Wednesday, April 7, 2010

வெற்றிக்கு வழி! இன்றையச் சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும்.தொடர் 8

சண்முகம் பிள்ளை ஆச்சரியத்துடன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார். ரயில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.தினசரி பேப்பர்களை ஒரு சிறுவன் விற்றுக்கொண்டிருந்தான்.பஷீர் அதை வாங்கிக் கொண்டு வந்தார்.தலைப்புச்செய்தியாக அது இருந்தது,"பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்"தலைப்பைப் பார்த்துவிட்டு,சுபானல்லாஹ்,அல்லாஹ் தூய்மையானவன்.என மொழிந்துவிட்டு செய்திகள் போனார்,

"தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று (மார்ச் 12) அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனிதமக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்."

படித்துமுடித்தவுடன் ஆனந்தத்தால் கண்கள் பனித்தன,இதைக்கண்ணுற்ற சண்முகம் பிள்ளையும்,ரஞ்சிதம் அம்மாளும் பதறிப்போயினர்.அவர்களின் கைகளில் அந்த செய்திப் பேப்பரை கொடுத்துவிட்டு,இறைவனின் அந்த அற்புதத்தை எண்ணி கையேந்தி துவா செய்யலானார்,பஷீர் பாய்.

அந்த செய்தியை படித்துமுடித்த சண்முகம் பிள்ளையும்,ரஞ்சிதம் அம்மாளும் ஒரு முடிவுக்கு வந்தவர்களாக சொன்னார்கள்."இவ்வளவு அற்புதமான,அறிவுப்பூர்வமான,உண்மையான இந்த இஸ்லாம் மார்க்கத்தை ஏற்காமல் இருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது,இப்போதே ஏற்றுக்கொள்கிறோம்,அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை,முஹம்மத் நபி ஸல் அவர்கள் அவனின் தூதர் ஆவார்கள்"

அதைக்கேட்ட பஷீர் பாய்,சலீம் நானா மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள் சந்தோஷத்தால் குதூகலம் அடைந்தனர்.ரயிலோ அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.

முற்றும்
முஹம்மத் பிர்தௌஸ் 

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!