Saturday, September 24, 2011

அதிரை பேரூராட்சித் தலைவர் - அதிரை அன்வர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 
தாங்கள் அனைவரும்   ஊரின்  நன்மைகருதி  சில  முடிவுகள்  எடுக்கவிருப்பதாக  கேள்விப்பட்டோம்.
  
இன்ஷா அல்லாஹ் இங்கு சிட்னியில் சிலவரங்களுக்கு முன்பு இதுபோன்று ஓர் நிகழ்வை ஏற்படுத்தி இருந்தோம்.
    
அதன்படி நம் ஊரில் பல முக்கியமான சமுதாய சேவைகளை செவ்வனே செய்துவரும் அதிரை அன்வர் அவர்களை நமதூர் பேறுர் ஆட்சி மன்ற தலைவருக்கு நிற்க வைக்க முன் மொழியலாம் என்று முடிவு செய்து இருக்கின்றோம்
அதிரை அன்வர் அவர்களை பற்றி சிறு குறிப்பு
சிறு வயது முதல் சமூக சேவையில் ஈடுபடுத்திவருபவர்   
எல்லா இயக்கத்தவரையும் ஒன்று திரட்டி  ஓர் அணியில் கீழ் கொண்டு வர இன்றளவும் பாடு பட்டுவருவதினால்   எந்த இயக்கத்திலும் இதுவரை தன்னை இணைத்துக் கொள்ளவில்லை
ஆனால் சமுதாயத்திற்கு தேவையான மற்றும் இக்கட்டான நேரங்களிலும் அவர் நேரம் கலாம் பாராமல் பல போராட்டங்களில்  தன்னை முன்னிறுத்தி வழி நடத்தியுள்ளார்கள்.  

 இன்னும் நம் அல் அமீன் பள்ளிவிசயத்தில் அக்கறை கொண்டு அதை தான் முன்னிறுத்தி சேவை செய்வேன் என்று உறுதி பூண்டுள்ளார்கள்
1997  நம் சகோதர்களின் மேல் காவல் துறையால் போடப்பட்ட 
பொய்வழக்கில் சென்னை தலைமை செயலகம் வரை  சென்று நியாயம் கிடைக்க செய்தார்   
2001  நம் சகோதர்களின் மேல் போடப்பட்ட பொய் வழக்கில் நம் சமுதயத்திர்க்காக அவர்களை வெளி கொணர அரும்பாடு பட்டுள்ளார்கள்
இன்னும் எத்தனையோ குடும்ப பிரட்சனைகளை தீரத்து வைத்துகொண்டுள்ளர்கள்
அனைத்து முஹல்லா மக்களோடும் மற்றும் பிற சமுதாய மக்களோடும் வேறுபட்டு இன்றி பலககூடியவர்  அறியவும்
நாம் அனைவரும் சமுதாய சிந்தனையோடு அல்லாவிற்காக ஒன்று கூடி முயற்ச்சி செய்தால் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் (இன்ஷா அல்லாஹ்)
வஸ்ஸலாம்
சிட்னி அதிரை வாசிகள் சார்பாக
சி. ந. சர்புதீன் மற்றும் மு . அ ஹாலித்
TO READ MR ANWAR'S LETTER,PLEASE CLICK BELOW LINK


No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!