Friday, December 25, 2009

இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம் பாகம் 1



இஸ்லாம் - ஒரு நாடு கடந்து வந்த நதி:

நதி ஒரு நாட்டிற்குள்ளேயே வளைய வருவதைவிட நாடு கடந்து, செல்லுகிற இடத்திற்கெல்லாம் செழிப்பைத் தருவதுதான் சிறப்பு.இஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த நாளிலும் உலகம் எங்கிலும் உள்ள மக்களை நல்வழிப் படுத்துவதற்கான சத்திய ஆவேசம் அதில் தகித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் செய்தி குறிப்பிட்ட வகுப்பாருக்கு உரியதில்லை. இஸ்லாமியச் செய்தி உலகம் முழுவதற்கும் உரியது. காரணம் இறைவன் 'ஆதமின் மக்களே!' என்று அழைத்து அந்தச் செய்தியைப் பொதுமைப் படுத்துகிறான். இஸ்லாத்தில் வருகிற அல்லாஹ், ஆண்டவனுக்கான அரபுப் பெயரே தவிர, அவன் அரேபியர்களின் ஆண்டவன் மாத்திரம் அல்லன்.

அவன் எல்லா உலகங்களின் இறைவன் (திருகுர்ஆன் 1:1)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் மனித குலம் அனைத்திற்கான இறைத்தூதர் ஆவார்.
ஓ மக்களே! நான் உங்கள் எல்லோருக்குமான இறைத்தூதன்: (திருக்குர்ஆன் 8:158)
சகல நாடுகளுக்குமான அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் (திருகுர்ஆன் 25:1)
எல்லா நாடுகளுக்கும் உம்மை இரக்கத்தின்படியே அனுப்பியிருக்கிறோம். (திருகுர்ஆன் 21:102)

இஸ்லாத்தைப் போல பிற எந்தச் சமயமும் உலக சகோதரத்துவத்தை வற்புறுத்தவில்லை. இஸ்லாம் ஒரு குறுகிய பிரிவினைச் சபை அல்ல. இது இஸ்லாத்தின் உள்ளொளியும், ஆற்றல் களமும் ஆகும், இஸ்லாம் மனித குலத்தின் மனச்சாட்சிக்கு ஒட்டுமொத்தமாக அறைகூவல் விடுக்கிறது. எல்லாப் படைப்புகளும் இறைவனைச் சார்ந்தவையே, அவனது படைப்புகளைச் சிறப்பாக நேசிக்கிறவனே, அவனால் அதிகமாக அன்பு செய்யப்படுகிறவன் ஆவான் என்கிறார். இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்)

மேலும் அவரே குறிப்பிட்டதாவது: ~என் அருமை எஜமானே! என் உயிரின் மற்றும் எனது எல்லாவற்றிற்குமான கர்த்தாவே! உலகத்தில் உள்ளோர் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே என்று உறுதி கூறுகிறேன்.

கடவுளின் வழிகளைக் கனம் பண்ணுங்கள், கடவுளுக்குச் சொந்தமான உலகப் படைப்பினிடம் அன்பு பாராட்டுங்கள். ஆகவே செயற்கைப் பிரிவுகளால் உருவாகிற வேறுபாடுகள், தடைகள் ஆகியவற்றை இஸ்லாம் ஏற்பது இல்லை.

இஸ்லாம் அரேபியர்களுக்காக இறக்கப் பட்டதைப்போல் தோற்றமளிக்கிறது. ஆனால் உலகத்திற்காக, அனைத்து மக்களுக்குமாக அது இறக்கப்பட்டது என்பதை ஏற்காமலிருந்தால் அது மனித குலத்திற்கு தான் மாபெரும் இழப்பாகிப் போகும்.

இஸ்லாம், சர்வதேச வாழ்க்கை முறையை எவ்வாறு அங்கீகரிக்கிறது, என்று பார்ப்பது நலம். ஒரு இஸ்லாமிய குடியரசிற்கும் அல்லது அரசாங்கத்திற்கும் மற்ற நாடுகளுக்குமான உறவு முறைகளை இது குறித்துக் காட்டுகிறது. இம்மாதிரியான உறவுமுறைகளும் இறைவனின் கட்டளைப்படியே அமைந்திடல் வேண்டும். இதற்கான அடிப்படைகளை இப்போது பார்க்கலாம்.


வலம்புரிஜான்

Saturday, December 12, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?சுவனம் செல்லத் தடை! தொடர் 15

மனிதர்களிடையே புகழடைவதற்காக நற்செயல்களைப் புரிவது, சுவனத்திற்குள் நுழைவதையும் தடை செய்யும். அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்...

'அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்." நூல்: அபூதாவூத், இப்னு மாஜா

இங்கு குறிப்பிட்டுள்ள அறிவு இஸ்லாத்தைப் பற்றியது ஆகும். இந்த அறிவை அல்லாஹ்விற்காக மட்டுமே ஒருவர் பெற வேண்டும் நமது மார்க்கத்தைப் பற்றி நாம் கற்க வேண்டுமென்பது அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு விடுத்துள்ள கட்டளையாகும். அண்ணல் நபி அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்...

'அறிஞர்களுடன் போட்டி போட வேண்டும் என்பதற்காக அறிவைப் பெறாதீர்கள். இதே போல் சாதாரண பாமரனுடன் விவாதம் செய்வதற்காகவும், கூட்டங்களைக் கவருவதற்காகவும், கவர்ச்சியாக்குவதற்காகவும் அறிவைப் பெறாதீர்கள். எவரொருவர் இதனைச் செய்கிறாரோ அவர் நெருப்பிற்காக காத்திருக்கட்டும்." நூல்: சஹீஹ் சுனன் இப்னு மாஜா

நம் அனைவருக்கும் இது ஒரு கடுமையான எச்சரிக்கையாகும். மக்களைக கவர்வதற்காக நாம் மார்க்கத்தைப் பற்றிய அறிவை தேடக் கூடியவர்களாக ஆகிவிடக் கூடாது. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் ஒரே நோக்கத்திற்காக மட்டும் நாம் அறிவைத் தேட வேண்டும்.

ரியாவைக் கடைப்பிடிக்கும் ஒருவர் நிரந்தரமாக நரக நெருப்பில் கிடத்தப்பட மாட்டார் என்பதில் இஸ்லாமிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது. ஏனெனில் ரியா ஒரு மனிதரை இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றுவதில்லை. ஒரு மனிதனின் உள்ளத்தில் சிறிதளவு தவ்ஹீது இருப்பினும், அவர் நரக நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார். அல்லாஹ் நாடினால், 'ரியா'"விற்காக ஒருவரை மன்னித்து, எவ்விதத் தண்டனையும் அவருக்கு அளிக்காமல் இருக்கலாம்.

Saturday, December 5, 2009

இதுக்கு முந்தப்போவது யாரு?

அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...

அன்புடையீர்,

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் வாழும் பகுதி தேனி மாவட்டம். தாழ்த்தப்பட்ட சமூகத்தவராக இருந்து 20-30 ஆண்டுகளுக்குமுன் இசுலாத்தை ஏற்ற மக்கள் தேனி மாவட்டத்தின் பல கிராமங்களில் வசித்து வருகின்றனர். அன்றாடம் உழைத்தால்தான் உணவுக்கு உத்திரவாதம் என்ற நிலையில் வாழும் மக்களில், ஆணும் பெண்ணும் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

ஒருவர் இறந்தபின் அவருடன் வருபவை மூன்று. அதில் ஒன்று நிலையான கல்வி; மற்றொன்று நிரந்தர தர்மம். ஒரு தலைமுறையையே முன்னேற்றுவதற்குத் தேவையான கல்வியைக் கொடுத்தல் என்பது இவ்வுலகம் அழியும் வரையிலான நன்மையை நிரந்தரமாகப் பெற்றுத் தரும் நற்செயலாகும்.

நம் சமுதாயம் இன்று எல்லா நிலையிலும் அடங்கி ஒடுங்கி, அனைத்து மட்டங்களிலும் பின் தங்கியிருப்பதற்குக் கல்வியில் கவனமின்றி இருப்பது மிக முக்கிய காரணமாகும்.


"தாழ்ந்திருக்கும் கையை விட உயர்ந்திருக்கும் கை மேலானது" என்பது எம்பெருமானார் (ஸல்) அவர்களின் வாக்கு. ஒருவரது தற்காலிகத் தேவையை அவ்வப்போது தீர்த்து வைப்பது என்பது, அவரைப் பிறரிடமிருந்து எதிர்பார்க்கும் நிலையில் தொடர்ந்து நீடிக்க வைப்பதற்கு மறைமுகமான ஊக்கமளிப்பதாகும். அதைவிட, அவரது தேவையை அவரே தீர்த்துக் கொள்ளும் வகையில் கவுரவமான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது மிக உயர்ந்த நற்செயலாகும். மார்க்கச் சகோதரர்களைப் பொருத்தவரை ஒருவரின் கவுரவத்தைப் பாதுகாப்பதும் மற்ற முஸ்லிம்களின் மீது கடமையாகும்.

அதன் அடிப்படையில், T. மீனாட்சிபுரம் எனும் கிராமத்தின் எதிர்காலத்தையே முழுமையாக மாற்றி அமைக்கவல்ல இளம் தலைமுறையினரின் கல்விக்காகச் செலவழிக்க வேண்டியது நம் சமுதாயத்தின் கடமையாகும். அதற்காக அக்கிராமக் குழந்தைகளின் ஆண்டுக் கல்விக்கான முழு தொழுகையினையும் ஒவ்வொரு ஆண்டும் முழுமையாகக் கொடுத்து உதவி, அவர்களின் கல்வி இறுதிவரை தடைப்பட்டு விடாமல் முழுமையடையும் வகையில் அக்கிராமத்தைத் தத்தெடுக்கவும் நம்மில் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என சத்தியமார்க்கம்.காம் அன்போடு கேட்டுக் கொள்கிறது.

மாணவரில் ஒருவருக்கும் மாணவியரில் ஒருவருக்கும் பள்ளிப் படிப்பின் இறுதி வரைக்குமான செலவுகளுக்கு சத்தியமார்க்கம்.காம் பொறுப்பேற்கிறது. இந்த நல்வாய்ப்பை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.


வாழ்க்கைத் தரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இக்கிராமத்து முஸ்லிம்களின் பிள்ளைகள் பஞ்சாயத்து போர்டு பள்ளிகளிலேயே பயின்று வருகின்றனர். குடும்பச் சூழல் காரணமாக இடையில் படிப்பை விடும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் அதிகம். மதிய நேர சத்துணவுக்காகவே பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பும் அவல நிலையும் தொடர்கிறது. மெட்ரிகுலேசன் படிப்பு என்பது அவர்களுக்குத் தூரத்துக் கனவு.

இந்நிலையில் இம்மக்களின் வறுமை மற்றும் கல்வி ஆசையை சாதகமாய் பயன்படுத்திக் கொள்ள சில கிருஸ்துவ அமைப்புகளும் நிறுவனங்களும் சமீப காலமாக முயன்று வருகின்றன. நான் இங்கு சிபாரிசு செய்துள்ள T. மீனாட்சிபுரம் கிராமத்துப் பிள்ளைகளை அருகில் தேவாரம் என்கிற ஊரில் அமைந்துள்ள குட்செப்பர்டு மெட்ரிக் பள்ளி நிர்வாகம், இலவசக்கல்வி, சீருடை என ஆசைக்காட்டி 2007-2008 கல்வியாண்டில் அழைக்க, இம்மக்களும் மெட்ரிக் படிப்பு கனவில் பிள்ளைகளைச் சேர்க்க, அப்பிள்ளைகளைப் பைபிள் வகுப்புகளுக்கும் சர்ச்களுக்கும் ஜெபக் கூட்டங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.இந்த ஆபத்து நமது கவனத்திற்கு வந்தவுடன் அக்கிராமத்துப் பிள்ளைகள் 9 பேரையும் மேலும் ஒரு கிராமமான திம்மிநாயக்கன் பட்டி கிராமத்துப் பிள்ளைகள் 9 பேரையும் அப்பள்ளியிலிருந்து இடமாற்றம் பெற்று, உத்தமபாளையம் அல்-ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளோம்.

அப்பள்ளி நிர்வாகம் கல்விக் கட்டணம் முழுவதையும் தள்ளுபடி செய்துள்ளனர். சீருடை மற்றும் புத்தகங்களுக்கான செலவைப் பெற்றோர் ஏற்க வேண்டும் என்றும் மீதமுள்ள போக்குவரத்து மற்றும் இதர கட்டணங்களைத் தங்களைப் போன்ற சமூகம் நலன் நாடும் அமைப்புகள் மூலம் பெற்றுத் தருவது என்றும் முயன்று, இறையருளால் ஓராண்டு (2008-2009) சமாளித்து விட்டோம். 2009-2010 கல்வி ஆண்டில் மேலும் அதிகப் பிள்ளைகள் சேர்ந்துள்ளனர்.

T. மீனாட்சிபுரம் பிள்ளைகள் 18 பேரின் கல்விக் கட்டணம் விவரங்களைத் தங்கள் உதவி வேண்டி இத்துடன் இணைத்துள்ளேன். திம்மிநாயக்கன் பட்டி கிராமத்தைச் சார்ந்த 12 பிள்ளைகளுக்கான செலவினை வேறு அமைப்பினர் - சமுதாய ஆர்வலரிடம் பெற வேண்டிய தேவையும் உள்ளது. அதற்கும் நீங்களே வழிகாட்டினால் பேருதவியாக அமையும். இசுலாத்தைப் புதிதாக ஏற்ற இந்த மக்களின் எதிர்கால வாழ்விற்கு தங்கள் மூலம் வழிகாட்ட வல்ல இறையை வேண்டி வேண்டுகோள் விடுக்கிறேன். தங்கள் பேருதவியைப் பள்ளி முகவரிக்கே அனுப்பி வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வுதவி ஆண்டுதோறும் தொடரும் அளவிற்கு வல்ல இறைவன் தாங்கள் அனைவரது வளனும் சிறக்க அருள் புரிவானாக!

நிறைய அன்புடன்,
பேரா. மு. அப்துல் சமது
தமிழ்த்துறை விரிவுரையாளர்
ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி
உத்தமபாளையம் - 625 533
போன் : 04554 - 265225
தேதி : 17/08/2009
----------------------------------------------------

T. மீனாட்சிபுரம் முஸ்லிம் ஜமாஅத்தின் வேண்டுகோள் மடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

எங்கள் கிராமத்து முஸ்லிம்களின் நிலையையும் இவ்வுதவி வேண்டுவதன் காரணத்தையும் பேராசிரியர் மு. அப்துல் சமது அவர்கள் விரிவாக எழுதியுள்ளதால், இங்கு அவற்றைக் குறிப்பிடவில்லை. இஸ்லாத்தைப் புதிதாக ஏற்ற எங்கள் மக்கள் தொடர்ந்து வல்ல இறைவனின் நேர்வழியாம் தீன் வழியில் நிற்பதற்குத் தங்களது பேருதவி துணை நிற்கும்.

உத்தம பாளையம் அல்-ஹிக்மா மெட்ரிக் மேநிலைப் பள்ளியில் பயிலும் எங்கள் ஜமாஅத்தைச் சார்ந்த 18 பிள்ளைகள்தாம் எங்கள் ஜமாஅத்தில் இருந்து மெட்ரிகுலேசன் கல்வி பெறும் முதல் தலைமுறை. அவர்களது கல்வி மேம்பாட்டிற்குத் தாங்கள் உதவி புரியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இத்துடன் பள்ளிக் கட்டண விபரங்களை இணைத்துள்ளோம். தாங்கள் அனைவரும் எல்லா நலமும் பெற்று வாழ எங்கள் ஜமாஅத்தினர் அனைவரும் துஆச் செய்கின்றனர். நன்றி.


வஸ்ஸலாம்.

தலைவர்
மீனாட்சி புரம் முஸ்லிம் ஜமாஅத்
T. மீனாட்சிபுரம் - 625 530
தேவாரம் வழி, உத்தமபாளையம் தாலுகா
தேனி மாவட்டம்.
ALHIKMAH MATRICULATION SCHOOL

(Regd. By Government of Tamilnadu)

P.T.R COLONY, UTHAMAPALAYAM

THENI DT. - 625 533 Ph: 04554(268202)



நன்றி http://www.satyamargam.com/1375

Sunday, November 22, 2009

தகர்க்கப்பட்டது தர்கா !!


வேலூர்- ரஹ்மத் பாலாவில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இரு முக்கிய சாலை சந்திப்பில் ஆஷுகான என்ற இடத்தில் ஒரு கல்லினை வைத்து தாகாவாக வணங்கிக்கொண்டிருந்தனா. இதில் பெரும்பான்மையாக பெண்கள் மட்டுமே வருகின்றனா.

மேலும் இப்போது சாலை இருபுறமும் கால்வாய் கட்டி புதிய சாலை அமைக்க அகலப்படுத்தும் போது தர்கா வாதிகள் தாகாவை நகாத்த எதிப்பு தொவித்தனா. தர்ஹாவை தகர்த்தெரிய இதை நல்ல வாய்ப்பாக யன்படுத்திக் கொண்டு நமது TNTJ நீர்வாகிகள் உடனடியாக களத்தில் இறங்கிய முறைப்படி மாநகர மேயா மற்றும் ஆனையாளாடம் எழுத்துமூலமாக ஆக்கிரமிப்பை அகற்ற மனு அளித்னர். அதன் அடிப்படையில் நேற்று காலை (20.11.09) 10 மணிக்கு நகர தலைவா அப்துல் கலீம் தலைமையில் முன்னாள் மாவட்ட நிவாகி அலாவுதீன் முன்னிலையில் நமது ஜமாஅத்தைச் சாந்த சுமார் 25 பேர் இணைந்து சமட்டியால் அடித்தே அந்த தர்காவினை தரை மட்டமாக்கினா. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த ஏகத்துவ எழுச்சியிக்கு அந்தப் பகுதியைச் சாந்த அனைத்து முஸ்லிம்களும் அமோக ஆதரவளித்தனா.

இதில் எதிப்பு காட்டிய சிலர் அருகிலுள்ள பள்ளிவாசலில் ‘நாங்கள் வணங்க ஒரு இடம் ஒதுக்கித்தர வேண்டுமென முறையிட்டனர் .இதையறிந்த நமது நிவாகிகள் மாநில செயலாளர் ஆ.ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் சம்பந்தப்பட்ட ஜமாஅத்தினரை நோல் சந்தித்து இடிக்கப்பட்ட இடத்தில் ரோடு வரவேண்டும் மற்றும் மீதமுள்ள காலி இடத்தில் மக்தப் மதரஸா கட்டப்பட வேண்டும்.

இந்த இணைவைப்பாளருக்கு இந்த இடத்தை எக்காலத்திற்கும் ஒதுக்க விடக்கூடாது என ஆணித்தரமாக அறிவுறுத்தினர். அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்..


சில தினங்களுக்கு முன் டிராபிக் ராமசாமி என்பவர் ஒரு பொதுநல வழக்கொன்றை ஹைகோர்டில் தொடர்ந்திருந்தார்,அதில் அவர்,"இப்படி பொது இடங்களை ஆக்கிரமித்து தர்கா,கோயில்,சர்ச்சுகள் பலர் கட்டியுள்ளனர்,இவைகளை இடிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும என்று."அது சரியானது தான்.ஆக்கிரமிப்புக்களைக் களைவது அரசின் கடமை என்றாலும்,ஆக்கிரமிப்பு இல்லாமல் கட்டப்பட்டுள்ள தர்காக்களை இடிக்க அரசு உத்தரவிடவேண்டும் என்பதே பெருவாரியான முஸ்லிம்களின் கோரிக்கை,ஏனெனில்,அது இஸ்லாத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.தர்காக்களை இடித்து விட்டு விட்டு அந்த இடத்தில் ஆசுபத்திரி,பள்ளிக் கூடம் போன்றவைகளை கட்டினால் மக்களுக்கு பயன் கிடைக்கும் என்பது திண்ணம்

Friday, November 20, 2009

மரண அறிவிப்பு

மர்ஹூம் முஹம்மத் தம்பி மரைக்காயர் (கட்ட பிள்ளையார்)அவர்களின் மகனாரும்,சகோதரர்கள் முஹம்மத் தமீம்,சாதிக்,ரபீக்,தௌபீக் ஆகியோர்களின் தகப்பனாரும்,மர்ஹூம் ஷேய்க்காதியார்,மர்ஹூம் அபுல் ஹசன்,அப்துல் ரஜாக்,ஹாஜா அலாவுதீன் ஆகியோர்களின் சகோதரரும்,அப்துல் ரஜாக்,ஷேய்க் அப்துல் காதர்,அப்துல் ரஜாக்,ஹாஜா ஆகியோர்களின் மாமனாருமாகிய நடுத்தெருவில் வசித்து வந்த சாகுல் ஹமீத் அவர்கள் இன்று காலை சுமார் ஆறு மணியளவில் அதிராம்பட்டினத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்.அன்னார் அவர்கள் மிக எளிமையான நடத்தையும்,மேன்மையையும் பேணி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னாரின் மறுமை உலக நற் பேருக்காகவும்,ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துவா செய்யுமாறு வேண்டுகிறோம்.

இப்படிக்கு

கட்டப்பிள்ளையார் குடும்பத்தார்.

Wednesday, November 11, 2009

இறை இல்லம் கட்ட நிதி உதவி தேவை.



சென்னை கீழ்பாக்கத்தில் இறை இல்லம் கட்ட முயற்சிக்கப்பட்டு வருகிறது.எனவே அல்லாஹ்வின் அருள் நாடி,நிதி உதவி செய்யும்படி சகோதரர்களை வேண்டுகிறோம்.அல்லாஹ்விற்காக இறை இல்லம் கட்டுபவர்களுக்கு,அல்லாஹ் சுவனத்தில் மாளிகை ஒன்று கட்டுகிறான் என்பது ஹதீஸாகும்.

பள்ளிவாசல் கட்ட இடம் வாங்கவும்,கட்டவும் ரூபாய் 50,0000.00 என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, AL-MADRASATHUL DHEENIYATH ( Regd)NO.12,Halls Road, Kilpauk, CHENNAI-600010 என்ற இடத்தில் தொழுகை நடைபெற்று வருகிறது,ஆனால்- 25 நபர்கள் மட்டுமே தொழ இடம் உள்ளது,இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய மக்கள் தொழ வேண்டும் என்றால்,அதற்கு பெரிய பள்ளியாக கட்டினால் மட்டுமே முடியும்.தாராளமாக உதவுங்கள்,இன்ஷா அல்லாஹ்,அதை பன் மடங்காக்கி இம்மையிலும்,மறுமையிலும் தருவான்,ஆமீன்.

மேலும் விவரங்களுக்கு,

saibudeen 91-9841045673

kilpauk muslim welfare association

தகவல்:சைபுதீன்,அதிரை.

Monday, November 2, 2009

பாருங்கள்,பார்க்கத் தூண்டுங்கள்.

மும்பையில் அல்லாஹ்வின் அருளால்,பீஸ் கான்பரன்ஸ் தொடங்கி நடந்துவருகிறது,அந்த நிகழ்ச்சிகள் யாவும் பீஸ் டிவி மூலம் நேரடி ஒளி பரப்பாகவும் காண்பிக்கப்படுகிறது.சுமார் 30 நாடுகளிலிருந்து அழைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.மேற்கொண்டு விபரம் அறிய
http://peaceconference.in/index.htm இந்த தளம் சென்று விபரங்கள் அறியலாம்.மேலும் டாகடர் ஜாகிர் நாயக் அவர்களின் இணைய தளமான http://irf.net/ சென்றும் அறிந்துகொள்ளலாம்.நீங்கள் பார்ப்பதோடு,உங்கள் மாற்று மத நண்பர்களையும் பார்க்கத்தூண்டுங்கள்.

Saturday, October 24, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?அல்லாஹ்வுக்கு சிரம் பணிய இயலாமை! தொடர் 14

மக்கள் தரும் புகழாரங்களை வணங்கியவர்களுக்கு மேலும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்கள் தனக்கு சிரம் பணிய (சுஜூது ) செய்ய முயன்ற போதிலும், அதனை அல்லாஹ் இயலாமல் ஆக்கிவிடுவான். அபூ சையீத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு நீண்ட நபிமொழியில், இறுதித் தீர்ப்பு நாளில் இறைநம்பிக்கையாளர்கள் எவ்வாறு அல்லாஹ்வைக் காண்பார்கள் என்பதை அண்ணல் நபி அவர்கள் விளக்கினார்கள். இதன் பிறகு அவர்கள் சொன்னார்கள்.

'பிறகு அல்லாஹ் தனது கீழ்காலின் முன்புறத்தை வெளிப்படுத்துவான். (உலக வாழ்வின் போது) தனக்கு தூய எண்ணத்துடன் சிரம் பணிய செய்த அனைவரையும் சிரம் பணிய அனுமதிப்பான். இதனால் அவர்கள் யாருமே நின்று கொண்டிருக்க மாட்டார்கள். மற்றவர்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக சிரம்பணிந்தவனின் முதுகை அல்லாஹ் ஒரே துண்டுக் கட்டையாக ஆக்கிவிடுவான். (இதன் விளைவாக அவனால் குனியவே முடியாது) ஒவ்வொரு முறை அவன் சிரம் பணியும் போது, அவன் முகங்குப்புற கீழே விழுவான்...."

நூல்: சஹீஹ்அல்ஜாமி,புகாரி,முஸ்லிம்.
அபூ அம்மார் யாசிர் அல் காழி -
தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்

Saturday, October 17, 2009

வெற்றிக்கு வழி! இஸ்லாத்தை உறுதிப்படுத்தும் அறிவியல் உண்மைகள்!! தொடர் 5





"அதுமட்டுமல்ல,இன்னும் கேளுங்கள் ஷண்முகம்,பஷீர் காக்கா தொடர்ந்தார்,"முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.

"இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது".

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190)

வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.

குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர் ஆனோடு முரண்படவில்லை என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர் ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும் வாய்ப்பில்லை அன்ற அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிவியல் செய்திகளையும் இப்போது கூறிவிட இயலாது.அந்த அளவுக்கு உள்ளன. எனினும் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை கீழ்க்கண்ட இரு செய்திகளின் மூலம் அறியலாம்.


பெருவெடிப்புக் கொள்கை:


வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,

1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.

2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.

3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் - சந்திரன்களாக உருவாகின.
- என்பதாகும்.

அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN),இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக, பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.


சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.

பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:
சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.
அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.

பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)

1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.
மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.
அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53).

ஷண்முகம் கண்கொட்டாது,ஆச்சரியத்தில் மூழ்கி கேட்டுக் கொண்டிருந்தார். புகைவண்டி அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது.


இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

முஸ்லிம் பெண் தொழிலதிபர் அக்தர் நவாஸ்



"தொழிலில் "ரிஸ்க்' எடுத்தால் சாதிக்க முடியும்,'' என பெண் தொழிலதிபர் அக்தர் நவாஸ் கூறினார். மதுரை நாராயணபுரம் பாங்க் காலனியை சேர்ந்தவர் நிஜாம் அலிகான். இவரது மனைவி அக்தர் நவாஸ் (46). பி.காம்.,படித்துள்ளார். "எம்.என்.ஏ.ஹெர்பல் ரெமடீஸ்' நிறுவன உரிமையாளர்.

மடீட்சியா- சக்தி மசாலாவின் "சிறந்த பெண் தொழில் முனைவோர்' விருது பெற்றுள்ளார். அக்தர் நவாஸ் கூறியதாவது: நாங்கள் முதலில் போட்டோ ஸ்டுடியோ மற்றும் பியூட்டி பார்லர் நடத்தினோம். இதில் வருவாய் குறைந்ததால் மாற்றுத் தொழில் பற்றி சிந்தித்தோம். நெல்லிக்காய் சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும். இளமையை பாதுகாக்கும். எனவே இதிலிருந்து பொருட்கள் தயாரித்தால் என்ன? என எண்ணினோம். சமூக நலத்துறை சார்பில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி நடந்தது. இதில் நான் நெல்லிக்காய் ஜூஸ் பயிற்சி பெற்றேன்.

பின் நெல்லிக்காய் ஜூஸ் தயாரிப்பு சுய தொழில் துவங்கினேன். அதை முதலில் கடைகளில் வாங்க தயங்கினர். மகளிர் திட்டம் மூலம் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி மற்றும் உழவர் சந்தைகளில் வரவேற்பு இருந்தது. பின் கடைகளில் ஆர்டர் குவிந்தது.தற்போது எங்களின் நெல்லிக்காய் ஜூஸ், ஸ்வாகுவாஷ், நெல்லி மிட்டாய், ஊறுகாய், லேகியத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கணவர் "மார்க்கெட்டிங்'கை கவனித்துக்கொள்கிறார்.

பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். உசிலம்பட்டி, அழகர்கோவில், பிள்ளையார் பட்டி பகுதிகளிலிருந்து தேவையான நெல்லிக்காய்களை கொள்முதல் செய்கிறோம்.மதுரை விவசாயக் கல்லூரி மற்றும் மனையியல் கல்லூரி மாணவர்களுக்கு "அக்ரோ இண்டஸ்ட்ரியல் டை- அப்' மூலம் மூன்று ஆண்டுகளாக பயிற்சி அளிக்கிறோம். விரைவில் மாதுளை, வில்வம்பழ ஜூஸ் தயாரிக்க உள்ளோம்.

பெண்கள் சுய தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். யாரையும் எதிர்பார்க்கக்கூடாது. முயற்சி, தன்னம்பிக்கையுடன் "ரிஸ்க்' எடுத்தால் சாதிக்கலாம். பெண்கள் வழக்கம்போல் வத்தல், மிளகாய், வடகம், ஊறுகாய் தயாரிப்பு தொழில் ஈடுபட்டால் வருவாய் குறைவாகத்தான் கிடைக்கும். எந்த தொழில் செய்தால் விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்கும் என ஆராய்ந்து ஈடுபட்டால் வெற்றி நிச்சயம், என்றார். இவரை 93603 82611 ல் தொடர்பு கொள்ளலாம்.

Monday, October 12, 2009

சிலை,கல்,மண்ணை வணங்கும் இந்துவே,சற்று சிந்திப்பாயா!

இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். (21:51)

அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் "நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?" என்று கேட்ட போது (21:52)

அவர்கள், "எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள். (21:53)

(அதற்கு) அவர், "நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையவரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள் என்று கூறினர். (21:54)

(அதற்கு) அவர்கள் "நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?" என்று கேட்டார்கள். (21:55)

"அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்" என்று (இப்ராஹீம்) கூறினார். (21:56)

"இன்னும்; நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!" (என்றும் கூறினார்.) (21:57)

அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்). (21:58)

"எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்" என்று கூறினார்கள். (21:59)

அதற்கு (அவர்களில் சிலர்) "இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது" என்று கூறினார்கள். (21:60)

"அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு" என்று சொன்னார்கள். (21:61)

"இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?" என்று (அவர் வந்ததும்) கேட்டனர். (21:62)

அதற்கு அவர் "அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்" என்று கூறினார். (21:63)

(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) "நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்" என்று பேசிக் கொண்டார்கள். (21:64)

பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; "இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!" (என்று கூறினர்). (21:65)

"(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்" என்று கேட்டார். (21:66)

சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?" (என்று இப்ராஹீம் கூறினார்). (21:67)

(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்" என்று கூறினார்கள். (21:68)

(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) "நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!" என்று நாம் கூறினோம். (21:69)
மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்! (21:70)

Wednesday, September 30, 2009

இவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா?

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத - கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.

இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.

மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?

சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?

பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை - பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே - புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?

கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!

பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?

இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?

பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக - பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.

(நபியே?!) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்)பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - திருக்குர்ஆன் - 112:1-4


நன்றி: Readislam.net


அபூ பாத்திமா

Thursday, September 24, 2009

நீங்களும் முயற்சிக்கலாமே!

சமச்சீர் கல்விக்கான புதிய பாடத் திட்டம் தொடர்பாக ஆலோசனைகள், கருத்துகள் ஆகியவையும், பாடப் புத்தகங்கள் எழுத தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (டி.டி.இ.ஆர்.டி.) கூறியுள்ளது.

இது தொடர்பாக டி.டி.இ.ஆர்.டி. புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியைச் செயல்படுத்துவதன் முதல் கட்டமாக 1 முதல் 10-ம் வகுப்பு வரை புதிய பாடத் திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதற்காக கல்வி வல்லுநர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட 150 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பாடத் திட்டம் தொடர்பாக ஆலோசனைகள், கருத்துகள் கூற விரும்புகிறவர்கள் தங்கள் கருத்துகளை "இயக்குநர், டி.டி.இ.ஆர்.டி. டிபிஐ, வளாகம், கல்லூரி சாலை, சென்னை-06' என்ற முகவரியிலோ அல்லது

dtert@tn.nic.in

என்ற மின்னஞ்சலிலோ தெரிவிக்கலாம்.

இக்கருத்துகள் தேவையின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

பாடப் புத்தகம் எழுத: முதல் கட்டமாக 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கும், 2-ம் கட்டமாக 2, 3, 4, 5, 7, 8, 9, 10-ம் வகுப்புகளுக்கும் பாட நூல்கள் தயாரிக்கப்பட உள்ளன.

பாடப் புத்தகங்களை எழுதுவதற்கு தகுதியும், திறனும் உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், உதவிபெறும் தனியார் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல் பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் பாட நூல்கள் எழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை

www.pallikalvi.in

என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் வழியாக, சென்னை டி.பி.ஐ.யில் உள்ள டி.டி.இ.ஆர்.டி. இயக்குநருக்கு 5.10.09-க்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப உறையின் மீது பாடப் புத்தகங்கள் எழுதுவதற்கான விண்ணப்பங்கள் என்று குறிப்பிட வேண்டும்.

புத்தகம் எழுத தெரிவு செய்யப்பட்டு, பணியை மேற்கொள்பவர்களுக்கு மதிப்பூதியம், பயணப்படி, சான்றிதழ் போன்றவை வழங்கப்படும். எழுதுவோரின் பெயர்களும் புத்தகத்தில் இடம்பெறும்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு பி.ஈஸ்வரி -94449 29142; கே.மஞ்சுளா -98412 98425; என்.சத்தி -94445 20311 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, September 19, 2009

இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எங்களது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

Monday, September 14, 2009

"தவக்குல்"

ஒருவர் இறைவனை முழுமையாகச் சார்ந்து நின்று, அவர்தம் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற இறைவனே பொறுப்பேற்கக் கூடியவன் என்ற உறுதியுடன் செயல்படுவது "தவக்குல்' எனும் இறைச் சார்பு நெறியாகும்.

இந்த நெறியானது, "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்ற முதுமொழியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இதுபற்றி கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனங்கள் விளக்கமளிப்பதாக உள்ளன.

"இறைவனே சிறந்த பொறுப்பேற்பவனாக இருக்கிறான்' (3:173); "நீங்கள் இறைவனையே சார்ந்து நில்லுங்கள்; அவனே உங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளப் போதுமானவன்' (33:3); "நிச்சயமாக இறைவன் (தன்னிடம்) பொறுப்பை ஒப்படைப்பவர்களை மிகவும் நேசிக்கிறான் (3:159).

இதன் மூலவசனங்களில் இடம் பெற்றுள்ள அரபி மொழிச் சொற்களான "தவக்குல்' என்பதும், "வக்கீல்' என்பதும் முறையே இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவனைத் தன் பொறுப்பாளனாக்கிக் கொள்வதையும், பொறுப்பேற்பவனாகிய இறைவனையும் குறிப்பவை.

இங்கு, "நம் காரியங்கள் அனைத்துக்கும் இறைவனே பொறுப்பேற்கிறான்' என்பதன் பொருள் என்னவெனில், "நம்மை முழுமையாக அவனிடம் ஒப்படைத்துவிட்டோம்; இனி அவனே நமக்கு வேண்டியவற்றை எல்லாம் வழங்குவான்' என்று வாளாவிருப்பதல்ல; மாறாக இறைவன் நமக்குத் தந்துள்ள அறிவையும், ஆற்றலையும் முறையாகப் பயன்படுத்தி முழுமையாக உழைத்த பின்னர், "அவ்வுழைப்பின் பயன் இறைவன் புறத்தே உள்ளது' என்று திடமாக நம்புவதேயாகும்.

இதனை, நபி (ஸல்) அவர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டின் மூலமாக மேலும் தெளிவுப்படுத்திக் கூறியுள்ளார். அதாவது, ""நீங்கள் இறைவனிடம் முழு நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று இறைவன் உங்களுக்கும் உணவளிப்பான். ஒட்டிய வயிற்றுடன் காலையில் கிளம்பிச் செல்லக்கூடிய பறவை, வயிறு நிரம்பிய வண்ணம் மாலையில் திரும்புகிறது.'' இவ்வெடுத்துக்காட்டில் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது யாதெனில், "இறைவன் உணவளிப்பான்' என்பதற்காக பறவை கூட்டினுள் இருந்தால் அதற்குத் தேவையான உணவு, பறவையின் கூட்டினை வந்தடைவதில்லை. பறவை உணவைத் தேடிப் பறந்து செல்கிறது; அதற்கு உணவு கிடைக்கிறது. அதைப் போன்றுதான் மனிதனும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கான பலனை இறைவன் வழங்குகிறான். (அறிவிப்பாளர் உமர் (ரலி); ஆதாரம்-மிஷ்காத்.)

இறை நம்பிக்கையும், முழு முயற்சியும் இணைந்தே நம் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகின்ற மற்றொரு நபிமொழி : "நீ இறைவனை நம்பு; ஆனால் உன் ஒட்டகத்தைக் கட்டி வை' என்பதாகும். (அறிவிப்பாளர் அனஸ் (ரலி); ஆதாரம் - திர்மதி)

"இறைவனைச் சார்ந்து நிற்றல்' என்ற இந்த நிலைப்பாடு, மனித வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

உதாரணத்திற்கு உழவுத் தொழிலை எடுத்துக் கொண்டால், முதலில் உழவன் நிலத்தை உழுது, விதைவிதைத்து, நீர்ப்பாய்ச்சி, உரமிட்டு, களை எடுத்து- இவ்வாறெல்லாம் செய்த பின்னர் நல்ல விளைச்சலை ஆவலுடன் எதிர்பார்க்கிறான் அல்லவா? இறைவனிடமிருந்து அவன் இதனை எதிர்பார்க்க வேண்டும். அப்பொழுது இறைவன் உழவனுடைய இப்பயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறான்; பயிர் செழித்து வளர்வதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி, உழவன் எதிர்பார்த்தவாறு நல்ல விளைச்சலை இறைவன் அளிக்கிறான்; இதனால் உழவன் உளம் மகிழ்கிறான்; மனநிறைவுடன் அந்த இறைவனுக்கு அவன் நன்றி செலுத்துகிறான். தவக்குலின் பொருளடக்கம் இதுதான்.

ஓர் அடியான் இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்தலின் மற்றுமோர் முக்கிய அம்சம் என்னவென்றால், தன் விவகாரங்களை முடிந்த வரை முயற்சி செய்து முடித்துவிட்ட பிறகு, "இறைவா! நான் சக்தியற்றவனாக இருக்கிறேன்; பலவீனனாகவும் இருக்கிறேன். நீயே வல்லமை மிக்கவன்! எனவே நான் மேற்கொண்ட பணிகளில் குறைகளிருப்பின் நீயே நிறைவு செய்து நற்பயன் அருள்வாயாக!' என்று இறைவனை வேண்டி நிற்பதாகும்.

இவ்வாறாக, "தவக்குல்' எனும் இறைச் சார்பு நெறியை உறுதியாகக் கடைபிடிப்பதன் மூலமாக, நமக்கு இறைவனுடைய அருளும், உதவியும் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இதனையே "நம்பிக்கை கொண்டோருக்கு உதவி செய்வது தம் கடமை' (30:47) என்றும், "தம் அருட்கொடையைப் பற்றி எவரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்' (39:53) என்றும் இறைவன் திருமறையில் திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளான்.

எனவே, நாம் இறை நம்பிக்கையுடன் செயல்படுவோம்; அவன்தன் அருளைப் பெற்றிடுவோம்.

எம்.கே.எஸ். பாவா

Thursday, September 10, 2009

தொழுது கொள்வோம்,நமக்கு தொழுகை வைக்கப்ப்படுமுன்!





அறிவிப்பாளர் : அப+ஹுரைரா (ரலி)
நபி அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் கொடுப்பான். 1. நீதி செலுத்தும் அரசன். 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் தன் இளமையைக் கழித்த வாலிபன். 3.எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன். அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பான். 4.எந்த இரு மனிதர்களுடைய நட்புக்கு அல்லாஹ்வும் அவனது மார்க்கமும் அடிப்படைகளாக அமைந்திருந்தனவோ அந்த மனிதர்கள். அவர்கள் அதே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள், அதே உணர்வுடன் பிரிவார்கள். 5. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் மனிதன். 6. உயர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி தகாத செயல் செய்திட அழைத்தபோது, இறையச்சத்தின் காரணத்தால் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்ட மனிதன். 7. தன் வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தருமம் செய்த மனிதன்.”(புகாரி, முஸ்லிம்)

இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். 2:110

Wednesday, September 9, 2009

வந்தார்கள்,சொன்னார்கள்,மா மனிதரைப் பற்றி!

உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முஹம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ்சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே!

1400 ஆண்டுகள் கழிந்த பின் இன்றும் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் குறைக்கப்படாமலும் கூட்டப்படாமலும் எந்தவொரு மாற்றமுமின்றி நமக்கு அப்படியே கிடைக்கின்றன. மனித சமுதாயத்தின் பெரும் பிரச்சினைகளை அப்போதனைகள் அன்று தீர்த்து வெற்றி கண்டதைப் போலவே இன்றும் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவையாய் இருக்கின்றன. இதுவே வாய்மையாய் யாம் உலகிற்கு மொழியும் கூற்றாகும். வரலாற்றை ஆராயும் ஒவ்வொருவருக்கும் தென்படும் தவிர்க்க முடியாத முடிவாகும்.

மைக்கேல் ஹார்ட்,the 100 எனும் நூலில்
---------------------------------------

உயர்ந்த லட்சியம், குறைவான வசதிகள் வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம் மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள். சட்டங்களை இயற்றினார்கள். பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவை தான்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்து விட்ட உலகாயதக் கோட்டைகளைத் தான் அவர்களால் நிறுவ முடிந்தது.

ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களோ போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரசவம்சங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை. அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார்கள். வழிபாட்டுத் தளங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துக்களையும், கொள்கையையும், நம்பிக்கைகளையும், ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள்.

வெற்றியின் போது அவர்கள் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத் தன்மை, தாம் ஏற்றுக் கொண்ட பணிக்காக தம்மையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அவரது உயர் நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடன் அவர்கள் நடத்தி வந்த மெஞ்ஞான உரையாடல்கள், அவர்களின் மரணம், மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர்கள் ஓர் ஏமாற்றுக்காரர் என்றோ,மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை. மாறாக, சமயக் கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவர்களுக்கிருந்த மனோ உறுதியைத் தான் பறைசாற்றுகின்றன.

சரித்திர ஆசிரியர் லாமர்டின்
------------------------------------------

பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.

டாக்டர் அம்பேத்கார்

-----------------------------------------
முஹம்மது இரக்கமே உருவானவர். அவரது இரக்கம் அவரைச் சுற்றியுள்ளவர்களைக் கவர்ந்திழுத்தது.

- திவான் சந்த் ஷர்மா (D.C.Sharma – The Prophets of the East Calcutta 1935 pp 12)

-------------------------------------------

இனத்தார் மேல் பற்றுக் கொள்ளல் தவறா என்று
…..இறைத்தூதர் நபி பெருமான் தன்னிடத்தில்
வினாவொன்று வைத்து நின்றார் நல்ல நண்பர்
…..விரைந்தங்கு நபி பெருமான் பதிலைச் சொன்னார்
இனத்தார் மேல் பற்று அவர்க்கு உதவி செய்தல்
…..எல்லாமே மிகச் சரிதான் ஆனால் மற்றோர்
இனத்தார் மேல் கொடுமை செய்ய உதவி நின்றல்
…..இனவெறி தான் நல்லதில்லை என்று சொன்னார்

நெல்லை கண்ணன்
--------------------------------------------
இன்னும் வருவார்கள்,
சொல்வார்கள்-இன்ஷா அல்லாஹ்.

Friday, September 4, 2009

வெற்றிக்கு வழி! கண்ணை மூடிக்கொண்டு,கடவுளை நம்ப வேண்டுமா?தொடர் 4

ட்ரைன் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.டிரைனின் சப்தம் தவிர வேறு சத்தம் இல்லை.ஷண்முகமும்,ரஞ்சிதம்மாலும் சிந்தனையில் மூழ்கி இருந்தனர்.எப்படி இவ்வளவு அருமையான முறையில் இஸ்லாம் அமைந்திருக்கிறது.இன்னும் அது பற்றி தெரியவேண்டும் என்ற உந்துதல் இருவருக்கும் ஏற்பட்டத்தில் வியப்பில்லை.

"பாய், ஏக இறைவன்தான் எல்லாவற்றையும் படைத்தான் என்பதை ஒத்துக்கொள்கிறேன்,சரி,குர்ஆனில் அவன் படைத்தவைகளின் செயல்,அதிசயம்,இன்னும் பலவற்றை பற்றி ஏதும் செய்தி உண்டா?ஏனெனில்,இன்னைக்கு பல சமயங்களில் விஞ்ஞானமும்,மருத்துவமும் சொல்லிக் கொண்டே இருக்கிறதே,அதனால் கேட்டேன்,அதுமட்டுமல்ல,குர்ஆன் இறைவன் அருளிய வேதம் என்றால்,கூறப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?என்றார் ஷண்முகம்.
"ஒ அதுபற்றி கடல் அளவு செய்திகள் சொல்லப்பட்டிருக்கு,என்னால் இயன்ற அளவு,தெரிஞ்ச அளவு சொல்கிறேன்"என்று ஆரம்பித்தார் பஷீர் காக்கா.

"மனிதப் படைப்பை ஓர் உதாரணமாகக் கொள்வோம். தந்தையால் வெளிப்படுத்தப்படும் இலட்சக்கணக்கான விந்தணுக்களில் ஒன்றே ஒன்று மட்டும் தாயின் கருவறையில் சினை முட்டையுடன் இணைந்து ஒரு கருவாகிறது! ஆரம்ப நிலையிலிருக்கும் இக் கருவுக்கு தான் பிறந்து செல்லவிருக்கும் வெப்பம், குளிர், காற்று, ஒளி, ஒலி எல்லாம் உள்ள உலகத்தைக் குறித்த எந்த அறிவும் இருப்பதில்லை! ஆனால் இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள உதவும் திசுக்களாக சுயமாகவே பெருக்கமடைகிறது! ஒன்றாக இருந்தது சுயமாகவே பலகோடி திசுக்களாகப் பெருக்கமடைகின்றன. இதயம், நுரையீரல், இரைப்பை முதலான உடலின் உள்ளுறுப்புகள் உருவாகின்றன.. எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றையெல்லாம் நிர்வகிக்கின்ற மிகப்பெரிய அற்புதமாகிய மூளை உருவாகின்றது! எவ்வாறு இது நடை பெறுகிறது? அற்பமான, புறக்கண்ணால் பார்க்க இயலாத வேறுபட்டிருந்த இரு அணுக்களை ஒன்றிணையச் செய்து, இவ்வளவு அற்புதச் செயல்களை நடைபெறச் செய்பவன் யார்? இவற்றக்குப் பின்னால் உள்ள ஒரு படைப்பாளனை ஏற்றுக் கொள்வதன்றோ அறிவுடைமை?"


படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனின் உள்ளமையை அறிந்து கொள்ளுங்கள் என்ற அறிவுப்பூர்வமான கோட்பாடைத் திருக்குர்ஆன் கூறுகிறது.

“ஒட்டகத்தை, அது எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என அவர்கள் (கவனித்துப்) பார்க்க வேண்டாமா? வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப் பட்டுள்ளதென்றும், மலைகள், அவை எவ்வாறு நடப்பட்டுள் ளனவென்றும். பூமி, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ள தென்றும் (அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?)” (அல்குர்ஆன் 88: 17-20)


கண்ணை மூடிக் கொண்டு கடவுளை நம்ப வேண்டும் என்பதை விட படைத்தவனைக் குறித்து அறிந்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை இஸ்லாம் கற்றுத் தருகிறது. இறை கொள்கையில் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தரும் இத்தகைய உயர்ந்த கொள்கை இன்று நடைமுறையில் உள்ள எந்த மதத்திலும் கிடையாது என்பது இஸ்லாமினுடைய தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். தன்னைப் பற்றியும் தன்னைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தைக் குறித்தும் ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் அந்த இறைவனின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுமாறு மனிதனுக்கு அழைப்பு விடுக்கும் குர்ஆனிய வசனங்கள் பாமரர் முதல் விஞ்ஞானிகள் வரை புரிந்து கொள்ளக் கூடிய அளவில் தெளிவாகவும் எளிதாகவும் உள்ளது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் அருளப்பட்ட வசனங்களைப் பாருங்கள்

யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக ‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (96: 1 -4)
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (2:28)

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (23:12-14)

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (56: 58, 59)

"அறியாத பாமரன் முதல் அறிவியலாளன் வரை இத்தகைய சிந்தனையால் தன் இறைவனைப் பற்றி அறிய உதவும் எளிய கோட்பாடை குர்ஆன் கற்றுத் தருகிறது."



இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

Thursday, September 3, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? நரக நெருப்பில் நுழைவதற்கான முதன்மையான காரணம்!தொடர் 13

அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இறுதித் தீர்ப்பு நாளில், மக்களில் முதல் முதலில் (இறைவழியில் உயிர் துறந்து) ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும். அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒத்துக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம் 'நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர், 'நான் உனக்காக (வீர) மரணம் அடையும் வரை போராடினேன்" என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய்: வீரன் என்று கூறப்படுவதற்காகவே போாிட்டாய். இவ்வாறே (மக்களாலும் உலகில்) பேசப்பட்டு விட்டது" என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதர்; முகங்கவிழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும்.

பின்னர் (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆன் ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ், தான் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம், 'நான் கொடுத்த அருட்கொடைகளை என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர், 'நான் உனக்காக (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனை (பிறருக்கும்) கற்றுக் கொடுத்து, குர்ஆனை உனக்காக ஓதி வந்தேன்" என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய், அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டுமென்பதற்காகவே இஸ்லாமிய அறிவைக் கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக்கூடியவர்கள் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களாலும்) பேசப்பட்டு விட்டது" என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும் வரை அம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லும் படி ஆணையிடப்படும்.

அதன் பின்னர் செல்வந்தர்; ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத் தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவருக்கு அல்லாஹ் தான் அளித்துள்ள அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம், 'நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர் 'நீ எந்த வழிகளிலெல்லாம் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் நான் செலவு செய்யாமல் விட்டதில்லை." என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய். (இவர் வள்ளல் தனத்துடன்) வாாி வாாி வழங்குபவர், என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது" எனக்கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லுமாறு ஆணையிடப்படும். நூல்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ

சஹீஹ் அத் தா;கீப் வத் தா;ஹீபில் இந்த அறிவிப்பின் இறுதியில் பின்வரும் வாசகமும் இடம் பெற்றுள்ளது. பிறகு அண்ணல் நபி அவர்கள் எனது முட்டிகளைத் தட்டி விட்டுச் சொன்னார்கள்:

'அபூஹுரைராவே! அல்லாஹ்வின் படைப்புகளில் இறுதித் தீர்ப்பு நாளில் நரக நெருப்பிற்கு இரையாகப்போகும் முதல் மூன்று நபர்கள் இவர்கள்தான்"

அபூ அம்மார் யாசிர் அல் காழி - தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்

Thursday, August 27, 2009

இதுதான்,இதுவேதான்,இது மட்டுந்தான்,ஒரே நேர்வழி!!!

இறைநம்பிக்கையில் மூட நம்பிக்கைகளைக் கண்ட சிந்தனையாளர்கள், இறைவனை மறுத்து நாத்திகக் கொள்கையைத் தழுவிக் கொண்டனர்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

"மனித அறிவு வளர்ச்சியடையாத - முற்காலத்தில் - உலகில் இயற்கையாக நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் - மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி அல்லது சக்திகளைக் காரணம் காட்டி வந்தான் - அன்றைய மனிதன்!

"ஆனால் மனித அறிவு வளர்ச்சி அடைந்து பல நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும் இயற்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் இறைவனே காரணம் என்று கூறுவது - மனித அறிவின் பிற்போக்குத் தனத்தையே காட்டுகிறது.

"விஞ்ஞானம் - இயற்கைப் பெருவெளியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லா அற்புதங்களுக்கும் காரணம் கண்டு பிடித்துச் சொன்ன பின்பும் எல்லாவற்றுக்கும் காரணம் இறைவன்.... இறைவன்.... என்று சொல்கின்ற பிற்போக்குத் தனத்தை என்னென்று சொல்வது?

"இதனை விடுத்து விஞ்ஞானம்.... விஞ்ஞானம்.... என்ற முற்போக்குக் கொள்கையை (POSITIVISM) மனிதன் ஏற்கும் போதே - நோய் பிடித்த சமுதாயத்தை (SICK SOCIETY) உயிர்த்துடிப்புள்ள சமுதாயமாக (DYNAMIC SOCIETY) மாற்றிட முடியும்!"

இதுவே மேற்கத்திய சமூகவியலாளர்களின் (SOCIOLOGISTS) தீர்க்கமான கருத்து!

உயிர்த் துடிப்புள்ள சமுதாயத்துக்கு அவர்கள் சுட்டிக் காட்டுவது - இன்றைய மேலை நாடுகளை!

அங்கே எல்லாரும் படித்திருக்கிறார்கள்!

அங்கே எல்லாரும் அறிவியல் வழியாகவே (SCIENTIFIC THINKING) சிந்திக்கிறார்கள்.

அங்கே மூட நம்பிக்கைகள் குறைவு!

அவர்கள் தொழில்நுட்பத்தில் வானளாவிய சாதனைகள் புரிகின்றார்கள்!

அவர்கள் தாம் உலகையே வழி நடத்திடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்கள்!

சுருங்கச் சொல்லின் - அவர்கள் தான் பூவுலக சுவர்க்கத்தை மேற்குலகில் நிர்மாணித்திருக்கிறார்கள்!

அவர்கள் காட்டும் "பூவுலக சுவர்க்கத்தை" "ஆ" வென வாய் பிளந்து பார்க்கின்ற நம்மவர்கள், அதே மேற்குலகக் கோட்பாடுகளை இங்கே இறக்குமதி செய்தால் நாமும் ஒரு சுவர்க்கத்தை உருவாக்கிடலாம் என்று மன்க் கோட்டை கட்டுகிறார்கள்!

தாழ்வு மனப்பான்மை பிடித்துப் போய் மேலை நாடுகளைக் காப்பியடிக்கத் துடிக்கின்ற நவீன தலைமுறையினர்க்கு, மேற்குலகம் அனுபவிக்கின்ற அவலங்களைப் படம் பிடித்துக் காட்டுதல் அவசியம்.

அமெரிக்காவில் ஹைட்ரஜன் குண்டை (HYDROGEN BOMB) தயாரித்த அமெரிக்க விஞ்ஞானி J.R. OPPENHEIMER - அவர்களின் கூற்றுப் படி - மனிதன் - கடந்த 40 நூற்றாண்டுகளில் தொழில்நுட்பத்தில் அடைந்த வளர்ச்சியை விட இருபதாம் நூற்றாண்டின் 40 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி மிக அதிகம்!

இந்த தொழில் நுட்பம் மனிதனுக்கு செய்து கொடுத்த வசதிகள் எண்ணிலடங்காதவை.

கணினி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் உலகையே ஒரு பெரிய கிராமமாகச் சுருக்கி விட்டிருக்கின்றது.

மனித உறுப்புகளை மாற்றுவது, சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாக மாறிக் கொண்டிருக்கிறது.

தூக்கத்தைக் குறைத்து - மனித ஆயுளை நீட்டிக்கச் செய்கின்ற ஆராய்ச்சி மும்முரமாக நடந்து கொண்டிருகிறதாம்.

செயற்கை முறையில் DNA - வைத் தயாரித்து "நாம் விரும்பும்" குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியுமாம்!

தொழில் நுட்பம் தந்த பொருளாதார வளர்ச்சி மேலும் மனிதனை சுக போக வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

அமெரிக்கர்கள் விடுமுறையைக் கழிக்க என்று - ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் தொகை பில்லியன் டாலர்கள் கணக்கில்!

மேலை நாடுகளில் - மனிதனின் வாழ்க்கைத் தரம் 1800 - ல் இருந்ததை விட ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறதாம்! அப்படியானால் - அவர்களுடைய மகிழ்ச்சி ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது, அவர்களுடைய வாழ்க்கை ஐந்து மடங்கு அர்த்தமுள்ளதாக ஆக்கப் பட்டிருக்கின்றது என்றா பொருள்?

அது தான் இல்லை!

மேற்குலக நாடுகளில் ஆண்டு தோறும் நடக்கும் குற்றங்கள் மில்லியன் கணக்கில் பதிவு செய்யப் படுகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாகரிகம் அடைந்த நாடுகளில் மதுவின் வளர்ச்சி வேகம் பயமுறுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. மதுவின் இந்த வளர்ச்சியில் பெண்களுக்கும் பங்குண்டு. மது குடிப்பதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்.

ஆபாசப் படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முன்னணி வகிப்பவை மேற்குலக நாடுகளே! இப்படிப் பட்ட படங்களுக்கென்றே தனிப்பட்ட திரையரங்குகள் உள்ளனவாம். இயந்திர மயமான வாழ்க்கையை விட்டு - சற்றே வெளியேறி - இளைப்பாற நினைப்பவர்களைக் கவர்ந்து இழுக்கிறதாம் - இந்த ஆபாசப் படங்கள்.

சூதாட்டங்களும் - மனித நாகரிகத்தோடு சேர்ந்து வளர்ந்திருக்கின்றன! உலகின் மிகப் பெரும் சூதாட்ட நகரங்கள் (GAMBLING CITIES) அனைத்தும் "நாகரிக மயமான" நாடுகளில் தாம் அமைந்திருக்கின்றன.

போதைப் பொருட்களைப் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும், அதற்கு அடிமையாகி விட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

நாகரிகத்துடன் தற்கொலை செய்து கொள்வதும் வளர்ந்துள்ளது! தொழில் மயமாதல், நகர் மயமாதல், குடும்பங்கள் உடைந்து போதல் - இம்மூன்று காரணிகளும் அதிகரிக்க அதிகரிக்க தற்கொலையும் அதிகரிக்கிறதாம்.

மன நோயால் பீடிப்பவர்களின் எண்ணிக்கையும் அப்படித்தான். உலகத்திலேயே அதிகமான மன நோய் நிபுணர்கள் இருப்பது ஹாலிவுட்டில் தானாம்.

போதுமா சகோதரர்களே!

இறை மறுப்பும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கல்வித் திட்டமும் , அறிவியல் தொழில் நுட்பமும், மனிதனுக்குச் சாதித்துக் கொடுத்தவை இவை தான்!

இதனையே இங்கே இறக்குமதி செய்யத் துடிக்கின்றனர் மேல் நாட்டு மோகம் கொண்ட நம்மவர்கள்.

இன்றைய உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கின்ற - மனித வாழ்வில் - அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் ஆற்றல் எந்தக் கொள்கைக்கு இருக்கிறது?

அது இஸ்லாத்துக்கு மட்டுமே இருக்கின்றது என்பது தான் மறுக்க இயலாத உண்மை!

மேலை நாட்டவர்கள் இஸ்லாத்தை "பயங்கரவாதத்துடன்" ஒப்பிட்டுப் பேசிடுவதில் அவர்களுக்கு இருக்கின்ற உள் நோக்கத்தை ஏன் நம்மவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது?

யார் யார் எல்லாம் இஸ்லாத்தை எதிர்க்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பாருங்கள்? அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்றும் சற்றே எடை போடுங்கள். உண்மை தெள்ளென விளங்கும்!

சகோதரர்களே!

இஸ்லாமிய இறை நம்பிக்கையில் மூட நம்பிக்கை கிடையாது!

இறைவனின் தூதர்களைக் கடவுளாக்கி வணங்குகின்ற அறியாமை இங்கே இல்லை!

இஸ்லாத்தின் கொள்கைகள் பாதுகாக்கப் பட்டவை! திருக் குர் ஆனும், நபிமொழிகளும் இடைச்செருகல்களுக்கு ஆளாகி விடாமல் பாதுகாக்கப் பட்டு ஒப்படைக்கப் பட்ட விதத்துக்கு ஈடு இணையே கிடையாது!

இஸ்லாம் - மனிதனின் "ஆன்மிகக் கொள்கை வெற்றிடத்தை" முழுமையாக நிரப்பும் சக்தி வாய்ந்தது!

இஸ்லாம் - மன நோய் மற்றும் தற்கொலை எண்ணங்களை அடியோடு நீக்கி விடுகிறது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே கொல்லப் படுகின்ற பெண் சிசுக்களைக் காப்பாற்ற வல்லது!

இஸ்லாம் மட்டுமே உலகை - விபச்சாரத்திலிருந்தும், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களிலிருந்தும் காத்திடும் ஆற்றல் பெற்றது!

இஸ்லாம் மட்டுமே உலகை - வட்டியில் இருந்து விடுவித்து பொருளாதாரச் சுரண்டலைத் தடுத்து நிறுத்திடும் ஒப்பற்ற திட்டத்தை தன்னகத்தே கொண்டது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே - அரசியலைத் தூய்மைப் படுத்திடும் ஆன்மிக வலிமை கொண்டது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே, இன்று உலகைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கின்ற இனவெறியிலிருந்து மக்களைக் காக்கின்ற ஆற்றல் வாய்ந்தது!

இஸ்லாம் எனும் இந்த முழுமையான வாழ்க்கை நெறி - காலம் கடந்து போன ஒரு வெற்றுச் சித்தாந்தம் அன்று! அது எல்லாக் காலத்துக்கும் பொறுத்தமானது!

இவ்வாறு எல்லாவிதமான் சிறப்பம்சங்களையும் இஸ்லாம் தன்னகத்தே கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் - இது இறைவனின் மார்க்கம் என்பதால் தான். இது முஹம்மது நபியின் சொந்த சிந்தனையும் கிடையாது. அது போலவே இஸ்லாம் என்பது பரம்பரை பரம்பரையாக வருகின்ற முஸ்லிம்கள் வீட்டுப் பாட்டன் சொத்தும் கிடையாது! அது உலக மக்கள் எல்லார்க்கும் சொந்தமானது!

ஏன் உங்களுக்கும் சொந்தமானதே! எனவே - ஏற்பீர்களா இஸ்லாத்தை?



S.A.MANSOOR ALI

Saturday, August 22, 2009

இந்துக்களே விழிமின்,எழுமின், கல்கி வந்துவிட்டார். வாருங்கள் அவரைப் பின்பற்றுவோம்!!மோட்சம் பெறுவோம்!!!

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

இதை தமிழில் மொழி பெயர்த்த சகோதரி சுமஜ்லா அவர்களுக்கு நன்றி!!


--------------------------------------------------------
ஆங்கிலத்தில் படிக்க http://comparativestudy.blogspot.com

Wednesday, August 19, 2009

இன்னொரு கமலா சுரையா!பர்தாவே கண்ணியம்!!போலி பெண்ணியம் பேசுவோரின் முகத்திரை கிழிந்தது!!!

சகோதரி சுகைனா (சுமஜ்லா)அவர்கள் தங்கள் எழுத்து மூலம் சமூக தொண்டு செய்து வருபவர்கள்.பிரபல வார இதழ்களில் தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதிவருவதோடு,தங்கள் தளத்திலும் கதை,கவிதை,கட்டுரை,என எழுதி வருகிறார்.இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான பொய் பிரச்சாரம் நிகழும்போதெல்லாம்,அதை முறியடித்து எழுத்துப் போர் செய்து வரும் ஒரு எழுத்துப்போராளி.சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் பர்தா பற்றிய பொய் பிரசாரத்துக்கு அவர் கொடுத்த பதிலடியின் சுருக்கமே,கீழே நீங்கள் காண்பது.அவரை இன்னொரு கமலா சுரையா என்றால் அது மிகை அல்ல.
-----------------------------------------------

ஒரு மனைவி கணவனுக்கு ஆடையாகவும், ஒரு கணவன் மனைவிக்கு ஆடையாகவும் இருக்கிறான் என்பது ஹதீஸ்.

நான் முழுபர்தாவில் இருக்கிறேன். எனக்கு இது மிகப்பெரும் பாதுகாப்பு கவசமாகும். ஆனால், இது என் முன்னேற்றத்தை எவ்விதத்திலும் தடுக்கவில்லை. மாறாக, ஒரு மரியாதையைத் தான் ஏற்படுத்தி இருக்கிறது.

நான் பர்தாவில், டூ வீலர் ஓட்டுகிறேன். அதோடு, என் கணவரின் எல்லா விஷயங்களுக்கும் உறுதுணையாக இருக்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், பர்தாவில் இருக்கும் எல்லாரும் கட்டுப் பெட்டிகள் அல்ல.

ஆனால், எனக்கும் இது போன்ற அனுபவம் நேர்ந்திருக்கிறது. என்னை ஒரு கட்டுப் பெட்டியாக பலரும் பார்த்து, என் தோற்றத்தை வைத்து என்னை எடை போட்டிருக்கிறார்கள். அத்தகையவர்களை நான் என் நுனிநாக்கு ஆங்கிலத்தை வைத்து மிரட்டி இருக்கிறேன்.

பர்தாவால் கேன்சர் வருகிறது என்றால் இது என்ன புகையிலையா, சிகரெட்டா? அப்படியானால், நூற்றுக்கணக்கான கிறிஸ்த்துவ சிஸ்டர்ஸுக்கு ஏன் கேன்சர் வருவதில்லை? அவர்களும் ஒரு வித பர்தா தானே அணிந்திருக்கிறார்கள்!

பர்தா என்பது ஒரு கவசம். என்னுடைய அழகு என் கணவருக்கு மட்டும் தான். யாருக்கும் நான் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அழகை பார்த்து தான் ஒருவரை ஆராதிக்க வேண்டுமானால், அத்தகைய ஆராதனை கேடாய் தான் முடியும்.

நினைத்து பாருங்கள், ஒரு சமூகத்தில், 100 விழுக்காடு பெண்கள் பர்தாவுடன் சென்றால், அங்கே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்குமா? ஈவ் டீசிங் நடக்குமா?

பர்தாவில் இருப்பதால், என்னுடைய எந்த முன்னேற்றமும் பாதித்ததில்லை. நான் B.A ஆங்கில இலக்கியம், M.Com படித்து, தற்சமயம், கரெஸ்ஸில் M.A. ஆங்கில இலக்கியமும், காலேஜ் சென்று B.Ed ம் பயின்று வருகிறேன். அதோடு, ஹிந்தியில் 2 எக்ஸாம் எழுதியிருக்கிறேன். டைப் ரைட்டிங் ஹையர் முடித்திருக்கிறேன். கணினியிலும் பரந்து பட்ட அறிவு உள்ளது. ஆனால், நான் முழு பர்தாவில் இருக்கிறேன், என்னுடைய 12வது வயது முதல்.

என்னை யாரும், என் கணவர் உட்பட கட்டாயப்படுத்தியதில்லை. அதே போல யாரிடமும் நான் என் கருத்தை திணிக்கவில்லை. முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு பெண்ணாக இருந்து சொல்கிறேன், எனக்கு பிடித்திருக்கிறது. அதில் பாதுகாப்பு உணர்கிறேன். அணிகிறேன்.

எத்துணையோ இணைய நட்புகள் இருக்கிறார்கள். ஆனால், யார் எவ்வளவு தூரம் கேட்டும், போனிலோ, மெஸ்ஸஞ்சரிலோ நான் பேசியதில்லை. பெண்களிடம் பேசி இருக்கிறேன். காரணம் இதெல்லாம் தேவையில்லாத பின் விளைவை ஏற்படுத்தும்.

போன வாரம் கூட யூ.எஸ்ஸில் இருக்கும் ஒரு தோழர், என் பிடிவாதம் கண்டு தன் மனைவியிடம் சொல்லி என்னிடம் பேச சொன்னார்.

பர்தா அணிகிறேன். ஆனால், நான் பர்தா அணியாதவர்களை விட சுதந்திரமாக உள்ளேன். சந்தோஷமாக உள்ளேன்.

போலியான வெளி அலங்காரம் எனக்கு தேவையில்லை. என் வாழ்க்கை என் கணவருக்காகவே! அவருக்கு திருப்தி தராத ஒன்று எனக்கு வேண்டாம்.

இதை ஒவ்வொரு பெண்ணும் எண்ணினால், எப்படி இருக்கும் நம் சமுதாயம்?

மற்ற மதங்களிலுள்ள முட்டாள்தனங்களை யாராலும் பட்டியலிட முடியும். ஆனால், அந்த மதத்திலும், எமக்கு உயிர் நண்பர்கள் உள்ளனர், அவர்கள் மனம் ஒரு போதும் புண்பட்டு விட கூடாது!

Your Freedom stops before others nose என்பதை யாவரும் புரிந்து செயல்பட வேண்டும்.

பெண்ணினமாகிய எமக்கே, அது ஒரு பாரமாக தெரியாத போது, அதை ஒரு சுதந்திர உணர்வாக நினைத்து பெருமைப்படும் போது, அதை பற்றி மாற்று மத அன்பர்கள் அதிகம் கவலைப்பட வேண்டாம் என்பது என் எண்ணம்.

சினிமாவில் காட்டப்படுவது எல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. புற்றுக்கு பால் வார்த்தால் புண்ணியம் என்பதெல்லாம் அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம்.

அடுத்தவர் மத நம்பிக்கை புண்படாத வகையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது தான் நம் மரபு.

இந்த சுதந்திர நன்னாளில் அதை நாம் கைகொள்ள முயற்சிப்போமாக!

Friday, August 14, 2009

ஐயையோ,துபாய்கு வந்துடாதீங்க!!!


...............இப்பொழுது இங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு. அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும்.ஆனால் தெரிந்தவர்களிடமோ அல்லது உறவினர்களிடம் பேசும் பொழுதோ அதே “வலிக்கவில்லை” கதைதான்.

ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்பது துபாயில் ஜனவரி மாதம் 15ல் ஆரம்பித்து பிப்ரவரி 15வரை நடக்கும் ,வெளிநாட்டில் இருந்துபலர் இதற்காக வருவார்கள் அந்த சமயங்களில் ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழியும் அதோடு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது துபாய் முழுவது அலங்கார வளைவுகள், வாணவேடிக்கைகள், வெளிநாட்டு கலாச்சார கலைநிகழ்சிகள், என்று அமளிதுமளி படும் ஆனால் இந்த முறை நடந்து முடிந்தது பலருக்கும் தெரியாது, பாலஸ்தீன் பிரச்சினைக்காக ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது கேளிக்கைகள் கிடையாது வாணவேடிக்கை கிடையாது என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே நிஜம் அன்று பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்ப்பட்ட தேக்கம்தான் காரணம்.

என்னது துபாயிலேயே பணப் புழக்கம் இல்லையா என்று அதிர்ச்சி அடைகிறீர்களா? ஆம் அதுதான் உண்மை நிலை, பல திட்டங்கள் பாதியோடு நிற்கின்றன பணம் இல்லாமல்,துபாயின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களான, டமாக்,எம்மார், அராப்டெக்,போன்றவை அடியோடு சரிந்து கிடக்கின்றன.கொத்து கொத்தாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு முக்கிய காரணம், வீடுகளை வாங்க ஆள் இல்லை கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளை முடிக்க பணம் கொடுக்க பேங்க் தயாராக இல்லை அல்லது பணம் இல்லை.வெளிநாட்டு முதலீட்டார்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட துபாய் பால்ம், தேரா பால்ம் என்ற கடல் உள்ளே கட்டப்பட்ட வீடுகள் பாதியோடு நிற்கின்றன.சொகுசு கட்டிடங்கள் என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத படி சொகுசு கட்டிடங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைநம்பி ஆரம்பிக்கப்படவை, அவை அனைத்தும் பாதியோடு நிற்க்கின்றன, கட்டிடங்கள் மட்டும் அல்ல சம்பளத்தை நம்பி வாங்கிய லோன்களும் பாதியோடு நிற்கின்றன.

இந்த பிரச்சினை ஆறுமாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தது கட்டிமுடிக்கப்பட்ட பல கட்டிடங்களில் குடியேற ஆள் இல்லாததால் வில்லா என்று அழைக்கப்படும் பெரும் பங்களாவில் ஷேரிங்கில் தங்கக் கூடாது என்று பிறப்பிக்கபட்ட உத்தரவு பல குடும்பங்கள் ஊருக்கு அனுப்பிவைக்க காரணமாக இருந்தது அதோடு பல குழந்தைகள் படிப்பும் பாதியோடு நின்றது, அப்படி இருந்தும் யாரும் அந்த கட்டிடங்களில் குடியேறவில்லை,வந்து கொண்டு இருந்த வில்லா வருமாணமும் அரபிக்களுக்கு குறைந்தது, பொறுத்து பொறுத்து பார்த்த நகராட்சி இப்பொழுது சொல்கிறது வில்லாவில் ஷேரிங் செஞ்சுக்கலாம்,ஆனால் ரொம்ப கூட்டமாகதான் இருக்கக்கூடாது என்று சொன்னோம் ஆனால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நம் அரசியல் வாதிகளுக்கு மேல் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்கள்.

தினம் Gulf news பேப்பரில் வரும் வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய இணைப்பு பேப்பர்கள் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக பதினாறு பக்கங்கள் வந்த பேப்பர் இன்று இரண்டு பக்கம் வந்து நிற்கிறது, அதிலும் ஒண்ணே முக்கால் பக்கத்துக்கு மைக்கிரேட் டூ ஆஸ்திரேலியா, கனடா விளம்பரங்கள். வேலை வாய்ப்பு பற்றி ஒண்ணும் இல்லை.கொஞ்ச நாட்களாக FM ரேடியோவில் வரும் விளம்பரம் “உங்களுக்கு வேலை போய்விட்டதா? அல்லதுவேலை போய்விடும் என்ற பயமா, கவலையை விடுங்க 15 நாட்களில் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேருங்கள்” என்று டிரைனிங் செண்டருக்கு விளம்பரம் வருகிறது.

வாங்கிய லோன் கட்டமுடியாமலும், கிரெடிட் கார்ட் இண்ட்ரெஸ்ட் கட்ட முடியாமலும் பலர் தவிக்கிறார்கள். இதுவரை எத்தனை மணிக்கு வேண்டும் என்றாலும் எவ்வளோ பணத்தோடும் தனியாக ஒரு பெண்ணோ ஆணோ வெளியில் போய் வரலாம் என்று இருந்த நிலைகொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது ஒரு வாரத்துக்கு முன்பு ATM மெசினில் பணம் வைக்க வந்த வண்டியில் இருந்த செக்யூரிட்டியையும் சுட்டுவிட்டு பல கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, இரு தினங்களுக்கு முன்பு ஜுமைரா பீச்சில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடிக்கப்பட்டதுஎன்று அங்கு இங்குமாக கொள்ளைகள் அடிப்பது செய்திகள் ஆகின்றன.

இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது. இதுதான் இன்றய துபாயின் நிலை.

டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!

by ஷேய்க் தாவூத்
--------------------------------------------
வட்டியின் தீங்கு பற்றி திருக்குரானின் எச்சரிக்கை !!!


யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
2:275

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
2:276

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்
2:278


ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்
3:130
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
4:161


மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.
30:39

Thursday, August 13, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? புகழ்,பெருமை,பகட்டு=அவமானம்,அழிவு,கைசேதம்!! தொடர் 12

புகழுக்காகவும், பெருமைக்காகவும் நற்செயகளைப் புரிவோருக்கு இந்த உலகிலேயே அவர்கள் நாடியது கிடைத்து விடும் என்ற போதிலும், இறுதித் தீர்ப்பு நாளில் அவர்கள் முழுமையாக அல்லாஹ்வினால் அவமானப்படுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னதாக முஅத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

'இந்த உலகில் புகழின் ஸ்தானத்தில் இருந்து பகட்டாக அதனைக் காட்டிக் கொண்ட எந்தவொரு மனிதனையும், இறுதித் தீர்ப்பு நாளில் தனது படைப்புகள் அனைத்தின் முன்பும் அம்பலப்படுத்தாமல் அல்லாஹ் விட மாட்டான்"

நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்


அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

'தனது செயல்களைப் பற்றி மற்றவர்களிடம் எவர் பகட்டாகக் காட்டிக் கொள்கிறாரோ, அவரை அல்லாஹ் தனது படைப்பினங்கள் முன்பு சிறுமைப்படுத்தி கண்ணியத்தைக் குலைத்து அவனை இகழ்வான்."

நூல்: சஹீஹ் அத் தா;கீப் வத் தா;ஹீப்

Sunday, August 9, 2009

சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும்

அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நீங்கள் தவறான எண்ணங்களை - சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் , சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றி துருவி துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்! அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (புகாரி, முஸ்லிம்)

Tuesday, August 4, 2009

வெற்றிக்கு வழி! பெண்கள் கண்ணியமானவர்கள்!!தொடர் 3

ஆச்சரியப்பட்ட சண்முகம் ஏதோ யோசிக்கலானார்.இதற்கிடையே, டிய், டிய், சாய்,சாய் என்ற குரல் கேட்டு அனைவரும் செங்கல்பட்டு வந்துவிட்டதை அறிந்து,தங்கள் உணவுப் பொட்டலங்களை அவிழ்த்து உண்ண ஆரம்பித்தனர்.சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் கொண்டு வந்த சிக்கன் பிரியாணியை சண்முகம்,ரஞ்சிதம்மாளிடம் பகிர்ந்துகொள்ள,அவர்கள் கொண்டு வந்த இட்லி,சாம்பார் வகைகளை இவர்களும் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டு முடித்தனர்.

சாப்பிடும் போது ஏக இறைவனின் திருப்பெயரை சொல்லி,சலீம் நானா,பஷீர் காக்கா சாப்பிட்டதையும்,எதையும் வீணாக்காமல் ,சுத்தமாக வழித்து உண்டதையும்,இடை இடையே இறைவனை துதிப்பது, சாப்பிட்டபின் இறைவனை புகழ்ந்தது,என எல்லாவற்றையும் அந்த தம்பதிகள் கவனிக்காமல் இல்லை.


திடீரென "அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர்,"என்ற ரம்மியமான குரலில் தொழுகைக்கான அழைப்பொலி கேட்கவே,எல்லாரும் குரல் வந்த திசை நோக்கி,திரும்பினர்.அங்கே இரு முஸ்லிம் தம்பதிகள் பாங்கு சொல்லிவிட்டு, இஷா என்ற இரவு நேர தொழுகை தொழ ஆரம்பித்தனர்.சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் ஒழு செய்துவிட்டு,தொழுது முடித்தனர்.சண்முகம்,ரஞ்சிதம்மால் கவனித்துக்கொண்டிருந்தனர்.

இப்போது ரஞ்சிதம்மால் கேட்டார்,"பாய்,எனக்கொரு சந்தேகம் பாய்.தல,உடம்பு என்று மூடி இருக்கிற அந்த பாயம்மாவை பாத்தொனே என் மனசில தோனுச்சி,எதுக்கு பொம்பளைங்களை இப்படி முக்காடு போட்டு மூடி வக்கிறீங்க,இது அடிமைத்தனம் இல்லையா?"

பஷீர் காக்கா சொன்னார்,"நல்ல கேள்விதாம்மா கேட்டிருக்கீங்க.அதாவது,இஸ்லாம் இவ்வுலகில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், எப்படி வாழ்ந்தால் கண்ணியமாக வாழ முடியும் என்பதை தெளிவாக கற்றுத்தருகிறது.

மனிதனின் இயற்கையான உணர்வான வெட்கம் என்பது மனிதர்களுக்கே உரித்தான உயர்ந்த சிறந்த பண்பாகும். வெட்கமின்றிச் செயல்படுதலை இஸ்லாம் நடை, உடை, பாவனை என எல்லா காரியங்களிலும் தடை செய்கிறது.

நாகரீகம் வளர்ச்சி அடையாத காலங்களில் கூட மனிதன் தன் உடம்பை இலை, தழைகளை வைத்து மறைப்பதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டான். எனில் உடம்பை மறைத்தல் என்பது மனிதர்களுக்கு இடையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரிய செயல் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அத்தகைய சமூகத்தில் மரியாதையும் கண்ணியமும் பெற்றுத் தரும் உடை விஷயத்தில் இஸ்லாம் அதிகக் கவனம் செலுத்துகிறது. உடை என்பது சமூகத்தில் ஒழுக்க வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. எனவேதான் ஒருவர் உடை அணியும் விதம் மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பாத விதத்தில் இருப்பதற்கும், தங்களது மறைவான பகுதிகள் வெளியில் தெரியும்படியான இறுக்கமான ஆடைகளை தவிர்க்கும்படியும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இது இருபாலருக்குக்கும் பொதுவானதுதான்.

பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் கை மணிக்கட்டுக்கு கீழ் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ள இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இவ்வாறு மறைப்பதற்கு ஏதுவான உடையாக தற்காலத்தில் வடிவமைத்திருக்கும் பர்தா இருப்பதனாலேயே இஸ்லாம் கூறும் அறிவுரையை மனப்பூர்வமாக பேணும் பெண்கள் இதனை அணிகின்றனர். கண்ணியத்தையும் பாதுகாப்பையும் சமுதாயத்திலிருந்து பெற விரும்பும் பெண்களுக்கான சிறப்பான பரிந்துரையாகவே இஸ்லாம் இதனைக் கூறுகிறது. இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட பெண்கள் மட்டுமே பர்தாவை அணிகின்றனர். இதனை தங்கள் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கையை வைத்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

பர்தா போன்ற உடை அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறை திருக்குர்ஆனின் 33 வது அத்தியாயம் ஸூரத்துல் அஹ்ஜாப்பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும், அவர்கள் சமூகத்தில் மோசமானவர்களால் விளையும் தொல்லைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவும் தான் பர்தா போன்ற உடையை உபயோகிக்க இஸ்லாம் பெண்களுக்குப் பரிந்துரைக்கிறது."

ரஞ்சிதம்மால் அந்தக் கருத்தை ஆமோதிக்கும் வண்ணம்,தன்னை அறியாமலே தன தலையை மூடிக்கொண்டதை,பஷீர் காக்கா கவனிக்கத் தவறவில்லை.

இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

Sunday, August 2, 2009

வெற்றிக்கு வழி! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். தொடர் 2

"ரொம்ப அருமையான கருத்தா இருக்கே"

"ஆமாம்,சண்முகம்,இஸ்லாத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு ஒழுங்கு இருக்கு.இத செய்,அத செய்யாதே என்று சொல்வதோட நிருத்திக் கொள்ளாமே,ஏன் செய்யனும்,ஏன் செய்யக்கூடாது என்று விளக்கமும் துல்லியமான முறையில் இருக்கும்."

அப்படியா ஆச்சரியமா இருக்கு.சரி ஒரு விஷயம் ஞாபகம் வருது,இது பத்தி இஸ்லாத்துல சொல்லப்பட்டிருக்கா? என்று ஆவலோடு கேட்ட சண்முகத்தைப் பார்த்து பஷீர் சொன்னார்,:தயங்காம எது வேணுன்னாலும் கேளுங்க நண்பரே,என்னால் முடிந்த அளவு சொல்றேன்".

"பொதுவா மனுஷன் தப்பு பண்ணிண்டே இருக்கான்.அதுக்கு ஒரு இலக்கணம் இல்லாம போச்சு, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற மாதிரி நிலமையில இப்போ இந்த உலகம் போய்க்கிட்டு இருக்கு,எனவே பாவங்கள் செய்றதா பத்தி இஸ்லாத்துல என்ன சொல்லப்பட்டிருக்குன்னு கொஞ்சம் சொல்லேன்"சண்முகம் வேண்டிக்கொண்டார்.

"நல்லது சண்முகம்,இத பத்தி குரானிலும் இறைவன் கூறி இருக்கிறான்,நபிகள் நாயகமும் தங்களுடைய ஹதீஸிலும் கூறி இருக்கிறார்கள்.அது இதுதான்"


பெரும் பாவங்களில் மிகப் மிகப் பெரியதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினர். அதற்கு நாங்கள் சரி என்றோம். அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும் பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் (அநியாயமாக) கொலை செய்வதுமாகும் என்று கூறிச் சாய்ந்து வீற்றிருந்த நபி صلى الله عليه وسلم நிமிர்ந்து அமர்ந்து மேலும் கூறினர்; அறிந்து கொள்ளுங்கள். பொய்யுரைப்பதும், பொய்ச்சான்று பகர்வதுமாம் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் (அவற்றைத் திரும்பத் திரும்ப கூறாது) வெறுமனே இருந்து விடட்டுமே என்று கூறும் வரை. அறிவிப்பாளர்: அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் புகாரி, முஸ்லிம், திர்மிதீ

பெரும் பாவங்களைப் பற்றி ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், அவை ஒன்பதாகும். [1] இணை வைப்பதும் [2] சூனியம் செய்வதும் [3] கொலை செய்வதும் [4] வட்டியை உண்பதும் [5] அனாதிகளின் பொருள்களை உண்பதும் [6] போர்க்களத்தில் பின்வாங்கி ஓடுவதும் [7] கணவர்களைப் பெற்றுள்ள குற்றமற்ற பெண்கள் மீது அவதூறு கூறுவதும் [8] பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் [9] உங்களுடைய கிப்லாவான கஃபதுல்லாஹ்வில் செய்யத் தகாததைச் செய்ய, ஒருவன் வாழும்பொழுதும் இறந்த பின்பும் பிறர் செய்து வருவதையும் ஆகுமாக்குவதாகும் என்று கூறினர். அறிவிப்பவர்: உபைதுப்னு உமைர் அவர்கள் தமது தந்தை மூலம் அறிந்து, ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

அல்லாஹ்வுடைய நபியே! அல்லாஹ்விடம் எந்த பாவம் மிகப்பெரியது என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், நீர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும். அவன்தான் உம்மைப் படைத்தவன் என்று கூறினார்கள். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், உம்முடைய குழந்தைகள் உம்முடைய உணவில் பங்காளிகளாக வந்து விடுவார்களென்று அஞ்சி அவர்களைக் கொலை செய்வதாகும்' என்று கூறினர். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள் 'நீர் உம்முடைய அண்டை வீட்டுக்காரரின் மனைவியைச் சோரம் செய்வதாகும்' என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ

'ஒருவன் தனது பெற்றோர்களை ஏசுவதும் நிச்சயமாகப் பெரும் பாவங்களைச் சேர்ந்ததேயாகும்' என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அப்பொழுது) மனிதன் தன் பெற்றோர்களையும் ஏசுவதுண்டா? என்று நாங்கள் வினவினோம். ஆம்! இவன் மற்றவனின் தந்தையை ஏசுகிறான். அவன் இவனுடைய தந்தையை (பதிலுக்கு) ஏசி விடுகிறான். இவன் மற்றவனின் தாயை ஏசி விடுகிறான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னுல் ஆஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ



இதைக்கேட்டுக்கொண்டிருந்த சண்முகம்,இவ்வளவு நுணுக்கமான முறையில நபிகள் சொல்லி இருக்கிறார்களே என்று ஆச்சரிப்பட்டுப் போனார்.

இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

Friday, July 31, 2009

வெற்றிக்கு வழி!இதை வசப்படுத்தி தந்தவன் தூயவன்!!தொடர் 1

நபிகள் நாயகம் எக்ஸ்பிரஸ் என்ற அந்த ரயில் புறப்பட தயாரான நிலையில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது.சலீம் நானா,பஷீர் காக்கா மற்றும் பல பிரயாணிகள் தத்தம் லக்கேஜ்களுடன் ஏறிக்கொண்டும்,தங்கள் எண் கொண்ட சீட்டில் உட்காரவும்,இடம் பிடிப்பதுமாகவும் ,இப்படி அந்த ரயில் பரபரப்பாக இருந்தது.

"அடடே பஷீர்,சலீம்,பார்த்து எவ்ளோ நாளாச்சு?" குரல் வந்த திசையில் பார்த்தால்,"அட நம்ம கிளாஸ் மேட சண்முகம்,எங்கடா ஆளையே காணோம்,பார்த்து ரொம்ப நாளாச்சே?சலீமும்,பஷீரும் சந்தோஷப்பட்டனர்.

"ஆமாம்,பஷீர்,சலீம்.எம் மவன் டெல்லியில ஒரு பெரிய கம்பெனியில ஜெனெரல் மானேஜரா இருக்கான்,அதுனால நானும்,என் மனைவியும் அங்கேயே செட்டில் ஆகிட்டோம்.டெல்லி அலுத்துப் போச்சி,கொஞ்ச நாள் நம்ம ஊர்ல இருக்கலாமேன்னு என் மனைவியுடன் அதிராம்பட்டினம் கெளம்பிட்டேன்".அப்போதுதான் அவர் மனைவியை இருவரும் கவனித்தனர்.இருவருக்கும் புன்னகை தந்தாள் அந்த அம்மாள் ரஞ்சிதம்.

ரயில் புறப்பட தயாரானது,அப்பொழுது,சலீம் நானாவும் - பஷீர் காக்காவும் பயண துவா சொல்ல ஆரம்பித்தனர்."ஸுப்ஹாநல்லதீ ........"அரபி மொழியில் அமைந்த அந்த துவாவை ஓதிவிட்டு,தமிழிலும் இவ்வாறு பிரார்த்தித்தனர்."

அல்லாஹ் மிகப்பெரியவன். இதை வசப்படுத்தி தந்தவன் தூயவன். நாங்கள் இதன்மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். யா அல்லாஹ்! எங்களின் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். யா அல்லாஹ்! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு. இதன் தொலைவை எங்களுக்கு குறைத்துவிடு. யா அல்லாஹ்! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். யா அல்லாஹ்! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும் மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். (நூல்: முஸ்லிம் 2392.)

இதை கவனித்துக்கொண்டிருந்த சண்முகம் சொன்னார்.

இறைவன் நாடினால் தொடரும்..........


by முஹம்மத் பிர்தௌஸ்

Wednesday, July 22, 2009

அல்லாஹ்வின் தூதரின் அமுத மொழி! உன் சகோதரனுக்கு உதவிடு!!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் சகோதரனுக்கு உதவிடு, அவன் கொடுமைக்காரனாக இருப்பினும் சரி, கொடுமை இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி! ஒருவர் வினவினார்: அல்லாஹ்வின் தூதரே! கொடுமைக்கு ஆளானவன் என்றால் நான் அவனுக்கு உதவுவேன். ஆனால், கொடுமைக்காரனாக இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு உதவுவேன்? அண்ணலார் கூறினார்கள்: கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு! இதுவே அவனுக்கு உதவுவதாகும். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) (புகாரி, முஸ்லிம்)

Thursday, July 16, 2009

சிங்கப்பூரில் டாக்டர் ஜாகிர் நாயக்!




சிங்கப்பூரில் வரும் 18ம் தேதி இரவு 8 மணி அளவில் இன்ஷா அல்லாஹ்,மனித குலத்துக்கு இஸ்லாம் தீர்வாகுமா? எனும் தலைப்பில் டாக்டர் ஜாகிர் நாயக் உரையாற்ற உள்ளார். இடம்:SUNTEC EXHIBITION,HALL 404,LEVEL 4.

மேலும் அதிக விவரங்களுக்கு :
WWW.DARUL-ARQAM.ORG.SG
EDDSTAFF@DARUL-ARQAM.ORG.SG
PHONE:6348 8344(PRESS 2 )

அனுமதி இலவசம்,
நீங்களும் செல்லுங்கள்,முஸ்லிம் அல்லாத நண்பர்களையும் அழைத்துச் செல்லுங்கள்!!

Friday, July 10, 2009

அல்லாஹ்வின் தூதரின் அமுத மொழி! ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரனுக்குக் கொடுமை புரிவதுமில்லை, அவனை ஆதரவின்றி விட்டு விடுவதுமில்லை. எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்கின்றாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவு செய்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய துன்பத்தை நீக்குவான். எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய குறைகளை மறைப்பான். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம்)

ரியா !மறைவான இணைவைப்பு?" அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் " தொடர் 11

அல்லாஹ்விற்காக அன்றி மற்றவர்களுக்காக செய்யப்படும் செயல்கள் இறைவன் அங்கீகாிக்க மாட்டான் என்று பல அறிவிப்புகளில் அண்ணல் நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

அபூ உமாமா அல் பாஹிலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்.

'அல்லாஹ்விற்காக என்று தூய எண்ணத்துடன், அவனது திருப்தியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்" நூல்: சஹீஹ் அல்ஜாமீ, சுன்னன் நஸயீ

அல்லாஹ்விற்காக தூய நோக்கமின்றி செய்யப்படும் செயலை அல்லாஹ் எப்படி ஏற்றுக் கொள்வான்? அல்லாஹ் இது போன்ற செயல்கள் குறித்து திருக்குர்ஆனில் எச்சாிக்கிறான்:

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (திருக்குர்ஆன் 2:264)

ரியாவில் ஈடுபடுபவர் மண்ணால் மூடப்பட்ட பாறை போன்றவர் ஆவார். மக்கள் அப்பாறையைப் பார்க்கும் போது அது விளைநிலம் போல் தோற்றமளிக்கும். ஆனால் சிறிய மழை பெய்தால் கூட, அது ஒரு பாறை என்பது அம்பலமாகிவிடும். மேலும் ரியாவில் ஈடுபடுவோர் தங்கள் செயலின் பலன்களை அனுபவிக்க இயலாத சூழலும் ஏற்பட்டு விடும்.

பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது: அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன. அதில் அனைத்துக் கனிகளும், அவருக்கு உள்ளன: அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது: அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எாித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான். (திருக்குர்ஆன் 2:266)

ரியாவினால் பாதிக்கப்பட்ட நற்செயல்களுக்கு தீயினால் எாிக்கப்படும் நல்ல பசுமையான தோட்டத்தை அல்லாஹ் உவமையாகக் கூறுகிறான். இந்த தோட்டம் எாிக்கப்படும் போது, அதன் உாிமையாளர் கையைப் பிசைந்து கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல் நிற்பார். இது போன்ற நிலை தான் தனது நற்செயல்களை ரியாவினால் வீணாக்கியவருக்கு ஏற்படும். இறுதி தீர்ப்பு நாளில் ரியாவைக் கடைப்பிடித்தவர்களை அல்லாஹ் சிறுமைப்படுத்துவான். தாங்கள் யாரைக் கவருவதற்காக செயல்களைப் புரிந்தார்களோ அவர்களிடமிருந்தே வெகுமதிகளைப் பெறுமாறு அல்லாஹ் கூறுவான்.

அண்ணல் நபி அவர்கள் கூறியதாக மஹ்மூத் இப்னு லபீத் அறிவிக்கிறார்கள்: (இறுதித்தீர்ப்பு நாளில்) மக்களின் செயல்களைக் கணக்கிடும் போது, (ரியாவைக் கடைப்பிடித்தவர்களிடம்) கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவான், யாாிடம் உங்கள் செயல்களைக் காட்டுவதற்காக செய்தீர்களோ, அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களிடம் ஏதாவது கூலி உண்டா என்று பாருங்கள். நூல்: சஹீஹ் அல் தா;கீப் வத் தக்ரீப் - எண் : 29

அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி அவர்கள் தங்களிடம் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ் கூறினான்: நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக விளங்கும் போது, எனக்குத் துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும் எனக்கு வேறொருவரை இணை வைக்கும் விதத்தில் ஒரு செயலைச் செய்தால், (எனது உதவியின்றி) அவருடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டுவிடுகிறேன். நூல்: முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா

அல்லாஹ்வின் தூதா; அவர்கள் சொன்னதாக உபை இப்னு காப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

'இந்த மார்க்கத்தின் மூலமாக சிரமமின்மையும், கண்ணியமும், கவுரவமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவியும், பூமியிலிருந்து வலிமையும் உண்டு என்று இந்த சமுதாயத்திற்கு நன்மாராயம் கூறுவீராக. எனவே, இந்த உலகத்தை மனதிற்கொண்டு ஒருவர் மறுமைக்குாிய செயலைச் செய்தால், அதன் பலனின் எந்த ஒரு பாகத்தையும் அவர் மறுமையில் அடைய மாட்டார். நூல்: சஹீஹ் தா;கீப் வல் தா;ஹீஹ்

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!