Monday, January 5, 2015

மக்களே! ஒரு உதவி வேண்டும்,இறை கூலி கிடைக்கும்!!

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1984 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் 'நீதி போதனையை' கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் என்.எஸ் ஜமால் முஹம்மது ( வயது 74 ). 'ஹஜரத்' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். பணியின் போது பள்ளி நிர்வாகம் வழங்கி வந்த சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்தி வந்தார். இவரது குடும்பம் முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி தெருவில் அமைந்துள்ளது.

பணிபுரியும் காலத்தில் தினமும் முத்துப்பேட்டையிலிருந்து அதிரைக்கு பேருந்தில் வந்துவிட்டு செல்வார். அப்போது தான் பெற்றுவந்த சம்பளம் போதுமானதாக இல்லையென்றாலும், இருந்ததைக் கொண்டு சிக்கனமாக குடும்பம் நடத்தி வந்தார். எளிமையானவர் அனைவரிடமும் இன்முகத்துடன் பழகக்கூடியவர். தனது மாணவர்களை கண்டால் முதுகில் தட்டிக்கொடுத்து நலம் விசாரிப்பார்.

நீதி போதனை வகுப்பின் போது இவர் கூறும் 'இஸ்லாமிய வரலாற்று 'சம்பவங்கள்', தொழுகை குறித்து விளக்கங்கள், நபி ( ஸல்) வாழ்வில் நடைபெற்ற படிப்பினை சம்பவங்கள், ஒழுக்க நெறிமுறைகள் உள்ளிட்ட பலவற்றை சுவாரஸ்யமாகவும் எளிதாக புரியும்படியும் கூறுவதில் வல்லவர். வாரம் ஒரு முறை நடக்கும் நீதி போதனை வகுப்புக்காக மாணவர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதும் உண்டு. இவர் கற்பிக்கும் சூராக்களை முன்னாள் மாணவர்களிடம் ஒப்பிக்க சொன்னால் இன்றும் அப்படியே ஒப்பிப்பார்கள்.

இவரிடம் நீதி போதனைகளை கற்ற பல மாணவர்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர். தாயகம் திரும்பிய பல மாணவர்கள் ஹஜரத்தை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் மரியாதையுடன் நலம் விசாரித்துவிட்டு செல்வதும் உண்டு.

இவர் தற்போது முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி பின்புறமுள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதங்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் இவருக்கு இருதய வால்வில் இரு இடங்களில் அடைப்பு உள்ளது எனவும், இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதன் பிறகு திடீரென ஒரு நாள் இவரது பேச்சிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பேச்சில் உளறல் ஏற்பட்டது. இதன் பிறகு தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது ஓரளவு பேசி வருகிறார்.

மூட்டு வலியுடன் அவதிப்படும் இவர் தற்போது முழு ஓய்வில் வீட்டில் இருந்து வருகிறார். நாற்காலியில் அமர்ந்துதான் தொழுது வருகிறார். பள்ளிவாசல் - வீடு ஆகிய இரண்டு இடங்களை தவீர வேற எங்கும் செல்வதில்லை. இவரது மனைவி சிறுவர் சிறுமிகளுக்கு குரான் ஓத கற்று கொடுத்து இதன் மூலம் பெரும் சொற்ப தொகையில் குடும்பம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்களும், நானும் ( சேக்கனா நிஜாம் ) ஹஜரத்தை கண்டு நலம் விசாரிப்பதற்காக முத்துப்பேட்டையில் உள்ள இவரது இல்லத்திற்கு நேற்று சென்றோம். இவரது நிலைமை அறிந்து வருந்தினோம். அப்போது தலைமை ஆசிரியர் மஹபூப் அலி சிறு தொகையை உதவியாக ஹஜரத்திடம் வழங்கினார்.

இவரது மருத்துவ சிகிச்சைக்காக நிதி தேவைப்படுகிறது. நம்மின் உதவியை எதிர்பார்த்துள்ளார். இவருக்கு நாம் தாராளமாக உதவுவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்.

மேலதிக விவரங்கள் தொடர்புக்கு:
0091 9442038961 / 8220378051

நிதி உதவி கோரி ஹஜரத் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
N.S JAMAL MOHAMED
S/O. N.E. SHAHUL HAMEED
NO. 35,  MOHAIDEEN PALLI STREET
INDIAN OVERSEAS BANK
MUTHUPET BRANCH
SB A/c No. 122601000006760

குறிப்பு : ஹஜரத்துக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாகவோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள அலைப்பேசி  மூலம் தகவல் பெற்றுக்கொண்டு உதவலாம்.

சேக்கனா நிஜாம்

http://www.adirainews.net/2015/01/blog-post_10.html

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!