Friday, February 20, 2009

இஸ்லாம் பார்வையில் "வணிகம்"

அறிவிப்பாளர் : ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றுள்ளார்கள்: “கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கடனைக் கோருவதிலும் மென்மையுடனும் நற்பண்புடனும் நடந்து கொள்ளும் மனிதர் மீது அல்லாஹ் அருளைப் பொழிவானாக!” (புகாாி)

அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் அருளினார்கள்: “உண்மை பேசி, நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் (இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தோர்) ஆகியோருடன் இருப்பார்.” (திர்மிதி)


அறிவிப்பாளர் : அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் (வணிகர்களுக்கு எச்சாிக்கை செய்த வண்ணம்) கூறினார்கள்: “உங்களுடைய பொருளை விற்பனை செய்வதில் அதிகமாகச் சத்தியம் செய்வதைத் தவிருங்கள். ஏனென்றால் அது (தற்காலிகமாக) வாணிபத்தைப் பெருக்கினாலும் இறுதியில் அருள்வளத்தை இல்லாதொழித்து விடும்.” (முஸ்லிம்)


அறிவிப்பாளர்: அபூதர் கிஃபாாி رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்: “மூன்று வகையினாிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மையாக்கி சுவனத்தில் நுழையவிக்க மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையே தருவான்.” அபூதர் கிஃபாாி رَضِيَ اللَّهُ عَنْهُ வினவினார்கள்: “அல்லாஹ்வின் தூதரவர்களே! தோல்வியுற்றும் நற்பேறற்றும் போன இவர்கள் யார்?” அதற்குப் நபிصلى الله عليه وسلم அவர்கள், “பெருமை கொண்டு தம் ஆடையைக் கணுக்காலுக்குக் கீழ்வரை தொங்கவிட்டுத் திாிபவன், உதவி செய்வதைச் சொல்லிக் காண்பிப்பவன், பொய் சத்தியத்தின் மூலம் தனது வாணிபப் பொருளைப் பெருக்கிக் கொள்பவன் ஆகியோர்தாம்” என்று மறுமொழி பகர்ந்தார்கள். (முஸ்லிம்)


அறிவிப்பாளர் : கைஸ் அபூகர்ஸா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்களுடைய காலத்தில் வியாபாாிகளான நாங்கள் “ஸமாஸிரா” (புரோக்கர்கள்) என்று அழைக்கப்பட்டு வந்தோம். ஒரு சமயம் நபிகள் நாயகம்صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு அருகில் நடந்து சென்றார்கள். அப்போது அண்ணலார் இந்தப் பெயரைவிட சிறந்த பெயரை எங்களுக்குத் தந்தார்கள். அண்ணலார் கூறினார்கள்: “வணிக்க கூட்டத்தாரே! சரக்கை விற்பதில் வீண்பேச்சுக்களைப் பேசுவதற்கும் பொய் சத்தியம் செய்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது, எனவே நீங்கள் உங்கள் வியாபாரத்தில் தர்மத்தையும் கலந்து விடுங்கள்!” (அபூதாவூத்)


அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் அளந்தும், நிறுத்தும் வணிகம் செய்யும் வியாபாாிகளை நோக்கி “நீங்கள் எத்தகைய இரு பணிகளுக்குப் பொறுப்பாளர்களாய் ஆக்கப்பட்டுருக்கிறீர்களெனில், அவற்றின் காரணமாக உங்களுக்கு முன் சென்றுபோன சமூகங்கள் அழிந்து விட்டிருக்கின்றன” என்றார்கள். (திர்மிதி)


அறிவிப்பாளர் : உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ
“தேவையான பொருள்களைப் பதுக்கி வைக்காமல் உாிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உாித்தானவன்! மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், அவற்றைப் பதுக்கி வைப்பவன் இறைவனின் சாபத்திற்குாியவனாவான்.”(இப்னு மாஜா)

அறிவிப்பாளர் : வாயிலா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “ஒருவன் ஒரு பொருளை விற்கின்றான். ஆனால் அதிலுள்ள குறையை அவன் சுட்டிக் காட்டவில்லையென்றால் அது அனுமதிக்கப்பட்ட செயல் அல்ல, ஒருவன் பொருளிலுள்ள குறையை அறிகின்றான். ஆனால் அதனைத் தெளிவாக எடுத்துரைக்கவில்லையென்றால் அதுவும் அனுமதிக்கப்பட்ட செயல் அல்ல.” (முன்தகா)

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!