Wednesday, June 30, 2010

ரியா !மறைவான இணைவைப்பு? பெருமை அல்லாஹ்வுக்குள்ளது..தொடர் 18

'ரியா" ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் இறை நம்பிக்கையில் (ஈமானில்) ஏற்படும் பலவீனம் ஆகும். அல்லாஹ்வின் மீது ஒரு மனிதனுக்கு உறுதியான நம்பிக்கையில்லா விட்டால், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதை விட மக்களின் அபிமானத்தைப் பெறுவதே அவனுக்குப் பெரிதாகத் தோன்றும். ஈமானில் ஏற்படும் இந்த பலவீனத்தின் விளைவாக மறுமையில் கிடைக்கும் வெகுமதிகளையும், அருள் வளங்களையும் அவன் புறக்கணிக்கின்றான். இதே நேரத்தில், இந்த உலகில் கிடைக்கும் பெயருக்காகவும், புகழுக்காகவும் அவனது எண்ணம் அலை பாய்கின்றது. இத்தகைய எண்ணமே 'ரியா"வில் அவனை வீழ்த்துகின்றது.

'ரியா"விற்கு மூன்று அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் இறை நம்பிக்கையாளர்கள்
எச்சரிக்கையாகி , கவனமாக செயல்பட வேண்டும்.

    1. புகழை விரும்புவது:-
    நரகில் வீசப்படும், அறிஞர், வீரமரணமடைந்த தியாகி மற்றும் கொடையாளி தொடர்பாக நாம் முன்பு கண்ட நபிமொழியில் இந்த அறிகுறியைக் கவனிக்க முடிகின்றது. இந்த மூவரும், மக்களிடம் புகழ் பெற விரும்பினார்கள். அல்லாஹ்வின் திருப்தியை விட இந்தப் புகழை அவர்கள்
பெரிதாக கருதினார்கள். மக்களிடம் புகழை எதிர்பார்க்கும் மனிதன் தன்னுள் பெருமைப்பட்டுக் கொள்கிறான். தான் புகழப்படத் தகுதியுடையவன் என்றும் அவன் கருதிக் கொள்கிறான். எனவே அவன் வீம்பும், தற்புகழ்ச்சியும் உடைய மனிதனாக உருவாகும் அபாயம் ஏற்படுகின்றது.

    அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
    அல்லாஹ் சொல்கிறான் 'பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை என்னுடைய அங்கியாகவும் உள்ளது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுகிறானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன்" நூல்கள்: அபுதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்

    தற்பெருமை கொண்ட ஒரு மனிதரைப் பற்றி அல்லாஹ்வின் தூதர்; பின்வருமாறு
எச்சரித்ததாக இன்னொரு நபிமொழியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
    

 அழிவை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் மூன்று உள்ளன. மன இச்சையைப் பின்பற்றுதல், பேராசைக்கு அடிபணிதல் மற்றும் தற்பெருமையும், இறுமாப்பும். இது (கடைசியாகச் சொன்னது) தான் மூன்றிலும் மிக மோசமானதாகும். நூல்: மிஷ்காத் அல் மசாபிஹ்

கிறிஸ்தவர்கள்,
யூதர்களைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு எச்சரிக்கிறது.
    தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் தண்டனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று (முஹம்மதே!) நீர் நினைக்காதே! அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை உள்ளது. (திருக்குர்ஆன் 3:188)
    இதனால் தான், நபித்தோழர்கள், புகழப்படக்கூடிய சூழலில் கூட சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில்
எச்சரிக்கையாக   இருந்தார்கள்.

    அப்துர்ரஹ்மான் லைலீ (இவர் இரண்டாம் கலீபா உமர் (ரலி) காலத்தில் பிறந்தவர். அலீ (ரலி), உபைபின் கஅப் மற்றும் பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டு அறிவித்தவர்) அறிவிக்கிறார்கள்.

    'அன்சார்களாக இருந்த நூற்றி இருபத்திற்கும் மேற்பட்ட நபித்தோழர்களை நான் சந்தித்துள்ளேன். அவர்களிடம் யாராவது வந்து மார்க்கத் தீர்ப்பு கேட்டால், வேறு யாராவது தனக்காக இந்தத் தீர்பை வழங்க மாட்டாரா? என்று விரும்புகிறவர்களாக அவர்கள் இருந்தனர்"
ஆதார நூல்: அத்தா
ரிமி
மார்க்கத்தைப் பற்றி தவறுதலாக சொல்லி விடக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் தயக்கம் காட்டுபவர்களாக இருந்தனர்.






Thursday, June 24, 2010

"மாநாடு சிறக்கும்! செம்மொழி சிறக்குமா?"

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நாளை, ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் சீரிய தலைமையில், துணை முதல்வர் ஸ்டாலினின் மேற்பார்வையில் சிறப்புடன் நடைபெற இருக்கும் இந்த மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெறும்; வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்து கிறோம். ‘உலகெலாம் தமிழ் முழக்கம் கேட்கச் செய்ய’ இந்த மாநாடு பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் தமிழ் நாட்டில் தமிழின் நிலை என்ன?

தமிழ் ஆர்வலர்களும் தமிழ்ச் சான்றோர்களும் தமிழ்ப் புலவர்களும் ‘தமிழ்நாட்டில் தமிழ் இல்லையே’ என்று புலம்பத் தொடங்கிச் சற்றொப்பக் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று வரை அவர்களின் கவலை தீரவில்லை; கண்ணீர் வற்றவில்லை. தில்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று தமிழகத்தின் பள்ளிகளில் ஓர் ஆய்வை நடத்தியது. கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஏறத்தாழ 65 விழுக்காட்டினர்க்குத் தமிழ்வழி இரண்டாம் வகுப்புப் பாட நூலைப் படிக்கக்கூட முடியவில்லை என்று அது கண்டறிந்துள்ளது.

தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை.
தமிழகத்தின் கடைத்தெருக்களில், அங்காடி வீதிகளில் தமிழ் இல்லை.
அரசு அலுவலகங்களில் தமிழ் இல்லை.
நீதிமன்றங்களில் தமிழ் இல்லை.
தமிழ்க் கல்லூரிகள் எல்லாம் கலைக் கல்லூரிகளாக மாறிவிட்டன.
தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை இல்லை.
தொலைக்காட்சிகளிலும் (கலைஞர் தொலைக்காட்சி உட்பட) திரைப் படங்களிலும் தமிழும் இல்லை; தமிழ்ப்பண்பாடும் இல்லை; தமிழ் வாழ்வும் இல்லை.


நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் நடத்தப்படும் தமிழ்க் கொலைக்கு அளவே இல்லை. (பேராசிரியர் நன்னன் அவர்கள் இதைக் குறித்து அன்றாடம் கலங்குகிறார்; கதறுகிறார்; குமுறுகிறார். ஆனால் அவருடைய கதறல் யாருடைய காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை)

தமிழர்கள் பலரும் ‘தமிங்கிலர்’ ஆகிவிட்டனர். ஆங்கிலம் கலக்காமல் யாருக்கும் ஒரு சொற்றொடர் கூட பேசவோ எழுதவோ இயலவில்லை. கன்னித் தழிழ் இன்றைக்குப் ‘பன்னித் தமிழ்’ ஆகிவிட்டது.

இதோ, ஓர் உரையாடல் :

‘நீ காலையில டிபன் பண்ணி்ட்டு, டென்'ஓ க்ளாக் மேல ஆபிசுக்கு போன் பண்ணிப் பேசு. அவன் ஈவினிங் வெயிட் பண்ணி உன்னை வீட்ல டிராப் பண்ணிடுவான். போன் பண்ண மிஸ் பண்ணிடாதே, ஓகே? பபாய்....

இப்படி தமிழ்நாட்டில் தமிழின் அவல நிலையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் ஒரே ஒரு வினா உள்ளத்தைத் துளைத்துக் கொண்டே இருக்கிறது. அது...

"மாநாடு சிறக்கும்! செம்மொழி சிறக்குமா?"


- சிராஜுல் ஹஸன்


நன்றி : சமரசம்

Friday, June 18, 2010

Wednesday, June 16, 2010

ஆபத்து,ஆபத்து

நகரெங்கும் கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த செல்போன் டவர்கள் பார்க்க சாதுவாக நின்றாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பது தெரியவந்துள்ளது. இந்த டவர்களுக்கு அருகில் வசிப்பவர்கள் கதிர் வீச்சு காரணமாக மூளையில் கட்டி, மலட்டுத் தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.

ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்வி கோட்டா இதுபற்றிக் கூறுகையில், "அதிகமாக செல்போன் உபயோகிப்பது அல்லது செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் நரம்புக் கோளாறுகள் அதிகம் வருவது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாதிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டுள்ளோம் என்கிறார். ஆனால் இந்த ஆய்வு முடிவு வரும்வரை கூட காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்கள் சிஎன்என் - ஐபிஎன்கார்கள். இந்த நிறுவனத்தின் நிருபர்கள், பேராசிரியர் கிரிஷ் குமார் உதவியுடன் ஒரு உண்மையை நிரூபித்துள்ளனர்.

செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு சுமார் -12 முதல் -10 டிபி வரை கதிர்வீச்சு நிலவுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். பொதுவாக -30டிபி அளவு கதிர்வீச்சு இருக்கலாம். இந்த அளவு குறைய ஆரம்பித்தால் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.டெல்லியில் ஒரு செல்போன் டவருக்கு அருகில் வசித்த விஜயா பட் என்ற பெண் இப்போது மூளைக்கட்டி நோயால் அவதிப்படுகிறார்.

இந்த நோய் அவருக்கு வரக் காரணம் இந்த டவர்தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த மாதிரி நோயாளிகள் இப்போது மாநகரப் பகுதிகளில், குறிப்பாக செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பவர்களிடையே அதிகரித்து வருவதை பேராசிரியர் கிரிஷ் சுட்டிக் காட்டுகிறார்.




Saturday, June 12, 2010

தென் கொரியாவிடம் வீழ்ந்தது கிரீஸ்

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் தென் கொரிய அணி, கிரீஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அதிர்ச்சி கொடுத்தது.
தென் ஆப்ரிக்காவில் 19வது <"பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று "பி' பிரிவு லீக் போட்டியில் தென் கொரியா, கிரீஸ் அணிகள் மோதின.
கொரியா ஆதிக்கம்:
 துவக்கம் முதலே தென் கொரிய அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். இந்த அணிக்கு 7வது நிமிடத்தில் "பிரீ கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதைப்பயன்படுத்திய லீ யங்-பியோ பந்தை வேகமாக அடித்தார். அப்போது கோல் பகுதிக்குள் இருந்த முன்கள வீரர் லீ ஜங் ஜூ, தனது காலால் பந்தை வலைக்குள் அடித்து, தனது அணியின் முதல் கோலை பதிவு செய்தார்.
ஆக்ரோஷமாக ஆடிய தென் கொரிய அணியின் முன், கடந்த 2004ல் "யூரோ' சாம்பியன் பட்டம் வென்ற, கிரீஸ் வீரர்களது ஆட்டம் எடுபடவில்லை. முதல் பாதி முடிய சில நிமிடங்களுக்கு முன் கிரீஸ் அணிக்கு, சமன் செய்ய இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தென் கொரிய கோல்கீப்பர் சன்கிரேயாங் அருமையாக தடுக்க, முதல் பாதியில் தென் கொரிய அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது கோல்:
கிரீஸ் அணியின் தற்காப்பு பகுதி மிகவும் பலவீனமாக இருந்தது. இரண்டாவது பாதியின் துவக்கத்தில் (52வது நிமிடம்) தென் கொரிய கேப்டன் ஜி சங், கிரீஸ் வீரர் டி ஜோர்வசை ஏமாற்றி, பீல்டு கோல் அடித்து அசத்தினார்.
அதிரடி தாக்குதல்:
இரண்டு கோல் பின்தங்கிய நிலையில், கிரீஸ் அணியினர் அடுத்தடுத்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், இவர்களது இலக்கு இல்லாத தாக்குதல்கள் பலன் அளிக்கவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணி அசத்தல் வெற்றி பெற்றது. கடந்த 2004ல் "யூரோ' சாம்பியன் பட்டம் வென்று, தரவரிசையில் 13வது இடத்திலுள்ள கிரீஸ் அணி, 47வது இடத்திலுள்ள தென் கொரியா அணியிடம், கிரீஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது.
முதல் நாளில் மெக்சிகோ-தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ்-உருகுவே இடையிலான போட்டிகள் "டிரா' வில் முடிந்தன. இதையடுத்து இத்தொடரின் முதல் வெற்றியை தென் கொரியா பதிவு செய்தது.
அடுத்த வாய்ப்பு:
 "பி' பிரிவில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள தென் கொரிய அணி, அடுத்து அர்ஜென்டினா (ஜூன் 17), நைஜீரியா (ஜூன் 23) அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. இதில் ஒரு போட்டியில் வென்றால், இரண்டாவது முறையாக உலக கோப்பை வரலாற்றில், "ரவுண்ட்-16' சுற்றுக்கு முன்னேறலாம்.

Friday, June 11, 2010

தென் ஆப்ரிக்க பிடியில் தப்பியது மெக்சிகோ: முதல் போட்டி "டிரா'

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ அணிகள் மோதிய உலக கோப்பை தொடரின் முதல் லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது. அனுபவம் வாய்ந்த மெக்சிகோவுக்கு நிகராக ஆடிய தென் ஆப்ரிக்கா அணி, அசத்தல் துவக்கம் கண்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் "ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ அணிகள் மோதின.
மெக்சிகோ ஏமாற்றம்:
முதல் பாதியில் மெக்சிகோ அணி வசம் தான் பந்து அதிகமாக இருந்தது. ஆனாலும் "பினிஷிங்' இல்லாததால் கோல் அடிக்க இயலவில்லை. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை மெக்சிகோ வீரர் டாஸ் சான்டாஸ் வீணாக்கினார். மறுபக்கம் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு தர தென் ஆப்ரிக்க வீரர்களும் துடிப்பாக ஆடினர். பந்தை நீண்ட தூரம் "பாஸ்' செய்யமால், "ஷார்ட் பாஸ்' மூலம் நேர்த்தியாக கடத்திச் சென்றனர். 16வது நிமிடத்தில் கிடைத்த "பிரீ-கிக்' வாய்ப்பை இந்த அணியின் ஸ்டீவன் பியன்னார் கோல் "போஸ்டுக்கு' மேலே அடித்து கோட்டை விட்டார். முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
முதல் கோ...ல்:
இரண்டாவது பாதியில் தென் ஆப்ரிக்க அணி எழுச்சி கண்டது. ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் நட்சத்திர வீரரான தஷபாலாலா ஒரு சூப்பர் கோல் அடிக்க, அரங்கில் இருந்த ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டியது. இதையடுத்து தொடரின் முதல் கோல் அடித்தவர் என்ற பெருமையை தஷபாலாலா பெற்றார். தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை பெற்றது.
மெக்சிகோ பதிலடி:
இதற்கு பதிலடி கொடுக்க மெக்சிகோ அணியினர் கடுமையாக போராடினர். ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் இந்த அணியின் ராபா மார்கஸ் அசத்தல் கோல் அடிக்க, போட்டி 1-1 என சமநிலையை எட்டியது. ஆட்டத்தின் கடைசி 90வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்காவின் மபேலா அடித்த பந்து, கோல் போஸ்டில் பட்டு விலகிச் செல்ல, உள்ளூர் ரசிகர்கள் நொந்து போயினர். இறுதியில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா'வில் முடிந்தது.

Friday, June 4, 2010

எச்சரிக்கை-சூறாவளி

அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை
உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)
  
இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!
சூராவளி என்பது என்ன?
சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.
 
சூராவளியின் வேகம்
பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.
சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.
 
சூராவளிடொர்னடோ எவ்வாறு உருவாகிறது
ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும் போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.
 
இந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன?
டொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.
 
இந்த சூராவளி காற்றின் வேகம் என்ன?
வானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.
 
இந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது?
மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.

சூராவளியின் வகைகள் பார்ப்போம்

SUPERCELL TORNADOES (சூராவளி மேகங்களுடன்)

இந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும்.  ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 

LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)

நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூராவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

GUSTNADO (கஸ்டனாடோ சூராவளி)

இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூராவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு  மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.
 

WATERSPOUT (நீரில் ஏற்படும் சூராவளி)

வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூராவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூராவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூராவளிகளின் வடிவ மேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான்.  இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.
 

DUST DEVILS

இந்த வகை சூராவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூராவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூராவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.
 
FIREWHIRLS
நெருப்புச் சுறாவளிகள் அதாவது சூராவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூராவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.
இந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெரும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும்.
 
அல்லாஹ் அருள்மறையில் விவரிக்கும் சூராவளியின் தாக்கம் பற்றி மீண்டும் ஒருமுறை படித்து நல்லுணர்வு பெற முயலலாமே
 உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266) 
 
 இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இந்த சூராவளிகளும் ஆதாரமாக திகழ்கிறது! எனவே இந்த உண்மைகளை அறிந்த நீங்கள் எப்போது இஸ்லாத்திற்குள் வருவீர்கள்!

BY MOHAMED YOUSUF ALI
    PHILADELPHIA USA 

Thursday, June 3, 2010

பயன்படுத்திக்கலாமே

மனப் பிறழ்வு, மனக் குழப்பம் ஆகிய உளவியல் சார்ந்த நோய்களுக்கு உரிய ஆலோசனைகளும் மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் முனைவர் அப்துல்லாஹ் வழங்கி வருகிறார். அணுக வேண்டிய முகவரி:

Prof. Dr. Abdullah (Periyar Dhasan),
109, Mahalakshmi Nagar,
Thiruverkadu, Chennai 600077
Tamilnadu, India
Tel : 044-26801919; Cell : +91-9444146444
Email : vperiyardhasan@yahoo.com

Wednesday, June 2, 2010

எதிர்க்குரல்


This article has been updated at 18.30 hrs, 30th may 2010.
Few more information added at the end of this article.
இந்த பதிவின் இறுதியில் சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் --- குர்ஆன் 2:42

பரிணாமவியல் என்ற ஆதரமற்ற, அறிவியலுக்கு ஒத்துவராத, Hypothesis (Educated Guess) ஆக கூட இருக்க தகுதியில்லாத ஒரு கொள்கை எப்படி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமாய் இருந்தது என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம். 

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவிலிருந்து, பரிணாமம் என்ற கோட்டை எத்தகைய கற்பனைகளால் கட்டப்பட்டது என்று பார்ப்போம். 

பதிவிற்கு செல்லும் முன் ஒரு சிறு விளக்கம். பரிணாமம் என்பது ஒரு பொதுவான சொல் (Evolution in a broader sense means a merely change).  அது பலவற்றையும் குறிக்கும், eg. galaxies, languages, and political systems etc. ஆனால் பரிணாமம் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது உயிரியல் பரிணாமம் (Biological Evolution) தான். அதாவது, இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்று விளக்க முயற்சிக்கும் உயிரியல் பரிணாமம் தான். 

இப்போது பதிவிற்கு செல்வோம்....


உயிரியல் பரிணாமம் என்றால் என்ன? 

ஒரு நிமிஷம்.....பதில் சொல்லுவதற்காக இந்த கேள்வியை கேட்கவில்லை. உண்மையிலேயே பரிணாமம் என்றால் என்னவென்று உங்களிடம் தான் கேட்கிறேன். 

What is the definition of Evolution? or Define Evolution?  

பரிணாமவியலின் உள்ளே சென்று பார்த்தால் தான் குளறுபடிகள் என்றால், பரிணாமம் என்ற தலைப்பை விளக்குவதிலேயே பல குளறுபடிகள்.   

"படிப்படியாக" உயிரினங்கள் மாறியிருக்கும் என்று சொல்லுவார்களே, அவையெல்லாம் பரிணாமத்தின் விளக்கம் இல்லையாம். என்ன குழப்பமாக இருக்கிறதா?. பரிணாமவியல் என்றாலே குழப்பங்களின் கூடாரம் தானே!  இந்த பதிவில் மற்றொரு குழப்பத்திற்கும் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.  

விஷயத்திற்கு வருவோம். ஏன் அந்த விளக்கம் தவறு?   

1. பரிணாமத்தின் மிகப் பெரிய ஆதரவாளரான Talk Origins தளத்தின் படி, "பரிணாமம் என்றால் என்ன"வென்று ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி (Oxford Concise Science Dictionary) சொல்லுகிறதென்றால்,   

"evolution: The gradual process by which the present diversity of plant and animal life arose from the earliest and most primitive organisms, which is believed to have been continuing for the past 3000 million years" - Oxford Concise Science Dictionary.   
"பரிணாமம்: தற்காலத்திய, பல்வேறு வகைப்பட்ட தாவர வகைகளும், மிருகங்களும் எப்படி மிகப் பழங்கால உயிரினங்களிருந்து படிப்படியாக வந்திருக்கும் என்று கூறுவது பரிணாமம். இது கடந்த முப்பதாயிரம் லட்சம் ஆண்டுகளாக தொடர்வதாக நம்பப்படுகிறது" - Oxford Concise Science Dictionary

இந்த விளக்கம் சரியா? தவறா? 

உங்களில் பலர், ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி சரியாகத் தானே கூறுகிறது என்று நினைக்கலாம். அங்குதான் பிரச்சனையே...

Talk Origins தளம் என்ன தெரியுமா கூறுகிறது? ஒரு அறிவியல் அகராதி இப்படி விளக்கியிருப்பது  மன்னிக்க முடியாததாம்.  

"This is inexcusable for a dictionary of science" - Talk Origins

அதாவது, பரிணாமவியலை பலமாக ஆதரிக்கும் இந்த தளத்தை பொறுத்தவரை, அந்த விளக்கம் தவறானது. அவர்களைப் பொறுத்தவரை இந்த விளக்கம் பரிணாமத்தின் வரலாற்றை தான் பேசுகிறதாம், பரிணாமம் என்றால் என்னவென்று விளக்கவில்லையாம். அதுமட்டுமல்லாமல் "படிப்படியாக" என்ற வார்த்தை பரிணாமத்தை விளக்க வரக்கூடாதாம். 

"...it specifically includes a term "gradual process" which should not be part of the definition. More importantly the definition seems to refer more to the history of evolution than to evolution itself" - Talk Origins

இப்போது நம்மிடத்தில் எழும் சில கேள்விகள், 
  • ஒரு அறிவியல் அகராதியே இப்படி தவறாக எழுதியிருப்பது எதனால்? 
  • இதை எழுதுவதற்கு முன் அவர்கள் பரிணாமவியலாளர்களிடம் கருத்து கேட்கவில்லையா? 
  • அவர்களுக்கு பரிணாமம் என்றால் என்னவென்று புரியவில்லையா? அல்லது விளக்கத் தெரியவில்லையா?  
  • இப்படி தவறான ஒரு தகவலை தந்து மக்களை ஏமாற்றுகிறதா ஆக்ஸ்போர்ட் அகராதி? 
  • இல்லை, Talk Origins தளம் தவறா?   


தயவு கூர்ந்து துறைச்சார்ந்த சகோதரர்கள் பதிலளியுங்கள். 

Talk Origins தளம் இத்தோடு நின்று விடவில்லை. மற்ற பிரபல அகராதிகளான Webster's மற்றும் Chambersசும் தவறாம். இவைகளின் விளக்கம் ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதியை விட மோசமாம். 

"evolution: ...the doctrine according to which higher forms of life have gradually arisen out of lower.." - Chambers
"evolution: ...the development of a species, organism, or organ from its original or primitive state to its present or specialized state; phylogeny or ontogeny" - Webster's    

நான், எங்கள் நகர பொது நூலகத்தில் உள்ள Academic American Encyclopedia வில் இது குறித்து  பார்த்தது பின்வருகிறது. இதனுடைய விளக்கமும் ஆக்ஸ்போர்ட் அகராதியை போலத்தான் இருக்கிறது.   

"Evolution is the process by which all living things have developed from primitive organisms through changes occurring over billions of years, a progression that includes the most advanced animals and plants" - Academic American Encyclopedia, Vol-7, p-318. 

இப்போது நம்முள் எழும் சில கேள்விகள், 
  • எப்படி இத்தனை பிரபல அகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள் (Encyclopedia) தவறான விளக்கத்தை தந்திருக்கின்றன? 
  • ஒருவேளை, Talk Origins தளத்தினுடைய வாதம் தான் தவறா? 


அதெல்லாம் சரி, இவையெல்லாம் தவறான விளக்கமென்றால் சரியான விளக்கம் தான் என்ன? 

இதற்கு talk origins தளம் என்ன பதில் சொல்லுகிறது?



2. பிரபல பரிணாமவியலாரான Douglas J.Futuyma அவர்கள் கூறிய ஒரு விளக்கத்தை கூறுகிறது இந்த தளம். அது என்ன விளக்கம்? 

"Biological evolution ... is change in the properties of populations of organisms that transcend the lifetime of a single individual. The ontogeny of an individual is not considered evolution; individual organisms do not evolve. The changes in populations that are considered evolutionary are those that are inheritable via the genetic material from one generation to the next. Biological evolution may be slight or substantial; it embraces everything from slight changes in the proportion of different alleles within a population (such as those determining blood types) to the successive alterations that led from the earliest protoorganism to snails, bees, giraffes, and dandelions." - Douglas J. Futuyma in Evolutionary Biology, Sinauer Associates 1986. 

மேலே உள்ளதை சுருக்கமாக விவரிக்க வேண்டுமென்றால், 

"Evolution is a process that results in heritable changes in a population spread over many generations" - Talk Origins website.
"பல தலைமுறைகளுக்கு மக்கள் தொகையில் ஏற்படும் பரம்பரை மாற்றங்களின் விளைவுகளே பரிணாமம்" - Talk Origins website   
(மொழிபெயர்த்துள்ள இந்த வாக்கியம் சரியா?, தவறென்றால் சரியான மொழிபெயர்ப்பை தரவும். திருத்திக் கொள்ளப்படும்)

நாம் மேலே பார்த்த யாவையும் talk origins தளத்தில் எழுதியது Lawrence A. Moran அவர்கள். அவருடைய இந்த பதிவு நீட்டிக்க பட்ட போது (V2.15, 2006) அதில், Douglas J. Futuyma அவர்களின் குழு, 1997 ல் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் தவறென்கிறார் அவர். 

அதாவது 1986ல் Douglas J. Futuyma அவர்கள் கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997 ல் அவர் தலைமையில் இருந்த குழு கூறிய விளக்கம் தவறு. 

சற்று விளக்கமாக சொல்லுவதென்றால், 1997ல் பரிணாமம் குறித்த ஒரு அறிக்கை அளிப்பதற்காக Douglas J. Futuyma அவர்களின் தலைமையில் இருபது அறிவியலாளர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இறுதியாக சமர்ப்பித்த அறிக்கையில், "பரிணாமம் என்றால் என்ன" என்ற கேள்விக்கு விளக்கமாக பின்வரும் பதில் வருகிறது, 

"Biological evolution consists of change in the hereditary characteristics of groups of organisms over the course of generations. From long-term perspective, evolution is the descent with modification of different lineages from common ancestors. From a short-term perspective, evolution is the ongoing adaptation of organisms to environmental challenges and changes." - Final Draft, a group of twenty scientists chaired by Douglas J. Futuyma issued a working draft of a "white paper" on Evolution, Science, and Society, 1997. 

இந்த விளக்கத்தை பற்றி கருத்து தெரிவிக்கும் Lawrence A. Moran அவர்கள், இந்த விளக்கத்தின் ஒரு பகுதி துருதிஷ்டவசமானது என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல்,  Douglas J. Futuyma அவர்களின் குழு பரிணாமம் குறித்து அளித்த விளக்கம் தவறு என்கிறார் அவர். 

"This last sentence is really unfortunate. These twenty scientists have now agreed to a definition that specifically mentions the mechanism of adaptation. This is not how one should define evolution. One wonders whether they mean to exclude random genetic drift or whether they simply lost sight of their goal in trying to work out a compromise definition" -  Lawrence A. Moran

ஆக, 1986ல் Douglas J. Futuyma அவர்கள் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997ல் அவர் சார்ந்த குழு கூறிய விளக்கம் தவறு. 

இது என்ன குழப்பம்? 

இப்போது நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்,

  •  Douglas J. Futuyma போன்ற பெரிதும் மதிக்கத்தக்க ஒரு பரிணாமவியலாளர் ஏன் இருவேறு விளக்கங்களை தர வேண்டும்?  
  • இந்த இரு விளக்கங்களில் எது சரி? எது தவறு? 

ஆக மொத்தத்தில் "பரிணாமம் என்றால் என்ன" என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. தலைப்பிலேயே இவ்வளவு குழப்பங்களா? 

இத்தனை வருடங்களாக "(உயிரியல்) பரிணாமம்" என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் இல்லாமல் இருப்பது நன்றாகவா இருக்கிறது? 

அதனால், துறைச்சார்ந்த சகோதரர்கள் இதை படிக்க நேர்ந்தால் பரிணாமத்திற்கு தெளிவான "Definition" யை ஆதாரங்களுடன் தாருங்கள். 


ஆனால் இதிலும் ஒரு பிரச்சனையுள்ளது. என்னவென்றால், அறிவியலாளர்களுக்குள்ளாகவே இது குறித்து குழப்பங்களாம்.
"confusion among scientists themselves about how to define such an important term" - Talk Origins
"முக்கியமான இந்த சொல்லை விளக்குவதில் அறிவியலாளர்களுக்குள்ளாகவே குழப்பங்கள் இருக்கின்றன" - Talk Origins   

அடடா, என்னவொரு தெளிவாக, ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே குழப்பங்களாம்....
  •  பரிணாமம் என்ற conecpt க்கு உண்டான definition னிலேயே இவ்வளவு பிரச்சனைகளா? 
  • ஏன் சரியாக விளக்க முடியவில்லை? 
  • அவர்களுக்கே புரியவில்லையா? 

புரியாத புதிர்தான்...



ஒரு நிமிஷம், நீங்கள் விடைபெறுவதற்கு முன் ஒரு சிறு கேள்வி. தற்போதைய ஆக்ஸ்போர்ட் விலங்கியல் அகராதி (Oxford Dictionary of Zoology, Indian Edition, 2008 sixth impression, p-198) இது குறித்து என்ன தெரியுமா கூறுகிறது?..................     



இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.   

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 


My Sincere thanks to: 
1. Talk Origins website
2. Br. Lawrence A.Moran. 

Source of Information: 
1. http://www.talkorigins.org/faqs/evolution-definition.html
2. http://bioinfo.med.utoronto.ca/Evolution_by_Accident/What_Is_Evolution.html

References: 
1. What is Evolution - Talk Origins
2. Evolution - Academic American Encyclopedia, Vol-7, p-318.
3. Evolution - Oxford Dictionary of Zoology, Indian Edition, 2008 sixth impression, p-198


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ    

நன்றி 
http://ethirkkural.blogspot.com/

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!