Showing posts with label இழப்பு. Show all posts
Showing posts with label இழப்பு. Show all posts

Thursday, August 26, 2010

THE REMINDER

ஏக இறைவன் அல்லாஹ்  கட்டளையிட்ட ஏழைகளுக்கு செலுத்தவேண்டிய வரியை (ஜகாத்) செலுத்திவிட்டீர்களா?

அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம்!!

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)
2:177

Wednesday, April 14, 2010

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம் ...

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம்,ஆனால்
 ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது


 1996ல், 10ம்   வகுப்பு  படிப்பு முடிந்து பள்ளி விடுமுறையில் டெல்லி லஜ்பத் நகரில்  தன் உறவினர் வீட்டிற்கு விடுமுறையை கழிக்க கஷ்மீரை சேர்ந்த 15 வயது நிரம்பிய மாணவர் மக்பூல் ஷா சென்று  கொண்டிக்குந்தார்., இரு தினங்களுக்கு முன்பு டில்லியில் குண்டு வெடிப்பு நடைபற்றது. அதை தொடர்பு படுத்தி  டெல்லி காவல் துறை  அதன் காரணமாக பல பேர் கைது செய்யப்பட்டனர் . அதில் அந்த மாணவர் மக்பூல் ஷாவும் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட  அதிர்ச்சி தாங்க இயலாமல் அவரின்  தந்தையும், சகோதரியும் நோய்வாய் பட்டு சில நாட்களில்  இறந்து விட்டனனர்

தனது பாதி வாழ்கையை திகார் ஜெயிலில் தாமதிக்கப்பட்ட நீதியால்., இந்த அப்பாவி நிரபராதி தண்டிக்கபட்டு கழித்துவிட்டார்  கண்ணை கட்டிய நீதி தேவதை இவரின் இளமை வாழ்க்கையை தீண்டிவிட்டது   கால தாமதிக்கப்பட்ட தீர்ப்புகளால்    இளமையை இழந்து., கல்வியை இழந்து., பெற்றோர்,நண்பர்கள்,  உறவினர்களை பறிகொடுத்து  ஆயிரக்கானக்கான இல்லை இல்லை நிரபராதிகள் இன்னும் கோடிக்கணக்கான வழக்குகளில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயதானோர் வழ்க்கையை இழந்து சின்னாபின்னாக்கப்பட்டுள்ளனர்  அதற்கு ஒரு இந்த இளைஞர் மக்பூல் ஷா,  அப்துல் ரசீத் மற்றும் இவர்களோடு  பல பேர்கள்  ஓர் உதாரணம்.   இவர்களின் வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் பல நீதிபதிகள் இறந்து இருக்கலாம்... ஆனால்  நீதி ?

கரை படிந்த இந்த கருப்பு சட்டங்களும்  ., இவருக்கு துரோகம் விளைவித்த அரசு இயந்திரங்களும்  இவர் இழந்த வாழ்க்கையும், பறிகொடுத்த சொந்தங்களையும் திருப்பி கொடுக்குமா?
சட்டம் அந்த இருட்டரையிலிருந்து எப்பொழுது  வெளிச்சத்திற்க்கு வரும்


Justice delayed is justice denied


(கால) தாமதிக்கப்படும்  தீர்ப்பு
நீதி மறுக்கப்படுவதற்கு  சமம்

மு.அ.ஹாலித், சிட்னி

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!