Sunday, May 17, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? " தேவையுடைய மக்களுக்கு உதவிடுவதும் வணக்கம் தான் " தொடர் 8

தொழுகை, நோன்பு போன்ற அத்தியாவசியக் கடமைகள் மட்டுமில்லாமல், தேவையுடைய மக்களுக்கு உதவிடுவதும் வணக்கம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்வின் அடிப்படை வசதிகள் தங்களுக்குத் தேவைப்பட்ட போதும் கூட, அவற்றைத் தேவையுள்ளவர்களுக்கு பிரதிபலன் பாராது, வழங்க உண்மையான நம்பிக்கையாளர்கள் தயங்க மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அளிப்பதாக வாக்களித்துள்ள மாபெரும் அருட்கொடைகளுடன், தங்களது உதவிகளைப் பெற்றவர்கள் காட்டும் நன்றி விசுவாசத்தை எவ்வகையிலும் ஒப்பிட முடியாது என்பதை அவர்கள் நன்குணர்ந்து இருக்கின்றார்கள்.

திருப்திப்படுத்துவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே, அல்லாஹ் ஒருவனே வணங்கப்படுவதற்கும் தகுதியானவன் என்பதை உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் உணர்ந்தே செயல்படுவார்கள். இதற்கு எதிர்மறையான நயவஞ்சகர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு திருக்குர்ஆனில் விமர்சிக்கின்றான்:

தமது தொழுகையில் கவனமற்று பிறருக்குக் காட்டுவதற்காக தொழுவோர்க்குக் கேடுதான். (அவர்கள்) அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கிறார்கள். (திருக்குர்ஆன் 107:4-7)

சூரா அந்நிஸாவிலும் அல்லாஹ் நயவஞ்சகர்களைப் பின் வருமாறு வர்ணிக்கின்றான்.
நயவஞ்சகர்களய் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். அல்லாஹ்வைக் குறைவாகவோ நினைவு கூர்கின்றனர். (திருக்குர்ஆன் 4:142)

இறை நம்பிக்கை (ஈமான்) மற்றும் ஏகத்துவம் (தவ்ஹீத்) மீதான பிடிப்பை 'ரியா" எவ்வாறெல்லாம் ஆட்டம் காண வைக்கும் என்பதற்கு இந்த திருக்குர்ஆன் வசனங்கள் எச்சாிக்கையாக அமைந்துள்ளன.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!