Thursday, August 13, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? புகழ்,பெருமை,பகட்டு=அவமானம்,அழிவு,கைசேதம்!! தொடர் 12

புகழுக்காகவும், பெருமைக்காகவும் நற்செயகளைப் புரிவோருக்கு இந்த உலகிலேயே அவர்கள் நாடியது கிடைத்து விடும் என்ற போதிலும், இறுதித் தீர்ப்பு நாளில் அவர்கள் முழுமையாக அல்லாஹ்வினால் அவமானப்படுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னதாக முஅத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

'இந்த உலகில் புகழின் ஸ்தானத்தில் இருந்து பகட்டாக அதனைக் காட்டிக் கொண்ட எந்தவொரு மனிதனையும், இறுதித் தீர்ப்பு நாளில் தனது படைப்புகள் அனைத்தின் முன்பும் அம்பலப்படுத்தாமல் அல்லாஹ் விட மாட்டான்"

நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்


அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

'தனது செயல்களைப் பற்றி மற்றவர்களிடம் எவர் பகட்டாகக் காட்டிக் கொள்கிறாரோ, அவரை அல்லாஹ் தனது படைப்பினங்கள் முன்பு சிறுமைப்படுத்தி கண்ணியத்தைக் குலைத்து அவனை இகழ்வான்."

நூல்: சஹீஹ் அத் தா;கீப் வத் தா;ஹீப்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!