Saturday, October 24, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?அல்லாஹ்வுக்கு சிரம் பணிய இயலாமை! தொடர் 14

மக்கள் தரும் புகழாரங்களை வணங்கியவர்களுக்கு மேலும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்கள் தனக்கு சிரம் பணிய (சுஜூது ) செய்ய முயன்ற போதிலும், அதனை அல்லாஹ் இயலாமல் ஆக்கிவிடுவான். அபூ சையீத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு நீண்ட நபிமொழியில், இறுதித் தீர்ப்பு நாளில் இறைநம்பிக்கையாளர்கள் எவ்வாறு அல்லாஹ்வைக் காண்பார்கள் என்பதை அண்ணல் நபி அவர்கள் விளக்கினார்கள். இதன் பிறகு அவர்கள் சொன்னார்கள்.

'பிறகு அல்லாஹ் தனது கீழ்காலின் முன்புறத்தை வெளிப்படுத்துவான். (உலக வாழ்வின் போது) தனக்கு தூய எண்ணத்துடன் சிரம் பணிய செய்த அனைவரையும் சிரம் பணிய அனுமதிப்பான். இதனால் அவர்கள் யாருமே நின்று கொண்டிருக்க மாட்டார்கள். மற்றவர்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக சிரம்பணிந்தவனின் முதுகை அல்லாஹ் ஒரே துண்டுக் கட்டையாக ஆக்கிவிடுவான். (இதன் விளைவாக அவனால் குனியவே முடியாது) ஒவ்வொரு முறை அவன் சிரம் பணியும் போது, அவன் முகங்குப்புற கீழே விழுவான்...."

நூல்: சஹீஹ்அல்ஜாமி,புகாரி,முஸ்லிம்.
அபூ அம்மார் யாசிர் அல் காழி -
தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!