Thursday, June 18, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?" வழிகேட்டை அதிகரிக்கும் " தொடர் 10

ரியாவில் ஈடுபடும் மனிதனின் உள்ளத்தில் நோய் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்த நோயை குணப்படுத்தாவிட்டால், அது மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். திருக்குர்ஆனில் வல்ல இறைவன் பின்வருமாறு கூறுகிறான்.

அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
(திருக்குர்ஆன் 2:9,10)

அண்ணல் நபி அவர்களின் தோழர்கள் காலத்தில் நடைபெற்ற பின்வரும் சம்பவத்தில் நாம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் காண முடிகிறது.

ஜாபிர் இப்னு சமூரா அறிவிக்கிறார்கள்: உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது, கூஃபா நகரவாசிகள் சிலர் தங்களுக்கு ஆளுநராக அனுப்பப்பட்ட சஅது இப்னு அபி வக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி புகார் தொிவித்தார்கள். இந்த புகாரைப் பற்றி விசாாிக்க உமர் (ரலி) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். இருப்பினும் அவர்கள் தொடந்து உமர் (ரலி) அவர்களிடம் மென்மேலும் புகார்களைக் கூறிய வண்ணம் இருந்தார்கள். சஅத் (ரலி) அவர்களுக்கு சரியாகத் தொழக்கூடத் தொியவில்லை என்றும் கூட அவர்கள் புகார் சொன்னார்கள். இச்சூழலில் உமர் (ரலி) சஅதை அழைத்து அவர்களது தொழுகையைப் பற்றி விசாாித்தார்கள். சஅத் (ரலி) அவர்கள் இதற்கு பின்வருமாறு பதிலளித்தார்கள்.

'அல்லாஹ்வின் மீது ஆணையாக, அண்ணல் நபி அவர்கள் எவ்வாறு தொழுதார்களோ அதே முறையில்தான் நான் தொழுதேன். இதில் நான் எந்த வகையிலும் குறை வைக்கவில்லை. இஷா தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்துகளை நீட்டியும், பிந்தைய இரண்டு ரக்அத்துகளையும் சுருக்கியும் தொழுவேன்" இப்பதிலைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் 'உங்களிடமிருந்து நான் எதிர்பார்த்தது இதனைத் தான்" என்று பதிலளித்தார்கள்.

இதன் பிறகு மக்களிடம் நேரடியாக விசாரணை நடத்துவதற்காக பல தூதா;களை உமர் (ரலி) அவர்கள் கூபாவிற்கு அனுப்பி வைத்தார்கள். இத்தூதர்கள் சென்ற ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அவர்கள் மக்களிடம் சஅதைப் பற்றி விசாாித்தார்கள். அவர்கள் சென்ற ஒவ்வொரு இடத்திலும் சஅதைப் பற்றிய பாராட்டுரைகளைத் தான் மக்களிடமிருந்து கேட்க முடிந்தது. அப்ஸ் கோத்திரத்தாாின் பள்ளிவாசலுக்கு தூதர்கள் சென்ற போது உஸாமா இப்னு கத்தாதா என்றமனிதர் எழுந்து நின்று 'உங்களுக்கு உண்மை தொிய வேண்டுமெனில் நான் சொல்வதைக் கேளுங்கள். படைகளுடன் சேர்ந்து சஅத் போர்புரிவதற்குச் செல்வதில்லை. போாில் கிடைத்த பொருட்களையும், அவர் நியாயமாக பகிர்ந்தளிப்பதில்லை" என்று கூறினார். இதனைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள் 'இறைவா! நான் உன்னிடம் இரண்டு விஷயங்களைக் கேட்கிறேன். உனது இந்த அடியார் (அதாவது உஸாமா) ஒரு பொய்யராக இருந்தால், ரியாவிற்காக, பிரபலமடைவதற்காக எழுந்து நின்றிருப்பாரேயானால், அவரது வாழ்நாளை நீடிப்பாயாக, அவரது வறுமையை அதிகாிப்பாயாக மேலும் அவரது கண்ணியத்தைக் குலைப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள்.

இதற்குப் பல ஆண்டுகள் கழித்து உஸாமாவிடம் அவரது நிலை எப்படியுள்ளது என்று வினவப்பட்டால்....

'வயது முதிர்ந்த கிழவனாக அலுப்பு தட்டியவனாக சஅதின் பிரார்த்தனையால் பாதிக்கப்பட்டவனாக இருக்கிறேன்" என்று பதிலளிக்கும் நிலையில் இருந்தார். இச்சம்பவத்தை விவாிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறும் போது, 'நான் அவரை (உஸாமாவை) ஒருமுறை பார்த்தேன். வயோதிகத்தின் காரணமாக அவரது புருவங்கள், கண் இமையில் படும் அளவிற்குத் தொங்கியிருந்தது. இருப்பினும் தெருக்களில் இளம் பெண்களைக் கடந்து செல்லும் போது அவர்களை தொந்தரவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நூல்: புகாாி, முஸ்லிம், அபூதாவூத்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!