Saturday, January 23, 2010

ரியா !மறைவான இணைவைப்பு?உங்களை வெல்வோர் எவருமில்லை!!தொடர் 17

ரியாவின் பல்வேறு வகையான ஆபத்துகளில் ஒன்று, அதன் தீமைகள் அதில் ஈடுபட்டவர்களை மட்டுமின்றி, முழு சமுதாயத்தையும் அது பாதிக்கும். அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்.
'பலவீனமான, எளிமையான அதன் உறுப்பினர்களினால் இந்த சமுதாயத்திற்கு (அல்லாஹ்விடமிருந்து) உதவி கிடைக்கின்றது. அவர்கள் பிரார்த்தனைகள், அவர்களது தொழுகைகள் மற்றும் அவர்களது உள்ளத் தூய்மையே இதற்குக் காரணம்." நூல்: சஹீஹ் அத் தா;கீப் வத் தா;ஹீப் சஹீஹ் சுனன் அத் திர்மிதீ

இந்த நபிமொழி மூலம், தனது சமுதாயத்தினர்களுக்கு அண்ணல் நபி அவர்கள், தூய்மையான முஸ்லிம்களால்தான் சமுதாயம் காப்பாற்றப்படுகிறது என்ற செய்தியை அளித்துள்ளார்கள். எனவே, இச்சமுதாயம் தனது தூய்மையான உறுப்பினர்களை இழந்து விட்டால், அல்லாஹ் தனது உதவிகளைத் துண்டித்துவிடுவான். திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (திருக்குர்ஆன் 3:160)


தமது இல்லங்களிலிருந்து பெருமைக்காகவும், மக்களுக்குக் காட்டவும் புறப்பட்டோரைப் போன்றும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்தோரைப் போன்றும் ஆகி விடாதீர்கள்! அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் முழுமையாக அறிபவன். (திருக்குர்ஆன் 8:47)

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!