Wednesday, December 31, 2008

அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.

73:14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.
82:1. வானம் பிளந்து விடும்போது
82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
82:4. கப்றுகள் திறக்கப்படும் போது,
82:5. ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
81:1. சூாியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது
101:4.அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
80:34.அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
80:35.தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:36.தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
80:37.அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
22:2. அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல
39:68. ஸுர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.
50:41.மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.
50:42. அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மாித்தோர்) வெளியேறும் நாளாகும்.
36:51. மேலும், ஸுர் ஊதப்படடதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.
36:52. ''எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?"" என்று அவர்கள் கேட்பார்கள்
39:68. ஸுர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.
19:80.இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.
50:22.''நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது."" (என்று கூறப்படும்).
10:45.அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள் ; அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.
79:35. அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
23:101.எனவே ஸ_ர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாாித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
44:41.ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாாிக்கமாட்டான்.
82:19. அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
3:30. ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;.
14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவாகளாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங்க கொண்டு) சூணியமாக இருக்கும்.
18:48.அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வாிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; ''நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்"" (என்று சொல்லப்படும்).
18:49.இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், ''எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பொியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே!"" என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்
24:24. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.
41:20.இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராகன அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
41:21.அவர்கள் தம் தோல்களை நோக்கி, ''எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுனீர்கள்?"" என்று கேட்பார்கள்; அதற்கு அவை; ''எல்லாப் பொருட்களையும் பேசம் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசம்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்"" என்று கூறும்.
70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாாிக்கமாட்டான்.
70:11.அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாாித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிாியப்படுவான்: தன் மக்களையும்-
70:12.தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
70:13.அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
70:14.இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிாியப்படுவான்).
52:46. அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
69:25. ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; ''என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
69:26. ''அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
69:27. ''(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
69:28. ''என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
69:29. ''என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!"" (என்று அரற்றுவான்).
69:30. ''(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அாிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.""
69:31. ''பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
25:27. அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு; ''அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?"" எனக் கூறுவான்.

Tuesday, December 30, 2008

பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்த இஸ்ரேல்!

உலகின் ஒரே வந்தேறி ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலின் வன்கொடுமைகள் எல்லை மீறியது. டிசம்பர் 27, 2008ல் இஸ்ரேலின் வான்படை தாக்குதலில் அந்த ஒரே நாளில் மட்டும் 205 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் குழந் தைகள் கொல்லப்பட்ட கொடூரம் கண்டு உலகமே அதிர்ந்தது. 60 ஆண்டுக்கு முன்பு அமெரிக்க குழந்தையான இஸ்ரேல் என்ற அந்த முறையற்ற குழந்தை ஜனித் தது. பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் விரட்டப்பட்ட அவர்களிடம் எந்த பகைமையும் காட்டாது சமாதானத் துடன் வாழ்ந்து வந்த ஒரு தூய சமூகத் தினரை வதைத்து அவர்களது நிலப் பரப்பை முற்றிலும் அபகரித்து தாங்கள் ஒரு இழிமக்கள் கூட்டம்தான் என்பதை நிரூபித்தார்கள். எவ்வித உரிமைகளும் வழங்காது மேற்குலகின் வக்கிரப் புத்தி யுடன் கூடிய நிதி மற்றும் ராணுவ உதவியுடன் அப்பாவிகளை வதைத்தனர்.

இப்பூமி கிரகத்தின் முதல் பயங்கர வாத நாடு இஸ்ரேல். மோசமான பயங்கர வாதிகள் யூதர்கள் என்ற இழிபெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. முஸ்லிம்களின் மூன்றாம் புனிதத்தலம் அமைந்துள்ள தியாக பூமியாம் பாலஸ் தீனத்தை முழுமையாக மீட்கும் நாள் எந்நாளோ என உலக முஸ்லிம்களும் நீதி விரும்பும் அனைத்து மக்களும் ஏங்கித் தவித்தனர். உரிமை வேண்டி போராடிய இயக்கங்களுடன் இரக்கமற்ற முறையில் போர் தொடுத்தனர் யூத கோழைகள். போரின் கொடுமைக்கு அஞ்சி நாட்டை விட்டு ஓடும் அப்பாவி மக்களைக் கூட யூதவெறிக் கூட்டம் விட்டு வைத்ததில்லை. அகதி முகாம் களைக் கூட, அதிலுள்ள குழந்தைக் கொழுந்துகளைக் கூட கொத்துக் குண்டுகளால் குதறிய கொடுமை இந்த உலகமே கனவிலும் நினைத்துப் பார்க் காதது. ஆம்புலன்ஸ்களைக் கூட குண்டு களால் துளைத்தது. இத்தனைக் கொடு மைகள் இழைத்த இஸ்ரேலைத்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் பிற ஐரோப் பிய நாடுகளும், ஏன் மன்மோகனின் அமெரிக்க காதல் அரசும் தலைமேல் தூக்கிப் பிடித்து வருகின்றன. கொண் டாடி, கூத்தாடி வருகின்றன.

இத்தகைய இக்கட்டான நிலையிலும் பாலஸ்தீன மக்களின் தலைவர்கள் சர்வதேச சமூகத்தின் ஆத ரவு வேண்டி நின்றனர். யாசர் அராஃபத் போன்ற வர்களுக்கு தார்மீக ரீதி யிலான ஆதரவினை வழங்கிய இந்தியா போன்ற நாடுகள் கூட அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு அணியில் இணைந்து விட்ட நிலையில் பாலஸ் தீன மக்களின் உரிமைப் போருக்கான சர்வதேச ஆதரவு என்பது அரசாங் கங்களின் மட்டத்தில் அறவே இல்லை என்ற நிலையில் உலகெங்கும் உள்ள வெகு ஜன மக்களின் ஆதரவு என்ற உயிர்க் காற்றை மட்டுமே பெற்று பாலஸ்தீன மக்களின் சுதந்திர தாகம் உலகெங்கும் ஒரு ஏக்கப் பிரச்சாரமாக வெளிப்பட்டி ருக்கிறது.

இந்நிலையில், 2006ஆம் ஆண்டு ஹமாஸ் என்ற விடுதலைப் போராளி களின் இயக்கம் தேர்தல் பாதைக்கு திரும்புவதாக அறிவித்தது. முதலில் உள்ளாட்சித் தேர்தல்கள் குதித்து பெருவாரியான வெற்றியைப் பெற்றது. அதோடு நாடாளுமன்றத் தேர்தலில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்று முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இஸ்மாயில் ஹனியா, பாலஸ்தீனத்தின் பிரதமரானார்.
போராளி அமைப்பு, தேர்தல் பாதைக்கு பிரவேசம் செய்து பெருவாரியான வெற் றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்ததைப் பாராட்டவோ, வரவேற்கவோ பரந்த மனம் இல்லாத போலி ஜனநாயக தத்துவ வாதிகளான மேற்குலக அரசுகள் ஹமாஸை அங்கீகரிக்க மறுத்தன. சிறப் பான முறையில் ஆட்சி செய்த ஹமாஸ் அரசை செயல்பட விடாமல் முடக்கும் சதிச்செயலை ஃபத்தாஹ் அமைப்பை பகடைக்காயாகப் பயன்படுத்தி அமெரிக் காவும் இஸ்ரேலும் செய்தன. பாலஸ்தீன அதிபர் என்று அழைக்கப்படும் மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவுடனும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கோண்டி என்ற கண்டலீசா ரைஸுடனும் அதிக மாக உறவு பாராட்டத் தொடங்கினார். பாலஸ்தீனத்தின் நிதி ஆதாரம் முடக்கப் பட்டது. அரசு அதிகாரிகளுக்குக் கூட மாதாந்திர ஊதியம் வழங்க முடியா அவலத்தை ஹமாஸ் தலைமையிலான அரசு சந்தித்தது. பிற்போக்கு ஆக்கிர மிப்பு சக்திகளின் தீய நோக்கத்தை முறியடிக்கும் விதமாக சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் ஒரு சமாதான முன்முயற்சியை மேற்கொண்டார். அதனடிப்படையில் சொந்த சகோதரர் களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டிருந்த நிலையை ஒழித்துக்கட்ட வேண்டும் என விரும்பினார்.ஃபத்தாஹ்வின் அப்பாஸும், ஹமாஸின் தலைவர் ஹாலித் மிஷாலும், இஸ்மாயில் ஹனியா வும் சவூதி அரேபியாவுக்கு வரவழைக் கப்பட்டனர். உணர்ச்சிமிகு சந்திப்பில் எங்கள் மூத்த சகோதரரின் (மன்னர் அப்துல்லாஹ்வின்) கட்டளைக்கு கீழ்ப் படிவோம், சமாதானத்தைப் பேணுவோம் சகோதரச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என உள்ளம் உருக உறுதிமொழி மேற்கொண்டனர். இது வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத் தின்படி ஹமாஸுடன் பத்தாஹ் கூட்டு அமைச்சரவை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. சவூதியிலிருந்து பாலஸ்தீனத்திற்கு இரு பிரிவு தலைவர் களும் போய் சேர்ந்த சில நாட்களில் பிளவும் பிணக்கும் தோன்றின. இது எதிரிகளுக்கு கொண்டாட்டத்தைக் கொடுத்தது. மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவின் அடியொற்றி நடந்தார். ஹமாஸ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து முயன்று வந்தது. ஹமாஸின் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டைகள் போடும் விதமாக பொருளாதாரத் தடையை விதித்து அமெரிக்கா தனது வக்கிரப் புத்தியைக் காட்டியது. பொருளாதாரத் தடையால் உயிர் காக்கும் மருந்துகள், எரிபொருள், உணவு, மின்சாரம் என அனைத்தையும் இழந்து பெரும் துயரத்தைச் சந்தித்தனர் காஸா பகுதி மக்கள். நிவாரணப் பொருட்களை சுமந்துகொண்டு சர்வதேச உதவிக் குழுக்கள் படகுகளில் வந்த போது அவர்களை வலுக்கட்டாயமாக இஸ்ரேல் அனுமதி மறுத்தது. பொறுமை இழந்த ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்தனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடை யிலான சமாதானப் பேச்சுவார்த்தையை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எகிப்து முன்னெடுத்தது. இந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஹமாஸுக்கும் இஸ்ரேலுக் கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த மாதம் 19ஆம் தேதி ஆறு மாதம் கடந்துவிட்ட நிலையில் தொட ருமா? என கேள்விகள் எழுந்தபோது போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட மாட்டாது; போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது என அறிவித்தது. கடந்த நவம்பர் 4ம் தேதி இஸ்ரேல், எல்லைகளை மூடியது. சொல்லொணாத் துயரங்களை விளைவித்தது. 15 லட்சம் மக்கள் இன்று காஸாவில் வாழ்வாதார உதவிகள் ஏதுமின்றி வாடி வருகிறார்கள். உணவு, உயிர்காக்கும் மருந்துகள் ஏதுமின்றி தவிக்கும் நிலையில் ஹமாஸ் மற்றுமொரு இண்டிஃபாதாவை (மக்கள் போர்) அறிவித்திருக்கிறது.

இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கிய முதல் நாள் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியா னார்கள். இரண்டாவது நாள், மூன்றா வது நாள் என தொடர்ந்து தனது வன்தாக்குதலை இஸ்ரேலை தொடர்கிறது.
இதுகுறித்து காஸா பகுதியின் சமாதான ஆர்வலரும், புகைப்பட செய்தியாளருமான சாமெஹ் ஏ. ஹபீப் குறிப்பிடும் பொழுது “சனிக்கிழமை காலை 11 மணிக்கு எப்.16 வகையைச் சேர்ந்த குண்டுவீசும் 60 விமானங்கள் காஸா பகுதியில் குண்டுமழை பொழிந் தன. நூறு காவல் நிலையங்கள் மற்றும் காஸா பகுதியிலுள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பெரும் பாதிப் புக்கு உள்ளாகின. முதல் குண்டு வீச்சில் 160 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர் களில் ஏராளமானோர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. கட்டடங்களின் இடிபாடுகளுக்கிடையில் ஏராளமான உடல்கள் சிக்கிக் கொண்டுள்ளன. அல்ஜவாஸத் காவல் நிலையத்தில் மட்டும் 70 இளம் காவல்துறை அதிகாரி கள் பலியானார்கள்.
ஒன்பது பேர் கொண்ட குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக பலியானார்கள். பலியான வர்களில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர். ஏராளமான பெண்களும் பலியாகி உள்ளனர்.
காஸாவின் காவல்துறை இயக்குநர் தவ்ஃபீக் அல்ஜாபர் இந்த வன்தாக்குதலில் பலியாகி விட்டார். படுகாயம் அடைந்தவர் களில் மூவர் ஒரே படுக்கையில் கிடத்தப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய பரிதாப நிலை. எழுபதுக்கும் மேற்பட்டோர் எகிப்தின் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர்.மான் செய்தி நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் நாசர் அல் லஹாம் தெரிவிக்கும் போது முதல் நாள் தாக்குதலில் 60 போர் விமானங்கள் கண்மூடித்தனமாக தாக்கு தலை நடத்தின.காஸாவின் அனைத்துப் பகுதிகளும் குறிவைத்து தாக்கப்பட்டன. மாநகரங்கள், பெருநகரங்கள், குக்கிராமங்கள் என எதனையும் விட்டுவைக்கவில்லை.

காஸா, ரஃபா, கான்யூனிஸ், நுசிரியாத் மஹாஜி, பைத்லஹியா, ஜபலிய்யா, பைத் ஹானூன், அல்ஷாதி, ரஃபா பகுதியில் உள்ள அகதி முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகள் கூட இந்தக் கொடியவர்களின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. நடைபெற்ற அக்கிரமம் உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.

பச்சிளம் குழந்தைகள் பள்ளிவிட்டு மதிய உணவுக்காக திரும்பிக் கொண் டிருக்கும் போது இந்தக் கொடுமைகள் நடந்து குழந்தைகள் குதறப்பட்டி ருக்கிறார்கள். பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருப் பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித் திருக்கிறது. காஸாவில் உள்ள 20 சதுர கிலோ மீட்டர் பகுதியை ராணுவ பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியாக இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச் சர் எஹுத் பராக் அறிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் வான்தாக்குதலில் காஸாவின் உள்துறை அமைச்சக அலுவலகம் மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இரண்டும் தாக்கப் பட்டிருப்பதாக கடைசிக்கட்ட தகவலை பி.பி.சி. தெரிவிக்கிறது. இஸ்ரேலின் இந்த ஈனத்தனமான செயலை எதிர்த்து மூன்றாவது புரட்சிக்கு தயாராகுவோம் என ஹமாஸ் இயக்கத் தலைவர் காலித் மிஷால் தெரிவித்திருக்கிறார். இந்த நிமிடம் வரை அப்பாவி பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைகள், அழித்தொழிப்பு வேலைகள் தொடர்கின்றன.

ஹனியாவின் கதி?

சர்வதேச போர் விதிமுறைகளை மீறி அப்பாவிகளைக் கொல்வது மட்டுமின்றி மக்கள் தலைவர்களையும் கொலை செய்ய முயன்று வருவதை உலகமே கண்டிக்கிறது. பல்கலைக் கழகங்களின் மீது தாக்குதல் நடத்திய தோடு காஸாவின் காவல்துறை தலைவர் தௌஃபிக் ஜாஃபரையும் படுகொலை செய்த இஸ்ரேல் இன வெறி படை பாலஸ்தீன மக்களின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை கொலை செய்யவும் கெட்ட எண்ணத் தோடு முயற்சி செய்தது. ஹனியா அலுவலகம் மீது இஸ்ரேலிய வான் படை வெறித்தனமாக குண்டுகளை வீசியது. ஹனியா அப்போது அங்கு இல்லாததால் அவர் உயிர் பிழைத்தார். யாசர் அராஃபத் அலுவலகத்தின் மீதும் இதுபோன்ற தாக்குதலை தான் இன வெறி இஸ்ரேலிய அரசு தொடுத்தது. மின்சாரத்தைத் துண்டித்தது. மெழுகுவர்த்தி ஒளியில் அந்தப் பெருந்தகை தனது அன்றாடப் பணி களை செய்ய வேண்டியதாயிற்று. இஸ்ரேலின் ஈனச் செயல்களுக்கு முடிவு எப்போது?

எதற்கும் தயார்! ஹிஸ்புல்லாக்கள அறிவிப்பு!!

“லெபனானுடனான போரில் ஹிஸ்புல்லாக்களால் முறியடிக்கப்பட்ட இஸ்ரேல் தற்போது பாலஸ்தீன மக்களின் மீது காஸா பகுதியில் அரச வன் முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாலஸ்தீனர்களுடனான கடும் தாக்கு தலை முறியடிக்க அரபு நாடுகளின் ஒற்றுமை அவசியம். பாலஸ்தீன தெருக்களில் கண்டன கோஷங்கள் எழுப்புவதை விட அந்நாடுகளின் அரசுகள் இஸ்ரேலை வன்மையாகக் கண்டித்து தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினால் அதன் விளைவுகள் வேறு விதமாக இருக்கும். இன்று எகிப்தின் தெருக்களில் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் வந்து ஆர்ப்பாட்டம் செய்யும் தகவல்கள் வெளிவந்திருக் கின்றன. அவர்கள் அவ்வாறு ஆர்ப் பாட்டம் செய்வதை விட காஸா எல்லை களைத் தகர்த்துவிட்டு பாலஸ்தீனத்திற் குள்ளே நுழையுங்கள். ஆயிரக்கணக் கானோரை, பல்லாயிரக்கணக்கா னோரை, பல லட்சக்கணக்கானோரை ஒரே அடியாகக் கொல்ல அவர்களுக்கு துணிவிருக்கிறதா பார்ப்போம். உங்கள் நாட்டின் எல்லைகளை உங்கள் இதயங்களால் முட்டி மோதி உடையுங் கள் எகிப்திய சகோதரர்களே!’’ என ஹிஸ்புல்லாக்களின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லாஹ் அறைகூவல் விடுத்தி ருக்கிறார்.

லெபனானின் பகுதிகளை யூத விரோதிகள் தாக்குதல் நடத்தினால், மரண அடி நிச்சயம் என்ற ஹிஸ்புல் லாஹ் தலைவர், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் அரசுகளை இஸ் ரேலை எதிர்த்துப் போராட நிர்பந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அபூசாலிஹ்
tmmk.in

Monday, December 29, 2008

முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

‘ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். - புஹாரி : அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி).

Sunday, December 28, 2008

தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எந்த ஒரு அரசு நிறுவனம், அரசு உதவி பெறும் நிறுவனம், தன்னாட்சி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு பொது அலுவலகத்திலும் குடிமகன்கள் எந்தத் தகவலையும் கேட்டு அறியலாம். பொது மக்கள் எவ்வாறு தகவல் பெறலாம், அதற்கு உரிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கும் செய்திக் கட்டுரை இது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் 11.05.2005ல் நிறைவேற்றப்பட்டது. ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் தேவையில்லை. எந்த ஒரு பொது அலுவலகத்திலும் கேட்கலாம். அரசு நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த சட்டத்தின் பிரிவு 8ல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மட்டும் மறுக்கப்படலாம்.

உதாரணத்திற்கு நாட்டின் இறையாண்மை, வெளிநாட்டு உறவைப் பாதிப்பவை போன்றவை. இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அலுவலகம் முதல், மத்திய, மாநில அரசு அலுவலகங்ளில் ஒரு பொது தகவல் அதிகாரி உள்ளார். தகவல் பெற விரும்புவோர் அவருக்கு முகவரியிட்டு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மனு கொடுக்க வேண்டும்.

அரசு நிர்வாகத்தின் எந்த வகையான புள்ளி விவரங்களையும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது போன்ற விவரங்களை கேட்கலாம். இதற்காக தனியாக ஏதும் படிவம் இல்லை. ஒரு வெள்ளை தாளில் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை தெளிவாக தெரிவித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கீழ்கண்ட தகவல் வேண்டுகிறேன் என தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஒரு மனுவில் எத்தனை கேள்விள் வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஒவ்வொரு மனுவுடன் ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணத்தை நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியோ, வங்கி வரைவோலையை இணைத்தோ, அஞ்சல் ஆணையை இணைத்தோ, அரசு கருவூலத்தில் சலான் மூலமாகவோ செலுத்தலாம். எந்த காரணம் கொண்டும் தபாலிலோ அல்லது மணியாடர் மூலமாகவோ கட்டண தொகையை அனுப்பக்கூடாது. சரியான அலுவலகத்தில் மனுவை அளிக்க வேண்டும். இவ்வாறு தகவல் கேட்கும் உங்களுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும்.

தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்க தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. தவறான அலுவலகத்திற்கு மனு அளிக்கப்பட்டால் அவ்வலுவலக தகவல் அதிகாரியே சரியான அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு 5 நாட்கள் கால தாமதம் ஆகும். தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:

தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375, முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை, அண்ணாசாலை , சென்னை- 18.
தொலைபேசி எண் 044-24357580

மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:

மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன் 2 வது தளம்,
பி-பிரிவு. நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056
தொலைபேசி எண்கள் 011-26717353, 26761137

முஸ்லீம் என்றாலே தீவிரவாதியா? டைரக்டர் அமீர் பேட்டி!

`யோகி' திரைப் படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறார் அமீர். ஈழத் தமிழர் பிரச்னையில் ஆவேசமாய் பேசி, சிறை சென்று வந்ததால் சற்று தாமதமாகிறது படம்.

ஈழத்தமிழர் பிரச்னை குறித்தும் மும்பைத் தாக்குதல்கள் பற்றியும் பேசுகிறார், மீண்டும்.

`யோகி' எந்தளவிற்கு வந்திருக்கிறார்?

"இன்னும் பதினைந்து நாட்கள் ஷூட்டிங் மீதமிருக்கிறது.இதுவரை எடுத்ததைப் போட்டுப் பார்த்தால் என்னைத் தவிர மற்ற எல்லோரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். அமீர் ஏன் நடிக்க வந்தான் என்ற கேள்வி எல்லோருக்குமே இருக்கிறது. ஒரு கதைக்குப் பொருத்தமாக இருப்பதால் தான் நடிக்கிறான் அல்லது அந்த கதாபாத்திரத்திற்காக ரொம்ப மெனக்கெட்டு இருக்கிறார் என்ற உண்மையான காரணம் இருக்கவேண்டும். இது கூட இல்லையென்றால் வேற என்ன?''

ஈழத்தமிழர் பிரச்னையில் குரல் கொடுத்து சிறை சென்றீர்-களே. அங்கு உங்களுக்குக் கிடைத்த சிறை அனுபவங்கள் எந்த உணர்வைக் கொடுத்தி-ருக்கிறது?

"திட்டமிட்டுத் திருடியவன், ப்ளான் பண்ணி சாதுர்யமாக கொலை செய்தவன், மிகவும் பெர்ஃபெக்ட்டாக என்னென்ன வழிகளில் சமூகத்தை ஏமாற்றலாம் எனத் தெரிந்த, படித்த கிரிமினல்கள் பலர் வெளியேதான் இருக்கிறார்-கள். அதே மாதிரி அங்கே உள்ளே இருப்பவர்-களில் பலர் கோபத்தில் கொலை செய்தவர்கள், அவசரப் பட்டுத் திருடியவர்கள், ஆத்திரத்தில் தப்பு செய்து வந்தவர்கள், கிராமங்களில் சின்னச் சின்ன பிரச்னைகளுக்காக ஏதாவது தப்பு செய்துவிட்டு உள்ளே வந்தவர்கள் அதிகம். `ஒரு நிமிஷம் கோபப்-பட்டேன். இப்ப யோசிச்சுப் பார்த்தா ஒண்ணுமில்ல. பதினைஞ்சு வருஷம் போச்சு. இளமையைத் தொலைச்-சாச்சு. இனி என்ன பண்ணப் போறோம்னு தெரியல' என்று மெஜாரிட்டியான பேர் சொல்லும்போது பரிதாபமாக இருக்கிறது. சிறையில் உள்ள பலர் மனரீதியாகப் பக்குவமடைந்து இருக்கிறார்கள். இன்னொரு வாய்ப்புக் கொடுத்தால் திருந்தி வாழ்வோம் என்பதுதான் அவர்கள் சொல்வது. இன்னும் நிறைய சங்கதிகள் சிறையில் இருக்கிறது. அவற்றையெல்-லாம் படமெடுக்க ஆசை இருக்கிறது.''

மிக விரைவில் தமிழர்களின் மன தைப் பிரதிபலிக்கும் விதத்-தில் ஈழப் படம் ஒன்றை இயக்க-விருப்பதாக வரும் செய்திகளில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது?

"ஈழம் சார்ந்த கதை ஒன்று மட்டும்தான் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால், இல்லை, நிறைய கதைகள் என்னிடம் உள்ளன என்பதுதான் என் பதில். இன்று தீவிர வாதம் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. முஸ்லிம் களில் தீவிரவாதி இருக்கிறான் என்பது போய், முஸ்லிம்களே தீவிரவாதிகள் என்ற மனநிலை உருவாகி விட்டது. இன்னும் ஐம்பது வருடங்களில் அடுத்த தலைமுறைக்கு மொக-லாயர்கள் எப்படிப் படையெடுத்தார் கள் என்று சொன்-னோமோ அதே போல் தீவிரவாதி-களான முஸ்லிம்கள் நம்மை அழிக்க முற் பட்டார்கள் என்று பாடமாகி விடும் நிலை இருக்கிறது. இதை உடைக்க ஆசை. இதேபோல் உண்மையான ஈழப் பிரச்-னையையும், உண்மையான காஷ்மீர் பிரச்னை யையும் பட-மெடுக்க ஆசை. இதைப் படமாக்க ஈழத்திலும், காஷ்மீரிலும் அனுமதி அளித்தால் சம்பளம் இல்லாமலே எடுக்கத் தயார்.''

ஈழத்தமிழர்களின் படுகொலை-களுக்கு எதிராக குரல் கொடுத்-தீர்கள். அதற்காக சிறை சென்றீர்-கள். ஆனால் சிறையிலிருந்து வந்தபிறகு அந்தப் பிரச்னை குறித்துப் பேசவில்லை. என்ன காரணம்?

"பேசக்கூடாது என்பதெல்லாம் இல்லை. ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் எந்த மனிதனுக்-கு அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கிற உரிமை எல்லா மனிதர்களுக்கும் உண்டு. அந்த நியாயங்களைத் தட்டிக் கேட்பது மனிதனின் சமூகப் பொறுப்பு. அதுவும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகம். நான் பொது வாழ்க்கையில் இருப்பவன். ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள், நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன. ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை? இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை? அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியா-னார்கள்? இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு இந்திய-னுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லை-யென்றால் வாழ்வது எதற்கு? மருந்து குடித்துவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடலாம்.''.

- இரா. ரவிஷங்கர்

kumudam

Saturday, December 27, 2008

நல்லவனின் முடிவும் தீயவனின் முடிவும் ஒன்று தானா?

மரணத்துக்குப் பின்பு வரும் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உலகில் மூன்று கோட்பாடுகள் நிலவுகின்றன.

1. மரணத்துக்குப் பின்பு வாழ்க்கை என்று ஒன்று கிடையாது. மரணத்தோடு எல்லாம் முடிந்து விடுகிறது என்பது ஒரு கோட்பாடு.

2. மனிதன் செய்கின்ற நன்மைகள், பாவங்களைப் பொறுத்து - மீண்டும் மீண்டும் அவன் பிறவி எடுக்கின்றான் என்பது மற்றொரு கோட்பாடு.

3. "உலக முடிவு நாள்" அன்று - மரணித்து விட்ட எல்லார்க்கும் உயிர் கொடுத்து எழுப்பப் பட்டு, விசாரிக்கப் பட்டு - சுவர்க்கத்தையோ, நரகத்தையோ அடைந்து அங்கே நிரந்தரமாக மனிதன் தங்கி விடுகிறான் என்பது இன்னும் ஒரு கோட்பாடு.

இறைவனை மறுக்கும் பிரிவினர் - மரணத்துக்குப் பின் வரும் வாழ்க்கையையும் மறுக்கின்றார்கள். அப்படி ஒரு வாழ்க்கை கிடையாது, இருக்கவும் முடியாது என்பது அவர்கள் வாதம். மரணத்துக்குப் பின் வாழ்வு உண்டு என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்றும். யாராவது போய் பார்த்து விட்டு வந்தார்களா என்றும் கேள்விகள் எழுப்புகிறார்கள் அவர்கள்.



"மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விடுகிறது என்பதற்கு .என்ன ஆதாரம் என்றும், யார் போய் பார்த்து விட்டு வந்து இவர்களுக்குச் சொன்னார்கள்" என்றும் - நாமும் திருப்பிக் கேட்கலாம்.

மேலும் இவர்களோடு விவாதத்தைத் தொடரும் முன்பு ஒரு விஷயம்.

"மரணத்துக்குப் பின்பு வாழ்க்கை இல்லை, மரணத்தோடு எல்லாமே க்லோஸ் (close) - என்ற நம்பிக்கை என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்கே பார்ப்போம்.
இந்தக் கொள்கை ஏற்படுத்திய மிக முக்கியமான விளைவு - விரக்திக்கு இட்டுச் செல்லும் உலக வாழ்க்கையை நவீன மனிதர்களுக்கு வழங்கியது தான்!

நிரந்தரமான ஒரு வாழ்வைத் தான் - மனிதன் விரும்புகிறான். "மரணத்தோடு நாம் அழிந்து விடுகிறோம்" என்ற ஒலி நாராச ஒலியாகவே மனிதனுக்குப் படுகிறது.

மனோ தத்துவ மருத்துவர் ஒருவர் கூறுகிறார்:

"என்னிடம் வரும் நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் படித்தவர்கள், பட்டதாரிகள், வாழ்வில் பல வெற்றிகளை அள்ளிக் குவித்தவர்கள். அவர்கள் ஏன் மனோ வியாதிக்கு ஆளானார்கள்? திடீரென்று வருகின்ற மரணத்தோடு எல்லாமே முடிந்து போய் விடுகின்ற இந்த வாழ்க்கையில் எதைச் சாதித்து என்ன பயன் என்ற விரக்தி மனப்பான்மை அவர்களை திருப்தியற்ற வாழ்க்கைக்கு இட்டுச் சென்றுள்ளது."

இவ்வுலக வாழ்க்கை என்பது என்ன?

- தொடர்ந்து வருகின்ற துயரங்கள், சோகங்கள், கவலைகள்,

- முடிவே இல்லாத அநியாயங்கள், அக்கிரமங்கள், ஏமாற்று வேலைகள், மோசடிகள்,

- நீக்கிட முடியாத பசி, பட்டினி, நோய், வறுமை

- இவைகளைக் கொண்டது தான் மனித வாழ்வா? மனிதனுக்கு நிரந்தர அமைதியையோ, மகிழ்ச்சியையோ, தராத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா - என்ற சிந்தனை, உயிர்த் துடிப்புள்ள ஒரு மனிதனை செயலற்றவனாக ஆக்கி விடுகிறது. ஒரு கொள்கை வெற்றிடத்தை அவனுக்கு வழங்கி விடுகிறது!

அடுத்து - மனிதன் தனது செயலுக்கேற்ப பிறவி எடுக்கின்றான் என்ற கோட்பாடும் மனிதனுக்குத் தெளிவான சிந்தனையைத் தருவதில்லை! ஏனெனில் நமது பயணம் எங்கே துவங்கியது, எங்கே நாம் நிற்கிறோம், நாம் எங்கே செல்ல இருக்கிறோம் என்பது குறித்த தெளிவை இக்கொள்கை தந்து விட இயலாது.

தமிழில் வெளியாகும் ஒரு வார இதழில் படித்ததாக நினைவு:

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு மாணவன் ஒரு "ஈ" யைப் பிடித்துக் கொன்று விட்டான்.

ஆசிரியர் சொன்னார்: "இப்போது அந்த ஈயை நீ அடித்துக் கொன்று விட்டாய். அடுத்த பிறவியில் அந்த ஈ, மனிதனாக வரும். நீ ஒரு ஈயாகப் பிறவி எடுப்பாய். அப்போது அது உன்னைக் கொன்று விடும்."

மாணவன் எழுந்து சொன்னான்: "இல்லை சார்! சென்ற பிறவியில் நான் ஈயாக இருந்தேன். இந்த ஈ மனிதனாக இருந்தது. அப்போது அது என்னைக் கொன்று விட்டது. இப்போது அதனை நான் கொன்று விட்டேன். இத்துடன் பிரச்னை தீர்ந்து விட்டது!"

இப்போது சொல்லுங்கள்: மறு பிறவிக் கொள்கை மனிதனுக்குத் தெளிவைத் தருமா?

நல்லவனாகவோ, தீயவனாகவோ வாழ்ந்து விட்டு ஒவ்வொரு மனிதனும் மரணமடைகின்றான். மரணம் தான் ஒரு மனிதனின் முடிவு என்றால் - நல்லவனின் முடிவும் தீயவனின் முடிவும் ஒன்று தானா?

மக்கள் மீது அக்கிரமம் புரிந்தவனும், அக்கிரமத்துக்கு ஆளானவனும் மரணமடைகின்றார்கள்!

ஒடுக்குபவனும் ஒடுக்கப்பட்டவனும் மரணமடைகின்றார்கள்!

மக்களின் செல்வத்தைச் சுரண்டி ஆடம்பர வாழ்வை அனுபவித்தவனும், சுரண்டப்பட்ட ஏழையும் மரணமடைகின்றார்கள்!

அப்பாவிப் பெண் சிசுக்களும், அவர்களை உயிரோடு புதைத்தவர்களும் மரணமடைகின்றார்கள்!

பாவம் செய்தவனும், பாவங்களை ஏறெடுத்தும் பார்க்காதவனும் மரணத்தைச் சுவைக்கிறார்கள்!

தீயவன் தண்டனை அனுபவிப்பதில்லை!

நல்லவன் துன்பங்கள் நீங்கி வாழ்வதும் இல்லை!

இது உங்களுக்கு நியாயமாகப் படுகின்றதா?

மரணத்தோடு எல்லாம் முடிந்து போய் விடும் என்றால் "நான் ஏன் நல்லவனாக வாழ்ந்திட வேண்டும் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

அரசு தண்டிக்கும் - சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்பார்கள். சட்டங்கள் எல்லாக் குற்றவாளிகளையும் தண்டித்து விட்டதா? அரசே குற்றம் செய்தால் அவர்களைத் தண்டிப்பது எப்படி? அரசுக்குத் தெரியாமல் நடக்கின்ற குற்றங்களுக்கு எப்படி தண்டனை தர முடியும்?

சரி! இறைவனை நம்பி, நல்லவனாக வாழ்ந்து, ஒழுக்கங்களைப் பேணி, தீமைகளை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவனுக்கு என்ன பரிசை இந்த உலகம் தந்து விட முடியும்? (பார்க்க: அல் குர் ஆன் 45: 21-22)

நீதி வழங்கப் பட வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்விலும் ஆழமாகப் பதிந்துள்ள வேட்கை! அதனால் தான் அநீதிக்கெதிரான போராட்டங்களை நாம் மனித வாழ்வில் சந்திக்கின்றோம். ஆனால் அந்தப் போராட்டங்கள் எல்லாம் வெற்றியைச் சந்தித்ததா என்றால் அது தான் இல்லை!அது இந்த உலகத்தில் சாத்தியப் பட்டதே இல்லை!

எனவே தான், நீதிபதிக்கெல்லாம் மேலான நீதிபதியாகிய இறைவன் - மனிதர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி நீதியை நிலை நிறுத்துகிறான்!

"உங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவேன்" என்று இறைவன் சொல்லும்போது மனிதன் கேட்கிறான்:

"இது வியப்புக்குரிய விஷயம் தான்! நாங்கள் மரணமடைந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலுமா மீண்டும் எழுப்பப் படுவோம்?" இவ்வாறு எழுப்பப் படுவது என்பது அறிவுக்குப் புறம்பான விஷயமாகும்." (50: 3)

மறுமையை மறுக்கும் மனிதன் எடுத்து வைக்கும் இந்த வாதத்துக்கு இறைவன் எப்படி பதில் தருகிறான் பார்ப்போமா?

மனிதன் கேட்கிறான்: "நான் இறந்து விட்டால் உண்மையிலேயே மீண்டும் உயிர் கொடுக்கப் பட்டு எழுப்பப் படுவேனா? முன்பு அவன் எந்த ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த போது, நாம் தான் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?" (19: 66-67)

எழுதப் பட்ட ஏடு சுருட்டப் படுவதைப் போல நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் துவங்கினோமோ அவ்வாறேநாம் மீண்டும் படைப்போம். இது நம்முடைய பொறுப்பில் உள்ள ஒரு வாக்குறுதியாகும்! (21: 104)

பூமி வரண்டு கிடப்பதையும் நீர் காண்கின்றீர். அதில் நாம் மழையைப் பொழிந்தவுடன் அது சட்டென்று உயிர் பெறுவதையும் தழைத்தோங்குவதையும் நீர் காண்கின்றீர். இது அல்லாஹ்வின் சான்றுகளீல் ஒன்றாகும். திண்ணமாக இறந்து விட்ட இப்பூமிக்கு எந்த இறைவன் உயிர் ஊட்டுகின்றானோ, அந்த இறைவன் இறந்தவர்களுக்கும் உயிரூட்டக் கூடியவன் ஆவான். (41: 39)

இந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனும், அவற்றைப் படைப்பதனால் சோர்வு அடையாதவனுமாகிய அல்லாஹ், இறந்தவர்களை உயிர்ப்பித்து எழுப்புவதற்கு ஆற்றல் உடையவனே என்பது இவர்களுக்குப் புலப்படவில்லையா? (46:33)

அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்று திரட்ட முடியாது என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றானா? ஏன் முடியாது? நாமோ அவனுடைய விரல்களின் நுனியைக் கூட மிகத் துள்ளியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம். (75:3-4)



ஆம்! மறுமை ஒரு சத்தியம் மட்டுமல்ல! சாத்தியமும் கூட!

courtesy:s.a.mansoor ali

Friday, December 26, 2008

U.S. Muslims to Release Open Letter to Obama

Islamic groups to outline suggested policy priorities for new administration

(WASHINGTON, D.C., 12/26/2008) - On Monday, December 29, the American Muslim Taskforce on Civil Rights and Elections (AMT), a coalition of 11 major Islamic organizations, will hold a news conference at the National Press Club in Washington, D.C., to release an open letter to President-elect Obama outlining suggested domestic and foreign policy priorities for the new administration.

WHAT: U.S. Muslims to Offer Suggested Policy Priorities for Obama Administration
WHEN: Monday, December 29, 10 a.m.
WHERE: National Press Club, Murrow Room, 13th Floor, National Press Club Building, 529 14th Street N.W., Washington, D.C.
CONTACT: Muhammad Salim Akhtar, 773-507-5335, E-Mail: bestusa80@hotmail.com

The mission of the American Muslim Taskforce on Civil Rights and Elections is to ensure that American Muslims become full partners in the development and prosperity of the United States, to defend the civil and human rights of all and to build alliances with like-minded fellow citizens on a wide variety of social, political, economic, and moral issues.

AMT is an umbrella organization that includes: American Muslim Alliance (AMA), American Muslims for Palestine (AMP), Council on American-Islamic Relations (CAIR), Islamic Circle of North America (ICNA), Muslim Alliance in North America (MANA), Muslim American Society-Freedom Foundation (MAS-FF), Muslim Student Association-National (MSA-N), Muslim Ummah of North America (MUNA), and United Muslims of America (UMA). Its observer organizations include: Islamic Society of North America (ISNA), Muslim Public Affairs Council (MPAC), and Islamic Educational Center of Orange County (IEC).

Thursday, December 25, 2008

இப்படியெல்லாம் திருட்டுத்தனம்!!!

உலகத்துல இப்படியெல்லாம் திருட்டுத்தனம் செய்வாங்களான்னு வியந்த விஷயங்களில் இதுவும் ஒண்ணு. நமக்கெல்லாம் copy & paste (ctrl+C & Ctrl+v) ஒரு சாதாரண விஷயம். ஆனா அதையே சில தில்லாலங்கடி கோஷ்டிங்க திருட்டுத்தனம் செய்ய உபயோகப்படுத்துறாங்க.

ஒரு சின்ன java scriptஜ வெச்சி நீங்க clipboardல காபி செய்து வைத்துள்ள மொத்த மேட்டரையும் லவட்டிட முடியுமாம். ஒரு சின்ன உதாரணம்.. நீங்க ஏதாவது ஒரு textஜ காபி செய்துவிட்டு இந்த வலை தளத்துக்கு செல்லுங்க. அதுல நீங்க ctrl+c உபயோகித்து எதை copy செய்து வெச்சி இருந்தீங்களோ அதை அப்படியே காட்டுவாங்க.

இந்த டெக்னீக்கை உபயோகித்து பல தில்லாலங்கடிங்க உங்க credit card எண்கள் முதல்கொண்டு பல மேட்டரை திருடி வருகிறார்களாம். உஷாரய்யா உஷாரு.

இந்த மேட்டரை செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள நாலு வரி போதுமாம்.


இதுல ஒரு நிம்மதியான விஷயம் என்னான்னா இது IEல மட்டும் தான் வேலை செய்யுமாம் firefox, Google chrome முதலியவைகளில் இது வேலை செய்யாது.என்னிடம் safari மற்றும் இன்ன பிற உலாவிகள் கிடையாது யாராவது இது அங்கே வேலை செய்கிறதா என்று சரி பார்த்து சொன்னால் நன்றாக இருக்கும். IEல இது வேலை செய்யாமல் இருக்க கீழே கொடுக்கப்படுள்ள மாதிரி செய்யவும்

1. Internet options -> security க்கு செல்லவும்
2. custom levelல தேர்வு செய்யவும்.
3. security setting தேர்வு செய்து “allow paste operations via script” ஜ disable செய்யவும்.

நீங்க நல்ல வலைத்தளம் அப்படின்னு நம்புறம் தளங்களில் ஒன்று ஏதாவது இந்த மாதிரி இந்த பித்தலாட்டத்தை செய்யுதான்னு பாக்க “disable”ஜ தேர்வு செய்வதற்கு பதில் “prompt”ஜ தேர்வு செய்தால், அந்த வலைதளம் இந்த மாதிரி செய்யும் முன் IE உங்களிடம் அனுமதி கேட்கும் அப்ப நீங்க உஷாராகிவிடலாம்.

by அபூ ஜுலைகா
-------------------------------------------------------

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?

எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.
தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள். யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை? எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?
பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?

அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.
செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா. ஆம் நம்புங்கள்; அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள். ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன்என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது
அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன். உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.

இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள். இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது.
புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.
கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.

'தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்'-

ரோகஸ் நாக்பால், ப்ரசிடண்ட் ஆப் ஆசியன் ஸ்கூல் ஆப் சைபர் லா

'தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.'-

விஜய் முகி – கணிணித்துறை வல்லுனர்

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள். ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள். இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

by மக்பூல்

Wednesday, December 24, 2008

நம்பர் 13??????

சலீம் நானாவுக்கு திடீரென ஒரு சந்தேகம்,"13 ஆம் தேதி கெட்ட நாளா? மக்களிடையே எப்படியெல்லாம் மூடநம்பிக்கை நிலவுகிறது.இது சம்பந்தமா பஷீர் காக்காவிடம் கேட்டு விட வேண்டியதுதான்",கங்கணம் கட்டிக்கொண்டார்.

"என்ன சலீமு,என்னவோ பலத்த யோசனையில இருக்காபுல தெரியுது?கேட்டுக்கொண்டே வந்த பஷீர் காக்காவை,ஆமோதிப்பதுபோல பார்த்துவிட்டு சொன்னார் சலீம் நானா,"ஆமா,காக்கா,ஒரு சந்தேகம்,13ம் நம்பர் பத்தி நிறைய மூட நம்பிக்கை உலாவுது,அது சம்பந்தமா உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சு கிடலாமேன்னுதான்".

"அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் 13 ஆம் எண்ணை துரதிர்ஷ்டமாக கருதுகின்றனர். இதனால் 13 ஆம் தேதியன்று எந்த நல்ல காரியத்தையும் அவர்கள் தொடங்குவதில்லை.ஓட்டல்களில் 13 ஆம் எண் உள்ள அறைகள் இல்லை. விமானங் களில் 13 ஆம் எண் இருக்கை இருப்பதில்லை. மருத்துவ மனைகளில் 13 ஆம் எண் படுக்கை கிடையாது. மிக உயரமான கட்டடங்களைக் கட்டுபவர்கள் 13 ஆம் தளத்திற்கு எண் தருவதில்லை. 12-க்குப் பிறகு 14 என்றே எண் தந்துவிடுகிறார்கள். ஏனென் றால், 13 ஆம் எண் மீது பயம்."

"டில்லியில் ஓர் உச்சநீதிமன்ற நீதிபதி உடல் நிலை சரியில் லாமல் மருத்துவமனையின் சிறப்பு அறையில் அனுமதிக்கப் பட்டபோது, அதன் எண் 13 என்பதைப் பார்த்துவிட்டு, தான் வர முடியாது என்று கூறிவிட்டார். வேறு அறையில் தான் அவரைச் சேர்த்தார்கள்."

"ஆனால், இங்கிலாந்திலும், ஜப்பானிலும் இது அதிர்ஷ்ட எண் என்கிறார்கள். பிரிட்டனின் அரச குடும்பத்தவரான லார்டு மவுன்ட் பேட் டன் 13 ஆம் எண் அறையில் தான் தங்குவார். நல்ல எண் என்று நம்பியதாலோ? இந்த இரண்டு நாட்டு மக்களைத் தவிர மற்றவர்களுக்கு எப்படிக் கெட்ட நாளாகியது? மூட நம்பிக்கைதான்".

இதல்லாம் கடைஞ்செடுத்த மூடத்தனம்.இஸ்லாத்துல மட்டுந்தான் இதுக்கெல்லாம் இடமில்லை,இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கமாசே!,ஸுப்ஹாநல்லாஹ்".அல்லாஹ்வை புகழ்ந்தார் பஷீர் காக்கா.

**************************************************
اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ 009.031

இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். (அல்குர்அன் 9:31)

அதீ ஆப்னு ஹாதிம் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி அவர்கள் இவ்வசனத்தை ஒதிக் காட்டியபோது "கிறிஸ்துவர்கள் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் வணங்கவில்லையே' என்று நான் கேட்டேன். அதற்கு நபி அவர்கள் "ஆம்! எனினும் அல்லாஹ் விலக்கியதை பாதிரிகள் ஆகுமாக்கி வைக்கும்போது அதை மற்றவர்களும் ஆகுமானதாக எண்ணுகிறார்கள். அல்லாஹ் ஆகுமாக்கியதை அப்பாதிரிகள் விலக்கும்போது அதை மக்கள் விலக்கப்பட்டதாக எற்றுக் கொள்கிறார்கள். எனவே இதுதான் கிறிஸ்துவர்கள் தங்களது பாதிரிகளுக்கும் துறவிகளுக்கும் செய்த (இபாதத்) வணக்கமாகும்.'' என்றும் கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)

Tuesday, December 23, 2008

தொழுது கொள்வோம்,நமக்கு தொழுகை வைக்கப்படு முன்!

சலீம் நானா வியப்போடு சொன்னார்,"பாருங்க பஷீர் காக்கா,இந்த காலத்துல உள்ள சின்ன பசங்க எல்லாம்,முறையா வேலா வேலைக்கு தொழ பள்ளிக்கு வர்றத". கண்கள் மின்ன,சந்தோசம் பொங்கக் கூறினார்.

"ஆமா சலீம்,நீ சொல்றது சரிதான்.இப்போ சின்ன பசங்க கூட மார்க்க விஷயத்துல பேணுதலா இருக்கிறத நெனச்சி ரொம்ம்ப மகிழ்ச்சியாத்தான் இருக்கு.அதே சமயம் சில பெரியவங்க கூட,தொழுக இல்லாம,பொடுபோக்கா இருக்காங்க.சில பேரு பள்ளிவாசல் வந்து நாலு பேரோட ஊர் பலாய் கழுவி பொழுது போக்க வர்றாங்க, பாங்கு சொன்னதும்,போய்டுவாங்க.இதுல பள்ளிவாசல் பாத்ரூம்ல பீடி புகைய விட்டு,வர்ற தொழுகையாளிக்கும் இடைஞ்சல் தருதாங்க.அல்லாஹ்தான் தொழுகையோட மகத்துவம் புரிஞ்சி அவங்க தொழுவ கருணை புரியனும்".உண்மையான அக்கறையோடு கூறினார் பஷீர் காக்கா.
***********************************************
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.அல்குர்ஆன் 23:1,2,9

உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு நூல்:அஹ்மத், அபூதாவூத்

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும் அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ள வில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் இப்னு அம்ருஇப்னுஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத்

(மறுமை நாளில்) சுவர்க்க வாசிகள் சுவர்க்கத்தில் இருந்துக்கொண்டு நரகவாசிகளைப் பார்த்து "உங்களை நரகத்தில் புகுத்தியது எது?" என்று கேட்ப்பார்கள். அதற்கவர்கள் "நாங்கள் தொழாதவர்களாகவே இருந்தோம்."என்று பதில் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:42

சிறந்த அமல்:
அமல்களில் சிறந்தது எது என்று நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பவர்: உம்முஃபர்வா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்

பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புக்கள்:
"(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார்." என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமாரா இப்னு ருவைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம் நஸயீ

கூட்டுத் தொழுகையின் சிறப்பு:
ஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.அறி:இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி

தொழுகையை விட்டவனின் நிலை:
நமக்கும் அவர்களுக்குமிடையே (நிராகரிப்பவர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும்.யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காபிராகிவிட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, அஹ்மது

பாங்கோசை கேட்டு பள்ளிக்கு வராதவனின் நிலை:
என் இளைஞர்களிடம் விறகுகளைச் சேகரிக்குமாறு கூறிவிட்டு தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து தொழுகை ஆரம்பமான பின் தொழுகைக்கு வராதவர்களைத் தீயிட்டுப் பொசுக்க நான் எண்ணுகிறேன் என்று நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி

நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது சாட்சி கூறுவதாக இருக்கிறது. அல்குர்ஆன்17:78

இரண்டு தொழுகைகள் முனாபிக்கீன்கள் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாத்தும் இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபிصلى الله عليه وسلم அவர்கள் நவின்றனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ புகாரி, முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள் "ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கிய பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் 'நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும் உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும்' என உளருகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து எழுந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி, முஸ்லிம், முஅத்தா, நஸயீ, அபூதாவூத்

Saturday, December 20, 2008

அவன் ஒருவனே!

சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் குளிருக்கு இதமாக ஸ்வெட்டர்,தலைக்கு மங்கி கேப் எல்லாம் போட்டுக்கொண்டு,அந்த அதிகாலை நேரத்திலும் வாகிங் போய்க்கொண்டிருந்தனர்.இரண்டு பெரும் ஸுபுஹ் தொழுது முடித்து,குரான் ஓதிவிட்டு-ஹாஜியார் டீகடைக்கு வந்து,ஆளுக்கொரு சாயா குடித்துவிட்டு வாகிங் போவது வழக்கம்.அந்த நடையிலும் ஒன்று அல்லாஹ்வை திக்ரு செய்துகொண்டு செல்வார்கள்,அல்லது ஏதாவது நல்ல விஷயங்கள் குறித்து விவாதித்த வண்ணம் நடை பயில்வார்கள்.

இன்று அவர்கள் இறைவன் குறித்து அலசினார்கள். சலீம் நானா கேட்டார்,"என்ன பஷீர் காக்கா,எல்லாரும் ஆளுக்கொரு விதமா இறைவனைப் பற்றி சொல்கிறார்கள்.ஒருத்தன் ஒவ்வொரு டிபாட்மேன்ட்டுக்கும் கடவுள் உண்டாக்கி, ஆயிரத்துக்கு மேல சொல்றான்,ஒருத்தன் மூனு என்கிறான்.ஒருத்தன் கடவுளே இல்லங்கிறான்,அல்லாஹ்வே,நீதான் காப்பாத்தனும்"அங்கலாய்த்தார்.

பசீர் காக்காவுக்கும்,கோபமாக வந்தது."என்ன செய்ய?தன் தலயிலேயே மண்ணை, அல்ல நெருப்பை அள்ளிக் கொட்டிக்கொள்கின்றனர். சாதாரணமா ஒரு ஆபீஸ் நிர்வாகத்துலையே ஒரு மானேஜர் இருப்பார்,அவர்க்கு கீழ உதவி மானேஜர் இருப்பாங்க. அவர் சொல்றத,இவர் கேட்பார்.அதே சமயம்,ஒரு ஆபீசுக்கு ஒரே தகுதி,ஒரே முடிவெடுக்கும் அதிகார வரம்பு கொண்ட இருவரயோ, அல்லது மூவரயோ மானேஜரா நியமனம் பண்ணுனா என்ன ஆகும்.அவரவருக்கு உள்ள ஈகோ மற்றும் தன் முடிவுதான் ஏற்கப்படனும் என்கிற ஆசை,வெறி எல்லாம் சேர்ந்து அந்த அலுவலகமே இயங்க முடியாம பண்ணிடும்.ஆப்டர்ஆல்,கேவலம் ஒரு சாதாரண ஒரு ஆபீசுக்கே இந்த கதின்னா,இந்த அண்ட சராசரங்களை படச்சி, பாதுகாத்து,ஒவ்வொரு காரியமும் நடந்தேரனுமுன்னா ஒன்னுக்கு மேல கடவுள் இருந்தால் சாத்தியப்படுமா ? இன்னும் நிறைய காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.ஆக ஒரு இறைவன் தான் சாத்தியம்."என்று முடித்தார்.பஷீர் காக்கா.
**********************************************************

(நபியே)நீர் கூறுவீராக!அவன்-அல்லாஹ் ஒருவனே.
அல்லாஹ் (யாவற்றை விட்டும்)தேவையற்றவன்.(யாவும் அவன் அருளையே எதிபார்த்திருக்கின்றன)
அவன் (எவரையும்)பெறவில்லை.(எவராலும்)அவன் பெறப்படவுமில்லை.
மேலும்,அவனுக்கு நிகராக எவருமில்லை.

திருக்குர்ஆன் 112:1 to 4

Friday, December 19, 2008

ஏழு வயதினிலே!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களது மக்களுக்கு ஏழு வயதாகும் போது அவர்களுக்குத் தொழுகையைக் கற்றுக் கொடுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை விட்டால் அவர்களை அடியுங்கள். அவர்களுடைய படுக்கைகளைப் பிரித்து விடுங்கள். (ஸுனன் அபூ தாவூத்)

"Teach your children to pray when they are seven years old, and smack them if they do not do so when they are ten, and separate them in their beds." (Narrated by Abu Dawood)

ஏன் ஏழு வயது? நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குப் பழக்கி விட (habit formation) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேர்வு செய்த வயது ஏழு! ஏனெனில் குழந்தைகளுக்குத் தொழுகையை கற்றுக் கொடுப்பதில் என்னென்ன அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள். நேரத்தைத் திட்டமிடல், கட்டுப்பாடு, முறையான தூக்கம், குறிப்பிட்ட நேரத்தில் எழுதல், கழிவறை சென்று வருதல், பல் துலக்குதல், உடல் சுத்தம், உடை சுத்தம், இடம் சுத்தம், உளு செய்தல், தொழுகையின் சட்டங்களைக் கற்றல், மனனம் செய்தல், போன்ற இன்ன பிற நல்ல விஷயங்களையும் குழந்தைகள் தொழுகையுடன் சேர்ந்தே கற்றுக் கொள்வார்கள்.
இதில் பெற்றோர் கவனித்திட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

எல்லாப் பழக்கங்களையும் உடனேயே குழந்தைகள் கற்றுக் கொண்டு விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அவசரப் படுவதுz குழந்தைகளைத் திட்டுவது, அதட்டுவது, அடிப்பேன் உதைப்பேன் என்று மிரட்டுவது எல்லாம் கூடாது. ஏன்? நபியவர்களே 3 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளார்கள் என்பதைக் கவனிக்க!
குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதெல்லாம் சரிதான். ஆனால் அது எது வரை? ஏழு வயது வரை மட்டுமே! பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக செல்லம் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பழக்கங்களை அவர்களுக்குள் உருவாக்கிட வேண்டும். எது வரை? பத்து வயது வரை!

குழந்தைகள் பத்து வயதை அடைந்து விட்டால், செல்லம் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும.; ~அடியுங்கள்;~ என்கிறார்கள் நபியவர்கள். எனவே நமது குழந்தைகளை - சின்னப் பிள்ளைகள்தானே, பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுதல் ஆபத்து. ஏனெனில் பத்தில் வளையாதது பதினைந்தில் வளையாது. பிறகு இருபதில், இருபத்தைந்தில் எப்படி வளையும்?
இந்த ஏழு வயது இருக்கிறதே அது எப்படிப் பட்டது தெரியுமா? பெரியவர்கள் செய்வதை அப்படியே காப்பி (imitate) அடிக்கும் வயது. அப்படியென்றால் என்ன செய்திட வேண்டும். குழந்தைகளைத் தொழு தொழு என்றால் போதாது. வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் தொழக்கூடியவர்களாக விளங்கிட வேண்டும்.

குழந்தைகள் சில நேரங்களில் அடம் பிடிக்கும். தூங்குவது போல் நடிக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் குறிப்பாக தாய்மார்கள் என்ன செய்திட வேண்டும் தெரியுமா? குழந்தைகளுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டு அன்பாக, ஆதரவாக, மென்மையாக, அதே நேரத்தில் உறுதியாகப் பேசிட வேண்டும். பெற்றோர் கோபத்தை வெளிப்படுத்தினால் குழந்தைகள் தொழுகையையே வெறுத்து விடலாம். எனவே மென்மையான வழிமுறையினை மட்டுமே தொடர்ந்து பொறுமையுடன் கையாள வேண்டும். குழந்தைகளிடம் தக்க தருணஙகளில் நாம் - அல்லாஹு தஆலாவைப் பற்றி, அவன் நம் மீது வைத்திருக்கின்ற அளவிட முடியாத அன்பு பற்றி, அவன் நமக்கு வழங்கியிருக்கின்ற எண்ணிலடங்கா அருட்கொடைகளைப் பற்றி, அவன் நமக்கு வழங்க இருக்கின்ற நற்கூலி பற்றி, அவன் நமக்காகத் தயார் செய்து வைத்திருக்கும் சுவர்க்கம் பற்றி - இவ்வாறு நேர்மறையாக (positive approach) எடுத்துச் சொல்லி ஆர்வமூட்டிட வேண்டும.
இவ்வாறு சிறு வயதிலேயே பழக்கப் படுத்தப் படுகின்ற குழந்தைகள் தாம் - வாழ்நாள் முழுவதும் விடாமல் தொழுகின்ற தொழுகையாளிகளாக மிளிர்கின்றார்கள். இப்படிப்பட்ட குழந்தைத் தொழுகையாளிகளின் பெற்றோர் தாம் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்!

http://counselormansoor.com/

பைபிளை படித்தார்!இஸ்லாத்தை ஏற்றார்!!

When I was small, going to church was a major event. First, I got to wear a fancy dress with frills and bows and more often than not it was itchy! I tried my best not to fidget in it. At Vacation Bible School there was a craft! And then.. the event of all events, the snack!! Wow, served on a colored paper plate with a napkin. I would look at the pictures of Jesus on the walls and think about him, for I was told that the blonde, blue-eyed Jesus was God. The western Christian idea of God was firmly implanted, along with the snack.

As I grew I tried hard to maintain my religion. When my parents divorced, I went to church alone. When the Pastor said that reading the Bible brought you closer to God, I read it. When he said prayer was the key, I prayed. Even as a kid I ached in my heart for God.

I ended up marrying a man who was to become a Pastor. I continued reading the Bible, and praying, and aching in my heart. I concentrated on rearing my children and keeping the house and yet in my heart I ached for God so much. Something was not right.

I began to think.

That's when the “trouble” began. I got the bright idea that I would read the Bible through and in one shot get all my questions answered. I ended up reading it more than once, and didn't get my questions answered! Why did God favor David so much when he committed adultery, and had Uriah killed? Gee I didn't do that and.. felt God was far away. Jesus was God, I was taught; and yet.. there is a story where this man comes up to Jesus and calls him "good master", and Jesus replies asking “Why callest thou me good? There is none good but One that is God.” Now why would God say that?? I had many other questions besides this. I started asking my questions, and got into trouble. I was told I had no faith, and I was messing in details of no concern. Nothing was making sense!

The true turning point came after revival one night. I was exhausted from over an hour of singing, and at the dinner table my husband was going over the fine points of his sermon. I had questions and asked them and he erupted in an angry tirade. I went outside crying and again felt that ache in my heart that I was so familiar with. I talked to God. I told him I didn't know Him, but I wanted to so very much. I told Him I had done all that I knew to do. I asked Him to reveal Himself to me no matter what it took, or what I had to lose. I had to find God.

Eruptions at home were becoming commonplace. The Pastor's wife must not confide her troubles to anyone in the church! Gossip and much trouble can start that way. To have someone to talk to I began going into Christian chat rooms. One day in that room I met a muslim. Tarek was the first Muslim I had ever met. I had to win him to Jesus! Tarek was a little unnerving because he seemed to sense my discontent. I was trying very hard to lead him to Jesus and show Tarek I had the truth, and he wasn't buying it. That day began a relationship that was a war of words. We wrote for months; I sent him my objections to Islam, and he answered with facts. When Tarek sent articles on the fallacies in the Bible, I would cringe. Many of them I had already studied; but more? Back and forth we went. Things at home and at church were escalating at a dizzying pace. I could no longer sit on the front pew of the church in the honored Pastor's wife position and open my Bible in the same way. Things were now tainted with questions. Answered questions.

At this time in my life I was in a well, so to speak. I couldn't read the Bible with the same zeal anymore; I wasn't sure if my prayers were right; church was a big fiasco as far as I was concerned because I could no longer tell what was the truth and what wasn't. Tarek started telling me to read the Quran and issued me a formal challenge! I thought it over for a couple of days as if I did this I would have to make a major effort and I had to face the possibility of conversion. Part of me was also desperate for God by this time. Church was becoming more and more painful. At this time I was missing song services as I could no longer sing the songs. The words bothered me so, the emotionalism in the people that got us no where. Everything was coming into clarity and it was very, very frightening as I was the only one seeing things this way. When you are on the platform or on the first row of the pew you can't hide spiritual discontent! Many times during the sermon I would hear something I knew to be false and I just couldn't take it I would get up and walk out. What a sight, me leaving and walking down that long center aisle out the door in plain view of the whole church.

I now had to get a copy of the Quran. The library had one, but it was gone. No bookstore around had a copy. That left one place that I knew of , and that was ISNA (Islamic Society of North America)!! I had heard from Christians that there were snipers on the roof who shot at people who trespassed! I went anyway I was so desperate for God and there I met Habibe. She talked to me for a long while and was very sweet. Not only did I get a copy of the Quran but she also gave me prayer books , general books and pamphlets. Tarek had sent me some studies and a beautiful picture of a star nebula that I printed off and before that evening I had read all the pamphlets. I made a mistake though; I left my studies on the couch where my husband found them. He threw them and the picture of the nebula in the fire and yelled that I was bringing Satan into the home. He said if he found my Quran he would roast it either in the oven or in the fire and I hid it. He tore up the house looking for it. I began planning my day so I would come home when he left, and leave when he came home. For the week we might see each other for only 15 minutes or so. My marriage was nearly over. The rest of the time I was studying or in my favorite spot in the forestry where I would cry and talk to God.

One Friday I went to the mosque for prayer. I sat on the side and the first time I heard the Azzan I cried. I felt relaxed there for the first time in months. What was happening to me??

I was reading the Quran every day. Things were coming into sharp focus. The view of God in the Quran is very different from the Biblical God. This God made sense. At this time some of the leadership at church approached me to be president of a chapter of a nationwide women's organization. One of the "outreaches" of this organization is to lead Muslim women out of Islam and into Chrisitianity! I had just met Habibe.. she didn't needed converting! She was more together than any woman I knew at church! I told them tentatively that I was not the one for this job when they told me God had told them (and God had spoken to the statewide people too) that I was the one! Wow ! So now I had God “against” me. I told them I would preside over the first few meetings and the first meeting was packed with many women. I led the song service, and spoke very neutrally. I actually just spent my time on empty verbage as I couldn't talk a Christian message.

Then I read the Quran some more and something clicked. That was it. I quit song service and presiding over the women's group. I attended mosque and quit attending church. One night when I didn't expect my husband to come home, he did. After a violent outburst I asked him to leave the house and surprisingly, he did. Things began unraveling. My family was so upset at what I was doing; my marriage was over; the church couldn't believe what had happened, and news travels fast in a small town. I had to set my face for anything just to go to the store. Still I searched! News began to fly that I had become a Muslim. I hadn't pronounced my Shahadah (testimony of faith) yet!

I told Tarek that all my questions were answered except one: about the diety of Jesus. I remembered Sunday School and being so afraid of not accepting Jesus right because he was the only way to God, you see. Tarek didn't send me a lot at this time actually only two concentrated studies. I printed them and studied. In one study, 1 John 5:7 was said to be an addition to the text, not an original verse. That verse became my Ace.. if that verse was in question, then I had to admit Jesus may not be God. I went to the State Library and did some research. I found that the information was correct, that this verse was indeed in question. I sat in the library for a long time in a daze.

I went home and admitted to God that He was God alone. There was no one beside him. Instead of being struck with lightning I felt peace! People in the town would approach me and say things, but I had a peace I had never had before. The town printed my divorce in the paper. I read a book on Tawheed and made my decision to take my Shahadah. One night I admitted to God that He was One and Only God and Mohammed was the messenger of God. I had no doubts as I had studied through every single one. That night I prayed my first prayer, Fajr. I was broken as circumstances were very difficult for me, as my family was upset and not accepting to say the least. After my prayer with my head on the floor I talked to God about everything and I knew He heard me. I knew it! I can't tell you what that was like for me, it was as if I had been in a thirst so deep my throat was burning fire and then I had a cool drink of healing. It was everything I had ever wanted from God all wrapped up in a few moments of time.

Since then I have had to move, and had to deal with staples in my tires from angry people who are blaming all Muslims for September 11th; I have been yelled at, spit at; my family is still not accepting. This is small compared to the weight of Islam though; As Islam!-what can I say? It's beautiful and all compassing and lovely in every way. God is sensible and understandable; women are respected and honored; men are honored and respectable! Children are protected; Islam offers everything Christianity claims to and more but the difference is, Islam delivers. Islam is not some weak religion because there is nothing more powerful than actually connecting with God and that is what Islam does.

Wednesday, December 17, 2008

மனுஷனோட அடையாளம்

சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்தனர்.அவர்களின் பேச்சை கேட்டு,நல்ல பல விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று சிலரும் குழுமி இருந்தனர்.அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர்,"என்ன மொம்தம்பி,பாத்து நாளாச்சி?என்று தன் பக்கத்தில் அமர்ந்திருந்த முஹம்மத் தம்பியை பார்த்துக்கேட்க,அவரோ"அட ஆம்தம்பியா?நான்கூட உன்னைக் கண்டு நாளாச்சி,எப்படி இருக்கிறே?என குசலம் விசாரித்தார் அஹ்மத் தம்பியை நோக்கி.

இதைப் பார்த்த பஷீர் காக்காவுக்கு மூக்குமேல் கோபம் வந்துவிட்டது."அட கிறுக்கு புடிச்ச பயல்களா,அழகான பெயர முறையா கூப்டாம,அவசரத்துல யான்கடா இப்படி குழப்புறீங்க.அபூபக்கர் என்ற அழகான பெயர,அவ்கருன்னும்,முகைதீன் அப்துல் காதர் - மய்யத்துக்காரு என்றும்,நெய்னா முஹமத் சாஹிப்-நெயனாம்சா என்றும்,பாக்கர் சாஹிப்-வாகர்சா என்றும்,கதீஜாவை கர்சா என்றும்,அஹ்மத் பாத்திமாவை ஆமாத்து என்றும்,முஹம்மத் பாத்திமா என்பதை மொம்மாத்து என்றும் இப்படி போட்டு மாத்தி போடுறது நல்லாவா இருக்கு?"என்று கடுப்போடு கேட்டார்.

"ஒரு மனுஷனோட அடையாளம் ,அவனோட பேருதான்.அதே மாதிரி குடும்ப பேரையும் தன்னோட இஷ்டத்துக்கு வச்சி கூப்புடுறாங்க.சமையல் பாத்திரங்கள் பேர்ல குடும்ப பேரு,நிறத்தை வச்சி குடும்ப பேரு,தொந்தியை வச்சி,உயரத்தை வச்சி,நிறத்த வச்சி,மிருகங்கள் பேர வச்சி,அடாடா எப்படியெல்லாம் கூப்பிடறாங்க.இதுக்கு ஒரு அளவே இல்லாம போச்சி.தயவு செஞ்சி இனிமே இப்படி யாரும் கூப்பிடக் கூடாது " ஆத்திரத்தோடு சொன்னார் பஷீர் காக்கா.
***********************************************

அநீதமிழைக்கப்பட்டவரைத்தவிர,வார்த்தையில் தீயதை பகிரங்கமாக கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.அல்லாஹ்(யாவையும்)செவி ஏற்கிறவனாக, நன்கு அறிந்தோனாக இருக்கிறான். திருக்குரான் 4:148

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
திருக்குர்ஆன் 49:11

ஏகதெய்வ நம்பிக்கை!இஸ்லாம் PART 3

இஸ்லாத்தின் நம்பிக்கைகள் எவை?

ஒரே இறைவனைக் கொண்டும் அவனது மலக்கு (வானவர்) களைக் கொண்டும் வேதங்களைக் கொண்டும், இறை தூதர்களைக் கொண்டும், மறுமையைக் கொண்டும், தெய்வ விதியைக் கொண்டும் நம்பிக்கை கொள்வதே இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் ஆகும்.

ஏகதெய்வ நம்பிக்கையின் பொருள் என்ன?

இந்தப் பிரபஞ்சத்தில் சிறிதும் பெரிதுமான எல்லா வஸ்துக்களுடையவும் படைப்பாளனும் பரிபாலகனும் ஆகிய அல்லாஹ் அவனது உள்ளமை, குணம், செயல்பாடு முதலானவற்றில் எல்லாம் ஏகனும் ஒப்புமையற்றவனும் ஆவான். சர்வ வல்லமையும் எல்லாவற்றையும் மிகைத்தவனும் சர்வ பரிபூரணமானவனும் ஆகிய அவனுக்கு மட்டுமே வணக்க வழிபாடுகளை அர்ப்பணிக்க வேண்டும். எல்லாவற்றையும் படைத்த இறைவன் ஒருவன் உண்டு என்ற நம்பிக்கையுடன் சுருங்கி விடாது அளவற்ற அருளாளனும் எல்லாவற்றையும் அறிபவனுமாகிய அவனிடம் மட்டுமே பிரார்த்தனை மற்றும் வழிபாடுகள் செய்ய வேண்டும் என்ற கொள்கையே இஸ்லாத்தின் ஏக தெய்வ நம்பிக்கையாகும்.

அல்லாஹ் யார்?

சர்வ வல்லமை மிக்க இறைவனைக் குறிக்கும் அரபிப் பதமே அல்லாஹு. எல்லா விதமான வணக்க வழிபாடுகளுக்கும் உரித்தான இறைவன் என்பதே அல்லாஹு என்ற பதத்தின் மொழி ரீதியான அதன் பொருள் ஆகும். அரபு நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாதவர்களும் இறைவனைக் குறித்து அல்லாஹ் என்றே குறிப்பிடுகின்றனர். அல்லாஹ் என்ற பதத்திற்க ஆண்பாலோ பெண்பாலோ பன்மையோ கிடையாது. இறைவனது மகத்துவத்திற்கு பரிபூரணமாக ஒத்துப் போவதுடன் பிற மொழிகளில் உள்ள பதத்தைக் காட்டிலும் மிகச்சரியான னொருளை வழங்குவதாலும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்று அழைக்கின்றனர். ஏக இறைவனை அவனது பரிசுத்தத் தன்மைக்கும்மகத்துவத்திற்கும் ஏற்ப எந்த நாமத்தில் குறிப்பிடுவதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை.

மலக்குகள் என்பவர்கள் யார்?

மனிதனின் சாதாரண புலன் அறிவைக் கொண்டு புரிந்து கொள்ளவோ உணர்ந்து கொள்ளவோ இயலாத ஒளியைக் கொண்டு படைக்கப்பட்ட இறையடியார்களே மலக்குகள் ஆவர். இறைவனது கட்டளையை நிராகரிக்க முடியாத இயற்கை அமைப்பில் பல் வேறு காரியங்களை நிர்வகிப்பதற்காக அவர்கள் படைக்கப்பட்டுள்ளனர்.

வேதங்கள் என்பது என்ன?

மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட இறை தூதர்கள் மூலமாக இறைவனால் வழங்கப்பட்ட புனித நூல்களே வேதங்கள் எனப்படுகின்றன. இகபர வாழ்வின் வெற்றிக்கு வழிகோலும் வழிகாட்டுதல்கள் அடங்கிய தெய்வீக கட்டளைகளை உள்ளடக்கியதே வேத கிரந்தங்கள். இறுதி வேதமாகிய திருக்குர்ஆனில் நான்கு வேதங்களின் பெயர் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட தவ்றாத், தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கய் மூலமாக வழங்கப்பட்ட ஸபூர், ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட இஞ்சீல் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட குர்ஆன் ஆகியவை ஆகும். இவை அல்லாமல் மற்ற இறை தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. எல்லா வேதங்களும் மனிதனை வழிகேட்டிலிருந்து விலக்கி நேர்வழியின்பால் அழைத்துச் செல்ல இறைவன் அருளியவை ஆகும்.

இறை தூதர்கள் யார்?

மனித சமூகத்திற்கு நன்மை தீமை குறித்து எடுத்துக்கூறுவதற்காக இறைவன் மனிதர்களிலிருந்து சிலரை தனது தூதர்களாகத் தேர்ந்தெடுத்து தூதுப் பணியை அவர்களிடம் ஒப்படைத்தான். அவ்வாறு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே நபிமார்கள் அல்லது இறை தூதர்கள் எனப்படுகின்றனர். மனிதர்களை நேர்வழியின்பால் அழைப்பதற்காக எல்லா சமூகங்களிலும் இறைத்தூதர்கள் வருகை தந்தனர். அவர்கள் அனைவரும் மனித சமூகத்திற்கு முன் மாதிரிகளாக முழு மனிதர்களாக வாழ்க்கை நடத்தினர். அவர்களில் எவருமே தாங்கள் தெய்வங்கள் என்றோ தெய்வத்தின் அவதாரங்கள் என்றோ வாதிட வில்லை. அவர்கள் அனைவரும் முழுக்க முழுக்க மனிதர்களே. இறைவனால் நியமிக்கப்பட்ட அனைத்து இறைத்தூதர்களையும் நம்புவது முஸ்லிமின் மீது கடமையாகும்.

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. (திருக்குர்ஆன் 2:213)

மரணத்திற்குப் பிந்தைய வாழ்வு குறித்து இஸ்லாம் என்ன கூறுகின்றது?

மனித வாழ்வின் முடிவல்ல மரணம். மாறாக நிரந்தரமான மற்றொரு வாழ்வின் தொடக்கமே அது என இஸ்லாம் கூறுகின்றது. இவ்வுலகில் செய்யும் கருமங்களுக் கேற்றவாறு தகுந்த கூலி வழங்கப்படுவது மரணத்திற்குப் பிந்தைய வாழ்வில் ஆகும். யுக முடிவு நாளில் எல்லாம் அழிந்த பின்னர் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு இறைவனால் விசாரணை செய்யப்படுவர். சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு முன்னால் நடக்கும் விசாரணையில் நாம் செய்த நன்மை தீமைகள் நமக்கு முன்னால் எடுத்துக்காட்டப்படும். பிறகு முற்றிலும் பரிபூரணமான நீதி வழங்கப்படும். நன்மை செய்து வாழ்வைப் பரிசுத்தமாக்கியவர்களுக்கு நற்கூலியாக நிரந்தர சமாதானத்தின் பவனமாகிய சுவனமும் தீமைகள் செய்து வாழ்க்கையைக் களங்கமாக்கியவர்களுக்குத் தண்டனையாக வேதனைகள் மிக்க நரகமும் வழங்கப்படும்.

"யுக முடிவு நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்". (திருக்குர்ஆன் 75 1-4)

விதியின் மீத நம்பிக்கை கொள்வது என்றால் என்ன?

பிரபஞ்சத்தின் அனைத்து வஸ்துக்களும் இறைவன் வகுத்த விதியின் அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவே விதி எனப்படுகின்றது. அதிலிருந்து மாறுபட்டு நிற்க மனிதன் உட்பட எந்தப் படைப்புகளாலும் இயலாது. மனிதனின் சுற்றுப்புறமும் உடல் அமைப்புகள் கூட இறைவனின் விதியின் அடிப்படையிலேயே நிலை கொண்டுள்ளது. அவனை வந்தடையும் நன்மைகளும் தீங்குகளும் எல்லாம் இந்த விதியின் அடிப்படையிலேயே சம்பவிக்கின்றன. மனித சமூகத்தின் முதலும் முடிவுமான நன்மைகளைக் குறித்தும் தீமைகளைக்குறித்தும் மிகத் தெளிவாக அறிந்த இறைவன் வகுத்த வதிகளின் அடிப்படையிலேயே அவனுக்கு குணமும் தோஷமும் ஏற்படுகின்றது என்பதே இஸ்லாமிய விதி விசுவாசத்தின் உட்கருத்து ஆகும்.

"நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள். மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்". (திருக்குர்ஆன் 82 : 13-16)

"எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,(கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்". (திருக்குர்ஆன் 7: 157)

by அபூ அப்திர்ரஹ்மான்

இஸ்லாம் உறுதியான சட்டதிட்டங்களை உடையது. (இஸ்லாம் PART 2)

மதம் என்பது ஆராதனைக் கூடத்தின் நான்கு சுவர்களுக்குள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற கொள்கையை இறைத் தூதர்கள் கற்றுத் தரவில்லை. மாறாக மனித வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இறைவன் வகுத்த விதி விலக்குகள் பேணப்பட வேண்டும் என்பதே மதமாகும். அதனையே இறைத்தூதர்களும் கற்றுத்தந்தனர். முஸ்லிம் என்பவன் தன்னை முழுமையாக இறைவனிடத்தில் அர்ப்பணித்தவன். அதனால் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இறைவனின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும் என்ற விஷயத்தில் எந்த விட்டுக்கொடுத்தல்களுக்கும் முஸ்லிம் தயாராவதில்லை. ஆராதனைக்கூடத்தில் இறை பக்தியும், சுய வாழ்வில் தனது சொந்த விருப்பமும் என்ற மத சித்தாந்தம் இஸ்லாத்திற்கு முரணானதாகும். எனவே எல்லா துறைகளிலுமுள்ள இஸ்லாமிய ஒழுக்கச் சட்டங்கள் கண்டிப்புடன் பின்பற்றுபவனே முஸ்லிம் ஆவான்.


"அல்லாஹ்வைக் கொண்டும், இன்னும் எங்கள் மீது இறக்கி வைக்கப்பட்டதைக் கொண்டும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப் (அவர்களின்) சந்ததிகள் ஆகியோரின் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றைக் கொண்டும், இன்னும் மூஸா, ஈஸா மற்றுமுள்ள நபிமார்கள் ஆகியோருக்கு அவர்களுடைய ரப்பிட மிருந்து அருளப்பட்டவற்றைக் கொண்டும் நாங்கள் ஈமான் கொண்டோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை காணமாட்டோம்; மேலும் நாங்கள் அவனுக்கே (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்கள் ஆவோம்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக". (திருக்குர்ஆன் 3:84)


"மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ரப்பையே வணங்குங்கள் (அதன் காரணமாக) நீங்கள் இறையச்சமுடையோர் களாக ஆகலாம்" "உங்கள் ரப்பு எத்தகையவனென்றால்) அவன் பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் (நீங்கள் வாழ்வதற்குத் தக்கவாறு) அமைத்தவன். மேலும், வானிலிருந்து மழையைப் பெய்யச் செய்து, அதன் மூலம் பல வகையான கனிகளிலிருந்து உங்களுக்கு உணவை வெளிப்படுத்தினான். ஆகவே, நீங்கள் (இவற்றையெல்லாம் நன்கு) அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு (எவ்வித) இணைகளையும் ஏற்படுத்தி விடாதீர்கள்". (திருக்குர்ஆன் 2:21,22)

by அபூ அப்திர்ரஹ்மான்

Tuesday, December 16, 2008

'மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்'

எந்த ஒரு தாயாவது தான் பெற்றெடுத்த குழந்தையை "சனியனே!" என்று அழைப்பாளா? ஆனால் அழைக்கிறார்களே! இதை எங்கே போய் சொல்வது? 'சனியனே! இங்கே வந்து தொலையேன், உன்னை எத்தனை தடவைக் கூப்பிடறது!" என்று திட்டுகின்ற தாய்மார்களை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.
இன்னும் எப்படியெல்லாம் திட்டுகிறோம் தெரியுமா?

'இங்கே வாடா நாயே!' 'உயிரை வாங்காதேடா'
'நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா'.

'டேய்! சோம்பேறிக் கழுதை'.

'நீ எங்கேடா உருப்படப் போகிறாய்'

குழந்தைகளை திட்டுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன தெரியுமா?

பத்தொன்பது வயது பையன் ஒருவன். அப்பா ஒரு கைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். ஒரே வாரத்தில் அதனைத் தொலைத்து விட்டான். தந்தை திட்டுவார் என்று பயந்து மகன் தற்கொலை செய்து கொண்ட செய்தியை சமீபத்தில் படித்திருப்பீர்கள். எந்த அளவுக்கு தந்தைக்கு அவன் பயந்திருந்தால் இப்படிப் பட்ட விபரீத முடிவுக்கு வந்திருப்பான் என்று சிந்தியுங்கள்.

மற்றவர்கள் முன்பு திட்டப் படும் போது - நமது குழந்தைகள் கூனிக் குறுகி விடுகிறார்கள். திட்டுவது குழந்தைகளின் மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களின் சுய மரியாதை பறிக்கப் படுகிறது. ஒரு தடவை திட்டுவதால் ஏற்பட்ட காயத்தை ஆற்றிட பத்து தடவை நாம் 'மருந்து' இட வேண்டுமாம்.
குழந்தைகளை திட்டுவதால் - பெற்றோர் ஒரு அழகற்ற முன்மாதிரியாக (அழகான முன்மாதிரிக்கு எதிர்ப்பதம்) ஆகி விடுகிறார்கள். திட்டுவது குழந்தைகளின் கோப உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. இதன் மூலம் - நமது குழந்தைகள் மற்றவர்களை திட்டுவதற்கும் அவர்கள் எதிர்காலத்தில் வன்முறை மிக்கவர்களாக மாறுவதற்கும் நாமே வழி வகுத்து விடுகிறோம்.

நாம் விளையாட்டுக்காக திட்டி விடலாம். ஆனால் நமது திட்டு இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டால் நமது குழந்தைகளின் கதி என்னவாகும்?

நாம் ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்திருப்போம். நமது செல்வம் அதனை எக்குத் தப்பாக செய்து விட்டு வந்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொடுத்திருப்போம். அதனை நமது அருமை மகன் உடைத்து விட்டு வந்திருப்பான். 'நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா' என்று அவர்களை திட்டுவதால் - அவர்களின் தன்னம்பிக்கையை நாம் அழித்து விடுகிறோம் தெரியுமா? அவர்களுக்குள் பொதிந்திருக்கின்ற ஆற்றல்கள் அனைத்தும் எப்படி வெளிப்படும் சொல்லுங்கள்?
ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது - ஒரு குழந்தை தனது பதினாறு வயதை அடைவதற்குள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் மொத்தம் 17000 முறை திட்டு வாங்குகிறதாம். என்னவாகும் குழந்தைகள்?

திட்டுவதால் - நமது குழந்தைகளின் கண்ணியம் பாதிக்கப் படுகிறது. அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்: 'உங்கள் குழந்தைகளை கண்ணியப் படுத்துங்கள்' என்று! எப்படி கண்ணியப் படுத்துவது? நாம் அழகாக அவர்களிடம் பேசிட வேண்டும். அழகாக அவர்களைப் பேச வைத்திட வேண்டும். மற்றவர்களிடம் அழகாக அவர்களை அறிமுகப் படுத்திட வேண்டும்.

'தம்பி இங்கே வா' - என்று அழைத்தால் என்ன குறைந்து விடும்?

'அடடா! உடைத்தா விட்டாய்? சரி, சரி - போனால் போகட்டும், இனி மேல் சற்று கவனமாக இரு!' என்று சொல்லி விட்டால் அடுத்த தடவை அவன் எச்சரிக்கையாக இருக்க மாட்டான்? ஏன்? நாம் பொருட்களை உடைத்ததே கிடையாதா?
இங்கே இறை வாக்கு ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

'மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்' என்கிறான் வல்லோன் அல்லாஹு தஆலா. (2:83)

இந்த இறைக் கட்டளைக்கு முன்னும் பின்னும் அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்று பாருங்கள்:
- அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது.

- பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்.

- உறவினர்க்கும் நன்மை செய்யுங்கள்.

- அநாதைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.

- ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.

- மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்.

- தொழுகையை நிலை நிறுத்துங்கள்.

- ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்.

எப்படிப்பட்ட உயர்ந்த வணக்க வழிபாடுகளுடன் மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் என்ற கட்டளையையும் இணைத்துச் சொல்கிறான் அல்லாஹ் என்று ஒரு கணம் சிந்தியுங்கள். வல்லோன் அல்லாஹ் பனி இஸ்ரவேலர்களிடம் வாங்கிய உறுதி மொழிகள் தான் மேற்கண்ட இறைக் கட்டளைகள் அனைத்தும். அல்லாஹ்விடம் உறுதி மொழி செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்! சிந்தியுங்கள்!
Coumselor S.A.Mansoor.com

Sunday, December 14, 2008

இஸ்லாம் என்பது என்ன? PART 1

இஸ்லாம் - புதிய தொடர் ஆரம்பம்

அறிமுகம்

இந்த உலகத்திற்கொரு படைப்பாளன் உண்டு. ஜீவன் அளித்து காற்றும் நீரும் வசப்படுத்தித் தந்து பூமியை வாழத் தகுந்த இடமாக்கிய இறைவன். நாம் இங்கு எவ்வாறு வாழ வேண்டும் இந்த வாழக்கையின் உண்மையான இலட்சியம் என்ன என்பதையும் தீர்க்கதரிசிகள் மூலம் நமக்குக் கற்றுத் தந்தான். நாம் இவ்வுலகில் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதைப் பற்றி நிச்சயமாக நமது மரணத்திற்குப் பின் நமது இறைவனால் விசாரிக்கப்படுவோம். அங்கு புண்ணியம் செய்தவர்களுக்கு நன்மையும் பாவம் செய்தவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும். எனவே படைத்த இறைவன் மனிதனுக்கு வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வாழ்வதே மனிதனின் வாழ்க்கை இலட்சியம் ஆகும்.

நமது அகில உலகங்களின் இறைவனால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அடங்கிய வேதமே திருக்குர்ஆன். முஹம்மது நபியின் மூலம் அதனை இறைவன் மக்களுக்கு எத்திவைத்தான். இதனை அறிந்தவர்களும் அறியாதவர்களும் நமக்கிடையே உள்ளனர். இதனை அறியாதிருக்கும் மக்களை இவ்வாழ்காட்டுதல்களின் பால் அழைத்தல் அதனை அறிந்தவர்களின் மீது கடமையாகும். இந்தச் செய்தியை தமிழ் மக்களுக்கு எத்திவைக்கும் நோக்குடன் இத்தொடர் வெளியிடப் படுகிறது.

திரு எம்.எம் அக்பர் அவர்களின் இஸ்லாம் பற்றிய புத்தகத்திலிருந்து இங்கே செய்திகள் பதியப்படும். இன்ஷா அல்லாஹ்.

இறைவா! உண்மையான மார்க்கத்தை மக்களிடம் எத்தி வைப்பதற்கான எளிய முயற்சி இது. உன்னால் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதற்கான முயற்சி. இதனை நற்கூலிக்கு உரித்தானதாக ஏற்றுக் கொள்வாயாக.
================================================

இஸ்லாம் என்ற அரபிப் பதத்திற்கு சமர்ப்பணம் என்றும் சமாதானம் என்றும் பொருள் உண்டு. அகிலங்கள் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து வாழ்வதன் மூலம் பெறக்கூடிய சமாதானமே இஸ்லாம் ஆகும். வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இறைவனின் விதி விலக்குகளுக்கேற்ப ஒழுங்கு படுத்திக் கொண்டு வாழ்வதே இஸ்லாம் என்பதன் கருத்தாகும்.

இஸ்லாத்தை தோற்றுவித்தது யார்?

பகுத்தறிவும் சிந்தனை சக்தியும் நன்மை தீமைகளைப் பிரித்தறியும் தன்மையும் வழங்கி மனிதர்ளை இப் பூமியின் பிரதிநிதிகளாக நியமித்த படைத்த இறைவனே அவர்கள் தமது வாழ்வின் பல்வேறு துறைகளிலும் கடைபிடிக்கவேண்டிய விதி விலக்குகள் கற்றுக் கொடுப்பதற்கு அவசியமான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளான். அதற்காகவே அவன் தீர்க்கதரிசிகளை நியமித்தான். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சமூகத்தினருக்கு அனுப்பப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளும் கற்பித்தது இறைவனின் விதி விலக்குகளுக்கேற்ப வாழ்வை ஒழுங்கு படுத்த வேண்டும் என்பதுவே. சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு முழமையாக அடிபணிதல், அதாவது இஸ்லாத்தையே அவர்கள் அனைவரும் எடுத்துக்கூறினர். அதுவே அவர்களின் கொள்கையாகவும் இருந்தது. அவர்களுடைய உபதேசங்களும் கட்டளைகளும் இறை வெளிப்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது. தெய்வ சமர்ப்பணத்தின் சித்தாந்தம் - இஸ்லாம் - ஏதேனும் மனிதன் வகுத்த கொள்கை அன்று. மனிதனுக்கு அவனது இறைவனால் இறைத் தூதர்கள் வாயிலாக வகுத்தளிக்கப்பட்ட உண்மையான மார்க்மே இஸ்லாம் என்பதே நிதர்சனமான உண்மை.

முஸ்லிம்கள் என்பவர்கள் யார்?

படைத்த இறைவனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தவன் என்பதே முஸ்லிம் என்ற பதத்தின் பொருள் ஆகும். தெய்வீக விதிவிலக்குகளுக்கேற்ப தனது வாழ்வை ஒழுங்கு படுத்தியவனே முஸ்லிம். உண்மையான நம்பிக்கையினதும், செயல்பாடுகளினதும் அடிப்படையிலேயே ஒருவர் முஸ்லிமாக முடியுமே ஒழிய ஜென்மத்தின் அடிப்படையில் அல்ல.

எவ்வாறு ஒருவர் முஸ்லிமாக முடியும்?

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் முஹம்மது (அவர்கள் மீது இறைவனின் அன்பும் அருளும் உண்டாவதாக) அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன் என்ற சாட்சியத்தின் இரண்டு வசனங்களை நாவால் மொழிவதுடன் அதனடிப்படையில் வாழ ஒருவர் உறுதி மொழி எடுத்து விட்டால் அவர் முஸ்லிமாகி விட்டார்.

by அபூ அப்திர்ரஹ்மான்

Saturday, December 13, 2008

உன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது!

சலீம் நானாவுக்கு இதைக் கேட்டு விட வேண்டும் என்ற துடிப்புடன் காணப்பட்டார்.ஆனால் பஷீர் காக்காவைத்தான் இன்னும் காணவில்லை.மீன் வாங்கத்தான் கடத்தெருவுக்கு போய்விட்டாரா,அல்லது நெட்டில் அதிரை எக்ஸ்பிரஸ் நோட்டம் விடுகிறாரா?ஒன்னும் புரியலய,நானா அங்கலாய்த்துக் கொண்டிருக்கும்போதே "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற குரல் வரவே திரும்பிப் பார்த்தால்,அட நம்ம பஷீர் காக்காவேதான்.

"வ அலைக்கும் சலாம் காக்கா, என்ன இவ்ளோ நேரமா காணோம்?"சலீம் நானா.
"அதில்லை சலீமு,கொடுவா மீனு திண்டு நாளாச்சி,அதான் பொடி நடையா கடைத்தெரு வரைக்கும் போய், கொடுவா மீனு வாங்கி வந்தேன்,அதான் லேட்டு".என்ற பஷீர் காக்காவின் பேச்சில் சோர்வு தெரிந்தது.

"உங்கள ரொம்ப நேரமா எதிர் பார்த்துக்கிட்டு இருந்தேன்,ஒரு சந்தேகம் கேக்கலாமேன்னு?என்ற சலீம் நானாவைப் பார்த்துக் கேட்டார் பஷீர் காக்கா,"சொல்லு சலீமு,என்ன சந்தேகம்,தெரிஞ்சா சொல்லுதேன்,இல்லியன்ன தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு சொல்றேன்."

"பொதுவா காக்கா,மழயோ,புயலோ,கடல் கொந்தளிப்போ,பூகம்பமோ இன்னும் என்னல்லாம் ஏற்படுதோ,அப்பல்லாம்,அதை இயற்கை,இயற்கை சீற்றம், அப்படீன்னு சொல்லுறாங்க,பேபர்ல எழுதுறாங்க.இப்படி அவைகளை இயற்கை,இயற்கையின் சீற்றம் இப்படி சொல்லலாமா?

பசீர் காக்கா சிறிது யோசித்து விட்டு சொன்னார்,"கூடாது,அப்படி சொல்லக் கூடாது.காரணம் என்னனா,கடல்,மலை,மண்,காத்து,மழை,பிரபஞ்சம்,கோள்கள் இன்னும் சிலவற்றை இறை நிராகரிப்பாளர்கள் தான் இயற்கை,இயற்கை என்பார்கள்.ஏனெனில்,அவர்கள் அவைகள் அனைத்தையும் படைத்தது ஏக இறைவன் அல்லாஹ்தான் என்று ஏற்றுக் கொள்வதில்லை.அதனால்தான் அவைகளைஎல்லாம் இயற்கை என்று விடுகிறார்கள்.இதை நாமளும் நமக்கு அறியாமலேயே பயன் படுத்தி விடுகிறோம்.உதாரணமா கடல் கொந்தளித்தால்,பூகம்பம் ஏற்பட்டால்,அது இயற்கையின் சீற்றம் என்று சொல்லி விடுவது.அதாவது அது இயற்கையினால்,அதன் சில வேதி இயல் அல்லது மற்ற காரணங்களால் ஏற்படுகிறது என்பர்.இப்படி காரணத்தை அடுக்கிக் கொண்டே போவார்கள்.இதைத்தான் ஆங்கிலத்திலும் "மதர் நேச்சர்" என சொல்கிறார்கள்."

"ஆனால் நம்மை பொறுத்தவரை,உண்மையும்,சத்தியமும் அதுதானே,என்ன நடந்தாலும் சரி,அது அத்தனையும் நம் அனைவரையும்,பிரபஞ்சத்தையும்,எல்லாவற்றையும் படைத்து,பரிபக்குவப் படுத்தி,பாதுகாத்துவரும் அல்லாஹ் தான் ஆக்குகிறான்,அழிக்கிறான்,பாது காக்கிறான்.அவன் உத்தரவு இன்றி எதுவும் நடப்பதில்லை,இதை புரிந்து கொண்டால் போதும்" என அழகாக விளக்கினார் பஷீர் காக்கா.சலீம் நானாவுக்கு சந்தோசம்,தன் சந்தேகம் தீர்ந்ததர்க்கும்,உண்மையை விளங்கி கொண்டதற்கும்.
----------------------------------------------------------------------------
திருக்குர்ஆன்

மேலும் (நபியே)உமதிரட்சகன்,தான் நாடியவற்றை படைக்கிறான்.(தன்னுடைய தூதுக்காக அவர்களில் தான் விரும்பியவர்களைத்)தேர்ந்தெடுக்கிறான்.(அவ்வாறு தூதரைத்)தேர்ந்தெடுத்தல் அவர்களுக்கு இல்லை.அல்லாஹ் மிக பரிசுத்தமானவன்.இன்னும் இவர்கள் இணை வைப்பவைகளை விட்டும் அவன் மிக்க உயர்ந்தவனாகிவிட்டன்.28:68

வானங்களையும்,பூமியையும் அல்லாஹ் நீதியைக் கொண்டு (தக்க காரணத்திற்காகவே)படைத்திருக்கிறான்.இன்னும்,ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக் கொண்டு,கூலி கொடுப்பதற்காகவும் (படைத்துள்ளான்)அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.45:22

(மனிதனே)உன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது!பின்னரும் அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது.
பின்னும் உன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது! அப்பாலும் உன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது.
(எத்தகைய கேள்வி கணக்கும் கேட்கப்படாமல் )வீணாக விடப்பட்டு விடுவான் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா? 75:34,35,36

''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா"

அன்புக்குரிய இந்து நண்பர்களே,இன்னும் சில இந்து புராணங்கள் ஏக இறைவனாம் அல்லாஹ் மற்றும் இஸ்லாம் பற்றியும் அதன் தூதர் நபிகள் நாயகம் பற்றியும் கூறும் சில சுலோகங்களை பார்ப்போம்.

குரான் கூறுவதை கேளுங்கள் என்னை ஒருக்காலும் பார்க்க இயலாது (7:143)பார்வைகள் அவனை அடைய முடியாது.ஆனால் அவனோ எல்லாருடைய பார்வைகளையும் அடைகிறான்.அவன் நுட்பமானவன்,தெளிவான ஞான முடையவன்.(6:103)

இதேபோல் பகவத் கீதை
அவன் மகாத்மா,கானுதர்கரியன் (7:19)

சென்று விட்டனவும்,நிகழ்வனவும்,இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன்,ஆனால் என்னை எவனும் அறியான். (7:26)

குரான் கூறுகிறது;இறைவன் அவன் ஒருவனே,அவன் எத்தேவையும் அற்றவன்,அவன் (எவரையும்)பெறவுமில்லை,(எவராலும்)பெறப்படவுமில்லை,மேலும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை.(அத்தியாயம் 112)

பகவத் கீதை: அவன் ஆதிதேவன்,பிரவாதவன் (10:12)

திருக்குரான் :அவனை அன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கின்றீர்களோ,அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும்,தங்களுக்கு தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.(7:197)

பகவத் கீதை :எவர் ஒருவர் பரம் பொருளாக தாமாக உண்டாக்கி வணக்குகிராரோ,அவர் பொய்யையே வணக்குகிறார்.(7:20)

ஆக மேற்கொண்ட குரானின் கருத்துக்களை, பகவத் கீதை ஒப்புக்கொள்வதோடு ஏக இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்றும் தாமாக உண்டாக்கி (கல்,மண்,மரம்,பசு,சிலைநெருப்பு,இன்னும் பிற)வணங்குதல் கூடாது என்றும் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது.

பகவத் கீதை போன்று மற்ற இந்து மத உபநிஷத்துக்கள்,கூறுவதை கேளுங்கள்:

1. சந்தோக்ய உபநிஷம்
சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.

''ஏகம் எவதித்யம்"

''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே"


உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது

குர்ஆன் கூறுகிறது
(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)


2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.

''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே"

அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை.

குர்ஆன் கூறுகிறது:
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.

னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்

நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.

குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)

..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)

4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்

அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.

ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி

அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.

குர்ஆன் கூறுகிறது
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)

ஆகவே இந்து நண்பர்களே,சரியான வழி,மார்க்கம்,எது என இந்து மத நூல்களே,"அது இஸ்லாம்தான்"என பறை சாற்றுகின்றன,எனவே சத்திய மார்க்கம் நோக்கி அழைக்கின்றோம்,வாருங்கள்.சுவனம் பரிசாக இறைவனிடம் பெறுங்கள்.

Friday, December 12, 2008

முக்கிய அறிவிப்பு!

அன்புக்குரிய சகோதர,சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும்.(எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக).

ஈகைத்திருநாள்(ஹஜ்)முதல் இஸ்லாம் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு நடைபெற்றுக் கொண்டுள்ளது.அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.அதில் பலவித நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன,24/7 மணி நேரமும் பார்க்கலாம்,கேட்கலாம்.

நீங்கள் பயன் பெறுவதோடு,மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி பயன் பெறுமாறு வேண்டுகிறோம். முஸ்லிம்கள்,முஸ்லீம் அல்லாதவர்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லா தரப்பாருக்கும் ஏற்ற நிகழ்சிகளும்,இடை, இடையே உலக செய்திகளும் இடம்பெறுவது இதன் சிறப்பம்சம்.

பாருங்க,கேளுங்க,அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம் வாருங்க!

அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" சிலை வணங்குவோர் இருளில் மூழ்குவர்

ஏற்கனவே சில இந்து புராண மந்திரங்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வருகை மற்றும் அவர்களை பின்பற்றுவதன் அவசியம் குறித்து விளக்குவதை அறிந்தோம்,இன்று சில இந்து புராணங்கள் இஸ்லாம் மற்றும் ஒரே இறைவனாகிய அல்லாஹ் குறித்து என்ன சொல்கிறது என் ஆய்வோம் இன்ஷா அல்லாஹ்.

இந்து மத வேதங்களில் இறைக்கோட்பாடு

ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் வேதங்களாகும்.

யஜூர் வேதம் (32:3)
--------------------

"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)

அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8

(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9

(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)

'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்

குர்ஆன் கூறுகிறது:

...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)


ரிக் வேதம் (1:164:46)
---------------------
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.

குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.

ரிக் வேதம் (2:2:3)
-----------------
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.

குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.

ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

ரிக் வேதம் (3:34:1)
கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)

குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)

ரிக் வேதம் (6:45:16)

''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.

இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்
----------------------------------
''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!

ஆக இந்து வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.

இப்படி மற்ற மதங்களும் அல்லாஹ் ஒருவன் என்றும் அவனை அல்லாது மற்றதை கல்லை,மரத்தை வேறு எதையும் வணக்குதல் கூடாது என்றும் மட்டுமே கூறி இருக்க,அன்புள்ளம் கொண்ட இந்து நண்பர்களே,சிந்தியுங்கள்.உங்கள் முன் எடுத்துக்காட்டப்படுவது அனைத்தும் இந்து மத வேத நூல்களில் உள்ளவைதாம்.சந்தேகமிருப்பின் சமஸ்கிருத வேத விற்பன்னர்களிடம் கேட்டு உண்மை படுத்திக்கொள்ளுங்கள்.வாருங்கள் நண்பர்களே,நாம் எல்லாரும் ஒன்றுகூடி நம் அனைவரையும் படைத்த ஒரே அல்லாஹ்வை வணங்குவோம் மறுமையில் சுவனத்தை சுவைப்போம்,இன்ஷா அல்லாஹ்.

வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்???பாபர் மஸ்ஜித் ஓர் வரலாற்றுப் பார்வை PART 6

முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.

''கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்'' என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.

1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.

இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.

1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.

எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.

இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.

THE END

Thursday, December 11, 2008

பாபர்- கோவிலை இடிப்பவரா?பாபர் மஸ்ஜித் ஓர் வரலாற்றுப் பார்வை!PART 5

இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.

ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.

கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.

பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?

பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,

''மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்'' என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?

பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.

பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.

பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.

பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.

கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ''உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்'' என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.

அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.

இஸ்லாத்தில் சிறந்த அறம்

மழை விட்டாலும்,தூறல் விட்டபாடில்லை.ஆனாலும்,சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் அதையெல்லாம் பற்றிக் கவலை கொள்ளவில்லை.சலீம் நானா சாயாவை ஆற்றிக்கொண்டே பேச்சை ஆரம்பித்தார்.அவர்க்கு ஒரு நாளைக்கு இரு தடவைகள் சாயா குடிக்க வேண்டும்.பஷீர் காக்காவும் அப்படித்தான்.கேட்டால் இரண்டு பெரும் சொல்வார்கள்,"ஒரு நாளைக்கு ரெண்டு தடவ சாயா குடிச்சா,ஹார்ட்டுக்கு நல்லதாம்,அல்லாஹ் ஆலம். "

என்ன நானா,என்ன காக்கா,இன்னிக்கி என்ன நியூசு வச்சிருக்கியே?கேட்டுக்கொண்டே வந்த சுலைமானை அதட்டினார்,பஷீர் காக்கா. "யாம் சுலைமான்,ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது சலாம் சொல்லனுமுன்னு ஒனக்கு தெரியாதா?எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சொல்லக்கூடிய ஒரே வாழ்த்து இது மட்டுந்தேன்.அல்லாஹ் ஆதம் நபிக்கு கற்றுக் கொடுத்து,இது உங்க மக்களுக்கான முகமன் அப்படின்னு சொல்லி இருக்கான்,பல ஹதீஸ் மூலமும் நாம அதனோட மகத்துவம் பற்றி தெரிந்து கொள்ளலாம்,

அதே மாதிரி ஒரு கல்யாண வீடு,அங்க போய் சலாம் சொன்னா,எவ்வளவு பொருத்தம்,அதே மாதிரி இறந்த வீடு அங்கன போய் சலாம் சொன்னா என்ன பொருத்தம்,பாரு.சந்தோஷமானாலும்,துக்கமானாலும் அல்லாஹ்வுடைய சாந்தியும்,சமாதானமும் எல்லாருக்கும் வேண்டும் தானே,

இதையே துக்க வீட்டுல போய் குட் மார்னிங்
சொல்லமுடியுமா?வீட்டுக் காரங்களுக்கு பேட் மார்நிங்கா இருக்கும்."என்ற பஷீர் காக்காவின் சலாம் குறித்த பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்த சுலைமான் உறுதியாக சொன்னார்,"காக்கா,இவ்ளோ அருமை இருக்கிற சலாமை இன்ஷா அல்லாஹ்,இனி நானும் கடைபிடிப்பேன்".

இதைக்கேட்ட பஷீர் காக்காவுக்கு மகிழ்சி தாங்க முடியவில்லை."ஆஹா ஒரு மார்க்க விஷயத்தை அல்லாஹ்வுக்காக எத்தி வச்சிட்டோம்,இதுக்கு நமக்கு கூலி கிடைக்கும்,இன்ஷா அல்லாஹ்".என்னும்போது அவர் கண்கள் பனித்தன.

**********************************************
நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் வரை ஈமான் கொள்ள முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கத்துணை செய்யும் காரியத்தை நான் கூறட்டுமா? உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதைப் பரவலாக்குங்கள். அபுஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது)(அல்-குர்-ஆன்24:27)

ஒருவர் ஒரு வீட்டில் நுழையும் முன் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என அனுமதி கோரட்டும்.அருமை மகனே! நீ உனது குடும்பத்தினரிடம் சென்றால் ஸலாம் கூறு? அது உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் பரக்கத்தாக அமையும். (அனஸ்(ரலி) - நூல்: திர்மிதீ)

இஸ்லாத்தில் சிறந்த அறம் எதுவென ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது (பசித்தோருக்கு) உணவளிப்பதும், தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதாகும் என விடையளித்தார்கள். (அப்துல்லாஹ்பின் ஆஸ்(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

யார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ அவரே அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவராவார். (அபூஉமாமா(ரலி) - நூல்: அபூதாவுத்)

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!