Showing posts with label த மு மு க. Show all posts
Showing posts with label த மு மு க. Show all posts

Sunday, February 27, 2011

ம ம கவுக்கு 30 சீட்டுக்கள்! அதிரடி ஆரம்பம்!!

த மு மு கவின் அரசியல் பிரிவான ம ம க இந்த தேர்தலில் அதிமுககூட்டணியிலபோட்டி இடுகிறது.


கட்சி ஆரம்பித்து சில வருடங்களே ஆன நிலையில் பல்லாயிரம் இளைஞர்களை தன பக்கம் ஈர்த்துள்ள அக்கட்சி முஸ்லிம் மக்களிடையே செல்வாக்குள்ள ஒரு கட்சிதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.


நூறு வருடங்களை தாண்டிய முஸ்லிம் லீக் இன்று ஒரு சீட்டுக்கும்,இரண்டு சீட்டுக்கும் கருனாநித்திக்கு பல்லிளிக்கும் பரிதாபமான நிலையில் இன்று ம ம க பெற்ற அதே எண்ணிக்கையான மூன்று தொகுதிகள் அதற்கும் கிடைத்துள்ளன.ம ம க இன்று அரசியலில் இல்லாதிருந்தால் முஸ்லிம் லீக் ஒன்று அல்லது இரண்டு சீட்டுக்கள் மட்டுமே பெறுவார்கள் என்பது உறுதி.காரணம் முஸ்லிம் லீக்கிற்கு இளைஞர் பட்டாளம் 
கிடையாது என்பதும்,விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் அவர்கள் இருப்பதும்,பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள்,CMN சலீம் போன்ற துடிப்புள்ள ஒன்று அல்லது இரண்டு என எண்ணக்கூடிய அளவில்தான் இருப்பது உள்ளங்கை 
 நெல்லிக்கனி.

புதுக்கட்சியான ம ம க தனக்கென தனியான சின்னத்தில் போட்டியிடுகிறது.இதன் மூலம் தனி அந்தஸ்த்து பெற முடியும்.தனி முடிவு மேற்கொள்ள முடியும்,நமக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்படும்போது அதை எதிர்த்து குரல் கொடுக்க முடியும்.அது மட்டுமல்ல-த மு மு க ஒரு நியாயமான - நேர்மையான முறையில் செயல்படும் கட்சி என்பதும்,ஒடுக்கப்படும் எல்லா மக்களுக்காகவும் பாடுபடும் கட்சி என்பதும் அனைவரும் அறிந்ததே.எனவே ம ம க வினுடைய சீட்டுக்கள் மூன்றுதான் என்றாலும் அது முப்பதுக்கு சமம் என்றால் அது மிகையல்ல.

ஆனால் முஸ்லிம் லீக்கோ - மூன்று சீட்டுக்களிலும் வென்றாலும் கருணாநிதியின் குரலாகவே இருப்பார்கள்.தி மு கவின் கொரடா என்ன கட்டளை இடுகிறாரோ - அதைத்தான் செய்ய முடியம்,ஏனெனில் நூறு வருட முஸ்லிம் லீக் இரவல் சின்னமான உதய  சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

 1991க்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்கள் நடத்தும் அரசியல் கட்சிக்கு சொந்த சின்னத்தில் மூன்று தொகுதிகளை திராவிடக் கட்சிகள் ஒதுக்கியது இப்போதுதான்! இக்காலக்கட்டத்தில் அப்துல் லத்தீப் அவர்கள் ஒருமுறை 5 தொகுதிகளை திமுகவிடம் பெற்றார். ஆனால் உதயசூரியனில் தான் அனைவரும் போட்டியிட்டார்கள்.

அப்துல்சமது அவர்கள் முஸ்லிம் லீக்கிற்கு அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களைப் பெற்றார். ஆனால் அவர்களும் இரட்டை இலையில்தான் போட்டியிட்டார்கள்.

ஆனால், அப்துல் சமது, அப்துல் லத்தீப், ஆகியோர் செல்வாக்கோடு இருந்த 1991லிருந்து இப்போதைய 2011 வரை உள்ள இருபது வருடத்தில் தமிழகத்தில் மூன்று தொகுதிகளை சொந்தச் சின்னத்தில் பெற்று, மனிதநேய மக்கள¢கட்சி முதல்கட்டமாக நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, February 7, 2009

மண்டிய இருள் கிழிக்கும், மக்களின் எழுச்சி!மாற்று அரசியலுக்கான, மாபெரும் புரட்சி!!

மண்டிய இருள் கிழிக்கும்
மக்களின் எழுச்சி
மாற்று அரசியலுக்கான
மாபெரும் புரட்சி


என்ற இலட்சியத்துடன்,முஸ்லீம் மக்களுடன்,தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட,மற்ற ஏனைய சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காகவும்,தேர்தல் அரசியல் களத்தில் குதித்துள்ள மனித நேய மக்கள் கட்சி,சீரிய முறையில் தொண்டாற்றி,மக்களுக்கு நன்மை பல கிடைக்க,எல்லாம் வல்ல அல்லாஹ்,அதன் நற் பணிகளில் துணை நின்று,உதவி புரிவானாக.ஆமீன்.

த மு மு க மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள் முதற்கொண்டு அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்!அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக,ஆமீன்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!