Thursday, November 13, 2008

பைபிள் வசனம் - போப் மறுப்பு!!!

இயேசு காட்டிய நேர்வழியில் மக்கள் நடக்காமல் இருப்பது தான் வரலாற்றின் சோகமான உண்மை. இறையருளால் சில சீடர்கள் தான் அவரை ஆதரித்து அவரது வழியில் நடந்தனர். இதைவிடவும் நம்பிக்கையற்ற சிலர் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் இறைத்தூதர் முஹம்மது நபியைக் கொல்ல முயற்சி செய்தது போலவே இயேசுவையும் கொல்ல முயற்சி செய்தனர்.

ஆனால் இறைவன் அந்த சதிகாரர்களின் செயல் அறிந்து அதை விட உயர்ந்த திட்டம் வைத்திருந்தான். இயேசுவுக்காகவும் அவரது சீடர்களுக்காகவும் இதைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்காணும் வசனங்களை விளக்குகிறது.

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது; ''அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?'' என்று அவர் கேட்டார். (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாதிய்யூன். ''நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம். திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்'' எனக் கூறினர். ''எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம். எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!'' (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். ''ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன். இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன். நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன். மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன். பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்'' என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் : 3:53-56)

மேற்கூறிய வசனங்கள் குறித்துக் காட்டுவது போல் இயேசு தனது மரணத்திற்கு முன்பே வானத்தில் உயர்த்தப்பட்டார். இதன் பொருள் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! இதைத் திருக்குர்ஆன் எடுத்தோதுகிறது. இயேசுவின் எதிரிகள் அவரை சிலுவையில் கொல்லப் பார்த்தனர். ஆனால் இறைவன் இயேசுவைக் காப்பாற்றினார். யாரோ ஒருவர் தான் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையில் அறையும் இந்த சதியும் மர்யம் (மேரியை) பற்றிய அவதூறும் நம்பிக்கையற்ற யூதர்களால் செய்யப்பட்டது என்று திருக்குர்ஆனின் கருத்து. இது பற்றிய திருக்குர்ஆனின் வசனம் வருமாறு :

இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிப்பட்டனர்). இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (4:156-159)

அப்படியானால் இயேசுவுக்குப் பதிலாக அறையப்பட்ட மனிதன் யார்? இதைப்பற்றி திருக்குர்ஆன் விளக்கவில்லை. இந்தக் கேள்விக்குரிய பதிலையும் கூறவில்லை!

திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை எழுதியவர்கள் சில பெயர்களைக் குறித்து காட்டியுள்ளனர். திருக்குர்ஆனோ நபிகள் நாயகத்தின் அறிவுரை - விளக்கவுரைகளோ இவர்களுடைய யூகங்களுக்கு ஆதரவாக இல்லை.

இதன் பொருள் நீதித் தீர்ப்ப நாளுக்கு முன்னர் இயேசு மீண்டும் பூவுலகிற்கு வருவார் என்பதையே காட்டுகிறது. எனினும், திருக்குர்ஆன், விரிவுரையாளர்கள் மேற்சொன்ன வசனத்தின் கடைசிச் சொற்றொடர்களை வைத்து விளக்கம் தந்துள்ளனர்.

இயேசு மீண்டும் வருவார். அப்போது கிறிஸ்துவர்களும், யூதர்களும் இயேசு இறப்பதற்கு முன் அவரை நம்புவார்கள் என்று தெளிவுரையாளர்கள் கூறுவதற்கு நபிகள் நாயகத்தின் அருள்வாக்குகள் ஆதாரம் தருகின்றன.

கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்

இந்தக் கருத்துக்களைப் படித்தவுடனேயே கிறிஸ்துவாகள் கூறக் கூடும், பாருங்கள், இது தான் முஸ்லிம்கள். இயேசுவைப் பற்றி இவர்கள் இப்படிக் கூறுவதால் தான் இவர்கள் மறுப்பாளர்களாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கின்றனர்! என்பர்.

இவர்கள் இப்படிக் கூறினாலும் திருக்குர்ஆனின் கருத்துக்கள் கூர்மையான ஆராய்ச்சிக்கு உரியதாக இருக்கிறது. யார் உள்ளபடியே இறை நம்பிக்கையையும் கிறிஸ்துவ மார்க்கத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கின்றார்ளோ அவர்கள் கீழக்காணும் காரணங்களை ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

1. திருக்குர்ஆன் என்பது இறைவன் இறுதியாக அருளிச் செய்த வேதம். அந்த வேதத்தில் சொல்லப்பட்டது அனைத்தும் முழுமையான உண்மை. இதை நம்பாதவர்களுக்கு இந்தக் கருத்துக்கள் பெரிதாகத் தென்படாது. ஆனால் திருக்குர்ஆன் பற்றிய வரிக்கு வரியான திறனாய்வும், விஞ்ஞான அடிப்படையிலான ஆராய்ச்சியும் அந்த வேதத்தினலுள்ளது அனைத்தும் உண்மைதான் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குர்ஆன் என்பது முஹம்மத் நபி (ஸல்) அவர் கூறப்பட்டது என்று சிலர் கூறுவர். கிறிஸ்தவ யூத வேதங்களைக் காப்பி அடித்தது என்றும் கூறுவர். அவர்களுக்கு உலக வரலாறும் தெரியாது. குர்ஆனும் புரியாது. நபிகள் நாயகம் பற்றியும் அறிந்திருக்கவில்லை.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு இரண்டு நூற்றாண்டுகள் கழித்துத் தான் அரபி மொழியில் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது.

அது தவிர நபிநாதர் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்பதையும், அவர் வாழ்ந்த கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மத வேதங்கள் என்பன தேவாலயங்கள் சர்ச்சுகள் தவிர வெளியுலகில் புழக்கத்தில் இல்லை என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்.. மேற்சொன்ன குற்றச்சாட்டிலுள்ள அபத்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.

2. இறைவனின் செய்தியிலுள்ள ஓரிறைத் தன்மையையும் உலகளாவிய வாக்கையும் புரிந்து கொண்டால் இறைத்தூதர்களை மக்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். இறைத்தூதரில் ஒருவரை நிராகரித்தாலும் அது அனைத்து இறைத்தூதர்களையும் நிராகரிப்பதற்குச் சமம். யூதர்கள் இயேசுவின் இறைத்தூதையும் நபிகள் நாயகம் அவர்களின் இறைத்தூதையும் நிராகரிக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இறைத்தூதை நிராகரிக்கிறார்கள். முஸ்லிம்களோ அனைத்து இறைத்தூதையும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அதிலுள்ள தவறான சரித்திரத் திரிபுகளையும் - மனிதன் நுழைத்த கருத்துக்களையும் நிராகரிக்கிறார்கள்.

3. திருக்குர்ஆன் கூறுவது காரணமாகவே முஸ்லிம்கள் தங்களது நபிநாதரை நேசிப்பது போலவே இயேசுவையும் நேசிக்கிறார்கள். மேலும் கிறிஸ்துவர்களின் புதிய ஏற்பாட்டில் கூறப்படாத இயேசுவின் அற்புதங்கள் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றன. எடுத்துக்காட்டாக இயேசு தொட்டிலிலிருந்து பேசுகிறார். மக்கள் எதை உண்கிறார்கள், எதைத் தங்களது களஞ்சியத்தில் வைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் (திருக்குர்ஆன் வசனங்களின்படி)

4. இயேசு ஒரு தெய்வம் என்ற கருத்து புனிதபால் மற்றும் அவரது சீடர்களால் கிறிஸ்து மார்க்கத்தில் நுழைக்கப்பட்டது. இதை எதிர்த்த பல லட்சக்கணக்கான கிறிஸ்துவர்களின் சவங்களின் மீது இந்தக் கருத்து நிலைநாட்டப்பட்டது. இதைப் பற்றி காஸ்டிலோ என்பவர், ஒரு மனிதனை நெருப்பில் எரிப்பது ஒரு கொள்கையை நிலைநாட்டியது ஆகாது என்றார்.

5. சக்கரவர்த்தி கான்ஸ்டான்டைன் என்பவரின், தலைமையில் நடந்த கிறிஸ்துவ மாநாட்டில் தான் தற்போதுள்ள கிறிஸ்துவர்களின் நான்கு புதிய ஏற்பாடுகள் அங்கீகாரம் பெற்றன. இதுவும் அந்தப் பேரரசரின் அரசியில் லாபங்களுக்காகச் செய்யப்பட்டன.

ஏராளமான பைபிள் புத்தகங்களும் ஏற்பாடுகளும் மதக் கிரந்தங்களும் தள்ளுபடி ஆகமம், என்ற பெயர் இடப்பட்டன. இதில் பல புத்தகங்கள் இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டவையாகும். இவற்றில் பர்னபாஸ் ஆகமம் - ஹெர்மாசின் மேய்ப்பன் போன்ற பைபிள் புத்தகங்கள் திருக்குர்ஆனோடு ஒத்துப் போகின்றன.

6. இயேசுவின் ஓரிறைக் கொள்கையும், மனிதக் கருணைக் கொள்கையும் முஸ்லிம்களால் மட்டும் ஒப்புக் கொள்ளப்படவில்லை. யூதர்களாலும், பழைய காலத்துக் கிறிஸ்தவர்களான எபியோனியர்கள் - செரிந்தியர்கள், பாசிலிடியன்கள், காபோகிரேடியன்கள், ஹைபிஸ்சிஸ்டிரியன்கள் போன்றவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.

அரியன்கள், பாசிலியன்கள், கோத்துகள் போன்றவர்களாலும் இறைத்தூதர் தான் இயேசு என்பதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இப்போதும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலுமுள்ள ஓரிறை சர்ச்சுகளும், ஜெஹோவா காட்சியாளர்களும் இயேசுவைக் கடவுள் என வணங்குவதில்லை.

7. கூர்மையான பைபிள் ஆராய்ச்சி - இயேசுவும், அவரது சரிதம் எழுதியவர்களும் சொல்லாத கருத்துக்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.

இது பற்றி ஹெய்னிஸ் ஜாஹ்ர்ன்ட் என்பவர், இயேசு பேசாத சொற்களை அவரது வாயிதழில் வைத்தனர். அவர் நடத்தாத அற்புதங்களை அவர் நடத்தியதாகக் கூறினர் என்றார். இது போலவே பல முடிவுகளை தேவாலய ஆயர்கள் அறிந்திருந்த போதிலும் அவற்றை ரகசியமாக வைத்திருந்தனர். ஆராய்ச்சி நிபுணர்களுக்கு மட்டும் அறிவித்தனர். சர்ச்சுகள் இயேசுவைப் பற்றிக் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று மனித குமாரன் இயேசு என்ற நூலில் ரூடால்ஃப் அகஸ்டீன் எழுதியுள்ளார். (ஜெர்மனிய மொழியில் இந்தப் புத்தகம் 1972 ல் வந்தது. 1977 ல் மொழி பெயர்க்கப்பட்டது).

8. இயேசுவின் இயற்கைக் குணம் - இறைத்தூது - சிலுவை மரணம் - விண்ணேற்றம் இவை பற்றிய தவறான எண்ணங்களில் இருப்பது தான் கிறிஸ்துவ மார்க்கத்தில் இன்றுள்ள பிரச்சினை. இதைப் பலரும் அறை கூவி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இங்கிலாந்திலுள்ள பல அறிஞர்கள் எழுதி ஜான் ஹிக் என்பவரால் ஒழுங்கு செய்யப்பட்டு, கடவுள் அவதாரப் புராணம் என்ற நூல் 1977 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அந்த அறிஞர்கள் இயேசு என்ற மனிதர் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டவர், தெய்வீக நோக்கத்துக்காக அவர் செயல்பட்டார். பிற்காலத்தில் அவரே கடவுள் அவதாரம் என்று கூறப்பட்டது. இது புராண பாணியில் கவிதையின் உயர்வு நவிற்சி முறையில் அவரது முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காக நமக்குக் கூறப்பட்டது தான் என்று சொல்லியுள்ளார்கள்.

ஆனால் ஜார்ஜ் கேரிப் என்பவர் இந்தப் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் போது இயேசுவைக் கடவுள் அவதாரம் என்று ஒப்புக் கொள்ளவில்லை எனில் இயேசுவின் இறைத்தூதை முழுமையாக உணர முடியாது. மக்களை வழிநடத்தும் ஆளுமையை விளக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஆனால் உறுதியாக இது பலவீனமான வாதம் ஆகும். ஆப்ரஹாம், மோசஸ், முஹம்மத் நபி (ஸல்) போன்ற மிகப் பெரிய தூதர்கள் தங்களது மக்களின் மீது அளப்பரிய வழி நடத்தும் ஆளுமையை பெற்றிருக்கிறார்கள். இவர்களில் யாரும் தன்னைக் கடவுள் என்றோ - கடவுளின் குமாரர் என்றோ கூறிக் கொள்ளவில்லை.

9. பிதா மகன் பரிசுத்த ஆவி என்ற திரியேகத்தத்துக் கொள்கை இன்றிருக்கும் பைபிளில் கூடக் காண முடியாது. நமது இறைவனான கர்த்தர் ஒரே ஒருவர் தான் (மத்தேயு) என்று இருக்கிறது. திரியேகத்துவத்தை மறுக்கிறது. சுவிசேஷக்காரர்கள் பலரும் இது போல் எழுதியுள்ளனர்.

10. தான் ஒரு தெய்வம் என்று இயேசு கூறியதாக இப்போது இருக்கிற பைபிளில் கூடக் கூற முடியாது. கடவுளின் குமாரன் நான் என்ற சொல் இயேசுவின் வாயிலிருந்து வந்ததாகவும் பைபளில் கூற முடியாது.

பைபிள் அகராதி என்ற நூல் ஹேஸ்டிங்கினர் கூறுகிறார். தன்னைக் கடவுள் என்று இயேசு கூறினாரா என்பது சந்தேகத்திற்குரியது. எனது பைபிள் ஆராய்ச்சியில் கடவுளின் குமாரன் என்ற சொற்களை யோவான் சுவிசேஷத்தில் 5-7 ஆகிய அத்தியாயங்களில் காண முடிகிறது. பிறர் தான் அந்தச் சொற்களை சில இடங்களில் கூறுகிறார்கள். கடவுளின் குமாரன் என்று இயேசுவே கூறியிருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் கீழ்க்கண்ட கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Þ அந்தக் குமாரன் எனும் சொல் ஹெலெனிஸ்டிக் என்ற மொழி வகையைச் சார்ந்தது. இயேசுவும் அவரது சீடர்களும் புழங்கிய மொழி வகை அது. செமிடிக் மொழியில் நிச்சயமாக அந்தப் பொருள் வராது.

Þ கிரேக்க மொழியிலுள்ள பைபிள் குமாரன் என்ற சொல்லுக்கு பியாஸ் - பியாடா எனும் சொற்கள் காணப்படுகின்றன. கிரேக்க மொழியில் இதற்கு ஊழியன் - ஊழிய மகன் என்பதே! இது வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் போது இயேசுவுக்கு மகன் என்ற சொல்லையும் மற்றவர்களுக்கு ஊழியர் என்ற சொல்லையும் பயன்படுத்தினர்.

Þ மனித குமாரன் என்று இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்ட சொல் சுவிசேஷங்களில் 81 முறை வருகிறது. இது இயேசு தன்னுடைய மனித நிலைமையைக் குறித்து அறிவார்ந்த முறையில் கூறியதாகும். இந்த இலக்கியப் பூர்வமான சொல் இயேசுவின் மனிதப் பாத்திரத்தைப் புற்றிய அழுத்தமான வெளிப்பாடாகும். இப்போது வாழும் கிறிஸ்தவர்கள் இதை ஒப்புக் கொள்வார்களா?

பைபிள் வசனம் - போப் மறுப்பு

யூதத் தலைமைப் பூசாரியாலும், யூத மூப்பர்களாலும் திட்டமிடப்பட்டு – உத்தரவிடப்பட்டது தான் இயேசு கைது செய்யப்பட்டார். சிலுவையில் அறையப்பட்டார் என்பது பரம்பரையான பைபிள் கூறும் கதை.

1960 ஆம் ஆண்டுகளில் இந்தக் கதை கிறிஸ்துவர்களின் மிக உயரிய அதிபதியான போப்பாண்டவரால் மறுக்கப்பட்டது. சிலுவையில் இயேசு அறையப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பில்லை எனக் கூறினார். இக் கூற்று பைபிள் கதையையே மறுப்பதாகும்.

இது (இஸ்ரேல் நாட்டுக்காகச் செய்யப்பட்ட) அரசியல் ரீதியான அறிவிப்பு என நீங்கள் கூறலாம். ஆனால் முஸ்லிம்கள் தொடர்ந்து கூறி வருகின்ற ஒரு உண்மையை இந்த அறிவிப்பு நிலைநாட்டுகிறது.

கிறிஸ்துவ மார்க்கத்திற்குள் தேவாலய நிர்வாகங்கள் பல செய்திகளைப் புகுத்திக் கொண்டிருந்தன. இதனால் பல நம்பிக்கைகள் மாறியது மட்டுமல்லாமல் - கிறிஸ்தவ மார்க்கத்தின் பழைய உருவத்தையே மாற்றி முரண்படுகிறது.

கடவுள், பைபிள், இறைவனுடன் மனிதனின் உறவு நிலை பற்றிய தேவாலயங்கள் மதக்கருத்துக்கள் மக்களை துரதிர்ஷ்டவசமான முடிவுகளை எடுக்கக் கட்டாயப்படுத்தியது.

இதனால் ஒருவர் விஞ்ஞானியாக - படிப்பாளியாக இருந்து கொண்டு கிறிஸ்துவராகவும் இருக்க முடியாது என்ற நிலையைத் தோற்றுவித்தது.

மதத்தையும் விஞ்ஞானத்தையும் ஒன்று சேர்க்க முடியாது என்ற கருத்தை தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் மற்றும் பெரும்பாலான மக்களிடையே தோற்றுவித்தது.

இதன் தாக்கம் பிற மதங்களின் மீதும் ஏற்பட்டது. இயேசுவின் போதனைகளைச் சீர்குலைக்காமலும் - திரிபு செய்யாமலும் இருந்திருந்தால் இது நடந்திருக்காது.

இதனால் தான் இஸ்லாம் இதைப்பற்றிக் கூறும் போது மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கம் முரண்பாடு இல்லை எனக் கூறுகிறது.

விஞ்ஞான உண்மைகள் - இறைவனைப் பற்றிய ஞானத்தை அறிய ஒரு வழி தான். வெளிப்பாடுகள் என்ற முன்னுரைப்புகள் இயேசுவின் போதனைகளிலும் குர்ஆனிலும் உள்ளன. உண்மையான விஞ்ஞான அறிவும் மதமும் - கடவுள் எனும் மூல ஊற்றிலிருந்தே வருகின்றன. ஏனெனில் கடவுள் தனக்கு முரணானதைக் கூற மாட்டார்.

கிறிஸ்துவச் சரித்திரத்திலுள்ள திரிபுகளான - திரியேகத்துவம் கடவுளின் குமாரன், ஜென்மப் பாவம், பாவமன்னிப்பு என்பவை மக்களை மத்த்திலிருந்து விரட்டியுள்ளன. ஆனால் இஸ்லாம் மார்கத்திற்கு இது போன்ற பிரச்சினைகள் இல்லை. இருப்பினும் இஸ்லாமையும் ஒரு மதம் என்றே மேற்கத்திய பாணியில் ஒரு குறிப்பிட்ட வளையத்தில் - பொருளில் நிலை நிறுத்தியுள்ளதால் கிறிஸ்துவ மதம் போலவே இஸ்லாத்தையும் எண்ணிக் கொண்டனர். ஆனால் ஒரு சிலர் தான் இந்த யூகத்திலுள்ள பொய்யைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர்.

குர்ஆனின் வசனங்களுக்கு ஆதாரம்

இயேசுவைப் பற்றிய குர்ஆனின் கண்ணோட்டத்தைத் தயக்கத்தோடும் விருப்பமில்லாமலும் பலர் பார்ப்பதற்கு மேற்கூறிய யூகங்கள் காரணமாகின்றன. ஆனால்சரித்தித உண்மைகளும் சில இருக்கவே செய்கின்றன.

Þ இயேசுவின் மறைவுக்குப் பின்னர் மூன்று தலைமுறைகளுக்கு கிறிஸ்துவம் என்பது யூத மார்கக்த்தின் ஒரு பகுதி என்றே நினைத்து வந்தனர்.

Þ கிறிஸ்துவ சரித்திரம் முழுவதும் கிறிஸ்துவர்கள் மற்றும் யூதக் கல்வியாளர்களின் பண்பாடு ஒரே மாதிரியாகவே இருந்தது.

Þ பைபிள் ஆராய்ச்சிகளும் விஞ்ஞான ஆய்வுகளும் பைபிளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.

Þ கிறிஸ்துவர்களில் சிலர் ஒரு தெய்வத்தை ஒப்புக் கொண்டனர். இயேசுவைக் கடவுளாகவோ - கடவுளின் குமாரராகவோ ஒப்புக் கொள்ளவில்லை.

இன்றைக்கு ஆய்வாளர்களும், பிறரும் கண்டுபிடித்துள்ள இயேசுவின் நிலையைப் பற்றி ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் குர்ஆன் கூறியது. அதிலிருந்து எந்த மாற்றத்தையும் குர்ஆன் செய்து கொள்ளவில்லை.

இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடமிருந்து மறைத்தல்

குர்ஆன் கூறியவற்றை மக்களிடமிருந்து மறைத்து - அதை நிராகரிக்கம் போக்குக்குக் காரணங்கள் சில உண்டு.

1. நீண்ட நெடிய காலததிற்கான வெறுப்பு இஸ்லாம் மீது ஏற்பட்டது (ஜெருஸலம் நகர் யாருக்குச் சொந்தம் என்பதற்காக முஸ்லிம்கள் கிறிஸ்துவர்களுக்குள்ளே நடந்த) சிலுவை யுத்தம். அடுத்தது அரபு - இஸ்ரேல் மோதல்.

2. சிலர் கிறிஸ்துவத்தை ஒப்புக் கொள்வதில்லை. அதே நேரத்தில் உண்மை எது என்பதும் புரிவதில்லை.

3. மிகப் பலர் இஸ்லாமை ஒப்புக் கொண்டால் பிறர் கேலி பேசுவார்களே, சுற்றத்தாரிடமிருந்து பிரிந்து போய் விடுவோமே - கிறிஸ்துவ மார்க்கத்தை வெளிப்படையாக கைவிட்டு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றால் மோதல் ஏற்படுமே என்று தான் நினைக்கின்றனர்.

4. கல்வித் துறையில் குறிப்பாகக் கீழ்த்திசை ஆராய்ச்சியாளர்கள் இஸ்லாம் மற்றும் குர்ஆன் பற்றி எழுதினால் யாரும் அதைத் திறனாய்வு செய்வதில்லை. அதிலிருந்து மேற்கோள் காட்டுவதில்லை. அதை ஒரு அறிவார்ந்த பணி என்று கூட ஒப்புக் கொள்வதில்லை.

இதை விடப் பெரிய துயரம் - இதனால் சிலர் பதவியையும் இழந்து விடுகின்றனர். 1978 ஜனவரி 3 ஆம் நாளைய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைச் செய்திப்படி ரிச்மாண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டாக்டர் ராபர்ட் அலெய் தனது மத ஆராய்ச்சித் துறை பதவியை இழந்தார்.

இயேசு ஒரு போதும் தன்னை கடவுளின் குமாரர் எனக் கூறவில்லை என்ற கருத்தை ஆதரித்தார் அவர் என்பதே காரணம்.

பழம்பெரும் பைபிள்களை ஆராய்ந்து டாக்டர் அலெய் எழுதினார்.

இயேசு தன்னைக் கடவுளின் குமாரர் எனப் பேசிய வ சனங்கள் பிற்காலத்தில் பைபிளில் சேர்க்கப்பட்டவையே. தேவாலயங்கள் கூறுவது போல் அவர் பேசவில்லை. இயேசுவின் முழு வாழ்வு முறையைப் பார்த்தாலும் இத்தகைய தெய்வத்தன்மை இருந்ததாகக் கொள்ள முடியாது. இயேசு இறந்த பின்னர் மூன்று தலைமுறைகளுக்கு கிறிஸ்துவத் தேவாலயம் - யூதத் தேவாலயத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இயேசுவுக்கு தெய்வத்தன்மை இருந்தது எனக் கூறுவது அவர்களின் இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாகும்.

இயற்கை அமைப்பு

இதைத் தவிர இன்னும் ஏராளமான பேர் இயேசு பற்றிய உண்மையை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதனால் இஸ்லாம் என்பது வேகமாக வளர்கிற மார்க்கமாக உலகில் இருக்கிறது. மிகுந்த விசுவாசம் கொண்ட கிறிஸ்துவர்களாய் உள்ளவர்கள் கூட கீழ்க்காணும் உண்மைகளை உணர்ந்தவர்களாக உள்ளனர்.

1. இயேசுவை இஸ்லாம் நிரகரிக்கவில்லை. மனித குலத்திற்கு இறைச் செய்தியைக் கூறிய மாமனிதர்களின் வரிசையில் அவரை வைக்கிறது. இறைவன் நபித்துவம், இறைச்செய்தி ஆகியவற்றில் புதிய எழுச்சியை இஸ்லாம் தோற்றுவிக்கிறது.

2. கிறிஸ்துவம், யூத மதம் அல்லது வேறு எந்த மதமானலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தோடு பார்க்குமானால் ஓரிறைவனையும் அவன் மனித குலத்திற்கு இட்டிருக்கும் கட்டளைகளை உணர்ந்தவர்களாகவும் மிக மிகப் பொருத்தம் உடையவர்களாகவும் இருப்பார்கள். சில பிரச்சினைகளில் ஏன் பைபிள் குளறுபடிகளுடனும் குறைவிடுதல்களோடும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

3. இறைச் செய்தி வெளிப்பாட்டின் மிகப் பெரிய சங்கிலித் தொடரின் கடைசித் தொடராகத் தான் இருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. தனக்கு முன்னுள்ள நம்பிக்கையாளர்கள் இஸ்லாம் மீதும் நம்பிக்கை கொள்வார்களானால் மிகப் பெரிய இறை அருள் கிடைக்கும் என்று இஸ்லாம் வாக்குறுதி தருகிறது. யார் தனது மதத்தில் நம்பிக்கை கொள்வதோடு என்னையும் நம்பி - எனக்கு இறைச் செய்தி அளிக்கப்பட்டதாக நம்பிக்கை கொள்கிறாரோ அவருக்கு இரு பரிசு இறைவனால் அருளப்படும் எனக் கூறியுள்ளார் நபி. ஒரு பரிசு தனது மதத்தை நம்புவதற்கு! இன்னொன்று உண்மையை அங்கீகரிப்பதற்கும் - இஸ்லாத்தை நம்புவதற்கும்!

இறுதியாக இயேசுவை இறைவனின் மிகப் பெரிய தூதுவர்களில் ஒருவராகக இஸ்லாம் கருதுகிறது. இயேசுவின் செய்தியே ஓரிறைவன் பற்றிப் போதிப்பதும் - அந்த இறைவனிடம் மனித குலத்தை அழைத்துச் செல்வதுமாகும்!

இயேசு தன்னை இறைவனின் அடியார் - நற்செய்தி கொண்டு வந்த தூதுவர் என்பதைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை. அவரது வாழ்வு - இறைச் செய்தி பற்றி குர்ஆன் ஏராளமான ஆதாரங்களுடன் பேசுகிறது. இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி முஸ்லிம்கள் உறுதியாக நம்புகிறார்கள், காத்திருக்கிறார்கள்.

இயேசு இரண்டாம் வருகை தரும் போது கிறிஸ்துவர் அல்லாதவர்கள் மீது தீர்ப்புத் தருகிற கடவுளாக வருவதில்லை. இறைத்தூதுவர் இயேசு என்ற அளவில் தான் வருவார்.

தவறாக கருத்துக்களைத் திருத்தவே இயேசு வருவார்!

தன்னைப் பற்றியும் தனது இறைத்தூது பற்றியும் ஏற்கனவே தவறான கருத்துக்களை கொண்டிருந்தவர்களைத் திருத்தவே அவர் வருவார்.

நபிநாதர் வாக்குப்படி இரண்டாம் வருகை தருகின்ற இயேசு நாற்பதாண்டுகள் இவ்வுலகில் தங்குவார். அப்போது உலக வாழ்வே அனைவருக்கும் மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும். அப்போது உலகிலுள்ள ஒவ்வொருவரும் அவரை இறைத்தூதுவர் என்றே நம்புவார்கள் - கடவுளின் குமாரர் அவர் என்று நம்ப மாட்டார்கள்.

இயேசு இரண்டாம் வருகை நிகழ்கிற போது உயிருடன் இல்லாதிருந்தால் அவரைப் பற்றித் தவறான கருத்துக் கொண்டிருந்தோர் என்ன செய்வது?

இப்போதே - இன்றே - சரியான கருத்தை.. .. சத்தியத்தை நம்பிப் பின்பற்ற வேண்டியது தான்!

சத்தியத்தில் விழித்துக் கொண்ட இதயம்!

(இக்கடிதம் பற்றி குறிப்பு இறுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது)

அன்புள்ள ஐயா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

தாங்கள் தொலைக்காட்சியில் விவாதித்த விவரம் குறித்து மதக் கல்வி மாணவியாக இருந்போதும் அதற்குப் பிறகு உலகத்தின் பல பாகங்களிலும் நான் விவாதித்திருக்கிறேன்.

ஆங்கில நாட்டைச் சேர்ந்த புதிய முஸ்லிம் பெண்ணாகிய நான் இப்போது சௌதி அரேபியாவில் உள்ளேன். உங்களது விவாதம் கூர்மையான வேறுபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சில விஷயங்களில் சிந்தனையையும் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது.

இயேசுவைப் பற்றியும் மேரியைப் பற்றியும் குர்ஆனில் கூறப்பட்டிருப்பதும் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருப்பதும் எதிர் எதிராக கண்ணோட்டங்களாகும்.

கிறிஸ்துவ நம்பிக்கை இயேசு என்பவர் கடவுளின் குமாரர் என்பதாகும். குர்ஆன் இதை நிராகரிக்கிறது. இயேசு தன்னைப் பற்றி கடவுளின் குமாரர் எனக் கூறாத போது ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்? என்று கேள்வி கேட்க வேண்டியது அவசியமாகிறது.

இஸ்லாம் கிறிஸ்துவம் ஆகியவற்றின் அடிப்படைகளை ஆராய்ந்தால் இதற்குரிய பதில் வெளியாகும். முஸ்லிம்களாகிய நாம் இறைவன் ஒருவன் மீது தான் நம்பிக்கை கொண்டுள்ளோம். வசனங்களைக் கொண்டே குர்ஆன் மீதும் விசுவாசம் கொண்டுள்ளோம்.

அது போலவே இறைவனின் தூதவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உண்மையான தூதுவர் - இறைவனின் அடியார். இறைவனுக்கு உண்மையானவர் - கீழ்படிதலுள்ளவர் நீடித்த - முழுக்க முழுக்க, ஒரு மனிதர் - இறைவனின் நல்வழியில் அவனிடம் மக்களை அழைத்துச் செல்லும் இறைக்காரணத்திற்கு ஒரு கருவியாக இருந்தவர் - என்று நம்புகிறோம்.

இப்போது கிறிஸ்து மார்க்கத்தைப் பார்போம். அந்த மார்க்கம் இறைவனை அடிப்படையாக வைத்து எழுப்பப்படவில்லை. வேதப்புத்தகம் என்பது கூட இயேசு இறந்த பின்னர் 150 ஆண்டுகளுக்குப் பின்னரே எழுதப்பட்டதாகும்.

கிறிஸ்து மார்க்கம் என்பது இயேசுவின் பாத்திரத்தை வைத்தே தொடங்கப்படுகிறது. இயேசு அதிசய அற்புதங்களைச் செயதவர் - இறந்தவரைப் பிழைக்கச் செய்தவர் - குஷ்டரோகிகளைக் குணப்படுத்தியவர், குருடர்களுக்குக் கண் தந்தவர் என்பது உண்மையே. வியத்தகு மனிதராய் - இறைவனின் அருள் பெற்றுப் பிறந்தவராய் - இறைப்பணி புரிந்தவராய் இருந்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு அந்த மந்திர த் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக கடவுளின் குமாரன் என்ற தத்துவம் உதயமாகி அவரைப் பொருத்தமாக நிலை பெறச் செய்யும் முயற்சிகள் தொடங்கின.

கிரேக்க ரோமன் கடவுள்கள் அற்புத உயர் மனிதர்களாய் மதிக்கப்பட்ட அந்தக் காலத்தில் வாழ்ந்த கிறிஸ்துவக் கல்வியாளர்களும், அது போன்ற கருத்துக்களால் தாக்குதல் பெற்றிருந்தனர்.

கிறிஸ்து மார்க்கத்தில் பின்னர் வந்த பவுல் கூட ஹெலன் இன யூதரே. அவர் இயேசுவைப் பார்த்ததுமில்லை. சந்தித்ததும் இல்லை. ஆனால் அவர் கூறிய - எழுதிய அனைத்தும் அந்தக் காலத்து நம்பிக்கைகளால் தாக்கம் பெற்றவையே ஆகும். வாழ்கின்ற தேவன் இயேசு என்ற கூற்றும் பவுலுடையது தான்.

இயேசுவின் அதி அற்புதமான பிறப்பு- அவர் கடவுளின் குமாரன் என்ற தோற்றத்துக்கு அடிப்படை தருவது போல் தோன்றும். 1101ஸ்ரீ2 இரட்டைப் படைத் தத்துவததைக் கொண்டு இதை நிலை நாட்டுகிறார்கள். கடவுள் மேரியின் கர்ப்பத்தில் ஊதினார். மேரி இயேசுவைப் பெற்றார். எனவே இயேசுவின் தந்தை கடவுள்! இயேசு - கடவுளின் குமாரர் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

குர்ஆனும் கிறிஸ்துவ நூல்களும் மேரி மனதிலும் உடலிலும் விதிவிலக்காக இருக்கின்ற ஒரு பெரும் தூய்மையுடையவராய் இருந்தார் என்றும் கடவுளுக்குச் சேவை செய்வதற்காக இந்த உலகில் அவர் அர்ப்பணிக்கப்பட்டார் என்றும் தேவாலயத்திலேயே அவர் கடவுள் பணி ஆற்றினார் என்றும் கூறின.

ஆகவே கடவுளின் சித்தப்படி மேரியே கூட அந்தத் தேவாலயத்தில் அதி அற்புதம் புரியும் தகுதி பெறுகிறார். ஆயினம் இறைவன் மேரியைத் தனது புதிய இறைத்தூதரை உருவாக்கும் கருவியாக ஆக்குகிறார். அவரது கற்பின் தூய்மை பற்றி ஒச்சம் (களங்கம், பங்கம்) வராத அளவுக்கு அந்த அற்புதத்தைச் செய்து காட்டுகிறார்.

மேரி தனது இறைவனுக்குப் பணி புரிகிறாள். ஆகவேஇறைவன் தனது அளப்பரிய கருணையால் மேரியின் கற்புக்கு மேன்மை தருகிறார்.

ஆகவே இயேசுவின் பிறப்பு என்பதைக் கடவுளின் குமாரர் உற்பத்தியாகக் கொள்ள வேண்டியதில்லை. இயேசுவின் பிறப்பு - இறைவனின் படைப்பாற்றலின் புதிய முறை. மகன் என்பதோ தந்தை என்பதோ இல்லை. இறைவனின் நோக்கமும் அப்படிப்பட்டதாயில்லை.

இயேசுவின் போதனைகள் அவரது காலத்திலும் அவருக்குப் பின்னர் சிலகாலமும் எழுதப்படவில்லை. வாய் மொழியாக வழங்கி வந்த இயேசு போதனைகள் காலப் போக்கில் மூலப் போதனைகளிலிருந்து மாற்றம் அடையத் தொடங்கின. முதலில் எழுதப்பட்டது மத்தேயு-லூக்கா-மாற்கு ஆகியோரின் ஏற்பாடுகளே! (சுவிசேஷங்களே!)

யோவான் அதற்குப் பின்னர் கடைசியாகத் தான் எழுதுகிறார். அவர் எழுதியது மதக் கிரந்தம் போல் இருந்தது.

மத்தேய-லூக்கா-மாற்கு எழுதியவற்றில் இயேசுவைப் பற்றிய சித்தரிப்பு அமைதியான- கம்பீரமான பாத்திரத்தையே உருவாக்கியது.

ஒரு இறைத்தூதுவராயும், இறைவனால் அற்புதனம் செய்தவராயும் மனிதகுலத்தின் அனைத்து மக்களையும் நேசிப்பவராயும் - இறைவனைப் பற்றிய விழிப்புணர்வைத் தோற்றுவிக்க அனுப்பப்பட்டவராயும் அந்த மூன்று ஏற்பாடுகள் (சுவிசேஷங்கள்) கூறின.

மேலும் இயேசு மனிதராகிய நமது கண்களைத் திறப்பவராயும் - இறைவினன் நினைப்பு வாழ்வின் எல்லாச் செயல்களிலும் இருக்க வேண்டும் என்று நினைவூட்டுபவராயும் - செயல் - எண்ணம் ஆகியவற்றில் தன்னலமற்ற போக்கை உண்டாக்குபவராயும் - கடவுள்ள சத்தியம் ஆகியவற்றின் மீதுள்ள நம்பிக்கையை விரிவுபடுத்துபவராகவும் அவர் இருந்தார்.

குழந்தையைப் போன்ற எளிய செயல்பாடும் நம்பிக்கையுமே இறைவனின் விண்ணரசை மண்ணுக்குக் கொண்டு வர முடியும். இந்தக் கருத்து இயேசுவின் போதனைகளில் பல் முறை வலியுறுத்தப்பட்டது.

இயேசு கடவுளை மிக நெருங்கினவராக இருந்ததற்குக் காரணயே அவரது பிரார்த்தனைகளே! அதிலிருந்தே அவர் அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றலைப் பெற்றார். அந்த அற்புதங்களை நான் கடவுளின் குமாரர் என்று கூறிக் கொண்டு செய்யவில்லை. இயேசு பயன்படுத்திய மகன் அல்லது குமாரன் எனும் சொல் மக்கள அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது.

இங்குள்ள ஆண் பெண் அனைவரையும் இறைவனின் குமாரன் அல்லது குமாரத்திகளாகக் கருதி மக்களை பார்த்து அவர் விண்ணகத்திலிருக்கும் நமது தந்தையிடம் பிரார்த்தனை செய்வோம் எனக் கூறினார்.

ஆயினம் புதிய ஏற்பாடுகளிலுள்ள இயேசுவின் சில போதனைகள் நம்பும்படி இல்லை. திரிபோ என ஐயுறும்படி அமைந்திருக்கின்றன. இயேசு பெரும்பாலும் ஏழை – ஒடுக்கப்பட்டோர்- தள்ளி வைக்கப்பட்டோர்- பணியாளர்கள் ஆகியோர் பற்றியே அதிகக் கவலையுற்று இறைப்பணி ஆற்றினார். மதக் கருத்து கலந்த போலியான பக்திச் சாமாச்சாரம் அல்ல.

அவரது அழைப்பு மனித இதயங்களுக்கு விடப்பட்ட அழைப்பு! அவரது கொள்கை – மனித நேயமும் அன்பும்!

இதற்குப் பொருள் தேவாலயங்களை நிறுவுவதா? அவர் தேவாலயம் நிறுவ விரும்பினார். ஆனால் இப்போதிருக்கின்ற தேவாலயங்களைப் போல் அல்ல!

இயேசு ஆன்மீகத்தோடும் இருந்தார். நடைமுறை உலகத்தோடும் இருந்தார். அவர் இறை நம்பிக்கையோடு மக்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துகின்ற சமுதாயத்தை உருவாக்க விரும்பினார்.

இனம் - கொள்கை பாகுபாடற்ற ஒரு குடும்பம் போன்ற அழகிய உறவுடன் - இறைவனின் வழிகாட்டுதலோடு அமைந்த சமூகமே அவர் அமைக்க விரும்பியது. அவரது போதனைகளைக் கூர்ந்து கவனித்தால் இத்தகைய சமூக அமைபில் அவரே முழுக்க முழுக்க தனி ஒளி வீசுபவராக இருக்க வேண்டும் எனக் கருதியதில்லை. இறைவனின் கைகளிலே உள்ள கருவியாக இயேசு தன்னைக் கருதினார்.

ஆனால் இது கடவுளின் சித்தத்திற்கு ஏற்ப டந்த இயேசுவின் எளிய பண்பாடான பாத்திரத்திற்கு முரணானதாகும். மக்களை இறை நம்பிக்கை கொள்ளச் செய்ய இயேசுவுக்கு இறைவன் அளித்த அற்புத சக்தியைத் திசை மாற்றியதுமாகும். இதன் மூலம் கிறிஸ்துவத் தேவாலயங்கள் இயேசுவின் தனித்தன்மையான எளிமையைத் தோற்கடித்து விட்டது ஆகாதா?

திரியேத்துவத்திலும் (பிதா-மகன்-பரிசுத்த ஆவி) தங்களது மதமே உயர்ந்தது எனக் காட்ட நினைக்கிற முயற்சியாகும். இதன் மூலம் இயேசுவை ஒரு புதிராக்கி அதற்கு விளக்கமும் தரப்படுகிறது.

இறைவனின் ஆன்மீக சக்தி என்பது ஆப்ரஹாம், மோஸே காலத்தில் இருந்தது போன்றே முஹம்மது நபி (ஸல்) காலத்திலும் இருந்தது. ஆனால் இந்த திரியேகத்தும் இவர்களின் மீது தத்துவமாகச் சுமத்தப்படவில்லை.

இஸ்லாம் மார்க்கத்தின் வருகையை கிறிஸ்துவர்கள் கள்ளத் தீர்க்கதரிசி அல்லது அந்திக்கிறிஸ்துவின் வருகையாகக் கருதுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.

இந்த அந்திக் கிறிஸ்துவக் கதை- யோவானின் வெளிப்பாட்டில் கூறப்பட்டுள்ளதால் தான் இந்த நிலை.

ஜெருஸலம் நகருக்காக நடந்த சிலுவைப் போரில் ஒரு ஐரோப்பிய பிரபுவுக்க குர்ஆனில் இயேசு பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பாருங்கள் என்று ஒரு மொழி பெயர்ப்புப் புத்தகம் முஸ்லிம்களால் தரப்பட்ட போது அதை அவர் படிக்காமல் தூர வைத்து விட்டார்.

இது இஸ்லாம் பற்றிய கிறிஸ்துவர்களின் நிராகரிப்பைப் புலப்படுத்தியது. இந்தப் போக்கு இன்றைக்கும் இருந்து வருகிறது.

சிலுவைப் போர்களின் நினைவுகளை இன்னும் உயிர் வாழச் செய்வதன் மூலம் முழுமையான ஞான சூன்யத்தைத் தோற்றுவிக்கிறார்கள்.

இப்போது முஸ்லிம்களின் கடமை தங்களது ஓரிறை நம்பிக்கையை உறுதி செய்து கொள்வதோடு – உண்மையை அறிய விரும்பும் கிறிஸ்துவர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கை விளக்கததைக் கூற வேண்டும்.

சத்தியத்தையும் உண்மையையும் தேடி அலையும் ஆன்மாக்களுக்கு இஸ்லாமும் அதனுடைய போதனைகளும் பாலைவனத்தில் வற்றாது பாயும் மலை அருவி போன்றது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

வஸ்ஸலாம்!

தங்களின் உண்மையுள்ள,

ஜஹ்ரா அஜீஸ்.

மேலே உள்ள கடிதம் பற்றி...

இயேசுவின் இறைப்பணி பற்றிய இஸ்லாம் மார்க்கத்தின் கருத்துக்கள் காரணகாரிய விளக்கத்தோடு இருப்பவை. அவரை மிகப் பெரிய இறைத்தூதராக மதிப்பதாகும்.

துடிப்பான சிந்தனையோடு இருக்கும் மக்கள் இயேசு பற்றி இஸ்லாம் கூறுவதை ஒப்புக் கொள்வர்.

எனினும் இஸ்லாம் நோக்கி வருபவர்கள் திறந்த மனதோடும்- சார்பற்ற தன்மையிலும் வந்தால் இஸ்லாம் கூறுகின்ற வாத நேர்மையையும் ஒப்புக் கொள்ள வைக்கிற தன்மையையும் இயேசுவின் விஷயத்தில் காண்பார்கள். இயேசுவைப் பற்றிய பலவிதமான கிறிஸ்துவத் தத்துவங்களோடு வாதிட்டுப் போராடிப் பார்த்தவர்கள் இஸ்லாமியக் கருத்துக்களை நிச்சயமாக ஒப்புக் கொள்வார்கள்.

சவூதி அரேபியாவிலுள்ள தொலைக்காட்சி இரண்டாவது அலைவரிசையில் எனது நிகழ்ச்சி ஒளிபரப்பான போது மேலே உள்ள கடிதம் ஒன்று வரப் பெற்றேன். இஸ்லாம் மார்க்கத்தில் இயேசு என்ற நிகழ்ச்சியைக் குறித்தும் இந்தக் கடிதம் வரப் பெற்றது. கீழ்க்காணும் காரணங்களுக்காக அந்தக் கடிதம் இணைக்கபட்டுள்ளது.

Þ இந்தக் கடிதத்தை எழுதியவர் - மதக் கல்வியில் மாணவராகவும் - அதில் தேர்ச்சி பெற்றவராகவும் உள்ளார்.

Þ இயேசு கிறிஸ்து பற்றிய கிறிஸ்துவர்களின் நம்பிக்கையையும் உணர்ச்சிகளையும் புரிந்தவராக அவர் இருக்கிறார்.

Þ அவர் எப்படி இயேசுவின் போதனைகளிலிருந்தும் இறைச் செய்திகளிலிருந்தும் கிறிஸ்துவர்கள் வழிமாறிச் செல்கிறார்கள் என்றும் எவ்வாறு அவர்கள் இயேசுவின் மீதான நம்பிக்கையில் தவறாக இருக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.

இந்த வெளியீட்டில் அவரது கடிதத்தையும் இணைக்க அனுமதித்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

- டாக்டர் அல்ஜொஹானி

பொதுச் செயலாளர்

உலக முஸ்லிம் இளைஞர்கள் பேரவை

ரியாத், சவுதி அரேபியா.

(இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர்களுக்கும், மொழி பெயர்ப்பாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்).

Source: http://www.tamilislam.com/TAMIL/OTHERS/truth_about_jesus.HTM

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!