Wednesday, May 13, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?ஈமானையும், தவ்ஹீதையும் பலவீனப்படுத்துகின்றது ""தொடர் 7

'ரியா" மறைவான தன்மையுடையது. எனவே, அதன் அபாயங்கள் மேலும் கடுமையானதாக அமைந்துள்ளன.

அபூமூஸா அல் அஷ்அரீ அவர்கள் அறிவிக்கின்றார்கள். அண்ணல் நபி அவர்கள் ஒரு நாள் எங்களுக்குப் பிரசங்கம் செய்தார்கள். அப்போது அவர்கள், 'மனிதர்களே! இந்த இணைவைப்பை (அதாவது ரியாவை)க் குறித்து அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு எறும்பு ஊர்ந்து செல்வதைக் காட்டிலும் புலப்படாத ஒன்றாக அது அமைந்துள்ளது." ஆதாரம்: ஸஹீஹ் அல் தா;கீப் வல் தா;ஹீப்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
'நிலவில்லாத ஓாிரவின் நடுவில், கருமை நிறப் பாறையில் ஊர்ந்து செல்லும் எறும்பை விடப் புலப்படாத ஒன்றாக அது அமைந்துள்ளது." ஆதாரம்: தஃப்ஸீர் இப்னு கதீர்
(இன்னொரு சிறிய இணைவைப்பு குறித்து இப்னு அப்பாஸ் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்த போதிலும், ரியா போன்ற சிறிய இணைவைப்பிற்கும் இது பொருந்துவதாக அமைந்துள்ளது.)

ரியாவின் தீங்கிலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு இறைத்தூதர்; அவர்கள் கூட அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். இறுதி ஹஜ் பயணத்திற்கு முன்பு அவர்கள் அல்லாஹ்விடம்:-

'அல்லாஹ்வே! இந்த ஹஜ்ஜை ரியா இல்லாத அல்லது பகட்டு இல்லாத ஹஜ்ஜாக ஆக்கியருள்வாளாக" என்று பிரார்த்தனை புரிந்தார்கள். ஆதாரம்: ஸஹீஹ் அல் ஜாமி இனி ரியாவின் சில தீங்குகளைக் காண்போம்.
1. ஈமானையும், தவ்ஹீதையும் பலவீனப்படுத்துகின்றது.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:
ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்குகாகவே தவிர நான் படைக்கவில்லை. (திருக்குர்ஆன் 51:56)
'ரியா"வில் ஈடுபடும் ஒரு மனிதன் தான் படைக்கப்பட்டத்தின் நோக்கத்தையே அழித்து விடுகின்றான். ஏனெனில், அல்லாஹ்வை உண்மையாகவே வணங்குவதற்குப் பதிலாக, அல்லாஹ்வை வணங்குவதைப் போல் பாசாங்கு செய்து, அல்லாஹ்வுடைய படைப்புகளின் திருப்தியையும், பாராட்டுதலையும் பெறுவதற்கு அவன் விரும்புகிறான்.

உண்மையான நம்பிக்கையாளர்கள் யார் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.
உண்மையான நம்பிக்கையாளர்கள், அல்லாஹ்விற்காக மட்டுமே வணக்கத்தில் ஈடுபடுவார்கள். தங்கள் வணக்க வழிபாடுகளுக்காக மற்றவர்களிடமிருந்து அவர்கள் எவ்வித வெகுமதியையோ, நன்றியையோ எதிர்பார்க்க மாட்டார்கள். இதனை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் விளக்கியுள்ளான்:

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும் கைதிக்கும் உணவளிப்பார்கள். 'அல்லாஹ்வின் திருப்திக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து நன்றியையோ பிரதிபலனையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை" (எனக் கூறுவார்கள்) (திருக்குர்ஆன் 76:8,9)

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!