Friday, June 17, 2011

தலித் சிறுவன் தாக்கப்பட்டான்


தலித் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து தமிழக அரசு 4 வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.


கோவை மாவட்டம் கரிக்கிலிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் வசந்தகுமார். தலித் இனத்தைச் சேர்ந்தவன். அங்கு நிலவி வந்த வறட்சியின் காரணமாக கிராமத்திலுள்ள பொது குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்துள்ளான்.


இதை வேறோர் இனத்தைச் சார்ந்த 3 பெண்களும் மற்றொரு நபரும் கண்டித்ததுடன் சிறுவனை அடித்துள்ளனர்.


காயமடைந்த சிறுவன் வசந்தகுமார் சிகிச்சைக்காக அன்னூர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டான். இந்த நிகழ்வு பத்திரிகையொன்றில் செய்தியாக வந்துள்ளது.
மேலும் தலித்துகள் வீட்டுக்கு வெளியே செல்போன் பேசவும், உள்ளூரில் முடி வெட்டிக் கொள்ளவும் கிராமத்தினர் தடை விதித்துள்ளதாகவும் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்தப் பத்திரிகை செய்தியையே தன்னேற்பு மனுவாக எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து 4 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படியும், இதுபோன்று தலித்துகளின் மீதான
தாக்குதலில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரத்தையும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கும்படி கேட்டுள்ளது.


பத்திரிகையில் வந்த செய்தி உண்மையாக இருந்தால் அது 1989-ம் ஆண்டின் "தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை'
மீறியதாகக் கருதப்படும் என மனித உரிமைகள் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
DINAMANI
 (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.3;105
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.4;1
THE QURAN

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!