Saturday, December 13, 2008

''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா"

அன்புக்குரிய இந்து நண்பர்களே,இன்னும் சில இந்து புராணங்கள் ஏக இறைவனாம் அல்லாஹ் மற்றும் இஸ்லாம் பற்றியும் அதன் தூதர் நபிகள் நாயகம் பற்றியும் கூறும் சில சுலோகங்களை பார்ப்போம்.

குரான் கூறுவதை கேளுங்கள் என்னை ஒருக்காலும் பார்க்க இயலாது (7:143)பார்வைகள் அவனை அடைய முடியாது.ஆனால் அவனோ எல்லாருடைய பார்வைகளையும் அடைகிறான்.அவன் நுட்பமானவன்,தெளிவான ஞான முடையவன்.(6:103)

இதேபோல் பகவத் கீதை
அவன் மகாத்மா,கானுதர்கரியன் (7:19)

சென்று விட்டனவும்,நிகழ்வனவும்,இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன்,ஆனால் என்னை எவனும் அறியான். (7:26)

குரான் கூறுகிறது;இறைவன் அவன் ஒருவனே,அவன் எத்தேவையும் அற்றவன்,அவன் (எவரையும்)பெறவுமில்லை,(எவராலும்)பெறப்படவுமில்லை,மேலும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை.(அத்தியாயம் 112)

பகவத் கீதை: அவன் ஆதிதேவன்,பிரவாதவன் (10:12)

திருக்குரான் :அவனை அன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கின்றீர்களோ,அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும்,தங்களுக்கு தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.(7:197)

பகவத் கீதை :எவர் ஒருவர் பரம் பொருளாக தாமாக உண்டாக்கி வணக்குகிராரோ,அவர் பொய்யையே வணக்குகிறார்.(7:20)

ஆக மேற்கொண்ட குரானின் கருத்துக்களை, பகவத் கீதை ஒப்புக்கொள்வதோடு ஏக இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்றும் தாமாக உண்டாக்கி (கல்,மண்,மரம்,பசு,சிலைநெருப்பு,இன்னும் பிற)வணங்குதல் கூடாது என்றும் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது.

பகவத் கீதை போன்று மற்ற இந்து மத உபநிஷத்துக்கள்,கூறுவதை கேளுங்கள்:

1. சந்தோக்ய உபநிஷம்
சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.

''ஏகம் எவதித்யம்"

''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே"


உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது

குர்ஆன் கூறுகிறது
(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)


2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.

''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே"

அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை.

குர்ஆன் கூறுகிறது:
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.

னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்

நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.

குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)

..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)

4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்

அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.

ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி

அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.

குர்ஆன் கூறுகிறது
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)

ஆகவே இந்து நண்பர்களே,சரியான வழி,மார்க்கம்,எது என இந்து மத நூல்களே,"அது இஸ்லாம்தான்"என பறை சாற்றுகின்றன,எனவே சத்திய மார்க்கம் நோக்கி அழைக்கின்றோம்,வாருங்கள்.சுவனம் பரிசாக இறைவனிடம் பெறுங்கள்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!