Showing posts with label குர்-ஆன். Show all posts
Showing posts with label குர்-ஆன். Show all posts

Tuesday, July 26, 2011

இஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து

ஓரிறையின் நற்பெயரால்...
   குர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ஒன்றா...? இஸ்லாமியர் சிலர் மனதில் கூட ஊசலாடும் கேள்வி இது தான். சுருக்கமாக கூறினால் "ஒன்று" என்று சொல்லலாம்.விளக்கமாக கூறினால் "இல்லை" என்று சொல்லலாம்.என்ன தெளிவான குழப்பமாக இருக்கிறதா? அதை விளக்கவே இக்கட்டுரை.

 இயேசுவை கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ உயர்த்தி வர்ணிக்கப்படும் கிறித்துவத்தில் அவரது ஏனைய அற்புத நிகழ்வுகள் குறித்து சிலாகித்து கூறப்பட்டாலும் இயேசு கிறித்துவை பற்றி பைபிள் இப்படியும் குறிப்பிடுகிறது.

 34.பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
 35.எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.                                
                                                                                     (மத்தேயூ அதிகாரம்:10)
 17.பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;
 18.அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே; (மாற்கு அதிகாரம்:10)

 49.பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
 50.ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
 51.நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 52.எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
 53.தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.   (லூக்கா அதிகாரம்:12)

34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.  (மாற்கு அதிகாரம்:15)

 19.அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
 20.அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
                                                                                        ( மத்தேயூ அதிகாரம்:8)

                   இவ்வாறு கடவுள் ஸ்தானத்திற்கு அல்லது கடவுளின் மகனாக மகிமைப்படுத்தி கூறப்படும் இயேசு கிறித்துவை பற்றிதான் மேலுள்ள வாக்கியங்களும் உள்ளன.அவ்வாறு கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ கருதப்படுபவர் குறித்து சராசரி மனித பண்புகளோடு அல்லது அதற்கு கீழாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இங்கு பைபிள் குறித்து நான் விமர்ச்சிக்க வரவில்லை. மாறாக கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ சித்தரிக்கப்படும் ஒருவரின் தகுதிக்கு இவ்வாசகங்கள் ஏற்புடையதா என்பதே என் கேள்வி? 
     ஆனால் இஸ்லாம் இயேசு கிறிஸ்து குறித்து கூறும்போது கடவுளின் மகன் இல்லையேன்று ஆணித்தரமாக கூறினாலும் இறைவனின் தூதுவர்களில் ஒருவர் என்பதை முன்மொழிந்து அவரது தூது தன்மைக்கு கலங்கமோ, தவறான கற்பிதங்களோ கொடுக்காமல் தூதரும்,தூய மனிதர் என்ற நிலைப்பாட்டிலும் இயேசுவை மிகச்சரியாக கண்ணியப்படுத்துகிறது.இங்கு ஒரு தெளிவு "பைபிளும், குர்-ஆனும் முன்மொழியும் அந்த இறைத்தூதரை "இயேசு கிறித்து" என்ற பெயரில் உச்சரிக்கும் பொழுது சிலுவையில் அறையப்பட்டு,கை,கால்களில் ஆணிகள் ஊடுருவப்பட்ட நிலையில், முள் கீரிடம் சுமந்தவராக, செங்குருதி வடிந்தவராக மனித கரங்களால் உருவாக்கப்பட்ட இடதுபுறம் தலைச்சாய்த்த முகம் தான் ஏனோ...ஞாபகம் வருகிறது.கடவுளின் மகன்(?) என கூறப்படும் அந்த தூயவருக்கு கொடுக்கும் கண்ணியமா இது? அதே நேரத்தில் திருக்குர்-ஆன் கூறும் நபி ஈஸா (அலை) அவர்கள் பெயரை உச்சரிக்கும் பொழுது எந்தவித எண்ணத்தோன்றங்களும் எழாது என்பதால் இனி அந்த தூய இறைத்தூதரை "ஈஸா (அலை) என்ற பதத்திலே இங்கு பெரும்பாலும் பயன்படுத்துகின்றேன். அல்லாஹ் அவன் திருத்தூதரை குறித்து சொல்வதை கேளுங்கள்.,

மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;.  (3:45)

     "மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்."  (3:46)


"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!  (3:55)

 அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;... (2:253 ன் சுருக்கம்


மேலும் பார்க்க நபி ஈஸா அலை குறித்து :    (2-87, 3-45>59, 4-157,171, 
5-17,72,75,78,110>120, 9-30, 19-16>34, 23-50, 42-13, 43-57,61,63, 61-6, 3-52, 57-27, 61-14)  

    மேற்குறிப்பிடப்பட்ட அல்லது குர்-ஆன் முழுவதும் நபி ஈஸா அலை அவர்களை பற்றி குறிப்பிடும் எந்த ஒரு வசனமும் அவர்களின் தூதுத்துவ தன்மைக்கு இழிவாகவோ தனி மனித கண்ணியத்திற்கு குறைவான நிலையிலோ குறிப்பிடுவதாக இல்லவே இல்லை.

  நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் - இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் - எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி))
'ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பிறகு, 'நான் இக்குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் - என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள். (புஹாரி : 3431 ஸயீத் பின் அல் முஸய்யப் (ரலி)
.
 இவ்வாறு இறைவனும் அவனது இறுதித்தூதரும் நபி ஈஸா (அலை) அவர்ககளை கண்ணியப்படுத்தி கூற என்ன காரணம்? ஆக, கிறித்துவம் கூறும் இறைமகன் பண்புகள் ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்தி வருகின்றதா? இஸ்லாம் கூறும் இறைத்தூதர் என்ற நிலை ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்துன்றதா?
  நன்றாக சிந்தியுங்கள் கிறித்துவ சகோதரங்களே., இஸ்லாமியர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் புனித வேதமாக வர்ணிக்கப்படும் பைபிள் குறித்தும் அது கடவுளின் மகனாக உருவப்படுத்தும் இயேசு குறித்தும் தான்.மாறாக  கிறித்துவ சமுகத்திற்கு உண்மையாக அனுப்பப்பட்ட இஞ்ஜில் வேதங்குறித்தோ அல்லது உண்மைத்தூதர் ஈஸா(அலை) அவர்கள் குறித்தோ அல்ல.,
   ஏனெனில் உண்மையான இயேசுவை விமர்சிப்பவன் தூய முஸ்லிமாக இருக்க முடியாது., தூய இயேசுவை பின்பற்றாதவன் உண்மை கிறித்துவனாக இருக்க முடியாது.ஆக அந்த தூய இறைத்தூதர் ஈஸா(அலை)அவர்கள் சொன்னது என்ன? செய்ய சொன்னது என்ன ? என்பதை அறிய முற்படுங்கள்., நீங்கள் உண்மை தேடுதலில் விருப்பம் உடையவராக இருந்தால் இரண்டில் ஒன்றுதான் கலங்கப்படுத்தப்படாத உண்மையாகவே இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியும் என்ற நடு நிலை எண்ணத்தோடு பைபிளையும் குர்-ஆனையும் ஆராயுங்கள். சர்வ வல்லமை படைத்த இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

    பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம், மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம், ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.  (திருக்குர்-ஆன் 57:27)

                                                      அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Thursday, September 16, 2010

ஆறு நாள் உலகப்படைப்பு -அபத்தமா?

                                                        ஓரிறையின் நற்பெயரால்...

குர்-ஆனில் ஆறு நாளில் உலகை படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இதனடிப்படையில், இவ்வாக்கியத்தை உற்று நோக்கும் எவருக்கும் பொதுவாக இரண்டு அடிப்படை சந்தேகங்கள் ஏற்படுவது இயல்பே!
1.சர்வ வல்லமையுள்ள கடவுள் என சொல்லபடுபவர் ஏன் உலகை படைக்க 6 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
2.உலக உருவாக்கம் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என அறிவியல் விஞ்ஞானம் சொல்லும்போது 6 நாட்களில் உலகை படைத்தாக சொல்லுவது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறதே...?
            குர்-ஆன் அறிவியலோடு உடன் படுகிறது என சொல்கிறார்கள்.... பார்த்தீர்களா... எவ்வளவு பெரிய விஞ்ஞான முரண்பாடு. ஆஹா.....    குர்-ஆன் பொய், இஸ்லாம் மாயை...முஹம்மது நபி தான் குர்-ஆனை இயற்றினார்...என இதர இணையங்களில் கட்டுரை எழுதும் தோழர்கள் இஸ்லாமை தவறான புரிதலுடன் அணுகுகிறார்கள் அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் காண்கிறார்கள் என்பது தான் உண்மை!
        மேற்குறிப்பிட்ட இரு கேள்விகளும் தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அழகான, திறமையான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் திறமையான கேள்விகளுக்கு பதில் இல்லை என்ற விதியும் இல்லை.குர்-ஆனில் இதற்கான பதில் இல்லாமலும் இல்லை.தன்னின் கேள்விகளில் ஏற்படும் திருப்தியால் கிடைக்கும் பதிலில் விரக்திதான் மிஞ்சும்.எனவே நியாயமான தன் கேள்விகளுக்கு கிடைக்கப்பெறும் பதில் நடுநிலையாக உள்ளதா..என சிந்திக்க கடமைப்பட்டு தொடருங்கள்
    
முதலில் இரண்டாம் கேள்விக்கான தெளிவை பார்த்தப்பின் முதல் கேள்விக்கு செல்லலாம்...
   திருக்குர்-ஆனில் 07:54, 10:03,11:07, 25:59, 50:38, 57:04 ஆகிய வசனங்கள் 6
நாட்களில் உலகை படைக்கப்பட்டது குறித்து பேசுகிறது
   இவ்வசனங்களில் நாட்கள் (DAYS) என பொருள்கொள்ளும் வகையில்
அமைந்த மொழிப்பெயர்ப்புக்கு நேரடியான அரபு மூல சொல் அய்யாம் (AYYA'M). இது பன்மையே குறிக்கும் சொல்.இதன் ஒருமை யவ்ம் என்பதாகும். பொதுவாக காலத்தை குறிக்கும் அரபு சொல்லாக இது பயன் படுத்தப்பட்டாலும், இச்சொல்லுக்கு படிகள்,கட்டங்கள்,நிலைகள் (STEPS/ STAGES )என்ற பொருளும் கொள்ளலாம்.அதை அடிப்படையாக வைத்து இப்போது குர்-ஆன் கூறும் அவ்வசனங்களை பார்ப்போம்.காண்போரின் வசதிக்காக அவ்வசனங்களின் அரபு மூலங்களை அப்படியே ஆங்கிலத்திலும் தருகிறேன்,
அத்தியாயம் :அல்-அஃராஃப் (07)
வசனம் :54
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்
Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yughshee allayla a(l)nnah[a]ra ya[t]lubuhu [h]atheethan wa(al)shshamsa wa(a)lqamara wa(al)nnujooma musakhkhar[a]tin bi-amrihi al[a] lahu alkhalqu wa(a)l-amru tab[a]raka All[a]hu rabbu alAA[a]lameen(a)

அத்தியாயம் :யூனுஸ் (10)
வசனம் :03
     நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
    Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yudabbiru al-amra m[a] min shafeeAAin ill[a] min baAAdi i[th]nihi [tha]likumu All[a]hu rabbukum fa(o)AAbudoohu afal[a] ta[th]akkaroon(a)

அத்தியாயம் :ஹுது (11)
வசனம் :7
        மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
   Wahuwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min wak[a]na AAarshuhu AAal[a] alm[a]-i liyabluwakum ayyukum a[h]sanu AAamalan wala-in qulta innakum mabAAoothoona min baAAdi almawti layaqoolanna alla[th]eena kafaroo in h[atha] ill[a] si[h]run mubeen(un)

அத்தியாயம் :அல்-ஃபுர்கான்(25)
வசனம் :59
  அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்;. பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான். (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.
    Alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi a(l)rra[h]m[a]nu fa(i)s-al bihi khabeer[a](n)

அத்தியாயம் :காஃப் (50)
வசனம் :38
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
   Walaqad khalaqn[a] a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min wam[a] massan[a] min lughoob(in)

அத்தியாயம் :அல் ஹதீத்(57)
வசனம் :04
அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
 Huwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yaAAlamu m[a] yaliju fee al-ar[d]i wam[a] yakhruju minh[a] wam[a] yanzilu mina a(l)ssam[a]-i wam[a] yaAAruju feeh[a] wahuwa maAAakum ayna m[a] kuntum wa(A)ll[a]hu bim[a] taAAmaloona ba[s]eer(un)

  மேற்கூறிய அரபு மூல வார்த்தையோடு இவ்வசனங்களை அணுகும்போது 6 நாட்கள் எனும் சொல்லுக்கு பொருத்தமாக,உலகம் 6 படிகளில், 6 நிலைகளில், 6 கட்டங்களில் படைக்கப்பட்டது என பொருள் கொள்ளலாம். அதுதான் சரியானதும் கூட...
   ஆக நாள் என்ற பதம் மேற்கூறிய வார்த்தைகளின் அடிப்படையிலேயே தமிழ் மற்றும் ஏனைய மொழிப்பெயர்ப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே திருக்குர்-ஆன் கூறும் உலக படைப்பு 6 கட்டங்களாக நிகழ்த்தப்பட்டது என்பதை அரபு மூலத்துடன் ஒப்பிடும் சிந்தனையாளர் எவரும் மறுக்க மாட்டார்கள்.
   இல்லை...இல்லை நாட்கள் என தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது எனவே அது குறிப்பிட்டது 6 நாளை தான் என மொழிப்பெயர்ப்பை பற்றிப்பிடித்து கொள்ளும் நண்பர்களுக்காக..  6 நாட்கள் தான் என்ற ரீதியில் குர்-ஆனை அணுகினாலும் மேற்குறிப்பிட்ட அதன் நிலைப்பாட்டை உண்மைப்படுத்தலாம்.
குர்-ஆன் அவ்வசனத்தில் குறிப்பிடும் நாள் என்ற பதமும்,நடைமுறையில் நம் வழக்கில் உள்ள நாள் என்ற பதமும் ஒன்றா...?
   பொதுவாக, நாம் சூரியனை மையமாக வைத்து பூமி தன்னைத்தானே ஒரு முறை சுழலுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவான 24 மணி நேரத்தை ஒரு நாள் என்கிறோம்.ஆக இதை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உலகம் படைக்கப்படுவதற்கு எடுத்துக்கொண்ட கால அளவு
                                                   6 X 24 = 144
                   144 மணி நேரத்தில் உலகம் படைக்கப்பட்டது என்பது அறிவுக்கு பொருந்தாத வாதம் எனவே குர்-ஆன் கூறுவது பொய் எனலாம்.இந்த கணக்கீடு சரி,ஆனால் அந்த காலஅளவீட்டையா குர்-ஆன் சொல்கிறது?ஆமாம் அந்த அளவீட்டைதான் சொல்கிறது என குர்-ஆனை பொய்யாக்க விளைவோர் கூறுவார்களேயானால் உண்மையாகவே பொய்யாக்குகிறார்கள்.,  குர்-ஆனை அல்ல விஞ்ஞானத்தை.
ஒரு நாளை கணக்கிடுவதற்கு இரு செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒன்று பூமி தன்னில் தானே சுழல வேண்டும்.அதே நேரத்தில் சூரியனையும் மையமாக கொள்ள வேண்டும்.அப்போது தான் ஒரு நாள் என்பது நமக்கு கிடைக்க சாத்தியம்.ஆனால் மேற்கூறப்பட்ட திருக்குர்-ஆனிய வசனங்களை சற்று பொறுமையாக, கவனமாக பார்வையிடுங்கள். அவ்வசனங்கள் பூமியும்,வானமும் படைக்கப்ப்ட்டதே 6 நாட்களில் என்கிறது ,ஆக நாட்களை கணக்கிடும் பூமியே அதுவரை அங்கு உருவாகவில்லை எனும்போது எதன் அடிப்ப்டையில் அல்லாஹ் இங்கு நாட்களை கணக்கிட முடியும்?ஆக அல்லாஹ் நாட்கள் என குறிப்பிடுவது மனிதர்கள் கூறும் கால கணக்கின் அடிப்படையில் அல்ல என்பதும் பிரத்தியேகமாக அவன் உண்டாக்கிய வேறு கால அளவு என்பதும் தெளிவு!
   மேலும் வசனம் 50:03 ல் இறுதியாக- "எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை" என முடிக்கிறான். அவனது வல்லமையின் வெளிபாடாக கூறும் இவ்வாசகத்தில் ஓர் அறிவியல் உண்மையும் ஒளிந்துருக்கிறது.பொதுவாக களைப்பு என்பது சிறு செயல்கள் மற்றும் குறைவான நேரத்தில் செய்து முடிக்கும் பணியின் காரணங்களுக்காக ஏற்பாடது.மாறாக அதிக பளுவாக வேலைகளோ,தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் கடின செயல்களாலோ ஏற்படுகிறது என்பதை கடைநிலை பாமரன் கூட அறிவான்.தான் மேற்கொண்ட உலக படைப்பின் கால அவகாசம் நீண்ட,நெடியது என்பதையும் அவ்வாறு மேற்கொண்ட போதிலும் சிறு களைப்பும் தம்மை வந்தடையவில்லை என்று அவன் குறிப்பிடுவதிலிருந்தே -சிந்திக்கும் எவருக்கும் அவனது இவ்வசனம் அத்தாட்சியாக இருக்கும்.
 ஆக அய்யாம் என்ற அரபு மூலத்தின் அடிப்படையில் அணுகினாலும், நாட்கள் என்ற மொழிப்பெயர்ப்பு பதத்தின் வழி அணுகினாலும் 6 நாட்கள் உலக படைப்பு அறிவியலுக்கு முரணானதல்ல.

இத்தோடு சேர்த்து இங்கு ஒரு துணை விளக்கம்
   அத்தியாயம் 41 வசனம் 9,10,11&12 இவ்வனங்களை மேற்கோள் காட்டி சிலர் உலகம் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறி அது ஏனைய 6 நாட்கள் குறித்த வசனங்களோடு முரண்படுவதாக நிறுவ முயல்கிறார்கள்.அந்த வசனங்கள் இதோ,
  "பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்" என்று (நபியே!) கூறுவீராக.

அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான் அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான் இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான் (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).

பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் "நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்" என்று கூறின.

ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

இதில் முதல் வசனத்திற்கு - 2 நாட்கள்
இரண்டாம் வசனத்திற்கு        -4 நாட்கள்
நான்காம் வசனத்திற்கு           -2 நாட்கள்
  ஆக 2+4+2 =8 நாட்கள் என்கிறார்கள்.இந்த எண்ணிக்கையை கூட்டினால் சரிதான். ஆனால் இங்கு அதை கூட்டவேண்டிய அவசியமென்ன., ஏனெனில் குர்-ஆன் கூறும் இவ்வசனங்கள் கூட்டல் அடிப்படையில் நாட்களை வகைப்படுத்தவில்லை.மேற்கண்ட நாளளவில் நடைபெற்ற செய்கையை பற்றித்தான் குறிப்பிடுகிறது.ஏனெனில் இறுதியாக கூறும் வசனத்தில் குறிப்பிடும் அந்த இரண்டு நாட்களில், அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் என்றே கூறுகிறது .மாறாக வானம் படைக்கப்பட்டதாக கூறவில்லை. எனவே மேற்கூறிய வசனங்கள் 6 நாட்கள் உலக படைப்பின் விவரிப்புகளே!

இப்பொழுது முதல் கேள்விக்கு வருவோம்.,
சர்வ வல்லமையுள்ள இறைவன் உலகை படைக்க நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது ஏன்?
குர்-ஆனில் இறைவன் வல்லமையை குறித்து எந்த வசனமும் இல்லாதிருந்தால் அவனது இத்தகையே நீண்ட கால படைப்புக்கு விடை தேவைப்ப்டலாம்.ஆனால் அவன் தன் வல்லமையே குறிப்பிடும்பொழுது
  ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, 'உண்டாகுக!' என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.(16:40)
(மேலும் பார்க்க:3:59, 36:82, 40:68,46:33,50:38)
     ஆக இறைவனின் ஒரு படைப்புருவாக்கத்தை பற்றி மேலதிக விளக்கம் இல்லாமலே எளிதாக தெரிந்துக்கொள்ளலாம்.எனினும் சில விசயங்களை தான் நாடிய விதத்தில் செய்கிறான்.சிலவற்றை தனது அத்தாட்சிக்காக நிறுவுகிறான்,சிலவற்றை தாமதித்து வெளியாக்குகிறான்.சிலவற்றை வெளிப்ப்டையாக அல்லது அந்தரங்கமாக தெரிய செய்கிறான்- தங்களுக்கு எந்த பதில் பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் ஏனெனில்

  அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (21:23)

                                      அல்லாஹ் மிக்க அறிந்தவன்

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!