Friday, October 31, 2014

அவதூறு...!

திண்ணைப் பேச்சாளர்களின்
புலம்பல்கள்!
உனக்கு தெரியுமா?
சோற்றுக்கு வழி இல்லாமல்
அலைந்தானே இன்று
அவனுக்கு வீடு என்ன?
கார் என்ன?


அவன் மனைவியை பார்த்தியா?
கருகமணிக்கு வழி இல்லாமல்
இருந்தாளே அவள்தான்!
அவள் மணிக்கட்டு முதல்
முழங்கை வரை தங்கம்
தங்கமா? தங்க வளையல்
கழுத்து முழுதும் மாலைகள்
ஹூம்.... நானும்தான் இருக்கேன்
கையில் கழுத்தில் எதுவும் இல்லாமல்!


தெரியுமா? சேதி
அந்த வீட்டில் ஒரே சண்டையாம்
சண்டைக்கு என்ன காரணமாம்
அதை ஏன் கேட்கிறே
அது பெரிய கதை
நானே சுவற்றில் காதை
வைத்து கேட்டேன்!

அவன் அவளை பார்த்தானாம்
இவள் அவனை பார்த்தாளாம்!
நானும் கேள்விப்பட்டேன்!
இப்ப அவனோடு
அவள் ஓடி விட்டாளாமே!


என்ன கொடுமை!
இப்படி அவதூறு பேசும்
திண்ணை கூட்டங்களிடம்
ஒரு மூட்டை அரிசியை கொடுத்து
மூட்டையில் எத்தனை அரிசி
உள்ளது என்று எண்ணி சொல்லுங்கள்
என்ற வேலையை கொடுக்கலாம்!


சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு
அவதூறை பரப்பிக் கொண்டு
இருப்பவர்கள்
குர்ஆனிலும் , நபிமொழியிலும்
உள்ள எச்சரிக்கையை
மனதில் வைக்கட்டும்!


ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை என்பது கசையடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் : 24:4)

நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன்: 33:58)

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் : 24: 23)

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 49:6)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

'அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'

என்று (பதில்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்(ஸஹீஹுல் புகாரி: 2766

'புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது,

'அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்' என நபித்தோழர்கள் கூறினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் 'புறம்' ' என்றார்கள்.

நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)'

என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்'  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

அலாவுதீன் S.

http://adirainirubar.blogspot.com/2014/10/blog-post_82.html?showComment=1414780953895#c5301558155417642446

Thursday, October 30, 2014

அநியாயக்காரன் யார்?

அநியாயக்காரன் யார்?


[6:21]     அல்லாஹ்வைப் பற்றிக் கற்பனையாகப் பொய் கூறியவனை விடவோ, அவனுடைய வசனங்களைப் பொய்யாக்கியவனைவிடவோ அநியாயக்காரன் யார்? நிச்சயமாக இந்த அநியாயக்காரர்கள் வெற்றி அடையமாட்டார்கள்.

THE QURAN

Wednesday, October 29, 2014

பெருமை பிடித்தவன் அல்லாஹ் !

பெருமை பிடித்தவன் அல்லாஹ் 

 தொடரும் 1

இது என்னப்பா தலைப்பு தொடரும் னு போட்டிருக்கீங்கன்னு சந்தேகம் வரலாம்.இதுக்கு காரணம் வேற ஒன்னும் இல்லீங்க,பொதுவா ஒரே விஷயத்த போட்டு அலசுறத விட,கதம்பமா என்ன சப்ஜக்ட் பத்தியும் அலசுனா என்னா என்ற யோசனையில் வந்த தலைப்பே தொடரும் என்பது.

சரி இனி விஷயத்துக்கு வரலாம்.

பொதுவா,மனுஷனை இறைவன் அழகான படைப்பாக படைத்துள்ளதா சொல்றான்.அது போல அந்த மனுஷாலுக்கு பலஹீனத்தையும் வச்சே படசிருக்கான்.மிருகங்களுக்கு நாலு கால்கள் வச்ச இறைவன்,மனிதனுக்கு ரெண்டு கால்கள் வச்சி,அற்புதமான முறையில நடக்க விட்டிருக்கான்.ஆனால்,நம்மள விட வலுவான மிருகங்கள் ரெண்டு கால்களால் நடக்க இயலாது.இப்படி,எண்ணற்ற பிளஸ் பாயிண்ட்கள் நமக்கு உண்டு.அதுல ஒண்ணுதான் பகுத்து அறியும் தன்மையும்.

அது போல தான்,நமக்குள்ள நிறைய பலஹீனங்கள் இருப்பதும்.என்னதான்,நாம உயர்ந்த படைப்பா இருந்தாலும்,நமக்குள்ள நிறைய பலஹீனங்களை வச்சியே அல்லாஹ் படைத்துள்ளான்.இப்பிடி - பல கோணங்களில் - வகைகளில் நாம் பலஹீனமான படைப்பா இருக்கிறோம்.உதாரணமா,நமக்கு வருகிற மறதி,நோய்,வயோதிகம்,மரணம்,வறுமை இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.என்னதான் மனிதன்,செல்வந்தனாக,திடகாத்திரமானவனாக,வாலிபனாக இருந்தாலும் - இறுதியில் - ஒரு நேரத்தில் எல்லாமே மாறிப் போகும்.ஆக,கடைசியில் எல்லாமே பலஹீனமாக மாறிப் போய் விடும்.

ஆனால்,இந்த பலஹீனமான ஒரு விஷயத்தையே நாம் மறந்து விட்டு,திமிராக நடப்பதும்,பெருமை கொள்வதும்,ஏழைகளை,எளியவர்களை நசுக்குவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.உண்மையில் சொல்லப் போனால்,தெளிவாக சிந்தனை செய்து பார்த்தால்,திமிராக - பெருமையாக நடப்பதற்கு நமக்கு எள் முனை அளவு கூட உரிமை உள்ளதா என்றால்,அறவே கிடையாது என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

சரி,அப்படி திமிராக இருக்கவும்,பெருமைக்கு உரிமை உள்ளவனாகவும் தகுதி உள்ளவன்,மற்றும் கருவமாக இருக்கவும்  யாருக்கும் உரிமை  உண்டா? என்றால் ஆம் உண்டு.

அப்படியென்றால்,அந்த பெருமைக்கு,திமிருக்கு,கர்வததுக்கு  உரிமையானவன் யார்?

அவன்தான் ஏக இறைவன் (அல்லாஹ்).

7:40. எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.

திருக் குர் ஆன்

149. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை உள்ளதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book :1


 நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொன் மொழி


Saturday, October 25, 2014

(கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ...


170. மனிதர்களே! இத்தூதர் (முஹம்மத்) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளார். எனவே நம்பிக்கை கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்தால் வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

171. வேதமுடையோரே!27 உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ்92 அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார்.90 எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்!459விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன்.10 வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.


172. மஸீஹும்,92 நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள்.459 அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.


173. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு (இறைவன்) முழுமையாக வழங்குவான். தனது அருளை அதிகமாக அளிப்பான். (அடிமைத் தனத்திலிருந்து) விலகிப் பெருமையடிப்போரைத் துன்புறுத்தும் வகையில் தண்டிப்பான். அல்லாஹ்வையன்றி தங்களுக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவர்கள் காண மாட்டார்கள்.


174. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்று வந்துள்ளது. உங்களிடம் தெளிவான ஒளியையும் அருளியுள்ளோம்.


175. அல்லாஹ்வை நம்பி அவனைப் பற்றிப் பிடித்துக் கொண்டோரைத் தனது அன்பிலும், அருளிலும் அவன் நுழையச் செய்வான். அவர்களுக்கு தன்னை நோக்கி நேரான வழியையும் காட்டுவான்.


Thursday, October 23, 2014

குர்ஆன் மொழி பெயர்ப்புடன் ஓத

                 

                       குர்ஆன் மொழி பெயர்ப்புடன் ஓத

                         http://quran.com/1


                                         குர்ஆன் மொழி பெயர்ப்புடன் ஓத - tanzil
                         

                      http://tanzil.net/#19:1

                              குர்ஆன் ஆடியோ 

                                    http://www.all-quran.com/

Tuesday, October 21, 2014

நெகிழவைத்த அன்புப் பரிமாற்றம்

 உலகம் முழுக்க முஸ்லிம்கள் தியாகத் திருநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் சில ஆஸ்திரேலிய சகோதரிகள் சத்தமில்லாமல் ஒரு நல்ல செயலில் இறங்கினார்கள். பூரண ‘ஹிஜாப்’ தரித்து (உடல், தலையை மறைக்கும் ஆடை) அவர்கள், முஸ்லிம் பெண்களுக்கு மலர்ச் செண்டுகளை வழங்கி தங்கள் பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? முஸ்லிம்களுக்கு எதிராகத் தங்கள் நாட்டில் ஏற்பட்டுவரும் கசப்புணர்வைக் களையவும், சக முஸ்லிம் பெண்களுடன் நல்லிணக்கம் பேணவும் இந்தச் செயலில் இறங்கியவர்கள் பெண்கள்.

அனைவரும் முஸ்லிம் அல்லாத ஆஸ்திரேலியப் பெண்கள்! மலர்ச் செண்டுகளை அளித்து பெருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தவறான பிரச்சாரத்துக்கும் கசப்புணர்வுக்கும் அவர்கள் வருத்தமும் தெரிவித்திருக்கிறார்கள். “நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம். வெறுப்புக்கு பதிலாக நாம் அன்பை பறிமாறிக் கொள்வோம்” என்று ஆறுதலும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய முஸ்லிம் பெண்களுடனான நல்லிணக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் 26 வயதாகும் அன்னாபெல்லி லீ. “அன்பையும், ஒற்றுமையையும் தோற்றுவிப்பதே இதன் நோக்கம்” என்கிறார் அன்னாபெல்லி.

ஆஸ்திரேலியாவில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் வசித்துவருகிறார்கள். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடி. இதில் முஸ்லிம்களின் பங்கு 1.7 சதவீதம். செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு ஆஸ்திரேலிய முஸ்லிம்களின் நாட்டுப்பற்று கேள்விக்குறியானது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த மாதம் ஆஸ்திரேலிய காவல்துறையினர் வடமேற்கு சிட்னியில் 15 பேரை கைது செய்தது இன்னும் பிரச்சினையை மோசமாக்கியது.

இதைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்ததோடு குயின்ஸ்லாந்தின் வழிப்பாட்டுத்தலம் ஒன்றும் தாக்கப்பட்டது. அந்நாட்டின் தலைமை இமாமும் அச்சுறுத்தலுக்கு ஆளானார்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தன. மூன்று வாரத்தில் பெண்கள் மீதான 30 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக ஹிஜாப் அணிந்து செல்லும் பெண்கள் தாக்கப்படுகின்றனர் அல்லது பொது இடங்களில் அவமதிக்கப்படுகின்றனர். பெண்கள் வெளியில் தனியே செல்ல முடியாமல் பாதுகாவலர்களுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படியொரு சூழ்நிலையில் அன்பையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்விதமாக முஸ்லிம் அல்லாத பெண்கள் ஹிஜாப் அணிந்து பெருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டது தங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது என்கிறார்கள் ஆஸ்திரேலிய முஸ்லிம் பெண்கள். நல்லதொரு மாற்றத்துக்கு வழி வகுத்திருக்கும் இந்தப் பெண்கள் பாராட்டுக்குரியவர்களே.

- இக்வான் அமீர்

http://tamil.thehindu.com/society/women/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article6515529.ece?homepage=true

Monday, October 20, 2014

தெற்காசியாவின் மதச்சார்பின்மை

 இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் தங்கள் சிறுபான்மையினரை எப்படி நடத்துகின்றன?

‘சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு) அமைப்பின் உறுப்பு நாடுகளில் பரப்பளவு, மக்கள்தொகை, மொத்த தேசிய உற்பத்தி மதிப்பு ஆகியவற்றில் இந்தியாதான் மிகப் பெரிய நாடு. ஏனைய நாடுகளைவிட சிறப்பானதொரு அம்சமும் இந்தியாவிடம் இருக்கிறது; குறிப்பிட்ட எந்த ஒரு மதத்துடனும் இந்தியா தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் அது.

பூடான், இலங்கை ஆகிய இரண்டுக்குமே பவுத்தம்தான் அதிகாரபூர்வ மதம். பாகிஸ்தான், இஸ்லாமியக் குடியரசு. மாலத்தீவில் சன்னி முஸ்லிம் பிரிவுதான் அதிகாரபூர்வ மதம். 2008 வரையில் நேபாளம் இந்து நாடாக இருந்தது. 1971-ல் உதயமான வங்கதேசம் மதச்சார்பற்ற குடியரசு நாடாக இருந்தது. 1980-களில் ஜெனரல் எர்ஷாத் அதிபராக இருந்தபோது, அதன் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு இஸ்லாத்துக்கு உரிமைமிக்க தனியிடம் கிடைத்தது. இந்த நாடுகளைப் போல அல்லாமல் இதுவரை இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது.

ஆனால், நம்முடைய அரசியல் சட்டம் மதச்சார்பற்ற தன்மையைப் பறைசாற்றினாலும் மத அடிப்படையிலான பேரினவாதம் அசிங்கமான தனது முகத்தை அடிக்கடி காட்டிக்கொண்டிருக்கிறது. 1950-களில் சற்று அமைதி நிலவியது. பிறகு, ஜபல்பூரில் நடந்த இந்து, முஸ்லிம் கலவரத்தால் அது குலைந்தது. 1960-களிலும் 1970-களிலும் உத்தரப் பிரதேசம், பிஹார், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மதங்களுக்கு இடையிலான வன்முறை மோதல்கள் தொடர்ந்தன.

1984-ல் டெல்லியிலும் சில வட இந்திய நகரங்களிலும் இந்திரா காந்தி படுகொலையையொட்டி சீக்கியர்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டனர். 1990-களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த இந்துக்களில் பெரும்பாலான

வர்களை மதஅடிப்படைவாதிகள் தாக்கி வெளியேற்றினர். ராமஜன்ம பூமி இயக்கத்தால் 1980-களிலும் 1990-களிலும் பலர் பலிவாங்கப்பட்டனர். இவற்றின் தொடர்ச்சியாக இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் கலவரங்கள் ஏற்பட்டன. அவற்றில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி முஸ்லிம்களே. 2002-ல் குஜராத்தில் இந்து அடிப் படைவாதிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்றனர், ஆயிரக் கணக்கானவர்கள் வீடிழந்தனர்.

ஆர்எஸ்எஸ் செல்வாக்கு

இந்தியாவின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் இப்போதும் பாதுகாப்பற்றவர்களாகவும் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களாகவும் இருக்கின்றனர். இந்த நிலைமை வெகுவிரைவில் மாறிவிடாது.

பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் பலமடங்கு செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் இயக்கம், இந்து மதவாத அரசை ஏற்படுத்திவிட வேண்டும் என்று துடிக்கிறது.

அந்த இயக்கத்தின் தலைவர், பாஜகவைச் சேர்ந்த சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சமீபத்திய பேச்சுகளில், இந்து பேரினவாத ஆதிக்க உணர்வு வெளிப்படுகிறது. வலதுசாரி இந்துத்துவக் கட்சியின் ஆதிக்கம் காரணமாக இந்திய அரசியல், சமூக வாழ்க்கை ஆகியவற்றின் இயற்கைத் தன்மையே மாறி, மதச்சகிப்புத்தன்மை, பன்மைத் தன்மை ஆகியவற்றிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான்

இந்தியா தனது மதச் சிறுபான்மையோரை நடத்துவது இருவிதமாகவும் இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானோடு ஒப்பிடும்போது இங்குள்ள நிலை பரவாயில்லை. இந்தியாவில் அரசுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் இடையே இடைவெளி இருக்கிறது. பாகிஸ்தானில் அரசே இஸ்லாமியத் தன்மையோடு திகழ்கிறது. அங்குள்ள சிறுபான்மையினத்தவருக்குத் தங்களுடைய இடம் எது என்று தெரியும்; முன்பு, அவர்கள் திட்டமிட்டு வேட்டையாடப்பட்டதில்லை. ஆனால், பாகிஸ்தானில் (1977-88) அதிபர் ஜியா உல் ஹக் பதவிக் காலத்தில் இஸ்லாமியமயமாதல் விரைவுபெற்றது. ஷரியத் சட்டம் தேசியச் சட்டமானது. சிறுபான்மைச் சமூக மக்களின் வாயை அடைக்க அவர்கள் மீது மதநிந்தனை வழக்குகள் போடப்பட்டன. அகமதியர்கள் இஸ்லாமியர் அல்லாதோராக அறிவிக்கப்பட்டனர். வஹாபிய பாணியில் இஸ்லாத்தைப் போதிக்கும் ஏராளமான மதரசாக்கள் வளைகுடா நாடுகளிலிருந்து கிடைத்த நன்கொடைகள் மூலம் தொடங்கப்பட்டன. சன்னி முஸ்லிம்கள் முதலில் இந்துக்கள், கிறிஸ்தவர்களைக் குறிவைத்தனர். எண்ணிக் கையில் குறைவாக இருந்ததால், அவர்கள் எளிதாக அடக்கப்பட்டனர். பிறகு, அவர்களுடைய கவனம் ஷியாக்கள் மீது சென்றது. ஒருகாலத்தில் ஷியாக்களும் அரசியலிலும் தொழிலிலும் ஆதிக்கம் செலுத்தினர். முகம்மது அலி ஜின்னாவே ஷியாதான். சமீப காலமாக ஷியாக்களின் வழிபாட்டிடங்களும் குடியிருப்புகளும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்படுகின்றன. இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தக் கூடாது என்று நம்பும் அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகளும் தாக்கப்படுகின்றனர்.

கிழக்கு பாகிஸ்தான்

நாடு சுதந்திரம் பெற்றபோது மேற்கு பாகிஸ்தானைவிட கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். 1950-களில் இந்துக்கள் தொடர்ச்சியாக இந்தியாவில் குடியேறினார்கள். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஹஸ்ரத் பால் மசூதியில், நபிகளின் ‘நினைவுப் பொருள்’ காணாமல் போனதாகச் செய்திகள் வந்தவுடன், கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்பட்டனர். மீண்டும் பெரும் எண்ணிக்கையில் இந்துக்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்தனர். அப்படியிருந்தும் வங்கதேச விடுதலைப் போரின்போது 1971-ல் ஏராளமான இந்துக்கள் வங்கதேசத்திலேயே வாழ்ந்தனர். வங்கதேச விடுதலை மத அடிப்படையில் அல்லாமல் மொழி அடிப் படையிலானது என்பதால், இந்துக்களும் ஆயுதம் ஏந்திப் போராடினர்.

வங்கதேசம் பிறந்தபோது மதச்சார்பற்ற நாடாகத்தான் இருந்தது. ரவீந்திரநாத் தாகூரின் பாடலையே தேசிய கீதமாக ஏற்றது. சுதந்திரம் அடைந்த பிறகு 40 ஆண்டுகளாக அங்கு இஸ்லாமியமயமாதல் மெதுவாக நடந்தேறியது. சமீபத்திய காலத்தில் அது வன்செயல்களுடன், பாகிஸ் தானைப் போலவே அரங்கேறுகிறது.

இலங்கை

இலங்கையிலும் அரசியல் மோதலானது மத அடிப்படையில் அல்லாமல் மொழி அடிப்படையில்தான் தொடங்கியது. தெற்கில் வாழ்ந்த சிங்களர்கள், வடக்கில் வாழ்ந்த தமிழர்களின் பொருளாதார வளத்தைக் கண்டு அஞ்சினார்கள். எனவே, சிங்களம் தெரிந்தால்தான் கல்லூரியில் படிக்க முடியும்; அரசு வேலையில் சேர முடியும் என்று கட்டாயப்படுத்தினார்கள். இதுவே, தமிழர், சிங்களர் மோதலுக்கான மூல காரணம்.

இந்த மோதல் உச்சத்தில் இருந்தபோது 1972-ல் இலங்கை அரசின் தேசிய மதமாக பவுத்தம் அறிவிக்கப் பட்டது. தமிழர்களில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ் தவர்கள் இருந்தனர், பவுத்தர்கள் யாருமில்லை. மதப் பேரினவாதம் மொழிப் பேரினவாதமாகியது. இலங்கை ராணுவத்துக்கு சிங்கள பவுத்த சன்யாசிகள் ஆதரவாளர்களாக மாறினார்கள். தமிழர்களைக் கடுமை யாக ஒடுக்குமாறு தூண்டினர். 2009 போருக்குப் பிறகு எதேச்சாதிகார அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாளர் களாகினர், சிங்கள பவுத்தத் துறவிகள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களைக் கடுமையாகத் தாக்கினார்கள் பவுத்தர்கள்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் சகிப்புத்தன்மை மிக்க வர்கள் அல்ல. அவர்களும் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஆகிய ஊர்களில் முஸ்லிம்களையும் அவர்களுடைய வீடுகளையும் மசூதிகளையும் தாக்கினர். தமிழ் கிறிஸ்தவர்களும் அலைக்கழிக்கப்பட்டனர். சிங்களர், தமிழர் வாக்குவாதத்தை பவுத்தர், இந்து மோதலாக விடுதலைப் புலிகள் மாற்றினார்கள்.

பூடான்

சார்க் நாடுகளிலேயே பூடான்தான் அமைதியான, இயற்கை அழகு நிறைந்த நாடு. ஆனால், பவுத்த அடை யாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அந்த நாடும் 1990-களில் ஏராளமான இந்துக் குடும்பங்களைத் தங்கள் நாட்டிலிருந்து நேபாளத்துக்கு விரட்டியது பலருக்கும் தெரியாது.

நேபாளம்

19-வது, 20-வது நூற்றாண்டுகள் முழுக்க நேபாளம் இந்து நாடாகவே திகழ்ந்தது. அந்நாட்டு மன்னர், பூவுலகில் விஷ்ணுவின் பிரதிநிதியாகவே கருதப்பட்டார். 2008-ல் மன்னராட்சி முறை கைவிடப்பட்டு மதச்சார்பற்ற குடியரசு நாடாகியது நேபாளம். தெற்காசிய நாடுகளிலேயே மத மோதல்கள் மிகக் குறைவாக நடந்தது நேபாளத்தில்தான். சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு நிலஉடைமையாளர்களுக்கும் நிலமற்றவர்களுக்கும் இடையே, மலைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சமவெளி மக்களுக்கும் இடையே, பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதாருக்கும் இடையேதான் மோதல்கள் நடைபெறும்.

தெற்காசியாவில் இந்தியாவும் இலங்கையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கொண்ட ஜனநாயக நாடுகளாக வெகுகாலம் திகழ்ந்தன. இப்போது பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளமும் அந்த வரிசையில் சேர்ந்திருக்கின்றன. பூடானில்கூட தேர்தல் நடந்திருக்கிறது. முதல்முறையாக சார்க் அமைப்பின் எல்லா நாடுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தான் பதவியில் இருக்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இருப்பதாலேயே மக்களிடையே சமத்துவம் ஏற்பட்டுவிடவில்லை. வறுமை யும் ஏற்றத்தாழ்வும் பெரிதாக இருக்கிறது. மொழி, மதம் ஆகிய காரணங்களாலும் மக்களிடையே வேறுபாடு காட்டப்படுகிறது. பாகிஸ்தானில் ஒரு இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ ஷியாவாகவோ இருப்பதும், இலங்கையில் இந்துவாகவோ முஸ்லிமாகவோ இருப் பதும், வங்கதேசத்தில் இந்துவாகவோ பவுத்தராகவோ இருப்பதும், இந்தியா, நேபாளத்தில் முஸ்லிமாக இருப்பதும் சிரமம்தான்.

- ராமச்சந்திர குஹா, ‘இந்தியா ஆஃப்டர் காந்தி’ உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர்;

தமிழில்: சாரி

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/article6517432.ece

Thursday, October 16, 2014

முஸ்லிம்களின் நிலை!ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !!

 நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் வீணாகப் போய் கொண்டிருப்பதாகவும், அதை முறையாகப் பயன்படுத்தினால் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கும் எனவும் இது குறித்து ஆய்வு செய்த மதிப்பீட்டுக் குழு சமீபத்தில் மத்திய அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி சச்சார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, முஸ்லிம்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தி அளித்த பரிந்துரை யில், நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் குறிப் பிட்டிருந்தது.

இதற்காக, டெல்லி ஜவாஹர் லால் நேரு பல்கலைக்கழக பேரா சிரியர் அமிதாப் குண்டு தலைமை யில் இதுதொடர்பாக குழு அமைக் கப்பட்டது. இந்த மதிப்பீட்டுக் குழு, தனது அறிக்கையை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்ச ரான நஜ்மா ஹெப்துல்லாவிடம் சமர்ப்பித்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் சிறுபான்மை நலத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்ச கத்திடம் உள்ள ஆவணங்களின்படி, மத்திய அரசு மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள், 1,053 தனியார்களால் 18,388 சொத்துகள் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஒரு வருடத் தில் சுமார் ஏழு சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்களில் பெரும்பா லானவை மீது நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இவை களை விரைந்து முடிப்பதுடன், அந்த சொத்துகளை முறையாகப் பயன்படுத்தினால் வக்பு வாரியத் துக்கு கோடிக்கணக்கான வரு மானம் கிடைக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுமார் இரண்டு லட்சம் எண்ணிக்கையில் சொத்துகள் இருந்த போதும் சுமார் 160 சொத்துகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அறிக்கை வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/india/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article6506929.ece?homepage=true

Monday, October 13, 2014

இந்திய மாணவர்களுக்குத் தவறான பாடம்

 இந்தியாவின் இளைய சமுதாயத்துக்குப் பிரகாசமான எதிர்காலத்தை வழங்கப்போவதாகப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருக்கிறார். 25 வயதுக்குக் குறைவான 60 கோடி இந்திய இளைஞர்கள் அடிப்படைக் கல்வி மற்றும் கணித அறிவு குறைந்தவர்கள். இந்த நிலையில், அவர்களது கல்வித் தரத்தைப் பெரிய அளவில் முன்னேற்றுவதைப் பொறுத்துதான் மோடி தனது உறுதிமொழியை நிறைவேற்ற முடியும். இதை அவரும் உணர்ந்திருக்கிறார்.

“கல்விதான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கான கருவி; ஏழ்மையை ஒழிக்க மிகச் சரியான ஆயுதம்” என்று மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக குறிப்பிட்டது. கேள்வி என்னவென்றால், மோடி அரசின் கல்விச் சீர்திருத்தம் என்பது, கல்வியறிவும் தொழில் பயிற்சியும் மிக்க தலைமுறையை உருவாக்குவது மட்டும்தானா அல்லது ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தைப் பிரபலப்படுத்துவதா என்பதுதான்!

மத்திய அரசு நிர்வாகத்துக்கு ‘குஜராத் மாதிரி’யைக் கொண்டு வரப்போவதாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி குறிப்பிட்டார். சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அவர் குறிப்பிடுவதாகத்தான் வாக்காளர்கள் பலர் கருதினார்கள். ஆனால், ‘குஜராத் மாதிரி’ என்பதற்கான முக்கியத்துவம் வேறுமாதிரியானது. தீனாநாத் பத்ரா எழுதிய பாடப் புத்தகங்களைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதுதான் அது. இந்துத்துவ, வலதுசாரி சிந்தனைகளுடன் வரலாற்றை மாற்றி எழுதுவதில் முனைப்புடன் செயல்படுபவர் தீனாநாத் பத்ரா.

கடந்த பிப்ரவரி மாதம், வெண்டி டோனிகர் எழுதிய ‘தி ஹிண்டூஸ்: ஆன் ஆல்டர்நேட்டிவ் ஹிஸ்டரி’ புத்தகம் இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி, பெங்குவின் பதிப்பகத்துக்கு அழுத்தம் தந்து, புத்தகத்தின் பிரதிகளைத் திரும்பப் பெற வைத்தார் தீனாநாத் பத்ரா. அவர் எழுதிய பாடப் புத்தகங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்க ஜூன் மாதம் குஜராத் அரசு உத்தரவிட்டது.

சாதாரண விஷயங்களிலிருந்து தீவிரமான கோட்பாடுகள் வரை அவரது போதனைகள் எதையும் அவ்வளவு எளிதில் பொருட்படுத்திவிட முடியாது. உதாரணத்துக்கு, மாணவர்கள் தங்கள் பிறந்த நாளை மெழுகுவத்தி ஏந்தி, கேக் வெட்டிக் கொண்டாடக் கூடாது; ஏனென்றால், அது இந்திய வழக்கம் அல்ல என்று போதிப்பவை அவரது புத்தகங்கள். அத்துடன் வங்காளதேசம், இலங்கை, திபெத், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை உள்ளடக்கிய ‘அகண்ட பாரதம்’ என்று வரைபடம் வரைய அவரது புத்தகங்கள் வலியுறுத்துகின்றன. விமானம், மோட்டார் வாகனங்கள், அணு ஆயுதங்கள் பண்டைய இந்தியாவில் இருந்தன என்று கூறுவதுடன் இந்த ‘உண்மைகளை’ மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்புவதுதான் பிரச்சினைக்குரிய விஷயம்.

1999-ல் பாஜக தலைமையிலான மத்திய அரசு, இந்துத்துவப் பார்வையில் வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி எழுதும் பணியில் பத்ராவை அமர்த்தியது. 2004-ல் ஆட்சியை இழந்த பின்னர், தற்போது மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக, எங்கே விட்டதோ அந்த இடத்தில் இருந்தே மீண்டும் தொடர்வதுபோல் தோன்றுகிறது. தனது புத்தகங்கள் தேசியப் பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தன்னிடம் உறுதியளித்திருப்பதாக பத்ரா கூறுகிறார்.

ஒரு நாட்டின் எதிர்காலத்துக்குக் குழந்தைகளின் கல்வி மிகவும் முக்கியமானது. வரலாற்று உண்மைகளை மறைக்கக் கூடிய, இந்திய கலாச்சார - பழக்க வழக்கங்கள் எவை என்று அவசரகதியில் தீர்மானிக்கக் கூடிய கருத்தாக்கம் கல்வியை ஆக்கிரமிக்கக் கூடாது. இது அண்டை நாடுகளிடையே இந்தியாவைப் பற்றிய ஆபத்தான கருத்தைத்தான் உருவாக்கும்.

- தி நியூயார்க் டைம்ஸ் தலையங்கம்

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6495860.ece?homepage=true&theme=true

Saturday, October 11, 2014

மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

சவூதி அரேபியாவின் King Saud பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்களான இளைஞர் குழு ஒன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அப்ரஹா மன்னனின் யானைப்படை புனித கஅபாவை அழிப்பதற்காக பயன்படுத்திய பாதை ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.

இந்த யானைப்படை தொடர்பில் புனித அல்-குர்ஆன், 105 ஆம் அத்தியாயத்தில், சுருக்கமாகவும் யானைபடைக்கு நேர்ந்த கதியை தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் பதினான்காம் நூற்றாண்டின் குர் ஆன் ஆய்வாளரான இப்னு கதீர் என்பவர் குறிப்பிடுகையில் அப்ரஹா அல் ஆஸ்ரம் (Abraha Al-Ashram) என்பவன் ஏமன் நாட்டில் ஒரு கவர்னராக இருந்தான். அப்பொழுது அவனது தலைமையில் ஒரு யானைப் படயினைத் திரட்டி புனித கஅபாவை அழிக்கும் நோக்குடன் படையெடுத்து மக்கா நோக்கி வந்தான். அந்த நேரம் அல்லாஹ்வின் கோபப்பார்வை அவன் மீது விழுந்தில் அல்லாஹ் அவனுக்கும் அவனது படையினருக்கும் எதிராக சிறு பறவைகளைக் கொண்டு கல்மாரி பொழியச் செய்தான். யார் தலைமையில் யானைப் படைகள் வந்ததோ அவனும் 13 யானைகளுடன் கூடிய அவனது படைகளும் சின்னாபின்னப்படுத்தப்பட்டன. அதில் எல்லாக் கற்களும் அவனது படையினர் மீது விழவில்லை. இருப்பினும் அப்படையினரின் உடலில் உள்ள தசைகள் வெடித்து சிதருண்டு போய் சப்பித் துப்பிய வைக்கோல் போலாகினர். இதனைக் கண்ணுற்ற அப்ரஹா மக்காவை விட்டு எமனுக்கு தப்பியோடும் வழியில் தனது தசைகளும் வெடித்து சிதறியதில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.


இந்த ஆய்வை மேற்கொள்ள மலைகளினூடாகவும், கரடு முரடான கற்பாறைகளினூடாகவும் மிகவும் களைப்புடன் தொடர்ந்த இந்த இளம் ஆய்வுக் குழுவினரின் அதீத ஆய்வின் போது இதற்கு ஆதாரமாக இருந்த பல
இடங்களையும், அடையாளங்களையும் நஜிரானின் வட பகுதியிலும்,(north of Najran,) ஆசிர் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியிலும்(east of Asir) மற்றும் பாஹா பகுதியின் கிழக்கு எல்லையிலும்(east of Baha) எடுக்கப்பட்ட பெறுமதிமிக்க புகைப்படங்கள் மூலம் பதிவு செய்துள்ளனர்.

மேலும் அவர்களின் ஆய்வுக்கு வலு சேர்க்கும் வகையில் தத்லித் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் (southeast of Tathlith) உள்ள அல்கஹ்ர் மலையில் (Al-Qahr Mountain) பல முக்கியமான வரலாற்றுப் பதிவுகளாக யானைகளின் உருவம் செதுக்கப் பட்ட கல்வெட்டுக்களையும், அசீரின் கிழக்குக்ப் பகுதியில்(east of Asir) ஹபாயிரில்(Hafaer) உள்ள பழமை வாய்ந்த கிணறு ஒன்றையும் மற்றும் பாஹா பிரதேசத்தின்(Baha region) அகீக்கின் நகராட்சிக்குட்பட்ட கரா பகுதியில்(Kara in Aqeeq) நடை பாதை ஒன்றையும் கண்டு பிடித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட King Saud பல்கலைக்கழக புவிச் சரிதவியல் பிரிவின் தலைமை அதிகாரியான Mohammed Al-Amry, அவர்கள், அப்ரஹாவும் அவனது யானைப்படைகளும் பயணித்த நடை பாதையை Tathlith மற்றும் Baha பகுதிகளில் தான் கண்டுள்ளதாகவும், இந்தப் படையணி அராபிய ஆட்சிப் பகுதிக்குள் நுழைந்ததற்கு ஆதாரமாக மலைக் குன்றுகளில் Humairiya மொழியில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்களையும் காணக் கூடியதாகவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


இந்தப் படையெடுப்பு தொடர்பில் இஸ்லாமிய வரலாறுகளை எடுத்து நோக்கினால் அப்ரஹா ஒரு கிறிஸ்தவனாக இருந்து கஅபாவின் வடிவத்தை ஒத்த கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை யேமணில் உள்ள சன்ஆ பகுதியில் அமைப்பதன் மூலம் கஅபாவில் புனித கடமைகளை நிறைவேற்றும் அரபியர்களை அந்த தேவாலயத்தில் புனித கடமைகளை நிறைவேற்றச் செய்ய நினைத்தான். இதன் மூலம் இந்த புனித யாத்திரை காலங்களில் மக்காவுக்கு வியாபாரங்கள் மற்றும் ஏனைய வழிகளில் கிடைக்கும் வருமானங்களை தனது பகுதிக்கு திருப்ப முற்பட்டான். தனது ஆலோசனையை எத்தியோப்பிய நாட்டின் மன்னரிடம் தெரிவித்து அவரது முன் அனுமதியையும் பெற்றுக் கொண்டான்.


அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட ஆலயம் கட்டி முடிக்கப் பட்ட நிலையில் அரபியர்கள் அங்கு சென்று தங்கள் புனித கடமைகளை முடிக்க மறுப்புத் தெரிவித்தனர். அரபியர்களின் இந்த செயலானது அவனை சீற்றம் கொள்ளச் செய்ததுடன் கஅபாவை அழிக்கும் பொருட்டு ஒரு படையையும் திரட்ட வேண்டிய இழிநிலைக்குத் தள்ளியது.


இதன் பொருட்டு அவன் தலைமையில் திரட்டப்பட்ட படை மக்கா நோக்கி வரும்பொழுது அதற்குப் பல திசைகளிலும் அரேபியப் படைகளின் பலத்த எதிர்ப்பு இருந்தாலும், அவனது யானைப் படையின் முன் அராபியர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.அவன் பறவைக் கூட்டங்களின் கல்மாரி கொண்டு அழிக்கப்பட்டு வரை அனைத்து அராபிய வீரர்களையும் கொன்றொழித்துக் கொண்டே இருந்தான். என்று இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.


தகவல்:
ஆங்கிலத்தில்: Arab news- 10/10/2014




திருக் குர்ஆன்

ஸூரத்துல் ஃபீல் (யானை)

மக்கீ, வசனங்கள்: 5

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
105:1    أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ

105:1. (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

105:2   أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ

105:2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

105:3   وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

105:4   تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ

105:4. சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

105:5   فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ

105:5. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

சரித்திரப் பறவை-ஹுத் ஹுத்

 கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு ஒவ்வொரு நாட்டின் சார்பில் பெயர் வைக்கப்படுவது வழக்கம்.

தற்போது வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் முதல் வலுவான புயலுக்கு 'ஹுத்ஹுத்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது ஓமன் நாட்டின் சார்பில் வைக்கப்பட்ட அரபிப் பெயர். குர்ஆனில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த பெயர் கூறப்பட்டுள்ளது.

துருக்கி, இஸ்ரேல், சிரியா, ஓமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இப்பெயர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சிரியா மன்னர் சாலமன் என்ற சுலைமானின் ராணுவத்தில் தகவல் தொடர்புக்காகவும் இப்பறவை பயன்படுத்தப்பட்டிருப்பது சுவாரசியம். இதுகுறித்து இஸ்லாமிய அறிஞர் அ.முகம்மது கான் பாகவி கூறியதாவது. ஹுத்ஹுத் என்ற அரபிப் பெயர் ஒரு பறவையைக் குறிப்பதாகும்.

தமிழில் இது ‘கொண்டலாத்திப் பறவை’ என்று அழைக்கப்படுகிறது. சிரியாவை ஆண்ட மன்னரும், இறைத் தூதருமான சுலைமானுக்கு (ஆங்கிலத்தில் சாலமன்) நெருங்கிய நண்பரைப் போன்றது இப்பறவை.

அவர் எங்கு சென்றாலும் இதையும் கூடவே எடுத்துச் செல்வார். இது பூமிக்கு அடியில் தண்ணீர் எங்கு ஓடுகிறது என்பதை சுட்டிக்காட்டும் திறன் படைத்தது. பாலைவனப் பயணத்தின்போது, தண்ணீர் இருக்கும் இடத்தின் அருகில் தரையைக் கொத்தி, தன்னுடைய கொண்டையை ஆட்டி ஆடும். அங்கு தண்ணீர் இருக்கிறது என்று தெரிந்து, குழி தோண்டி தண்ணீர் எடுத்து தாகம் தீர்ப்பார்கள்.

சரித்திரப் பறவையான 'ஹுத்ஹுத்துடன் சுலைமான் மன்னர் பேசவும் செய்வார். அவரைவிட்டுப் பிரிந்து சென்று மீண்டும் திரும்பி வந்த 'ஹுத்ஹுத்', ‘‘ஏமன் என்று ஒரு நாடு இருக்கிறது. அங்கு சூரியனை வழிபடுகிறார்கள். அந்த நாட்டை பல்கீஸ் என்ற பெண் ஆட்சி செய்கிறாள். என்று கூறுகிறது.

இதன் பிறகு, இஸ்லாமிய கோட்பாடுகளை எழுதி, ஏமன் அரசி பல்கீஸுக்கு 'ஹுத்ஹுத்' பறவை மூலம் சுலைமான் தூது அனுப்புவதாக வரலாறு. இவ்வாறு மார்க்க அறிஞர் கான் பாகவி தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் இப்பறவை ‘ஹூப்போ’ என்று அழைக்கப்படுகிறது. இது இஸ்ரேல் நாட்டின் தேசியப் பறவை. இதன் தலையில் நீளமான ஊசி போன்ற கொண்டை உள்ளது. பெரும்பாலும் தண்ணீர் இருக்கும் இடத்தின் மீது தனது ஊசிக் கொண்டையை குடைபோல விரித்து அழகாக ஆடும். அதனால் தமிழில் கொண்டலாத்திப் பறவை எனப்படுகிறது.

மரங்கொத்தி, மீன் கொத்தி வகையைச் சேர்ந்தது. பாலைவனங்களில் அதிகம் வாழும். இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் பழுப்பு நிறத்திலும், கருப்பு, வெள்ளை கலந்த பட்டையுடனும் காட்சியளிக்கும்.

இஸ்லாமிய அறிவியலின் வரலாறு

 பழங்கால அறிவியலுக்கும் தற்கால அறிவியலுக்கும் பாலமாக இருந்தவர்கள் இஸ்லாமிய அறிவியலாளர்கள்.

சில மாதங்களுக்கு முன்னால் நான் உஸ்பெகிஸ்தானில் இருக்கும் கிவா நகரத்துக்குச் சென்றிருந்தேன். 19-ம் நூற்றாண்டில் அடிமை வியாபாரத்துக்குப் பெயர் போன கிவா நகரக் கோட்டைக்கு வெளியே ஒரு சிலை. பக்கத்தில் சென்று பார்த்தால், அல்-குவாரிஸ்மி. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தமிழகத்தில் அறிவியல் அறிஞர் ஒருவரது சிலையை அண்ணா சாலையில் பார்த்தால் ஆச்சரியமாக இருக்காதா? அதே போல.

அல்-குவாரிஸ்மி - யார் இவர்?

ஒன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வாழ்ந்த இந்த அறிஞர் அல்ஜிப்ராவின் தந்தை என அறியப் படுபவர். சந்திரனில் ஒரு பள்ளத்தாக்கு இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. அவர் எழுதிய பல புத்தகங்களில் மிகவும் புகழ்பெற்றவை இரண்டு. முதலாவது ‘இந்திய எண்களைக் கொண்டு கணக்கு’. இந்தப் புத்தகத்தின் மூலமாகத்தான் இப்போது அரேபிய எண்கள் என அழைக்கப்படும் இந்தியாவில் பிறந்த எண்கள் உலகம் முழுவதும் அறியப்பட்டன. இரண்டாவது, ‘ஸிஜ் அல் ஸிந்த் ஹிந்த்’ என்று அறியப்படும் வானவியல் அட்டவணை. சூரியன், சந்திரன் மற்றும் அவரது காலத்தில் அறியப்பட்டிருந்த ஐந்து கிரகங்களின் பாதைகளின் அட்டவணை. இவருக்கு முன்னாலேயே எட்டாவது நூற்றாண்டில் பிரம்மகுப்தரின் பிரம்ம சித்தாந்தம் என்ற வானவியல் நூல் அல்ஃபசாரி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் இவரது அட்டவணைதான் அரேபியர்கள் தாங்களாகத் தயாரித்த முதல் அட்டவணை.

குவாரிஸ்மி வானவியல், கணிதத்தோடு நின்றுவிட வில்லை. ‘உலகத்தின் வடிவம்’ என்ற பூகோளப் புத்தகத்தையும் எழுதினார். இரண்டாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டிரியாவில் வாழ்ந்த தாலமி கிரேக்க மொழியில் எழுதிய ‘பூகோளம்’ என்ற புகழ்பெற்ற புத்தகத்தைத் தழுவி எழுதிய அந்தப் புத்தகம், உலகத்தின் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நகரங் களைப் பற்றிப் பேசுகிறது.

உலுக் பெக்

உஸ்பெகிஸ்தானின் மற்றொரு புகழ்பெற்ற நகரம் சாமர்கண்ட். இந்த நகரத்தில் மற்றொரு பெரிய விஞ்ஞானியான உலுக் பெக்கின் சிலை இருக்கிறது. இவர் தைமூரின் பேரன். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அரசரான அவருக்கு அறிவியலில் தீராத ஈடுபாடு. ‘மதங்கள் பனிபோல மறைந்துவிடும். பேரரசுகள் அழிந்துவிடும். ஆனால், அறிவியல் நூல்கள் காலம் உள்ள வரையில் நிற்கும்’ என்ற புகழ்பெற்ற மேற்கோளுக்குச் சொந்தமான உலுக் பேக் எழுதிய ‘ஸிஜ் சுல்தானி’என்ற நட்சத்திரங்களின் அட்டவணை, இரவில் பாலைவனங்களில் பயணம் செய்பவர்களுக்கு உறுதுணையாகக் கருதப்பட்டது. இந்தப் புத்தகத்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருக்கிறது. ஷாஜஹான் காலத்தில் இந்தப் புத்தகத்தைத் தழுவி ‘ஸிஜ்–இ-ஷாஜஹானி’ என்ற புத்தகம் எழுதப்பட்டது. இந்த புத்தகத்தைச் ‘சித்தாந்த சிந்து’ என்ற பெயரால் நித்யானந்தா என்பவர் வட மொழியில் மொழிபெயர்த்தார்.

உலுக் பெக், வானவியல் ஆய்வுக் கூடம் ஒன்றை சாமர்கண்ட் நகரத்தில் அமைத்தார். கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்துவிட்ட இந்த ஆய்வுக்கூடத்தின் பாணியில்தான் டெல்லி, ஜெய்ப்பூர் நகரங்களில் இருக்கும் ஜந்தர் மந்தர் (மந்திர யந்திரம்) என்று அழைக்கப்படும் வானவியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.

அறிவுக் கூடம்

அறிவைத் தேடுதல் மிகவும் அவசியம் என்று நபிகள் நாயகம் நினைத்தார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ‘இல்ம்’ என்று அழைக்கப்படும் அறிவைக் குறிக்கும் அரேபியச் சொல்லும், அதைச் சார்ந்த மற்ற சொற்களும் 700-க்கும் மேல் புனித குரானில் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அரசர்கள் இதை நன்கு அறிந்திருந்தார்கள். காலிஃபா அல் மமுன் 830-ம் ஆண்டில் பாக்தாத் நகரில் பாய்த் அல் ஹிக்மா என்று அழைக்கப்படும் அறிவுக்கூடம் ஒன்றை அமைத்தார். இரண்டு லட்சம் தினார்கள் செலவில் அமைக்கப்பட்ட அந்தக் கூடம், அறிவியல் ஆய்வுமையமாகவும் மொழிபெயர்ப்பகமாகவும் இயங்கியது. கூடத்துக்குத் தலைமை தாங்கியவர் ஹுனைன் இபின் இஷக் (‘ஜான், ஐசக்கின் மகன்’ என்பது இந்தப் பெயரின் பொருள்) என்று அழைக்கப்பட்ட கிறிஸ்தவர். இவரது தலைமையில் கேலன், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, ஹிப்பாகிரிடஸ், தாலமி, டியஸ்காரிடிஸ் போன்ற அறிஞர்களின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. வடமொழியிலிருந்தும் பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. ஹுனைனுக்குப் புத்தகத்தின் எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்டதாம். கிரேக்க லத்தீன் நூல்களில் பல தப்பிப் பிழைத்துத் திரும்ப மேற்குலகுக்குக் கிடைத்ததென்றால், அதற்கு அவர்கள் இஸ்லாமியர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அல்-ராசியும் அவிசென்னாவும்

ட்ரக், ஆல்கஹால், ஆல்கலி, ஸிரப், ஷுகர், ஸ்பினாச் போன்ற சொற்கள் அரபிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குக் கிடைத்தவை. இவை எல்லாம் இஸ்லாமிய மருத்துவப் புத்தகங்களில் புழங்கியவை. இஸ்லாமிய மருத்துவர்களில் தலையாயவர்களாக இருவரைக் குறிப்பிடலாம். முதலாமவர் எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த அல்-ராசி. இவர் பத்து பாகங்களாக எழுதிய ‘மன்சூரின் மருத்துவப் புத்தகம்’ உடற்கூறு, அறுவைச் சிகிச்சை, மருந்துகள், நோயை அறிதல், நோயைக் கட்டுப்படுத்தும் முறை போன்ற மருத்துவத்தின் எல்லா அங்கங்களையும் பற்றிக் கூறுகிறது. அல்-ராசி தனது மற்றொரு புத்த கத்தில் கூறுகிறார்:

“மருந்துகளின் பயன்களைப் பற்றிச் சிலர் உண்மையைச் சொல்கிறார்கள். சிலர் சொல்வது பொய். எனவே, நாம் செய்யக் கூடியது, நமது அனுபவத்தின் மூலமாக அறிவதுதான். அறிந்ததை அங்கங்கே விட்டுவிடக் கூடாது. சேர்த்து, பகுத்து வைக்க வேண்டும். எந்த மருந்தின் பயனையும்

நாங்கள் மற்றவர் சொன்னார்கள் என்று நம்பத் தயாராக இல்லை. ஆராய்ந்து அதனால் பலன் இருந்தால் மட்டுமே நம்புவோம்.”

அல்-ராசி ஏழைகளை மறக்கவில்லை. ‘மருத்துவரிடம் போக முடியாதவர்களுக்கு’ என்ற ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.

இஸ்லாம் தந்த மற்றொரு பேரறிஞர் பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த அவி சென்னா என்று அழைக்கப்படும் இபின் சென்னா. இவரது இரண்டு புத்தகங்கள் இன்றுவரை பேசப்படு பவை. ‘கிதாப் அல்-ஷிஃபா’ அறிவியலைப் பற்றியது. மற்றது, ‘கிதாப் அல்-கானூன்’ என்று அழைக்கப்படும் மருத்துவப் புத்தகம். ஐந்து பாகங்கள் கொண்ட இந்தப் புத்தகம் 10 லட்சம் வார்த்தைகளில் அன்று வரை அறியப்பட்ட மருத்துவ முறைகளைப் பற்றி யும் மருந்துகளைப் பற்றியும் சொல்கிறது. பல நூற் றாண்டுகளாக இஸ்லாமிய நாடுகளிலும், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளிலும் இவரது புத்தகம்தான் மருத்துவ உலகில் கோலோச்சிவந்தது.

அல்-பிரூனி

இஸ்லாமிய அறிஞர்கள் புனித குரானைத் தவிர, வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. இருப்பவர்கள் அல்-பிரூனி பதினொன்றாம் நூற்றாண்டில் எழுதிய ‘இந்தியா’ நூலைப் படிக்க வேண்டும். ‘முத்துக்களும் கூழாங்கற்களும் கலந்தது இந்திய அறிவியல்’ என்பது அவரது கூற்று. அறிவியல் பற்றிய தெளிவான புரிதல் இருந்தாலும், அதை வகைப்படுத்தி அளிப்பதில் கவனம் காட்டாததைப் பற்றியே அவர் குறிப்பிடுகிறார். பூமியின் ஆரத்தை அன்றே துல்லியமாக அளந்த சகலகலா வல்லவர் பிரூனி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இஸ்லாமுக்கும் அறிவியலுக்கும் நீண்ட தொடர்பு இருந்திருக்கிறது. அது அறுந்துபோகாமல் பார்த்துக்கொள்வது இன்றைய இஸ்லாமியர்களின் கைகளில் இருக்கிறது.

- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை', ‘கலங்கிய நதி' ஆகிய நாவல்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: tigerclaw@gmail.com

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/article6473858.ece

சுதந்திர போராட்ட வீரர் கேப்டன் அப்பா மரணமடைந்தார்

இந்திய சுதந்திர போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 94.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் இயங்கிய இந்தியன் நேஷனல் (INA) ஆர்மியில் கேப்டனாக பணியாற்றியவர் அப்பாஸ் அலி.

இந்திய தேசிய விடுதலைக்காக உயிரை பணயம் வைத்து நடத்திய போராட்டத்தில், ஆங்கிலேய அரசு அவரை சிறையில் அடைத்து 1945ல் மரண தணடனை வழங்கியது. 1947ல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் இந்திரா காந்தி அம்மையாரின் எமர்ஜென்சி பிரகடனத்தை எதிர்த்து லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாரயண் அவர்களுடன் சேர்ந்து தேசநலனுக்காக மீண்டும் போராடி கைது செய்யப்பட்டு, 1977ல் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உத்தர பிரதேச மாநிலம் அலிகார் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் மரணமடைந்தார். அவருக்கு ஒரு மகன் இரு மகள்கள் உள்ளனர்.

Wednesday, October 8, 2014

மூளைச்சாவு சதியா ? பரபரப்பு ரிப்போர்ட் !

மூளைச்சாவு சதியா ? பரபரப்பு ரிப்போர்ட் !

 

 

ICU விலிருந்து வெளியே வந்த... அந்நாட்டின் மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்... கையை பிசைந்து கொண்டே சொன்னார்....

"சார்... வந்து... மனசை தேத்திக்குங்க... ஒரு அதிர்ச்சியான செய்தி சொல்ல போறேன்.."

"டாக்டர், என்ன சொல்றீங்க.."

....செய்தியை கேட்கும் முன்னரே அதிர்ந்தார்... மாநிலத்தின் 'டாப் தர்ட்டி ரிச் பிசினஸ் மேக்நேட்ஸ்' -ல் ஒருவரான அந்த பிரபல நிறுவனத்தின் அதிபர்..!

"ஆமா சார், எங்களால் ஆன எல்லா முயற்சியும் பண்ணி பார்த்துட்டோம்... ம்ஹூம்... முடியலை... உங்க பையனின் இதயம் செயல் இழந்துக்கிட்டு வருது... இன்னும் சில நாட்கள்தான்.... அதிக பட்சம் பத்து நாட்களே... அவரின் இதயம் துடிக்கும்..!

"என்னா சொல்றீங்க டாக்டர்..? ஊரிலேயே பெரிய ஹாஸ்பிடல்... மாநிலத்திலேயே பெரிய டாக்டர்... அவ்ளோதானா உங்க பவுசு எல்லாம்...??? ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கு ஒரே வாரிசு டாக்டர் அவன்...!!! BE, MBA எல்லாம் அமெரிக்காவில் படிக்க வச்சு என்னோட இன்னொரு கம்பெனிக்கு போன மாசம்தானே அவனை MD ஆக்கி இருக்கேன்... இப்போ போயி இப்படியா...?!?!? ஏதாவது செய்யிங்க டாக்டர்... ஏதாவது செஞ்சே ஆகணும் நீங்க... எத்தனை கோடி செலவானாலும் நான் தாரேன் டாக்டர்..."

"ம்ம்ம்... அப்படின்னா... ஒரு வழி இருக்கு..."

"சொல்லுங்க... சொல்லுங்க..."

"யாரேனும் ஒருத்தரை ஹார்ட் தானம் தர ஏற்பாடு பண்ணுங்க சார்..."

"பணத்தை வாங்கிட்டு இதயத்தை தானம் தந்துட்டு சாக யாராச்சும் ஒத்துக்குவாங்களா..?"

"உங்க மகன் பிழைக்க அது ஒண்ணுதான் சார் வழி..."

"அப்போ... இதயத்துக்கு நீங்க ஏற்பாடு பண்ணுங்க..."

"ஏன்,  பையனுக்கு அப்பாவா நீங்க ஏற்பாடு பண்ண மாட்டீங்களா சார்..?"

"ஸ்ஸ்ஸ்.... ஓகே...சொல்லுங்க... என்ன செய்யணும்..?"

"நீங்க யாரையாவது ஒரு ஏழை அப்பாவியை அடியாள் செட் பண்ணி வச்சு அடிச்சு போட்டுட்டு... குற்றுயிரும் குலையுயிருமா எங்கிட்டே அவரை காப்பத்த தூக்கிட்டு வாங்க... அதனாலே வரும்  போலிஸ்-கோர்ட் -கேஸ் எல்லாம நீங்கதான் பாத்துக்கணும்... நான் பேஷன்ட் கிட்டே இருந்து ஹார்ட்டை மட்டும் எடுத்துட்டு... "சாரி.. ஆபரேஷன் சக்சஸ்...பட் பேஷன்ட் டைட்"ன்னு சொல்லிருவேன் ... போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் ஹார்ட் காணோம்ன்னு பிரச்சினை பண்ணினால்... அந்த அரசு டாக்டரை நீங்கதான் சரி கட்டனும்... ஓகேவா...?"
"டாக்டர்... இது ரொம்ப சிக்கலா இருக்கும் போல இருக்கே... எனக்கு போலிஸ் கோர்ட் கவர்மென்ட் ஹாஸ்பிடல் இதிலெல்லாம் அவ்வளவா ஆளு இல்லையே டாக்டர்..."
"ஏதாவது... ரவுடி, தீவிரவாதி சேசிங்... ஷூட்டிங் ஆர்டர்... என்கவுண்டர்ன்னு... இப்படி ஏதாச்சும் நடந்தா...நேக்கா சுட்டு... ஸ்பாட்டிலேயே அவன் செத்துடாம... பாதுகாப்பா இங்கே இட்டாந்தா... ஹார்ட்டை எடுத்துடலாம். ஆனால், உங்களுக்குத்தான் போலீசில் யாரையும் தெரியாதுன்னு சொல்லிட்டீங்க... அது மட்டுமில்லாம... அப்படியான சம்பவங்கள் இப்போ உடனே நடக்க சான்ஸ் இல்லை..."

".........ஹூம்........."
"ம்ம்ம்.... சரி... இப்போ, இன்னொரு ஐடியா சொல்றேன்... இது கொஞ்சம் புதுசு... ஆனால்... இதுக்கு இன்னும் அதிக செலவாகுமே... ஏன்னா... ரிஸ்க் எடுக்குறது முழுக்க முழுக்க நானு..."

"பரவாயில்லை... சொல்லுங்க... எவ்வளவு செலவு ஆனாலும் நான் தாரேன்.."

"நல்லா கவனிங்க....சிட்டியில் தினமும் இருபது முப்பது விபத்து நடக்குது. நம்ம ஹாஸ்பிடல் ரோட்டில் கூட தினமும் ஏதேனும் ஒன்னு ரெண்டு விபத்து நடக்குது. அதெல்லாம் நம் ஹாஸ்பிடளுக்குத்தான் எமர்ஜென்சி கேசுன்னு  வருது. அடுத்த சில நாளில் அப்படி வரப்போகும் ஒரு பேஷண்டை நான் டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு... மயக்க ஊசி போட்டுட்டு, "மூளைச்சாவு" ஏற்பட்டு இருக்குன்னு பேஷண்டின் குடும்பத்துகிட்டே சொல்லிருவேன்."

"................."

அவங்க கிட்டே..."ஒரு  'மூளைச்சாவு' பேஷண்டை அம்பது வருஷம்... அறுபது  வருஷம்ன்னு... வாழ்நாள் முழுதும் வச்சி காப்பாத்த எவ்ளோ செலவு ஆகும் தெரியுமா... அதைவிட... நீங்க தெனைக்கும் எவ்ளோ கஷ்டப்படனும் தெரியுமா... பொழுதன்னிக்கும் சோறூட்டி... தண்ணீர் புகட்டி... விழுங்காம வாந்தி எடுத்த துடைத்து... புரை ஏறினால்... சளி சிந்தி...  சிறுநீர் கழுவி... மலம் அள்ளி தொடச்சி விட்டு... இப்படி நடுவீட்டில் வச்சி காலமெல்லாம் இவனை காப்பாத்துவீங்களா...?" என்று எல்லாத்தையும் டீஈஈஈ......ட்டைலா நீங்க விளக்க்க்க்க்க்க்கி சொல்லி... 'அதுக்கு பதிலா இன்னிக்கே சில பல லட்சங்களுக்கு 'உடல்தானம்' (actually...உயிர்தானம்) செஞ்சிட்டா... அது உங்களுக்கு எவ்ளோ பெரிய நன்மை பயக்கும்' என்று நீங்க விளக்கி சொல்லனும்... இன்னிக்கி பெருசா மனித நேய சேவை... இறைவனிடம் நல்ல பெயர் வாங்க தொண்டு... புள்ள பாசம்... என்று உங்க கூட அந்த உடலை(?)வச்சி காப்பாத்த முடிவு எடுத்தா... அப்புறம் சில வருஷம் கழிச்சு ஒருநாள் உங்க முடிவில் வெறுப்பு வந்துட்டா... 'அன்னிக்கு வந்த சான்ஸ் போச்சே'ன்னு அப்போ கவலை பட்டு புண்ணியம் இல்லே...!"ன்னு நைச்சியமா சொல்ல வேண்டிய விதத்தில் எடுத்து சொல்லுங்க சார்..! வழிக்கு வருவாங்க பாருங்க..!
 "ம்ம்ம்..........."
"அப்புறம்,  கிட்னி... கண்... எல்லாமே நல்ல ரேட்டுக்கு போணியாகும்... அதுக்கும் எங்க ஹாஸ்பிடலில் டிமாண்ட் இருக்குன்னு சொல்லுங்க. நாங்க இதெல்லாம் அவங்ககிட்டே நேரடியா சொன்னா எங்கமேலே சந்தேகம் வந்துரும். பார்ட்டிக்கு பண ஆசையை காட்டி... எதோ கொஞ்சம் தந்துட்டு... மேட்டரை ஈசியா சேஃபா முடிங்க... அவங்க ஒப்புதல் வாங்கிட்டா...உடனே... அரசிடம் ஈசியா... ஹார்ட் ட்ரான்ஸ்பிளண்ட் ஆபரேஷனுக்கு அனுமதி வாங்கிறலாம்... யாருக்கும் எந்த டவுட்டும் வராது. உங்க மகனும் பிழைச்சிடுவான்.... (சதி) திட்டம் ஓகேவா..?"

"டபுள் ஒகே டாக்டர்... இன்னிக்கி நைட்டே நான் என் 'மிஷனை' ஆரம்பிச்சிடுறேன்.. மறக்காமல் நீங்க இன்னிக்கி நைட் டூட்டி பாருங்க..."

சில நாட்களுக்கு பிறகு...

மாநிலத்தின் பிரபல முன்னணி செய்தித்தாளில் முதல் பக்கத்தில்........

ஒரு ஏழை ரிக்ஷா ஓட்டுனரின் மகனின் உறுப்பு தானம் மிகவும் பெரிதாக பேசப்பட்ட தலைப்புச்செய்தியில்... அந்த பிரபல நிறுவன அதிபரின் மகனும் 'புதிய இதயத்துடன் பிழைத்துக்கொண்டார்' என்ற செய்தியும்... மகன், தந்தை மற்றும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடித்த டாக்டரின் போட்டோவுடன் போடப்பட்டு இருந்தது.

அதே செய்தித்தாளின் அஞ்சாம் பக்கத்தில்............

சர்வதேச செய்தியில்... "ஜெர்மனி மருத்துவ ஆராய்ச்சியில் ஓர் அதிசயம்" என்ற தலைப்பில்...... 'மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவர்... மீண்டும் சுய உணர்வுடன் பிழைக்க வைக்கும் புதிய நவீன சிகிச்சை முறை கண்டுபிடிப்பு' என்று ஜெர்மானிய மருத்துவர்களின் ஆய்வு முடிவுகள் பற்றி..... ஓர் அறிவியல் கட்டுரை இறைவனின் விதியை சொல்லிக்கொண்டு இருந்தது...!

--------------------------சிறுகதை முற்றும்-------------------------
சகோஸ்..... 
இப்போ உங்களுக்கு டவுட்டு வந்திருக்குமே..? 
இதுதான் கதையின் தலைப்பு... // மூளைச்சாவு + உயிர்தானம் : சதியா..? விதியா..? //

'மூளைச்சாவு' என்ற உடனே... உடனடி கருணைக்கொலை... உடனடி உறுப்புதானம்... இதுதான் தீர்வா..? மூளைச்சாவு குணமாகி பிழைத்தால்... பின்னாளில் உயிர் பிழைத்து வாழ்ந்திருக்க வேண்டிய ஓர் உயிரை கொன்றதாகாதா..? அந்த உயிருக்குரிய உடலில் இருந்து அதன் சொந்தமான உறுப்புகளை அந்த அறிவின் அனுமதியின்றி திருடியதாகாதா..? 'மூளைச்சாவு' ஏற்பட்டதாக மருத்துவர்களால் கூறப்பட்ட நோயாளி பிழைக்க வாய்ப்பே இல்லையா..? உலகில் அப்படி எவரும் பிழைத்ததே இல்லையா..? ஏகப்பட்ட பேர் பிழைத்துள்ளனரே சகோ..!
இதோ... உங்கள் பார்வைக்கு சில ஆதார சுட்டிகள்..! 
.

Dad rescues ‘brain dead’ son from doctors wishing to harvest his organs – boy recovers completely

‘Brain dead’ woman recovers after husband refuses to withdraw life support

Woman Diagnosed as “Brain Dead” Walks and Talks after Awakening

‘Brain dead’ Quebec woman wakes up after family refuses organ donation

New study questions “brain-death” criterion for organ donation

அடுத்து... 

பதிவர் சகோ.'சுமஜ்லா' எழுதிய ஓர் உண்மை சம்பவம்... 

படிப்போர்  நெஞ்சை பிசையக்கூடிய சம்பவம்.... 'மூளைச்சாவு' பற்றிய இந்திய சட்டத்தை புரட்டிப்போடக்கூடிய உண்மைச்சம்பவம்... ஒன்றை படித்தேன்..! 'மூளை செயல் இழத்தல்' என்பது 'மூளைச்சாவு' அல்ல; இறைவன் நாடினால் இத்தகைய நோயாளிகள் மூளை குணமடைந்து உணர்வு பெற்று நலமுடன் முழுதாக மீள்வார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி உணர்ந்தேன். ஆகவே, அவசரப்பட்டு 'மூளைச்சாவு' என்று காரணம் கூறி வேண்டப்பட்ட பிறரை காப்பாற்ற வேண்டி... அவர்களின் உடல் உறுப்பு மாற்றுக்காக, உயிரோடு இருக்கும் நோயாளியின் இதயத்துடிப்பை- இரத்த ஓட்டத்தை- சுவாசத்தை- ஜீரணத்தை எல்லாம் 'நிறுத்துவதை' நான் ஒரு மனித நேயமற்ற திருட்டு மற்றும் கொலைக்குற்றமாகவே எண்ணி வெறுக்கிறேன்..! 

இறுதியாக  ஒரே ஒரு கேள்வி..! 

நாளை... ஒருவேளை, 'இதய மாற்று அறுவை சிகிச்சை'யை விட மிக எளிதாக... 'மூளை மாற்று அறுவை சிகிச்சை'யை வெற்றிகரமாக செய்ய முடியும் என்றால்... 'இதயச்சாவு'காரருக்கு 'மூளைச்சாவு'காரரின் இதயத்தை கொண்டு வந்து பொருத்துவார்களா..? அல்லது, 'மூளைச்சாவு'காரருக்கு 'இதயச்சாவு'காரரின் மூளையை கொண்டு வந்து மாற்றுவார்களா..? ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயமோ..!?!  :-)

  http://pinnoottavaathi.blogspot.com/2013/09/blog-post.html

please read.....

 http://peacetrain1.blogspot.com/2014/02/blog-post.html 

http://sumazla.blogspot.com/2013/09/blog-post.html#more



 

Thursday, October 2, 2014

மோடிஜி,குறித்துக் கொள்ளுங்கள்!இந்தியா தூய்மை பெற நபிகள் நாயகத்தின் அறிவிப்பு

''சாபத்தைத் தரும் இரண்டு காரியங்களைப் பயப்படுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''சாபத்தை ஏற்படுத்தும் அந்த இரண்டு எது?'' என்று மக்கள் கேட்டனர். ''மக்கள் நடக்கும் பாதையில் மல ஜலம் கழித்தல் மற்றும் மக்களுக்கு நிழல் தரும் மரத்தின் கீழ் மல ஜலம் கழித்தல் '' என்று நபி(ஸல்) கூறினார்கள். 
 
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1771 )
''தேங்கிக் கிடக்கும் தண்ணீர் (குளத்தில்) சிறுநீர் கழிக்கப்படுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

 (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1772 )

இந்து சகோதர-சகோதரிகளே!

இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. "ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள். இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன.

ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம். ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து. இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து கொண்டாட்டம் ஒரு நன்நாளாக ஈகைத் திருநாள் அமைந்துள்ளது.

அதே போல், நாம் அல்லாஹ்வின் அடியார்கள். அடியான் எஜமானனின் கட்டளைகளுக்குப் பூரணமாக கட்டுப்பட வேண்டும். அப்து( அடியான்) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியே என்று அடிமைத் தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கும் பொன்னாளாகத் தியாகத் திருநாள் அமைந்துள்ளது. நமக்கு "முஸ்லிம்" என்று பெயரிட்ட நபி இப்றாஹிம்(அலை) அவர்களது வாழ்வோடு இணைந்த இறை அடிமைத் தன்மையின் முழுமையான வடிவத்தை நாம் ஞாபகப்படுத்துவதன் மூலம், அதன் பிரதிபலிப்புகள் நம்மிலும் ஏற்பட, முயற்சிகள் செய்வோமாக.

நபி இப்றாஹிம் (அலை) அவர்களது வாழ்வின் ஆரம்பக்கட்டத்திலிருந்தே, இளமைப் பருவத்திலிருந்தே, அல்லாஹ் ஒருவனுக்கே வழிப்பட வேண்டும்; அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனல்லாத யாருக்கும், எதற்கும் வழிப்படுவது மாபெரும் குற்றம் என்ற அடிப்படை உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதால் ஏற்படும் பயங்கரமான எதிர்ப்புகள், இன்னல்கள், சகிக்க முடியாத கஷ்டங்கள் அனைத்தையும் பொறுமையோடு சகித்துக் கொண்டு, தான் கொண்ட தெளஹீதை நிலை நாட்டும் பணியிலேயே கண்ணாயிருத்தல், எந்த நிலையிலும் தனது 'ரப்'பின் திருப்பொருத்தமே தனது வாழ்வின் இலட்சியம், அதற்காக அன்பு மனைவியை இழக்க நேரிட்டாலும், அன்பு மகளை இழக்க நேரிட்டாலும், அது சாதாரண தியாகமே என்ற உயர்ந்த எண்ணம், தனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து, மடியும் வரை அல்லாஹ்வுக்கென்றே வாழ்ந்து, மடிந்த தியாக வாழ்க்கை இவை அனைத்தும் நமக்கு அழகிய முன்மாதிரிகளாக அமைந்துள்ளன. "இப்ராஹிமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்." (அல்குர்ஆன் 3:95)

இப்றாஹிம்(அலை) அவர்களின் தந்தை ஆஜர் ஒரு புரோகிதர். பெரியார்களின் சிலைகளை வடித்து, தெய்வங்கள் என்று மக்களை நம்பவைத்து, அவற்றை வியாபாரம் செய்வது கொண்டு பிழைப்பு நடத்துபவர். இந்தத் தீய செயல் இப்றாஹிம்(அலை) அவர்களின் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளத்திலே தீ எனச் சுடுகின்றது. பால் மணம் மாறாத அந்தப் பாலப் பருவத்திலேயே தன் தந்தையை நோக்கிச் சொல்கிறார்கள்.

"என் அருமைத் தந்தையே, உங்கள் கைகளால் வடித்தெடுத்த இந்தப் பெரியார்களின் சிலைகளை தெய்வமென்று நம்பி, மக்களை வழிபடச் சொல்கிறீர்களே? இது நியாயந்தானா? நமது அற்ப உலக வாழ்வுக்காக மக்களை நரகப் படுகுழியில், படு நாசத்தில் விழச்செய்வது சரிதானா? நாளை நம்மைப் படைத்த அந்த அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் விடுவானா?" என்று கேள்விக் கணைகளை அடுக்கடுக்காக அள்ளி வீசினார்கள். பெற்ற தந்தைக்கோ அளவு கடந்த கோபம் வருகின்றது. நான் பெற்ற பிள்ளை என்னையே எதிர்ப்பதா? எனது குடும்ப, வயிற்றுப் பிரச்சனையில் மண்ணை அள்ளிப் போடுவதா? என்று அங்கலாய்க்கிறார். "மகனே! இதுதான் நமது பிழைப்படா! இதை விட்டால் நாம் உயிர்வாழ்வது எப்படியடா! குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்பாக வந்து முளைத்திருக்கிறாயே!" என்று அதட்டுகிறார்.

நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் இந்த இடத்தில் பெற்று வளர்த்த தன் தந்தைக்கு வழிப்படுவதை விட, தன் தந்தையையும் தன்னையும் மற்றும் அகிலமனைத்தையும் படைத்துப் போஷித்துப் பரிபாலித்து வரும், அந்த அல்லாஹ் ஒருவனுக்கு வழிப்படுவதே தனது தலையாய கடமை என்ற தெளிவான முடிவுக்கு வருகிறார்கள். தனது செயல் தன்னையும் தனது குடும்பத்தையும் உலக வாழ்வில் பாதிக்கிறதே என்பதையும் பொருட்படுத்தாமல், மக்களிடம், "மக்களே இந்தப் பெரியார்களின் சிலைகள் மனிதக் கைகளால் செய்யப்பட்டவை - வெறும் சிலைகளே! இவற்றாலோ, இவற்றுற்குரிய பெரியார்களாலோ, உங்களுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை! இவற்றையோ, இவற்றிற்குரியவர்களையோ வணங்குபவர்கள் அறிவீனர்களே! நஷ்டவாளிகளே! அப்படிப்பட்டவர்கள் இப்பெரியார்களின் சிலைகளை வாங்கிக் கொள்ளலாம்" என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பிரச்சாரம் தந்தை ஆஜருக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியது போல் வேதனையைக் கொடுத்தது. கடுங்கோபமுற்று மகனைப் பார்த்து, "நீ என் கண்ணிலும் விழிக்காதே; உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்", என்று வீட்டை விட்டே துரத்தி அடிக்கிறார்.

"இதிலிருந்து நீ விலகிக் கொள்ளவில்லையானால் உன்னை நிச்சயமாகக் கல்லால் எறிவேன்; என்னை விட்டும் என்றென்றும் தூரப்போய்விடு" (அல்குர்ஆன் ் 19:46) என்றார்.

ஆதரிப்பார் யாரும் இல்லாமலும் ஒதுங்குமிடம் இன்னதென்று தெரியாத நிலையிலும் அந்த இளம் வயதிலேயே அல்லாஹ் மீது பூரண நம்பிக்கை வைத்துத் தனித்துத் தனது உலக வாழ்வைத் துவக்குகிறார்கள் இப்ராஹீம்(அலை)அவர்கள். அடுக்கடுக்காக இடுக்கண்கள் வந்த போதிலும் கொண்ட கொள்கையை, ஏகத்துவ பிரச்சாரத்தை, சிலை, கபுரு உடைப்புப் பிரச்ாரத்தை இப்ராஹிம்(அலை)அவர்கள் கை விடுவதாக இல்லை. துணிவாகத் தொடர்கிறார்கள். ஒரு இடத்திலே வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டு. ஒரு பெரிய சிலையின் தோளிலேயே ஆயுதத்தை மாட்டிவைத்து விட்டுச் சென்று விடுகிறார்கள். தாங்கள் வணங்கும் தெய்வங்கள் இவ்வாறு சின்னா பின்னப்படுத்தப்பட்டு நொறுங்கிக் கிடப்பதைக் கண்ட ஊர் மக்கள் பதை பதைக்கிறார்கள். கடுமையான கோபத்திற்குள்ளாகிறார்கள். விசாரிக்கும் போது, இப்ராஹிம் என்ற பெயராம், வாலிபனாம், அவன் தான் நமது தெய்வங்களை ஏளனம் செய்கிறவன்; அவன் தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு அழைத்து வந்து - இல்லை இழுத்து வந்து இப்ராஹிம் (அலை) அவர்களை விசாரிக்கின்றனர். "என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அதோ அந்தப் பெரிய சிலையிடம் கேட்டுப் பாருங்கள்" என்று அந்த மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள். "தன் முன்னால் நடந்தது கூடத் தெரியாத வெறும் சிலைகளையா தெய்வம் என்று வணங்குகிறீர்கள்" என்று குத்திக் காட்டுகிறார்கள்:- (அல்குர்ஆன் ் 21:60-67) துணிச்சலாக, சிலை, கபுரு வணக்கம் கூடாது என்று எடுத்துரைக்கிறார்கள். பிரச்சனை முற்றி இறுதியில் மன்னன் நம்ரூதின் முன்னால் கொண்டு போய் நிறுத்தப்படுகிறார்கள். மன்னன் என்ற பயமோ நடுக்கமோ இப்றாஹிம்(அலை) அவர்களுக்குச் சிறிதும் இல்லை. தைரியமாக நெஞ்சுயர்த்தி தான் கொண்டுள்ள அல்லாஹ் ஓருவன் மட்டுமே என்ற கொள்கையை மன்னனிடம் எடுத்து சொல்கிறார்கள், முடிவு, நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். அல்லாஹ் (ஜல்) உத்தரவு கொண்டு, கரிக்கும் நெருப்புக் குண்டம் சுகம் தரும் சோலையாக மாறுகின்றது. (அல்குர்ஆன் 21:68,69)

நபி இப்றாஹிம்(அலை) அவர்களுக்கு, இதோடு சோதனை முடிந்து விட்டதா? இல்லை! மீண்டும் தொடர்கின்றது -தொடர்கதை போல், அன்புக்கினிய ஆசை மனைவியையும், பல்லாண்டு காலம் ஏங்கி, இறைவனிடம் பன்முறை வேண்டிப் பெற்ற அருமைப் பச்சிளம் பால்குடி மகனையும், மனித சஞ்சாரமே அற்ற பக்கா(மக்கா) பாலைவனத்தில் கொண்டு விடுமாறு இறை உத்தரவு வருகின்றது. இதனால் இறைவனுக்கு என்ன லாபம் என்று சிந்திக்கவில்லை இப்ராஹிம் (அலை). பந்தம், பாசம், ஆசை அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இறை உத்தரவைத் தலைமேல் கொண்டு செயல்படுவதே அடியானின் கடமை என எண்ணி, இறை உத்தரவை நிறைவேற்றத் துணிகிறார்கள்.

ஆதரிப்பார் யாரும் இல்லாத கடும்பாலை வனத்திலே அருமை மனைவியையும், அன்பு மகனையும் கொண்டு போய் விட்டு விட்டு நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு திரும்புகிறார்கள் நபி இப்றாஹிம்(அலை). "எங்களுக்கேன் இந்தக் கடுஞ்சோதனை? இதைத்தான் உங்கள் இறைவன் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறானா?" என்ற பாச மனைவியின் கேள்விக்கு, "ஆம்!" என்ற பதிலே இப்றாஹிம்(அலை) அவர்களிடமிருந்து கிடைக்கின்றது. அப்படியானால் அந்த இறைவன் எங்களுக்குப் போதுமானவன் என்று அன்பு மனைவியாரும் ஆறுதல் அடைகிறார்கள்.

நாட்கள் செல்கின்றன. கொண்டு வந்த உணவுப் பொருள், தண்ணீர் அனைத்தும் தீர்ந்து விட்டன. பசியின் கொடுமையினால் பச்சிளம் பாலகனுக்குப் பால் இல்லை. பல நாட்கள் தாயும், சேயும் பட்டினி. பசி தாங்காது சேய் வீறிட்டு அழுகின்றது. தனயனின் பசித்துயர் தாங்காது, தாயின் உள்ளம் படாத பாடு படுகின்றது. மகனின் பசி போக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்த பட்சம் வரளும் நாவை ஈரப்படுத்திக் கொள்ளக் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்காதா? என்று ஏங்குகின்றது பெற்ற உள்ளம். அதற்காக இங்கும் அங்கும் ஓடுகிறார்கள் - அன்று அவர்கள் ஓடிய ஓட்டத்தை அல்லாஹ் பொருத்திக் கொண்டான். தனயனின் கால்களுக்கடியிலேயே "ஜம் ஜம்" நீரைப் பெருக்கெடுத்தோடச் செய்து, ஹஜ்ஜுக்கு வரும் ஆண்கள், பெண்கள் அனைவரும் அவர்கள் அன்று ஓடிய அந்த மலைகளுக்கிடையே ஓடுவதை ஹஜ்ஜின் ஒரு அமலாகவும், ‘ஜம்ஜம்" தண்ணீரை ஒரு புனிதப் பொருளாகவும் ஆக்கி விட்டான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். துன்பம் முடிவுற்றதா? இல்லை! சோதனை இன்னும் தொடர்கின்றது.

பச்சிளம் பாலகன் வளர்ந்து ஒடியாடித் திரிகின்ற பருவம். இடையிடையே இப்ராஹிம்(அலை) பக்கா(மக்கா) வந்து அன்பு மனைவியையும், ஆசை மகனையும் பார்த்துச் செல்கிறார்கள். ஒரு நாள் நபி இப்றாஹிம்(அலை) அவர்கள், பல்லாண்டு ஏங்கிப் பன்முறை இறைவனிடம் வேண்டிப் பெற்ற அருமை மகனை தன் கைகளாலேயே அறுத்துப் பலியிடும் கனவொன்றைக் காண்கிறார்கள். இங்கு, நபிமார்களின் கனவில் ஷைத்தான் வர முடியாது என்பதால் இறை உத்தரவு என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அது தான் போலும். அவனது நாட்டத்தை நிறைவேற்றுவதே அடியானாகிய தனது கடமை என முடிவெடுத்து, தனது கனவைச் செயல்படுத்த அன்பு மகனிடம் விபரிக்கிறார்கள். அந்தப் பிஞ்சு உள்ளம் இஸ்மாயில்(அலை) அவர்கள் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்தப் பதில் நமது சிந்தனைக்குரியது. "அன்புத் தந்தையே அல்லாஹ்வின் கட்டளைப்படிச் செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் அதில் என்னை நீங்கள் பொறுமையாளர்களாகவே காண்பீர்கள்" (அல்குர்ஆன் 37:102) என்று மிக அழகாகப் பதில் கூறுகிறார்கள்.

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! இந்த இடத்திலே, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முன்னால், தங்கள் பந்தம், பாசம், ஆசை, அபிலாசைகள் அைனத்தும் ஒன்றுமே இல்லை; அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவுச் செய்வதே அடியார்களின் தலையாய கடமை என்பதைத் தந்தையும், தனயனும் எந்த அளவு உணர்ந்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்து பாருங்கள். ஆம்! தாங்கள் கண்ட கனவைச் செயல்படுத்த, பெற்ற மகனைத் தன் கரங்களாலேயே அறுத்துப் பலியிடத் துணிந்து அழைத்துச் செல்கிறார்கள். எந்த உள்ளமும் பதை பதைக்காமல் இருக்க முடியாது. கடுமையான சோதனைக்கட்டம். இப்றாஹிம்(அலை) கொண்ட உறுதியில் தளர்வதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஷைத்தான் வந்து தந்தையின் உள்ளத்தில் பிள்ளைப் பாசத்தை உண்டாக்கி, சோதனையின் தோல்வியடையச் செய்ய முயற்சி செய்கிறான். தந்தை ஷைத்தானின் வலையில் சிக்கவில்லை. ஷைத்தானைக் கல்லால் அடித்துத் துரத்துகிறார்கள். ஷைத்தான் பெற்ற தாயிடம் சென்று, கலைக்கப் பார்க்கிறான். பெற்ற மனம் பித்து என்பார்கள். ஆனால் இங்கு அந்தப் பித்து உள்ளமும் கலங்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்று கூறி ஷைத்தான் அடித்துத் துரத்துகிறார்கள். இறுதியில் பலியிடப் போகும் மகனை நெருங்குகிறான். சாகச வார்த்தைகளைக் கூறுகின்றான். "தந்தையோ வயது முதிர்ந்தவர்; நீயோ வாழ வேண்டிய வயது. உலக வாழ்க்கையை இனிமேல் அனுபவிக்க வேண்டும். இந்த நிலையில் உன்னைப் பலியிடப் போகின்றாரே உன் தந்தை. அதற்கு நீ இடங் கொடுக்கலாமா?" தனயனும் ஷைத்தானின் சாகச வார்த்தையில் மயங்கவில்லை. ஷைத்தானுக்கு அங்கும் தோல்வி. இறைவனது விருப்பம் அதுவானால் தந்தைக்கோ, தாய்க்கோ, தனயனுக்கோ அதில் என்ன உரிமை இருக்க முடியும்? ஓடிப்போ! என்று கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள். தந்தை, தாய், தனயன் மூவரின் செயல்களை அல்லாஹ் பொருத்திக் கொண்டு அதன் ஞாபகார்த்தமாக ஹாஜிகள் இன்றும் மூன்று இடங்களில் கல் எறிவதை, ஹஜ்ஜின் ஒரு அங்கமாக ஆக்கி இருக்கிறான். அல்லாஹ் (ஜல்) இறுதியில் இப்றாஹிம்(அலை) அவர்கள் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களைக் கீ கிடத்திக் கழுத்தில் கத்தியை ஒட்டத் தயாராகிறார்கள்.

ஆம்! மனிதன் தன்னுடைய கட்டளைகளுக்கு எந்த அளவு வழிப்பட்டு நடக்கிறான்? என்று அல்லாஹ் சோதிக்கிறானேயல்லாமல் அந்தச் சோதனையால் மனிதன் முன் காணப்படும் வேதனையில் சிக்க வைக்க வேண்டுமென்பது, அல்லாஹ்(ஜல்)வின் விருப்பமன்று. எண்ணற்ற தடங்கல்கள் ஏற்பட்ட பின்பும் தனக்கு வழிப்படும் ஒரே நோக்கம் தவிர வேறு நோக்கம், தந்தை, தாய், தனயன் மூவருக்கும் இல்லை; இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக நிருபிக்கப்பட்ட பின் அந்த வேதனை அவர்களுக்கு ஏன் ஏற்பட வேண்டும்? என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன், நாடினான் போலும்! இதோ இறைவன் கூறுகிறான், "ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்றாஹிம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, யா இப்றாஹிம்! என்றழைத்தோம். திட்டமாக நீர் ஒரு கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கும் நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தமாக) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்றாஹிம் - இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்." (அல்குர்ஆன் 37 :103-110)

இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக உணர்வை அல்லாஹ்(ஜல்) ஏற்றுக்கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியாக்கி உலகம் அழியும்வரை, மக்கா வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஹஜ்ஜுக்கு வராத மற்றும் வசதி படைத்த முஸ்லிம்களும் குர்பானி கொடுப்பதையும் விதியாக்கியுள்ளான். ஆம்! அல்லாஹ்வின் சோதனையில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற்றுவிட்டால், அதன் முடிவு எல்லை இல்லா மகிழ்ச்சியே அல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்தச் சம்பவங்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதாக ஆகி விட்டதால், அந்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நமக்கு ஒரு ஈதையே(பெருநாளைேய) அல்லாஹ்(ஜல்) கொடுத்திருக்கிறான். வருடா வருடம் ஹாஜிகள் நிறைவேற்றும் பல கடமைகள் இந்தச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த நபி இப்றாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவராலும் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட கஃபத்துல்லாவை வலம் (தவாஃப்) வருவதை ஒரு வணக்கமாகவே அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவர்கள் நின்று கஃபத்துல்லாவைக் கட்டிய இடத்தை (மகாமே இப்றாஹிம்) தொழும் இடமாக அல்லாஹ் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன் 2:125)

தியாகத் திருநாள் தரும் படிப்பினை இவைதான். நாம் அல்லாஹ்வின் அடிமைகள். அவனே நமது எஜமானன். நாம் அவனுக்காகவே வாழ்ந்து, அவனுக்காகவே மடிவதே நமது நீங்காத இலட்சியமாகும்.

"(நீர்) கூறும்!

எனது தொழுகை, எனது ஹஜ்ஜின் கிரியைகள், என் வாழ்வு, என் மரணம் (அனைத்தும்) ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கே." (அல்குர்ஆன் 6: 162)

எந்த ஒரு காரியத்திலும் நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளை விட, அல்லாஹ்(ஜல்)வின் கட்டளையை நிறைவேற்ற முற்படுவதே நமக்கு வெற்றியையும் இறுதியில் மகிழ்ச்சியையும் அளிக்கும். மறுமையில் ஈடில்லா பெரும் பேறுகளைத் தரும். நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளுக்கு இடம் கொடுத்தால், ஷைத்தானின் வலையில் சிக்கி விடுவோம். நாம் எதை எதிாபார்த்தோமோ, அந்தச் சந்தோசமும் நம்மை விட்டுப் போய்விடும். இறுதியில் ஷைத்தான் நம்மை மீளா நரகில் கொண்டு சேர்த்து விடுவான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது. அதிலிருந்து மீட்சி இல்லாமலும் போகலாம். ஆகவே இது விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது கடமை. படிப்பினை பெறுவோமாக! ஆமீன்.

அடுத்து, இங்கு இன்னொரு படிப்பினையும் பெற முடிகின்றது. நபிமார்கள், வலிமார்கள், நல்லடியார்கள் இவர்கள் அனைவரும் இறைவனுக்குப் பூரணமாகக் கட்டுப்பட்டு, தியாக வாழ்க்கை வாழ்ந்ததன் காரணமாகத் தான் இறைவனிடத்தில் உயர் பதவிகளையும், இறை திருப்தியையும் பெற்றுக் கொண்டார்கள்; இன்று மக்களுக்கு மத்தியில் பெரிது படுத்திக் காட்டப்படும் மாயாஜல வித்தைகள் போன்ற மந்திர தந்திரக் கதைகளை வைத்து அல்ல! உதாரணமாக ஒரு பெரியார் இன்னொருவரது கோழியைப் பிடித்து அறுத்துச் சமைத்துச் சாப்பிட்டு விட்டார். கோழிக்குச் சொந்தக்காரன் வந்து சண்ைடயிட்டான். உடனே, சாப்பிட்டு எறிந்த எலும்புகளை எல்லாம் சேர்த்து, உயிர் பெற்றுவிடு என்று அந்தப் பெரியார் சொன்ன மாத்திரத்தில் கோழி உயிர் பெற்று எழுந்து விட்டது என்று கதை சொல்வார்கள். நபி(ஸல்) அவர்களுக்கே பிறரது பொருளை அனுமதி இன்றிச் காப்பிட உரிமை இல்லை என்றால், இந்தப் பெரியாருக்கு எங்கிருந்து அனுமதி கிடைத்தது. ஹறாமைச் சாப்பிட்டவர் எப்படி வலியாக இருக்க முடியும்? ஹறாமைச் சாப்பிட்டவர் எப்படி ‘கராமத்’ காட்ட முடியும்? ஊரான் வீட்டுக் கோழியை அறுத்துச் சாப்பிட்ட இந்தக் கதையையும் இறைவனுக்காகப் பெற்ற மகனையே அறுக்கத் துணிந்த, இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக வரலாற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இறைவன் எதைப் பொருத்திக் கொள்வான் என்று சிந்தியுங்கள்.

நபிமார்களுக்குரிய முஃஜிசாத்தாக இருப்பினும், வலிமார்களுக்குரிய கராமத்தாக இருப்பினும் அல்லாஹ்வின் அனுமதி இன்றி அவர்கள் விரும்பியவுடன் செய்ய முடியாது. "எந்த ஒரு தூதருக்கும் அல்லாஹ்வின் உத்தரவின்றி அற்புதம் செய்ய முடியாது. "எந்த ஒரு தூதருக்கும் அல்லாஹ்வின் உத்தரவின்றி அற்புதம் கொண்டு வர முடியாது". (அல்குர்ஆன் ் 40:78) மேலும் அவை அவர்களுக்குரிய சாதாரண அடையாளங்களில் ஒன்றே அல்லாமல் இன்று நம்மவர்கள் பெரிதுபடுத்திக் காட்டும் அளவுக்கு முக்கிய இடத்தைப் பெற்றவை அல்ல. அவர்களது சிறப்பெல்லாம், அவர்களது ஈமானையும் தக்வாவையும் வைத்துத் தான். (அல்குர்ஆன் ் 10:63, 49:13) இந்த மாயாஜலக் கதைகளை வைத்து அல்ல. இந்தக் கட்டுக் கதைகளைச் சொல்லித்தான் பெரியார்களின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதில்லை. அல்குர்ஆன் ், ஹதீதுக்கு ஒத்த அவர்களின் உண்மையான போதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னாலே போதும்.

நபி இப்றாஹிம்(அலை) அவர்கள் வரலாற்றிலும், அவர்கள் கூர்மையான கத்தியைக் கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களின் கழுத்தை அறுத்தார்கள்; கழுத்து அறுபடவில்லை; அல்லாஹ்விடம் குற்றவாளியாக ஆகி விடுவோமோ என்ற அச்சத்தில், ஆத்திரமுற்று பக்கத்திலிருந்த பாறாங்கல்லில் கத்தியை ஓங்கி அடித்தார்கள். பாறாங்கல் இரண்டாகப் பிளந்து விட்டது, என்று இங்கும் ஒரு மாயாஜால மந்திரக் கதையை இட்டுக் கட்டியிருக்கிறார்கள்.

கீழ்க் குறிப்பிடப்படும் அல்குர்ஆன் ் வசனங்களை மீண்டும் ஒருமுறை உற்று நோக்குங்கள்.

"ஆகவே அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, இப்றாஹிம் அலை, மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை யா இப்ராஹிம் என்றழைத்தோம். திடமாக நீர் கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான, பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்." (அல்குர்ஆன் ் 37 : 103 - 107)

சாதாரண அறிவு படைத்தவனும் இவ்வசனங்களைப் பார்த்த மாத்திரத்தில் இப்றாஹிம்(அலை) மகனை குப்புறக்கிடத்தியவுடன், அல்லாஹ் அவரை அழைத்து விட்டான்; அறுக்கும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை; அப்படிப்பட்ட கதைகளெல்லாம் வெறும் கட்டுக் கதைகள் தான் என்பனவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.

உண்மைக்குப் புறம்பான, மாயாஜல மந்திரக் கட்டுக் கதைகளைப் பெரியார்கள் வலிமார்கள் விஷயத்தில் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டு விட்ட ஒரு சாரார் அந்தப் பழக்க தோசத்தில் அல்குர்ஆன் ் தெளிவாக பறை சாற்றிக் சென்றிருக்கும், ஒரு சம்பவத்திலும், தங்கள் புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இங்கு இன்னொன்றையும் கவனித்து விளங்கிக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் ைக் கொண்டு நிலைநாட்டப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்திலேயே இப்படி மாயாஜல மந்திரக் கதைகளை உண்டாக்கியவர்கள் ஆதாரப் பூர்வமில்லாத வலிமார்கள் வரலாறுகளில் எந்த அளவு புழுகு மூட்டைகளை அள்ளி விட்டிருப்பாாகள் என்பதைச் சாதாரண அறிவு படைத்தவனும் விளங்கிக் கொள்ள முடியும். இந்த வகையில் உருவானது தான், செத்த கோழியும் உயிர் பெற்று எழுந்த கதையாகும்.

இவற்றிற்கெல்லாம் மூல காரணம் என்ன என்று பாாக்கும் போது வலிமார்கள் விஷயத்தில் அளவு கடந்த கட்டுக் கதைகளையும் மாயாஜாலக் கதைகளையும் கட்டி விட்டு, பாமர மக்களுக்கு மத்தியில் வலிமார்களைப் பற்றி ஒரு "இமேஜை" உண்டாக்கி, சுருங்கச் சொன்னால் குறைஷிக்காபிர்களைப் போல், அவர்களைக் குட்டித் தெயய்வங்களாக்கி, அதன் மூலம் சமுதாயத்தில் கபுரு வணக்கத்தை உண்டாக்கி வயிறு வளர்க்க வேண்டும்; பிழைப்பு நடத்த வேண்டும் என்பது இவர்களின் முக்கிய நோக்கமாகும். அல்லாஹ்(ஜல்) இந்தக் கயவர்களின் மாய வலையிலிருந்து இந்தச் சமுதாயத்தைக் காத்தருள்வானாக!

"மனிதரில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் முதலிய) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி (அவற்றை ஜனங்களுக்குச் சொல்லி) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து அறிவின்றி (ஜனங்களை) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (அல்குர்ஆன் 31:6)

அல்குர்ஆன் ் ஹதீதுகளுக்கு மாற்றமான, இட்டுக்கட்டப்பட்ட மாயாஜாலக் கட்டுக் கதைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, அல்குர்ஆன் ் ஹதீதுகளை மட்டும் வைத்துச் செயல்படுவதை இந்த "ஈத்" இலட்சியமாக் கொள்வோமாக!

இப்னு ஹத்தாது

Wednesday, October 1, 2014

சர்ச்சைகளின் சர்தார்ஜி மார்க்கண்டேய கட்ஜு

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர், இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள், சமீப காலமாக, சர்ச்சைகளின் சர்தார்ஜி ஆகி வருகிறார்.
தி இண்டு ஆங்கில இதழ் (1/10/2014)`Katju favours uniform civil law – கட்ஜு பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறார்’ என்னும் தலைப்பில் ஒரு செய்தி வெளியாக்கி இருக்கிறது.
தி டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில ஏடு, இதே செய்தியை“Katju: Muslim personal law is barbaric”முஸ்லிம் தனியார் சட்டம் காட்டுமிராண்டித்தனமானது – கட்ஜு” என்று தலைப்பிட்டு பிரசுரித்திருக்கிறது.
இரண்டு ஆங்கில இதழ்களிலும் கட்ஜு கூறியதாக வெளி வந்துள்ள செய்திகளை தொகுத்துப் பார்க்கும் போது கட்ஜு அவர்கள் தன்னை இந்திய உச்சநீதிமன்றத்தின் உச்ச நீதிபதி யாக இருந்ததை மறந்து விட்டிருக்கிறார் என்பதும், இந்திய பிரஸ் கவுன்சில் என்னும் பொறுப்பில் இன்றளவும் இருக்கிறார் என்பதையும் மறந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது.
இந்தியா முழுவதற்கும் ஒரேவிதமான சிவில் சட்டம் வேண்டும் என்னும் இந்துத்துவப் பிரச்சாரத்தை, கட்ஜு தனது பிரியமான கொள்கையாகக் கொண்டு முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி பிராண்டியிருக்கிறார் என்பதுதான் உண்மை.
“முஸ்லிம் தனியார் சட்டம், அநீதியானது – சமநீதிக்கு எதிரானது – பெண்களை தாழ்த்துகிறது – ஆண்களை உயர்த்தி வாழ்த்துகிறது. இன்றைய நவீன நாடுகள் அனைத்திலும் ஒரே விதமான சட்டம் அமுலில் இருக்கும்போது, இந்தியா மட்டும் விதிவிலக்காக இருக்க என்னகாரணம்? முஸ்லிம் வாக்கு வங்கிதான். காட்டுமிராண்டித்தனமான, பிற்போக்குத்தனமான, அநீதியான ஆணையும் – பெண்ணையும் சமமாக நடத்தாத முஸ்லிம் தனியார் சட்டத்தை புறந்தள்ளி விட்டு இந்தியா முழுமைக்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை வரவேற்கிறேன்.’’
- இப்படிப்பட்ட கருத்து முத்துக்களை கட்ஜு கொட்டி பரப்பி விட்டு குமுறியிருக்கிறார்.
அதிநவீன அமெரிக்க நாடு முழுவதிலும் ஒரே சட்டம் இருக்கிறதா? ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சட்டம் இருக்கிறது. அமெரிக்க மாநிலங்களில் 10-க்கும் மேற்பட்டவை களில் ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள சட்டம் வைத்திருக்கிறார்கள். கட்ஜு பேசும் நவீன நாடுகளான ஐரோப்பிய நாடுகள் 19-ல் ஆணும் – ஆணும், பெண்ணும் – பெண்ணும் விவாகம் செய்து கொண்டு மகிழ்ச்சிப் பொங்க வாழ்ந்து சொத்து பாகப்பிரிவினை செய்துகொள்ள சட்டம் போட்டிருக்கிறார்கள். இந்த சட்டங்கள் இந்தியாவுக்குள் வர வேண்டும் என்று விரதம் இருக்கிறாரா கட்ஜு?
இஸ்லாமியச் சட்டம் காட்டுமிராண்டிச் சட்டம் என்கிறாரே கட்ஜு, இன்றைக்கு அவரின் செய்தியை தந்த `தி இண்டு’ மற்றொரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. மகளிருக்கான தேசிய கமிஷன் தலைவராக பொறுப்பேற்றுள்ள திருமதி லலிதா குமாரமங்கலம் கூறியுள்ளார்…. இந்தியாவில் ஆயிரம் ஆண்களுக்கு 800 பெண்கள் என்கிற விகிதத்தில் இருப்பதால் ஒரே பெண்ணை பல ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பதும், மணப் பெண்களை விற்பனைப் பொருட்களாக ஆக்குவதும் நாட்டில் நடப்பாகி விட்டது’ என்று கூறியிருக்கிறார்.
இன்றைக்கும் நேபாள எல்லையில் உள்ள இந்திய கிராமங்களில் ஒரு பெண்ணை 5 ஆண்கள் திருமணம் செய்து கொண்டு நவீன காலத்து பஞ்சப் பாண்டவர்களையும், பாஞ்சாலியையும் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த காட்டுமிராண்டித்தனங்கள் யாவையும் இந்திய முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும் என்கிறாரா கட்ஜு?
இஸ்லாமிய சட்டத்தில் ஆண் `தலாக்’ சொல்லி விவாகரத்து செய்யலாம்.;ஆனால் பெண்கள் கோர்ட்டுக்கு போக வேண்டும் என்று பெண்களுக்கு பரிந்து பேசுபவது போல பாசாங்கு வாதம் ஒன்றையும் முன் வைத்திருக்கிறார். இன்றைக்கு தமிழ் ஏடுகள் எல்லாவற்றிலும் `தி டைம்ஸ் ஆஃப் இண்டியா’ ஆங்கில ஏடுகளிலும்‘Man kills wife for refusing divorce’என்னும் தலைப்பில் ஒரு செய்தி பிரசுரமாகியிருக்கிறது.
மனைவியைப் பிரிவதற்குரிய சிறந்த வழி ஒன்று தெரியாத அந்தக் கணவன் கொலைகாரனாக மாறியிருக்கிறான்! இஸ்லாமிய தலாக் முறையை அந்தக் கொலைக்காரக் கணவன் தெரிந்திருப்பானாகில் கொலைகாரனாக மாறியிருப்பானா?பிடிக்காத மனைவியை காலமெல்லாம் தூக்கி சுமக்கும் சுமை தாங்கியாக ஆண் இருக்க வேண்டும் என்று கட்ஜு நினைக்கிறாரா? இஸ்லாமிய சட்டத்தில், `தலாக்’ சொல்லும் அதிகாரம் ஆணுக்கும் உண்டு;
பெண்ணுக்கும் உண்டு. பெண் `தலாக்’ சொல்வதை “குலா’’ என்பார்கள். கணவன் – மனைவி மனம் ஒத்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதற்குத் தான் திருமணம் நடக்கிறது. திருமணம் நடந்த பிறகு எலியும், பூனையுமாக – பாம்பும், தவளையுமாக ஆணும் – பெண்ணும் இருந்தாலும் ஒரேகூட்டில் ஒரே வளையில் இருந்துதான் ஆக வேண்டும் என்று கூறுவது காட்டுமிராண்டித்தனமா?
மனம் ஒப்பாதவர்கள் மனதாலும், உடலாலும் பிரிந்து மறுமணம் செய்து மனிதர்களாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கு `தலாக்’ சொல்லிக் கொள்ளலாம் என்று வாழ்வை இனிமைப் படுத்துவதற்காக சட்டத்தை எளிமைப்படுத்தியிருப்பது காட்டு மிராண்டித்தனமா? என்பதை கட்ஜு கூற வேண்டும்.
ஒரேவிதமான சிவில் சட்டம் என்பது எந்த நாட்டிலும் இல்லை;எல்லா நாட்டிலும் அந்தந்த நாட்டு மக்களின் மத அனுஷ்டானங்கள், சடங்கு – சம்பிரதாயங்கள், ஆசாரங்கள், குடும்ப சட்டங்கள் அந்தந்த மதத்தவருக்கென நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்தியா முழுவதிலும் ஒரே விதமான மத சட்டத்தை கொண்டு வர வேண்டும் என எண்ணுவோரும், பிரச்சாரம் பண்ணுவோரும், இந்தியாவை வாழ வைக்க வழிகாட்டக் கூடியவர்கள் அல்லர். இந்தியா என்னும் பாருக்குள்ளே நல்ல நாட்டை பாழ்படுத்த எண்ணும் கெடுமதியாளர்களின் பிரச்சாரங்கள்
அது!
பாருக்குள்ளே சிறந்த பாரத திருநாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு காத்து, வேற்றுமையில் ஒற்றுமை பேணி முஸ்லிம்கள் தங்களின் மார்க்கத்தில் நிலைநின்று வாழ்ந்து இந்த நாட்டை நல்லரசாகவும், வல்லரசாகவும் ஆக்குவதற்குப் பாடுபடு வார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
– கே.எம்.கே.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!