Monday, February 10, 2014

கூண்டுக்கிளி...

சமீபத்தில் முடிவெட்ட சலூனுக்கு சென்றிருந்தேன். எனக்கு வழக்கமாக முடிவெட்டும் தலித் சகோதரர்(அவரை விட்டால் வேறு யார் வெட்டுவார்?) தருமபுரி சாதி கலவரத்தை பற்றி பேச்சு கொடுத்தார். எங்களிடையே நடந்த சம்பாஷனை இது.

"எங்கள்ட்ட முடிவெட்ட வந்தா, நாங்க ஜாதி பார்ப்பதில்லை. அனைவரையும் சரிசமமா மதிக்கிறோம். சேவை செய்கிறோம். ஆனால் அவர்கள் எங்களை மனுஷனாவே மதிப்பதில்லை. எங்க கடை ஓனர் ஒரு பாய். தங்கமான மனுஷன். வீட்டில் எந்த விசேசம் என்றாலும் எங்களை முதலில் கூப்பிட்டு அவரே விருந்து பரிமாறுவார். ஆனா உயர்ந்த ஜாதி ஹிந்துக்கள் எங்கள உள்ளாரவே நுழைய உட மாட்டாங்க. ஜாதிய ஒழிச்சாத்தான் இந்த நாடு உருப்படும்”.

"ஜாதி என்ன மூட்டைப்பூச்சியா மருந்தடிச்சு ஒழிப்பதற்கு?. எத்துனை ஜென்மம் எடுத்தாலும் உங்களால் ஒழிக்கவே முடியாது”.

"அப்ப எண்ணன்னே பன்றது?”.

"ஜாதியை விட்டு வெளியேறுங்கள்" .

"அதெப்படிண்னே”?

"நாங்க முஸ்லிம்க எப்படி வெளியேறினோம்.?. அப்படி”.

அதற்குப் பிறகு நன்பர் பேசவில்லை. ஏதோ சிந்தனையில் மவுனமாகிவிட்டார்.
-----------

ஒரு நசுக்கப்பட்ட சகோதரனை முப்பது நிமிடங்களில் சிந்திக்க வைத்து விட்டேன். கூண்டுக்கிளியின் கதவு திறக்கப்பட்டு விட்டது. இனி சுதந்திர வானில் அது சிறகடித்து பறப்பதை, இன்ஷா அல்லாஹ் எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது.

ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒரு முறையாவது ஒரு கூண்டுக்கிளியின் கதவை திறந்து விடுவேன் என்று சபதமெடுத்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் மோடி மஸ்தான் கும்பல் மாயமாய் மறைந்துவிடும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இனி இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் மானம் மரியாதையுடன் வாழவேண்டுமென்றால், கூண்டுக்கிளியின் கதவை உடைப்பதை தவிர வேறு வழியே இல்லை.

சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது.



வாசகர் கருத்து

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!