Tuesday, May 17, 2011

வரும் 24ம் தேதி ஹஜ் குலுக்கல்

 தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள, 10 ஆயிரத்து 470 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றுக்கான குலுக்கல், வரும் 24ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு ஹஜ் கமிட்டியிடம், இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள, 10 ஆயிரத்து 470 பெரியவர்கள் மற்றும் ஏழு கைக்குழந்தைகளுக்கு விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இருந்து, ஹஜ் செல்லும் பயணிகளை தேர்ந்தெடுக்க, வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை, புதுக்கல்லூரியில் உள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கில் நடக்க உள்ளதாக, ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!