Friday, February 18, 2011

உறவினர்கள் இருந்தும், அனாதை ..........


நிர்கதியாக விடப்பட்ட முன்னாள் ரியல் எஸ்டேட் அதிபர்சாலையில் அனாதை பிணமானார். பல லட்சம் ரூபாய் கடன் காரணமாகமகன் மற்றும் உறவினர்கள்அவரின் உடலை வாங்க மறுத்ததால்தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன்தொழிலதிபர் உடலை அடக்கம் செய்ய,திருவான்மியூர் போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

சென்னை மேற்குமாம்பலம்ஆர்.கே.புரம்இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரகு(53). இவரது மனைவி லட்சுமி. குடும்ப பிரச்னை காரணமாகலட்சுமி கணவரை பிரிந்து மும்பையில் உள்ள மகளுடன் வசித்து வருகிறார். ரகுவின் தாய் சரஸ்வதிசகோதரி ராதாமகன் வினய்(22) ஆகியோர்,திருவான்மியூர்மாலாபி அவென்யூவில் வசித்து வருகின்றனர். வினய் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரகு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் பார்த்துவந்தார். அதில் ஏற்பட்ட பலத்த நஷ்டம் காரணமாக, 27 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டது. வீடுகட்ட பணம் கொடுத்தவர்கள் தொடுத்த வழக்குசி.பி.சி.ஐ.டி.பிரிவில் நிலுவையில் உள்ளது.

சொத்துபணம் ஆகியவற்றை இழந்ததால்குடும்பத்தினரால் தள்ளி வைக்கப்பட்ட ரகுஅனாதையாக திருவான்மியூர் வடக்கு மாட வீதி சாலையில் திரிந்தார். அவருக்குகடந்த 10ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால்குளக்கரை சாலையில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் 108 க்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள டாக்டர்கள்,ரகு அனாதை என்பதால்சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து,மீண்டும் குளக்கரை பகுதியில் இறக்கிவிடப்பட்டார்.

இந்நிலையில்அவரின் உடல் நிலை மேலும் மோசமானது. ரகுவின் நிலை குறித்துதிருவான்மியூரில் உள்ள உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. ரகுவின் நெருங்கிய நண்பரான பெருங்குடிரத்னமணி நகரில் வசிக்கும் ரவி என்பவர்தகவலறிந்துமீண்டும் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால்சிகிச்சை பலனின்றி கடந்த 11ம் தேதி மாலை ரகு இறந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்துரகுவின் மகன் வினயை தொடர்பு கொண்டு உடலை பெற்றுச் செல்லும் படி கூறினர். ஆனால்வினயோ," என் தந்தைக்கு எந்த சொத்தும் கிடையாது. அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் தான் உள்ளது. அவரது உடலை வாங்கி அடக்கம் செய்தால்கடன் காரர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிவரும். மேலும்என் தந்தை எங்களிடம் இருந்து பிரிந்து வாழ்ந்தார். அதனால்அவரது உடலை நான் வாங்க மாட்டேன்என மறுத்ததோடுபோலீசாருக்கு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு விலகினார். மனைவிமகன்மகள்உறவினர்கள் இருந்தும்அனாதை பிணமாகிப்போன ரகுவின் உடலை என்ன செய்வது என தெரியாமல்போலீசார் தவித்து வருகின்றனர். அனாதை உடல்களை அடக்கம் செய்யும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


1 comment:

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!