தை எதிர்க்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பாருங்கள்? அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்றும் சற்றே எடை போடுங்கள். உண்மை தெள்ளென விளங்கும்!

சகோதரர்களே!

இஸ்லாமிய இறை நம்பிக்கையில் மூட நம்பிக்கை கிடையாது!

இறைவனின் தூதர்களைக் கடவுளாக்கி வணங்குகின்ற அறியாமை இங்கே இல்லை!

இஸ்லாத்தின் கொள்கைகள் பாதுகாக்கப் பட்டவை! திருக் குர் ஆனும், நபிமொழிகளும் இடைச்செருகல்களுக்கு ஆளாகி விடாமல் பாதுகாக்கப் பட்டு ஒப்படைக்கப் பட்ட விதத்துக்கு ஈடு இணையே கிடையாது!

இஸ்லாம் - மனிதனின் "ஆன்மிகக் கொள்கை வெற்றிடத்தை" முழுமையாக நிரப்பும் சக்தி வாய்ந்தது!

இஸ்லாம் - மன நோய் மற்றும் தற்கொலை எண்ணங்களை அடியோடு நீக்கி விடுகிறது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே கொல்லப் படுகின்ற பெண் சிசுக்களைக் காப்பாற்ற வல்லது!

இஸ்லாம் மட்டுமே உலகை - விபச்சாரத்திலிருந்தும், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களிலிருந்தும் காத்திடும் ஆற்றல் பெற்றது!

இஸ்லாம் மட்டுமே உலகை - வட்டியில் இருந்து விடுவித்து பொருளாதாரச் சுரண்டலைத் தடுத்து நிறுத்திடும் ஒப்பற்ற திட்டத்தை தன்னகத்தே கொண்டது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே - அரசியலைத் தூய்மைப் படுத்திடும் ஆன்மிக வலிமை கொண்டது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே, இன்று உலகைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கின்ற இனவெறியிலிருந்து மக்களைக் காக்கின்ற ஆற்றல் வாய்ந்தது!

இஸ்லாம் எனும் இந்த முழுமையான வாழ்க்கை நெறி - காலம் கடந்து போன ஒரு வெற்றுச் சித்தாந்தம் அன்று! அது எல்லாக் காலத்துக்கும் பொறுத்தமானது!

இவ்வாறு எல்லாவிதமான் சிறப்பம்சங்களையும் இஸ்லாம் தன்னகத்தே கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் - இது இறைவனின் மார்க்கம் என்பதால் தான். இது முஹம்மது நபியின் சொந்த சிந்தனையும் கிடையாது. அது போலவே இஸ்லாம் என்பது பரம்பரை பரம்பரையாக வருகின்ற முஸ்லிம்கள் வீட்டுப் பாட்டன் சொத்தும் கிடையாது! அது உலக மக்கள் எல்லார்க்கும் சொந்தமானது!

ஏன் உங்களுக்கும் சொந்தமானதே! எனவே - ஏற்பீர்களா இஸ்லாத்தை?



S.A.MANSOOR ALI

Thursday, January 1, 2009

அட!இது நம்ம ஆளு!!!

சலீம் நானாவுக்கு இருப்பு கொள்ளவில்லை."அடடா என்னமா,பேசுகிறார்.இஸ்லாத்தை அழகா,எவ்வளவு இனிமையா மேற்கோள் காட்டி மாணவர்கள்கிட்டேயும், எல்லா தரப்பு மக்கள்கிட்டேயும் விளக்குகிறார்."

பஷீர் காக்காவுக்கு முதலில் புரியவில்லை.சலீம் நானாவைப் பார்த்து கேட்டார்,"என்ன சலீமு,யாரு,என்ன கொஞ்சம் விளக்கமாத்தான் செல்லேன்"என்றார்.

"பஷீர் காக்கா, அந்த சகோதரர் பேரு எஸ்.ஏ.மன்சூர் அலி.நம்ம நீடூர(மயிலாடுதுறை)சேர்ந்தவரு.பி எஸ்சி கெமிஸ்ட்ரி,பி எட்,எம் ஏ சோசியாலஜி,பீ ஜீ டிப்ளோமா கவுன்சிலிங் படிச்சிருக்கார்.கடந்த பத்து வருஷமா இஸ்லாமிய படிப்புத்துறையில ஆசிரியராவும்,மாணவர்களுக்கு கவுன்சிலராகவும் வண்டலூர் கிரசன்ட் ஸ்கூலில் பணிபுரிந்துவிட்டு,மாணவர்கள்,எல்லா தரப்பு மக்கள் என்று மனித வள மேம்பாடு பத்தி,ஆலோசனை,கருத்து பரிமாற்றம் எல்லாம் செய்கிறார்.இது மூலமா நிறைய மாணவர்கள்,தொழில் முனைவோர்,இப்படி எல்லா தரப்பு மக்களும் பயன் பெற்று வர்றாங்க."

பஷீர் காக்காவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை."நம்ம சமுதாயத்துல இப்படி ஒரு ஆளா?சலீமு,இவர நம்ம ஊருக்கு கூட்டி வந்து,மனித வள மேம்பாடு போன்ற கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணி,மாணவர்களுக்கும்,எல்லா தரப்பட்ட மக்களுக்கும் பயன் கிடக்கிற மாதிரி செய்யணும்,ஆமா அவர பத்தி,எங்க விசாரிக்கிறது?ஆர்வம் பீறிட கேட்டார் பஷீர் காக்கா.

"காக்கா,நீடூர் ஆன்லைன் போயி,உனக்குள் ஒரு சுரங்கம் என்கிற தலைப்புல பாத்தா,அவரோட பேச்சுக்கள வீடியோவுல பாக்கலாம்,நம்ம பீஸ் ட்ரைன் பிளாகில போய், உனக்குள் ஒரு சுரங்கம் அப்படிங்கிற தொடுப்ப கிளிக் பண்ணினா,நேரடியா அவரோட வெப் சைட் திறக்கும்,அது அவரோட சொந்த வெப் சைட்.அதுல நிறைய கட்டுரைகள,அருமையான விளக்கங்களோட பாக்கலாம்,அதுல இருக்கிற ஸ்பேஷாலிட்டி என்ன தெரியமா,அது குரான் மற்றும் ஹதீஸ் அடிப்படையில விளக்குறதுதான். அதோட அவரோட முகவரியும் குறிச்சுக்கோங்க,எல்லாருக்கும் தேவைப்படும், S.A. Mansoor Ali, 3 – 125 / A, Jinnah Street,NIDUR – 609 203,Nagappattinam Dist, Tamilnadu, INDIA".

"சலீமு,அவரு நீடூருக்கு மட்டும் உள்ள சொத்து கிடையாது,நம்ம சமுதாயத்தோட சொத்து.ஒட்டு மொத்த முஸ்லிம்களோட சொத்து,அவரு மூலமா நம்ம மாணவர்கள் பயன் பெறனும். "பஷீர் காக்கா உறுதியாய் சொன்னார்".

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!