Saturday, April 16, 2011

இனியாவது இந்த நரேந்திர மோடிக்கள் திருந்துகிறார்களா எனப் பார்ப்போம்.

திருப்பூர் அருகே பூலுவப்பட்டியை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஆறுமுகம் (55). இவரது மகள் மீனாட்சி (18) குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.

பள்ளி விடுமுறையை கொண்டாட, பல்லடம் மேட்டுக்கடையில் உள்ள தன் அக்கா ப்ரியா வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் அருகில் உள்ள தோட்டத்தில் பூப்பறிக்கச் சென்ற மீனாட்சி ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். ஆனால், மாலை 4 மணி அளவில் அங்குள்ள கிணற்றில் மீனாட்சி பிணமாக மிதப்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர்.

தீயணைப்பு துறையினர் உதவியோடு மீனாட்சி பிரேதத்தை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பிரேத பரிசோதனைக்காக சவக் கிடங்கில் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று காலை பிரேத பரிசோதனை செய்ய டாக்டர் மற்றும் ஊழியர்கள் வந்தனர். அப்போது மீனாட்சியின் இரு மார்பகங்களும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தன. மேலும் அவை மாயமாகியிருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தந்கனர்.

இது குறித்து தகவலறிந்த மீனாட்சியின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பல்லடம் டி.எஸ்.பி. தங்கதுரை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியததை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.

இதனையடுத்து, மீனாட்சியின் பிரேதம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவுப் பணியில் இருந்த பல்லடம் மருத்துவமனை டாக்டர்கள், சவக் கிடங்கு ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவிக்கு நேரந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேற்கண்ட செய்தியை நாளிதழ்களில் வாசித்தவுடன் நெஞ்சம் குமுறியது.கண்கள் அடைத்துக் கொண்டன.அடப் பாவிகளா,வன்முறைக்கும் ஒரு வரம்பில்லையா?


இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக.

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஒரு கர்ப்பவதியான முஸ்லிம் பெண்ணை கற்பழித்துவிட்டு,  பெரிய சூலாயுதத்தால் அந்த பெண்ணின் வயிற்ரை கிழித்து - வயிற்றினில் இருந்த அந்த பிஞ்சு சிசுவை வெளியே எடுத்து தூக்கி வீசி 
எறிந்ததை 
மறக்க முடியாது.

இவைகள் எல்லாம் நடப்பது நம் இந்திய திரு நாட்டில்தான்.இங்குதான் பெண்கள் மதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் புள்ளி விவரப்படி உலகில் மிக அதிக அளவில் பெண்களுக்கான குற்றங்கள் நடப்பது இந்தியாவில்தான் என்கிறது.

இனியாவது இந்த நரேந்திர மோடிக்கள் திருந்துகிறார்களா எனப் பார்ப்போம்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!