Wednesday, August 4, 2010

ரியா !மறைவான இணைவைப்பு? விமர்சனத்திற்கு அஞ்சுதல்.தொடர்19

 விமர்சனத்திற்கு அஞ்சுதல்

தனது செயல்களில் உள்ள குறைகள் விமர்சனம் செய்யப்படுவதை யாரும் விரும்புவதில்லை. மார்க்க விஷயங்களில் விமர்சனம் செய்வதை விரும்பாதவர்களை இரண்டு வகையாகப் பிாிக்கலாம்.

    (அ) தன்னுடன் இருப்பவர்களின் விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக அல்லாஹ்வின் ஆணையை நிராகாிக்கும் மனிதர்கள் முதல் வகையினர். மனிதர்களிடையே புகழை இழப்பதை விட அல்லாஹ்வின் ஆணைகளைப் புறக்கணிப்பது மேல் என்று கருதுபவர்கள் இவர்கள். உதாரணமாக:- சில ஆண்கள் தாடி வைக்க விரும்புவதில்லை. இதே போல் தங்கள் தோழியர் விமர்சிப்பார்கள் என்று அஞ்சி சில பெண்கள் உாிய முறையில் பர்தா அணிவதில்லை. இவையெல்லாம் ஹராம் (தடுக்கப்பட்டது) தான். இவை 'ரியா"வின் கீழ் வராது. இறை நம்பிக்கையாளர்கள் குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

    நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோாிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போாிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போாின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். நாடியோர்க்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாரளமானவன். அறிந்தவன். (திருக்குர்ஆன் 5:54)

    படைப்பினங்களின் விமர்சனம், படைப்பாளனாக அல்லாஹ்வின் விமர்சனத்துடன் ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என்பதை உண்மையான நம்பிக்கையாளர்கள் நன்கு உணர்வார்கள்.

    (ஆ) அல்லாஹ்விற்காக அல்லாமல், மனிதர்கள் தன்னை ஏளனமாகப் பார்ப்பார்கள், தன்னைக் குறை சொல்வார்கள் என்பதற்காக இஸ்லாத்தின் சில கட்டளைகளைப் பின்பற்றுபவர்கள் இரண்டாம் வகையினர் ஆவர். உதாரணமாக வீட்டிலே தொழுது கொள்கிறார் என்று மற்றவர்கள் குறை சொல்வார்கள் என்பதற்காக அல்லது அவர் தொழுவதே இல்லை என்று மக்கள் எண்ணக் கூடாது என்பதற்காக ஒருமனிதர் பள்ளிவாசலில் தொழலாம். அல்லது மார்க்கக் கூட்டங்களின் போது அங்கு வரும் தனது மார்க்கச் சகோதாிகள் அல்லது உரையாற்றுபவர் தன்னைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக ஒரு முஸ்லிம் பெண்மணி பர்தா அணியலாம்.



  மற்ற மக்களிடம் உள்ள செல்வங்களுக்காக பேராசைப்படுதல்
  

  மற்ற மக்களிடம் உள்ள பணம், அதிகாரம் அல்லது செல்வாக்கு மீது ஒருவருக்குப் பேராசை ஏற்பட்டால், பிறகு தன்னைப் போன்று மற்றவர்களும் தன் மீது பொறாமை கொள்ள வேண்டும் என்று அவன் விரும்புகிறான். உதாரணமாக சமுதாயத்தில் குறிப்பிட்ட அந்தஸ்தில் உள்ள மனிதர் மீது ஒருவருக்கு பொறாமை ஏற்பட்டால், அதே அந்தஸ்தை தானும் அடைய எல்லா வகையிலும் அவன் முயலுகிறான். இந்த எண்ணத்தின் விளைவாகத் தனது வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக் கொள்கிறான். அவனது பணம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவை மற்றவர்களுக்குப் பகட்டாகக் காண்பிக்கப் படுகின்றது. மார்க்க விஷயங்களும் கூட பகட்டாக காட்டப்படுகிறது. இறுதியில் 'ரியா" என்னும் பெரும் பாவத்திற்கு இவை இழுத்துச் செல்கின்றன.

    அண்ணல் நபி அவர்களின் பின்வரும் அமுத மொழி இந்த மூன்று வகையினரையும் சுட்டிக் காட்டுகின்றது.
    அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருமனிதர் நபிகள் நாயகம் அவர்களிடம் வந்து, 'ஒரு மனிதன் (பிறர் தன்னைக் குறை சொல்வதைத் தவிர்ப்பதற்காக) தனது கண்ணியத்தைத் தற்காத்துக் கொள்வதற்காகப் போாிடுகிறார். இன்னொருவர் தனது துணிச்சலை (அதற்காக பாராட்டப்பட வேண்டுமென்பதற்காக) நிரூபிப்பதற்காகப் போாிடுகிறார். மூன்றாமவர் (தனது அந்தஸ்தைப் பிறர் அறிய வேண்டுமென்பதற்காக) பகட்டிற்காகப் போாிடுகிறார். இந்த மூவாில் அல்லாஹ்வின் பாதையில் போாிடுபவர் யார்? என்று கேட்டார்.

நாயகம் அவர்கள் (பின் வருமாறு) பதில் சொன்னார்கள்.

    எவர் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்க வைக்க (அதாவது, இஸ்லாத்திற்கு கண்ணியம் சேர்ப்பதற்காகவும், இஸ்லாத்தை இந்த பூமியில் நிலை நாட்டவும்) போாிடுகிறாரோ அவர் தான் அல்லாஹ்வின் பாதையில் போாிடுபவர் ஆவார்." ஆதாரம்: புகாாி 123, 2810, 3126, 7458, முஸ்லிம், அபூதாவூத்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!