Saturday, October 24, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?அல்லாஹ்வுக்கு சிரம் பணிய இயலாமை! தொடர் 14

மக்கள் தரும் புகழாரங்களை வணங்கியவர்களுக்கு மேலும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்கள் தனக்கு சிரம் பணிய (சுஜூது ) செய்ய முயன்ற போதிலும், அதனை அல்லாஹ் இயலாமல் ஆக்கிவிடுவான். அபூ சையீத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு நீண்ட நபிமொழியில், இறுதித் தீர்ப்பு நாளில் இறைநம்பிக்கையாளர்கள் எவ்வாறு அல்லாஹ்வைக் காண்பார்கள் என்பதை அண்ணல் நபி அவர்கள் விளக்கினார்கள். இதன் பிறகு அவர்கள் சொன்னார்கள்.

'பிறகு அல்லாஹ் தனது கீழ்காலின் முன்புறத்தை வெளிப்படுத்துவான். (உலக வாழ்வின் போது) தனக்கு தூய எண்ணத்துடன் சிரம் பணிய செய்த அனைவரையும் சிரம் பணிய அனுமதிப்பான். இதனால் அவர்கள் யாருமே நின்று கொண்டிருக்க மாட்டார்கள். மற்றவர்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக சிரம்பணிந்தவனின் முதுகை அல்லாஹ் ஒரே துண்டுக் கட்டையாக ஆக்கிவிடுவான். (இதன் விளைவாக அவனால் குனியவே முடியாது) ஒவ்வொரு முறை அவன் சிரம் பணியும் போது, அவன் முகங்குப்புற கீழே விழுவான்...."

நூல்: சஹீஹ்அல்ஜாமி,புகாரி,முஸ்லிம்.
அபூ அம்மார் யாசிர் அல் காழி -
தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்

Saturday, October 17, 2009

வெற்றிக்கு வழி! இஸ்லாத்தை உறுதிப்படுத்தும் அறிவியல் உண்மைகள்!! தொடர் 5





"அதுமட்டுமல்ல,இன்னும் கேளுங்கள் ஷண்முகம்,பஷீர் காக்கா தொடர்ந்தார்,"முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.

"இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது".

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190)

வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.

குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர் ஆனோடு முரண்படவில்லை என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர் ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும் வாய்ப்பில்லை அன்ற அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிவியல் செய்திகளையும் இப்போது கூறிவிட இயலாது.அந்த அளவுக்கு உள்ளன. எனினும் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை கீழ்க்கண்ட இரு செய்திகளின் மூலம் அறியலாம்.


பெருவெடிப்புக் கொள்கை:


வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,

1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.

2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.

3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் - சந்திரன்களாக உருவாகின.
- என்பதாகும்.

அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN),இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக, பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.


சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.

பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:
சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.
அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.

பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)

1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.
மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.
அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53).

ஷண்முகம் கண்கொட்டாது,ஆச்சரியத்தில் மூழ்கி கேட்டுக் கொண்டிருந்தார். புகைவண்டி அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது.


இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

முஸ்லிம் பெண் தொழிலதிபர் அக்தர் நவாஸ்



"தொழிலில் "ரிஸ்க்' எடுத்தால் சாதிக்க முடியும்,'' என பெண் தொழிலதிபர் அக்தர் நவாஸ் கூறினார். மதுரை நாராயணபுரம் பாங்க் காலனியை சேர்ந்தவர் நிஜாம் அலிகான். இவரது மனைவி அக்தர் நவாஸ் (46). பி.காம்.,படித்துள்ளார். "எம்.என்.ஏ.ஹெர்பல் ரெமடீஸ்' நிறுவன உரிமையாளர்.

மடீட்சியா- சக்தி மசாலாவின் "சிறந்த பெண் தொழில் முனைவோர்' விருது பெற்றுள்ளார். அக்தர் நவாஸ் கூறியதாவது: நாங்கள் முதலில் போட்டோ ஸ்டுடியோ மற்றும் பியூட்டி பார்லர் நடத்தினோம். இதில் வருவாய் குறைந்ததால் மாற்றுத் தொழில் பற்றி சிந்தித்தோம். நெல்லிக்காய் சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும். இளமையை பாதுகாக்கும். எனவே இதிலிருந்து பொருட்கள் தயாரித்தால் என்ன? என எண்ணினோம். சமூக நலத்துறை சார்பில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி நடந்தது. இதில் நான் நெல்லிக்காய் ஜூஸ் பயிற்சி பெற்றேன்.

பின் நெல்லிக்காய் ஜூஸ் தயாரிப்பு சுய தொழில் துவங்கினேன். அதை முதலில் கடைகளில் வாங்க தயங்கினர். மகளிர் திட்டம் மூலம் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி மற்றும் உழவர் சந்தைகளில் வரவேற்பு இருந்தது. பின் கடைகளில் ஆர்டர் குவிந்தது.தற்போது எங்களின் நெல்லிக்காய் ஜூஸ், ஸ்வாகுவாஷ், நெல்லி மிட்டாய், ஊறுகாய், லேகியத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கணவர் "மார்க்கெட்டிங்'கை கவனித்துக்கொள்கிறார்.

பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். உசிலம்பட்டி, அழகர்கோவில், பிள்ளையார் பட்டி பகுதிகளிலிருந்து தேவையான நெல்லிக்காய்களை கொள்முதல் செய்கிறோம்.மதுரை விவசாயக் கல்லூரி மற்றும் மனையியல் கல்லூரி மாணவர்களுக்கு "அக்ரோ இண்டஸ்ட்ரியல் டை- அப்' மூலம் மூன்று ஆண்டுகளாக பயிற்சி அளிக்கிறோம். விரைவில் மாதுளை, வில்வம்பழ ஜூஸ் தயாரிக்க உள்ளோம்.

பெண்கள் சுய தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். யாரையும் எதிர்பார்க்கக்கூடாது. முயற்சி, தன்னம்பிக்கையுடன் "ரிஸ்க்' எடுத்தால் சாதிக்கலாம். பெண்கள் வழக்கம்போல் வத்தல், மிளகாய், வடகம், ஊறுகாய் தயாரிப்பு தொழில் ஈடுபட்டால் வருவாய் குறைவாகத்தான் கிடைக்கும். எந்த தொழில் செய்தால் விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்கும் என ஆராய்ந்து ஈடுபட்டால் வெற்றி நிச்சயம், என்றார். இவரை 93603 82611 ல் தொடர்பு கொள்ளலாம்.

Monday, October 12, 2009

சிலை,கல்,மண்ணை வணங்கும் இந்துவே,சற்று சிந்திப்பாயா!

இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். (21:51)

அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் "நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?" என்று கேட்ட போது (21:52)

அவர்கள், "எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள். (21:53)

(அதற்கு) அவர், "நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையவரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள் என்று கூறினர். (21:54)

(அதற்கு) அவர்கள் "நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?" என்று கேட்டார்கள். (21:55)

"அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்" என்று (இப்ராஹீம்) கூறினார். (21:56)

"இன்னும்; நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!" (என்றும் கூறினார்.) (21:57)

அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்). (21:58)

"எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்" என்று கூறினார்கள். (21:59)

அதற்கு (அவர்களில் சிலர்) "இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது" என்று கூறினார்கள். (21:60)

"அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு" என்று சொன்னார்கள். (21:61)

"இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?" என்று (அவர் வந்ததும்) கேட்டனர். (21:62)

அதற்கு அவர் "அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்" என்று கூறினார். (21:63)

(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) "நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்" என்று பேசிக் கொண்டார்கள். (21:64)

பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; "இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!" (என்று கூறினர்). (21:65)

"(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்" என்று கேட்டார். (21:66)

சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?" (என்று இப்ராஹீம் கூறினார்). (21:67)

(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்" என்று கூறினார்கள். (21:68)

(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) "நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!" என்று நாம் கூறினோம். (21:69)
மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்! (21:70)

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!