Thursday, November 24, 2011

டிசம்பர் 20ல் கடையடைப்பு,ஆர்பாட்டம்!காரைக்குடி மார்க்கமாக(அதிரை வழியே)அகல் ரயில்பாதை அமைக்க கோரி!


 திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், தலைஞாயிறு, முத்துப்பேட்டை ஆகிய யூனியன் பகுதிகளில் டிசம்பர் 20ம் தேதி மத்திய அரசை கண்டித்து திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை பணியை உடனடியாக துவக்க வலியுறுத்தி கடையடைப்பும், ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வர்த்தகர்கள் சங்க கட்டிடத்தில் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நாகை திருவாரூர் மாவ ட்ட வர்த்தக சங்க தலைவர் சிவசுந்தரம் நகராட்சி தலைவர் உமாகேஸ்வரி, யூனியன் தலைவர் வேதநாயகி ஆகியோர் முன்னிலையில் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள், சேவை சங்க பெ õறுப்பாளர்கள் சங்க சிறப்புக் கூட்டம் நடந்தது.

தென்னகத்தின் மிக பழமையான சென்னை காரைக்குடி, ராமேஸ்வரம் வழித்தடத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதுக்கு உடனடியாக பணிகளை துவக்க வேண்டும்.திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி வரையிலான வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றுவதுக்கு நிதி ஒதுக்கிடு செய்வதுக்கு டிசம்பர் 20ம் தேதி திருத்துறைப்பூண்டி தலைஞாயிறு, வேதாரண்யம், முத்துப்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளில் கிராமங்கள், நகரங்களில் கடையடைப்பு செய்து தபால் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!