Thursday, April 23, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?நற்கூலி பெற்றுத் தரும் செயல்கள் எவை??தொடர் 3

ரியாவைப் பற்றிய விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்பு 'தூய்மையான எண்ணத்தின்" முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: '"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. ஒருவரது ஹிஜ்ரத் (துறத்தல்) உலகைக் குறிக்கோளாகக் கொண்டிருத்தல் அதையே அவர் அடைவார். அல்லது ஒரு பெண்ணைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவளை மணப்பார். ஒருவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்" இதை உமர் பின் கத்தாப் (ரலி) மேடையில் இருந்து அறிவித்தார்கள். ஆதாரம்: புகாாி (1), முஸ்லிம், அபூதாவூத் .

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றாக இந்த ஹதீஸ் விளங்குகின்றது. இதனால் அநேகமாக எல்லா ஹதீஸ் நூல்களிலும், இந்த ஹதீஸ் இடம் பெற்று அனைவராலும் பரப்பப்பட்டுள்ளது. இமாம் புகாாி (ரஹ்) தமது ஸஹீஹ் புகாாியை இந்த ஹதீஸுடன் தான் தொடங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் அல்லாஹ்விற்கன்றி வேறு எவருக்காகவும், ஏதாவது ஒரு செயல் செய்யப்படுமேயானால், இவ்வுலகிலும், மறுவுலகிலும் அதனால் எவ்வித நற்பயனும் ஏற்படாது என்பதை உணர்த்துகிறார்கள்.

இஸ்லாத்தின் அடித்தளம் மூன்று ஹதீஸ்கைைளச் சார்ந்து இருப்பதாக இமாம் அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்) குறிப்பிடுகின்றார்கள். அவற்றில் ஒன்று நாம் மேலே குறிப்பிட்டுள்ள 'எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன...." என்ற உமர் (ரலி) அறிவிக்கின்ற நபிமொழியாகும்.மற்றொன்று நுஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கின்ற பின் வரும் நபிமொழியாகும். அல்லாஹ்வின் தூதார் நபி அவர்கள் கூறினார்கள்: 'அனுமதிக்கப்பட்டவையும், மிகத் தெளிவானவை. அனுமதிக்கப் படாதவையும் தெளிவானவை. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கிடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கிடமான வற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்திற்கும், தமது மானம், மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுவதிலிருந்து விலகி விடுகிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறாரோ அவர் வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சாிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனது எல்லைகள் அவனால் தடை செய்யப்பட்டவைகளாகும். எச்சாிக்கை! உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீர்பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர்பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள் அதுதான் உள்ளம்" இதை நூஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாாி (52), முஸ்லிம்இன்னொரு நபிமொழி ஆயிஷா (ரலி) அறிவிக்கின்ற பின்வரும் நபிமொழியாகும். 'எவரொருவர் நம்முடைய இந்த விவகாரத்தில் (அதாவது இஸ்லாத்தில்), அதனைச் சார்ந்திராத ஏதாவது ஒன்றைப் புகுத்துவாரேயானால், அது நிராகாிக்கப்படும்." ஆதாரம்: புகாாி (2697), முஸ்லிம், அபூதாவூத், இப்னு . மாஜாஅதாவது 'பித்அத்" (நூதனச் செயலை) ஒருவர் கடைப்பிடிப்பாரேயானால், அவருக்கு மறுமையில் எவ்வித நற்பேறும் கிடைக்கப்போவதில்லை.இமாம் அபூதாவூத் அவர்கள் பின்வரும் கருத்தை வெளியிட்டுள்ளார்கள். 'இறைத்தூதாின் 500000 ஹதீஸ்களை நான் தொகுத்தேன். இதில் எனது நூலுக்கு (சுனன் அபூதாவூதிற்கு) 4800 ஹதீஸ்களை மட்டுமே தேர்ந்தெடுத்தேன். இதில் ஒருமனிதர் தனது மார்க்கத்தைப் பேண நான்கு நபிமொழிகளே போதுமானதாகும்."அவற்றில்,முதலாவது:-'எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன...." என்ற இறைத்தூதாின் பொன்மொழி.இரண்டாவது:-'தனக்குத் தொடர்பில்லாத விஷயங்களை விட்டு விடுவது நல்ல முஸ்லிமாக விளங்குவதின் ஒரு பகுதியாகும்" அறிவிப்பவர்கள்: அலி (ரலி) அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத்மூன்றாவது:-'தனக்கென எதனை விரும்புகின்றானோ அதனைத் தனது சகோதரனுக்கு விரும்பாத வரை உங்களில் யாரும் உண்மையில் நம்பிக்கையாளர் இல்லை" அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ஆதாரம்: புஹாாி (13), முஸ்லிம், இப்னு மாஜாநான்காவது:-'அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவை..." என்று தொடங்கும் நுஃமான் பின் பஷீர் அறிவக்கும் நபிமொழியாகும். நாம் மேற்கோள் காட்டியுள்ளவற்றிலிருந்து எண்ணங்களைப் பற்றிய நபிமொழிகள் இஸ்லாத்தின் அடித்தளமாக விளங்குவதை நாம் புரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!