Sunday, April 17, 2011

அன்னா ஹசாரே கைதாவாரா? பரபரப்பு செய்தி!!

 ஊழலுக்கு எதிராக பாசிஸ்டுகளுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த காந்தியவாதியின் ஊழல்! இவர் செய்த ஊழலை பார்த்து அரசியல்வாதிகளே கலங்கிபோய் இருக்கிறார்கள்! இதோ அன்னா ஹசாரே ஊழல் விவரம்!

அண்ணா ஹசாரே தலைமை வகிக்கும் ஹிந்த் சுராஜ் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்திய ஊழலை பற்றிய ஜுடிசியல் விசாரணையின் விபரங்கள் இதோ!

இந்த டிரஸ்ட் உதவி தலைவர் சந்திபூசனும் இதில் உறுப்பினரான பிரசாந்த் பூசனுக்கும் சம்பத்தப்பட்ட சீ. டி வெளியில் வந்த பிறகு கதாநாயகன் ஹசாரே உடைய ஊழல் வெளியில் வந்து பரப்பரப்பை உண்டாக்கி கொண்டிருகிறது.

அந்த இருவர்களுடை வீடியோவில் சில சந்தேகங்கள் இருந்தாலும் ஹசாரே சம்பந்தப்பட்ட ஊழலில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்து இருகிறார்கள்.

அண்ணா ஹசாரே தன்னுடையே பிறந்தநாள் தினத்திற்கு டிரஸ்ட் உடைய பணம்
இரண்டரை லட்சம் பணத்தை சட்டவிரோதமாக செலவளித்தது.

மத சார்பற்ற கல்வி படிப்பதற்காக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை
கோவில் கட்டுவதற்காக கொடுத்தார் என்றும் விசாரணை கமிஷன் கூறி உள்ளது.

இந்த நிறுவனத்திற்கு அரசு ஒதுக்கி கொடுத்த நிலத்தை சட்டவிரோதமாக வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் கணக்குகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளதாக மகாராஷ்டிரா மத்திரி சுரேஷ் ஜெயின் குற்றம் சுமத்தி இருந்தார்.

அலஹபாதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலம் வாங்கியதில் முத்திரைதாள் வாங்கியதில் கள்ள கணக்கு காட்டியிருப்பதாக மகாராஷ்டிரா அரசுசுக்கு சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் 1995 இல் இவர் ட்ரஸ்ட்க்கு சொந்தமான பணத்தை தனது பிறந்த நாளைக்கு செலவழித்தார் என்பது விசாரணை கமிசனால் நிருபிக்கப்பட்டுள்ளது. இவர்தான் நேர்மை ஊழல் என்று பேசுகிறார்.

ஒரு ட்ரஸ்ட்க்கு சொந்தமான பணத்தை எடுத்து தனது பிறந்த நாள் விழாவுக்கு செலவு செய்வது ஒரு காந்தியவாதின் அழகு இல்லை. ட்ரஸ்ட்க்கு சொந்த மான நிலத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு எழுதி கொடுத்தது மட்டுமல்லாமல் அதை பதிவு செய்யும்போது முத்திரை தாள் மோசடி செய்வது என்பது ஒரு கேவலமான செயல். ஊழழலை பற்றி பேச அன்னா ஹசாரேக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.

ஓஓஓ இதுதான் காந்திய தருமமோ ?


வாசகர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் நல்லவர்கள் ஒரு நாளும் ஹிந்துத்துவா பாசிஸ்ட்களோடு சேரமாட்டார்கள்.



நன்றி http://www.sinthikkavum.net/

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!