Monday, July 23, 2012

திறப்போம் விரைந்து,பெறுவோம் அல்லாஹ்வின் அன்பை!


''நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாகஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். புகாரி: 1957

''ஆரம்ப நேரத்தில் (விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடையஅடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்'' என்று அல்லாஹ்கூறுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி)அறிவிக்கிறார். நூல்: திர்மிதி.

''ஆரம்ப நேரத்தில்> (விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடையஅடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்'' என்று அல்லாஹ்கூறுவதாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறிய விதம் நோன்பு துறந்துசுன்னத்தை ஹயாத்தாக்கிய நற்செயலை செய்ததாகவும்> அல்லாஹ்வின்விருப்பத்திற்குரிய அடியார்களில் ஒருவராகவும் ஆகமுடியும்.

நோன்பு துறப்பதை அதன் நேரத்தை கடக்க விடாமல் சரியான நேரத்தில் துறப்பவர்கள் நன்மையில் நீடிப்பார்கள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் அதை அலட்சியம் செய்யாமல் நன்மையில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற நற்சிந்தனையில் நோன்பு துறப்பதை விரைவு படுத்தி அல்லாஹ்வுக்கு விருப்பமான அடியார்களில் ஒருவராக நம்மை ஆக்கிக் கொள்ள தயார் படுத்துவோமாக !

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!