Showing posts with label மருத்துவக் கல்லூரி. Show all posts
Showing posts with label மருத்துவக் கல்லூரி. Show all posts

Wednesday, March 9, 2011

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ் விண்ணப்பப் படிவங்கள்


ஜிப்மர் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்.பொது நுழைவுத்தேர்விற்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று முதல் வினியோகிக்கப்படுகின்றன. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 116 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. இதில் 98 இடங்களுக்குஆண்டுதோறும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது. மீதமுள்ள 18 இடங்களைமத்திய சுகாதார அமைச்சகம் நேரடியாக நிரப்புகிறது. நடப்பாண்டிற்கான ஜிப்மர் பொது நுழைவுத் தேர்வுவரும் ஜூன் 5ம் தேதி நடக்கிறது. இதற்கு ஸ்டேட் பாங்க்கில் இன்று முதல்வரும் ஏப்., 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்., 25ம் தேதி மாலை 4.30 மணி வரை ஆகும். ஹால் டிக்கெட் மே மாதம்6ம் தேதி முதலும்நுழைவுத் தேர்வு ஜூன் 5ம் தேதியும்சீட் ஒதுக்கீடு,ஜூலை 13ம் தேதியும் நடைபெறும். சேர்க்கை அனுமதி கடிதம் ஜூலை20ம் தேதி அனுப்பப்பட்டுவகுப்புகள் ஜூலை 22ம் தேதி ஆரம்பிக்கப்படும். விண்ணப்ப கட்டணம்: ஜிப்மர் வளாகத்தில் உள்ள ஸ்டேட் பாங்க்கில் நேரில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை 1,000 ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி.,பிரிவினருக்கு 650 ரூபாய். தபாலில் பெற விண்ணப்பம் பெற விரும்புவோர் ( accounts officer, jipmer ) என்ற முகவரிக்கு,புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் 1,000 ரூபாய்க்கு டி.டி.எடுத்து,ஒரு வேண்டுகோள் கடிதத்துடன் சுயமுகவரியிட்ட இரண்டு தபால் உறைகளை இணைத்து அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். எஸ்.சி., -எஸ்.டி.பிரிவினர் 650 ரூபாய்க்கு டி.டி.எடுத்தால் போதுமானது.

ஆன்-லைனில் விண்ணப்பங்கள்: கடந்த 6ம் தேதி முதல் ஆன் -லைனில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆன்-லைனில் ஏப்., 18ம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும். ஆன்-லைனில் விண்ணப்பிக்க விருப்புவோர் அதில் கேட்கப்பட்ட விவரங்களைப் பூர்த்தி செய்திஅதை பிரின்ட் அவுட் எடுத்து ஏப்., 25ம் தேதி மாலை4.30 மணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி: பிளஸ் 2தேர்வில் இயற்பியல்வேதியியல்உயிரியல்ஆங்கிலம் பாடங்களை படித்திருக்க வேண்டும். அதோடு மொத்த மதிப்பெண்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி.பிரிவினர் 40சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. மொத்த இடங்கள்: ஜிப்மரில் பொதுப்பிரிவு(யு.ஆர்.,)-33, இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓ.பி.சி.,)-17, அட்டவணை இனத்தவர் (எஸ்.சி.,)-10, பழங்குடியினர் (எஸ்.டி.,)-7, புதுச்சேரி பொதுப்பிரிவு (பி-யுஆர்.,)-17, புதுச்சேரி இதர பிற்படுத்தபட்டோர் (பி-ஓ.பி.சி.,)-9, புதுச்சேரி அட்டவணை இனத்தவர்(பி-எஸ்.சி.,)-5 என மொத்தம் 98 இடங்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு மையங்கள்: ஜிப்மர் பொதுத் நுழைவுத் தேர்வுகள் ஜூன் 5ம் தேதி காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பெங்களூருபோபால்,சண்டிகார்சென்னைகவுகாத்திகோல்கட்டாநாக்பூர்டில்லி,புதுச்சேரிபுனேதிருவனந்தபுரம்விஜயவாடா ஆகிய 12 மையங்களில் நடக்கிறது.

மாதிரி விண்ணப்பங்கள்: ஜிப்மர் மாதிரி வினாத்தாள் கிடைக்ககல்லூரி நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. விண்ணப்ப தொகையுடன் கூடுதலாக 100 ரூபாய்க்கு டி.டி.எடுத்து ஏசைஸ் சுய முகவரியிட்ட தபால் உறையை இணைத்து அனுப்பி மாதிரி வினாத்தாள்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0413-229 6102, 229 6104, 229 6106 என்ற தொலைபேசி எண்ணிலும்இ-மெயில்: ( jipmeracademic@yahoo.in ) இணையதளம்: ( www.jipmer.edu.in )தொடர்பு கொள்ளவும்.

Saturday, November 13, 2010

மருத்துவக் கல்லூரி தேவை நமக்கு

தமிழகம் முழுவதும் முக்கால் பகுதி வக்ப் வாரிய சொத்துக்கள் பயன்படுத்தப் படாமலும் ஆக்கிரமிலுமாக உள்ளன. இவற்றை சமுதாயத்தின் ஏழ்மை நிலலயிலுள்ளவர்களின் நிதித்தேவைக்குப் பயன்படுத்தலாம் அல்லது கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்று எண்ணியபோது கல்வி வளர்ச்சியே சிறந்ததாகத் தோன்றியது. சரி கல்வி வளர்ச்சிக்கு கல்லூரி துவக்கலாம் என்று எண்ணியபோது அதில் மருத்துவக் கல்லூரியே சிறந்ததாகத் தோன்றியது.
எனவே, சமுதாய மக்கள் கல்லூரி துவங்க எண்ணினால் அதற்கு தமிழ்நாடு வக்ப் வாரியம் துணை நிற்கும் என்கிற அறிவிப்பை வெளியிட்டு அதற்கு பலரும் முன் வந்துள்ள 
நிலையில் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கான இடங்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேரில் கண்டு ஆய்வு செய்கிற வேளையில் 


நீடூர்-நெய்வாசல் JMH அரபிக் கல்லூரிக்கு வந்திருந்தபோது JMH அரபிக் கல்லூரியின் நிர்வாகத்தினர் தங்களிடம் 30 ஏக்கர் இடம் இருப்பதாக் கூறி அதில் கல்லூரித் துவங்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அதன் விளைவுதான் இன்றைய வரலாறு போற்றும் ஆலோசனைக்கூட்டமும் அதன் தீர்மானங்களும். ” விளக்கவுரையாற்றிய தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் முயற்சி இறைவினின் பொறுத்தத்திற்குரியது.


தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சி இதுவரை நீடூர்-நெய்வாசல் வரலாற்றில் யாரும் செய்திடாத ஒரு புதுமையான முயற்சியின் தொடர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.


J.M.H.அரபிக்கல்லூரியின் தலைவர் T.S.R.நஜிமுத்தீன் ஹாஜியார் அவர்களின் தலைமையில் இன்று காலை J.M.H நிக்காஹ் மஹாலில் துவங்கிய நிகழ்ச்சியில் புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் A.M.H.நாஜிம், காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் முஹம்மது இஸ்மாயீல், அன்னைக் கல்லூரி தாளாளர் நஜிமுத்தீன், மயிலாடுதுறை நகரமன்றத் தலைவர் லிங்கராஜன், சச்சா முபாரக் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் உரையாற்றினார்கள்.
மருத்துவக் கல்லூரிக்கான அரசு அனுமதியை வாங்குவதற்கு முதலில் கல்லூரிக்கானக் கட்டிடம் கட்டப்பட வேண்டும். அங்கு 2 ஆண்டு காலம் மருத்துவமனையை நடத்த வேண்டும். அதன் பின்னர்தான் முறையான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். கல்லூரித் துவங்க ஆரம்ப கால நிதியாக ரூபாய்.50 கோடி தேவைப் படுகிறது. இந்த 50 கோடியை ஒரு பங்கின் விலை ரூபாய் 10 லட்சம் என்று 500 பங்குகளாக பிரித்து சமுதாய மக்களில் வசதிக்கேற்ப வாங்குவதற்கு வழி செய்யலாம் என்றும், ஜமாத் ரீதியாகவும் தனி நபர்கள் பலர் சேர்ந்தும் பங்குகளை வாங்க வழி செய்யலாம் என்றும் ஆலோசித்து முடிவு செய்யப் பட்டது. பங்குதாரர்கள் நிர்வாகக்குழு அங்கத்தினர்களாக தகுதி பெறுவார்கள். இன்ஷா அல்லாஹ் நமக்கு கிடைக்கும் மருத்துவ சீட்டுகளில் பங்குதாரர்கள் மூலம் சமுதாய மாணவர்கள், குறிப்பாக வசதி வாய்ப்பற்ற மாணவர்கள் பயனடைய செய்ய வேண்டும் என்பதே இத்திட்டதின் குறிக்கோள்.


கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய தினமே வாங்கப் பட்டுவிட்டன. தமிழகத்தை 4 மணடலங்களாகப் பிரித்து அனைத்து தமிழக முஸ்லிம்களின் பங்களிப்பில் நீடூர் J.M.H.A-வக்ப் மருத்துவக் கல்லூரியை வெற்றிகரமாக துவங்கியபின் இதை முன்மாதிரியாக வைத்து இதர பகுதிகளிலும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி சமுதாய மருத்துவர்களை உருவாக்க எடுக்கப் பட்டிருக்கும் இம்முயற்சி சாதாரணமான விஷயமல்ல.


இவை அனைத்தும் தீர்மானங்களாய் நிறைவேற்றப் பட்டபோது சமுதாயமே ஆனந்தத்தில் மகிழ்ந்தது. இந்த லட்சியக் கனவு நனவாக எல்லாம் வல்ல 


அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.
நம்மாலான முயற்சியில் கல்லாமையை இல்லாமை ஆக்கி மிஞ்சுவோம்.

தகவல்
A.J. Tajudeen
Cell # +91 9840885773
by velichcham 

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!