Friday, May 1, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? "அல்லாஹ்வின் மீதான அச்சம்" தொடர் 5

சுப்யான் அஸ் ஸவ்ாி கூறுகின்றார்கள்:

'எனது எண்ணங்களை சீர் செய்வதை விடக் கடினமான செயல் வேறு எதுவும் இல்லை. ஏனெனில், அது மாறுவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கின்றது."

ஹதீஸ் கலை வல்லுநராக விளங்கிய அப்துல்லாஹ் பின் முபாரக் சொல்கின்றார்கள்:
'செய்யப்பட்ட செயல் மிகச் சிறிதாக இருந்தாலும், எண்ணத்தின் காரணமாக அதற்குக் கிடைக்கும் நற்கூலியினால் அது மிகப் பொிதாக மாறி விடும். அதே நேரத்தில் ஒரு மிகப் பெரும் செயல் எண்ணத்தின் காரணமாக அற்பமானதாகவும் ஆகி விடும்."

முஹம்மது பின் அஜ்லான என்ற தாபியீ (நபித்தோழாின் தோழர்) சொல்கின்றார்கள்:
'அல்லாஹ்வின் மீதான அச்சம், நல்லெண்ணம், மற்றும் நபிவழியை ஒத்து இருத்தல் ஆகிய மூன்று விஷயங்களுடன் சேர்ந்திராத எந்தவொரு செயலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது."

முத்தரீப் பின் அப்தில்லாஹ் (இவர் நபிகள் காலத்தில் பிறந்தவர், ஆனால் அவர்களைப் பார்த்திராதவர்) கூறுகின்றார்கள்.
'தூய்மையான, இறையச்சமுள்ள செயல்களின் மூலமாகத் தான் உள்ளத்தைத் தூய்மையானதாகவும், இறையச்சமுடையதாகவும் மாற்றலாம். சரியான எண்ணத்தின் மூலமாகத் தான் தூய்மையான இறையச்சமுடைய செயல்களைப் புரிய முடியும்."

உங்களில் அழகிய செயலுக்குாியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தோன், மன்னிப்போன். (திருக்குர்ஆன் 67:2)
என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் அளித்த ஃபுழைல் பின் இயாழ் என்ற அறிஞர் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்.

'தூய்மையான எண்ணத்துடனும், சரியான முறையிலும் செய்யப்பட்ட செயல்களைத் தான் சிறந்த செயல் என்று இந்த வசனம் குறிப்பிடுகிறது நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட செயல் முறையற்றதாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இதே போல முறையாக செய்யப்பட்டாலும், நல்லெண்ணத்துடன் செய்யப்படாத செயல், நிராகாிக்கப்படும். நல்லெண்ணத்துடன், முறையாகவும் செய்யப்பட்ட செயல் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நல்லெண்ணம் என்பது அல்லாஹ்விற்காக மட்டுமே செய்யப்படும் ஒரு செயலாகும். முறையான செயல் என்பது நபிகளார் அவர்களின் வழிமுறையின் படி செய்யப்பட்ட செயலாகும்."

எனவே அல்லாஹ்வால் அங்கீகாிக்கப்பட வேண்டுமெனில் ஒரு செயல் பல நிபந்தனைகளைகளால் பூர்த்தி செய்யப்பட வேண்டும். முதல் நிபந்தனை அல்லாஹ்விற்காக மட்டுமே அச்செயல் செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக அச்செயல் நபிகளாாின் வழிமுறைப்படி அமைய வேண்டும். மூன்றாவதாக நபிகளார் அவர்களின் மறைவுக்குப் பின் உருவாக்கப்பட்ட நூதனமாக (பித்அத்) அது இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!