Sunday, November 22, 2009

தகர்க்கப்பட்டது தர்கா !!


வேலூர்- ரஹ்மத் பாலாவில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இரு முக்கிய சாலை சந்திப்பில் ஆஷுகான என்ற இடத்தில் ஒரு கல்லினை வைத்து தாகாவாக வணங்கிக்கொண்டிருந்தனா. இதில் பெரும்பான்மையாக பெண்கள் மட்டுமே வருகின்றனா.

மேலும் இப்போது சாலை இருபுறமும் கால்வாய் கட்டி புதிய சாலை அமைக்க அகலப்படுத்தும் போது தர்கா வாதிகள் தாகாவை நகாத்த எதிப்பு தொவித்தனா. தர்ஹாவை தகர்த்தெரிய இதை நல்ல வாய்ப்பாக யன்படுத்திக் கொண்டு நமது TNTJ நீர்வாகிகள் உடனடியாக களத்தில் இறங்கிய முறைப்படி மாநகர மேயா மற்றும் ஆனையாளாடம் எழுத்துமூலமாக ஆக்கிரமிப்பை அகற்ற மனு அளித்னர். அதன் அடிப்படையில் நேற்று காலை (20.11.09) 10 மணிக்கு நகர தலைவா அப்துல் கலீம் தலைமையில் முன்னாள் மாவட்ட நிவாகி அலாவுதீன் முன்னிலையில் நமது ஜமாஅத்தைச் சாந்த சுமார் 25 பேர் இணைந்து சமட்டியால் அடித்தே அந்த தர்காவினை தரை மட்டமாக்கினா. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த ஏகத்துவ எழுச்சியிக்கு அந்தப் பகுதியைச் சாந்த அனைத்து முஸ்லிம்களும் அமோக ஆதரவளித்தனா.

இதில் எதிப்பு காட்டிய சிலர் அருகிலுள்ள பள்ளிவாசலில் ‘நாங்கள் வணங்க ஒரு இடம் ஒதுக்கித்தர வேண்டுமென முறையிட்டனர் .இதையறிந்த நமது நிவாகிகள் மாநில செயலாளர் ஆ.ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் சம்பந்தப்பட்ட ஜமாஅத்தினரை நோல் சந்தித்து இடிக்கப்பட்ட இடத்தில் ரோடு வரவேண்டும் மற்றும் மீதமுள்ள காலி இடத்தில் மக்தப் மதரஸா கட்டப்பட வேண்டும்.

இந்த இணைவைப்பாளருக்கு இந்த இடத்தை எக்காலத்திற்கும் ஒதுக்க விடக்கூடாது என ஆணித்தரமாக அறிவுறுத்தினர். அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்..


சில தினங்களுக்கு முன் டிராபிக் ராமசாமி என்பவர் ஒரு பொதுநல வழக்கொன்றை ஹைகோர்டில் தொடர்ந்திருந்தார்,அதில் அவர்,"இப்படி பொது இடங்களை ஆக்கிரமித்து தர்கா,கோயில்,சர்ச்சுகள் பலர் கட்டியுள்ளனர்,இவைகளை இடிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும என்று."அது சரியானது தான்.ஆக்கிரமிப்புக்களைக் களைவது அரசின் கடமை என்றாலும்,ஆக்கிரமிப்பு இல்லாமல் கட்டப்பட்டுள்ள தர்காக்களை இடிக்க அரசு உத்தரவிடவேண்டும் என்பதே பெருவாரியான முஸ்லிம்களின் கோரிக்கை,ஏனெனில்,அது இஸ்லாத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.தர்காக்களை இடித்து விட்டு விட்டு அந்த இடத்தில் ஆசுபத்திரி,பள்ளிக் கூடம் போன்றவைகளை கட்டினால் மக்களுக்கு பயன் கிடைக்கும் என்பது திண்ணம்

Friday, November 20, 2009

மரண அறிவிப்பு

மர்ஹூம் முஹம்மத் தம்பி மரைக்காயர் (கட்ட பிள்ளையார்)அவர்களின் மகனாரும்,சகோதரர்கள் முஹம்மத் தமீம்,சாதிக்,ரபீக்,தௌபீக் ஆகியோர்களின் தகப்பனாரும்,மர்ஹூம் ஷேய்க்காதியார்,மர்ஹூம் அபுல் ஹசன்,அப்துல் ரஜாக்,ஹாஜா அலாவுதீன் ஆகியோர்களின் சகோதரரும்,அப்துல் ரஜாக்,ஷேய்க் அப்துல் காதர்,அப்துல் ரஜாக்,ஹாஜா ஆகியோர்களின் மாமனாருமாகிய நடுத்தெருவில் வசித்து வந்த சாகுல் ஹமீத் அவர்கள் இன்று காலை சுமார் ஆறு மணியளவில் அதிராம்பட்டினத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்.அன்னார் அவர்கள் மிக எளிமையான நடத்தையும்,மேன்மையையும் பேணி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னாரின் மறுமை உலக நற் பேருக்காகவும்,ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துவா செய்யுமாறு வேண்டுகிறோம்.

இப்படிக்கு

கட்டப்பிள்ளையார் குடும்பத்தார்.

Wednesday, November 11, 2009

இறை இல்லம் கட்ட நிதி உதவி தேவை.



சென்னை கீழ்பாக்கத்தில் இறை இல்லம் கட்ட முயற்சிக்கப்பட்டு வருகிறது.எனவே அல்லாஹ்வின் அருள் நாடி,நிதி உதவி செய்யும்படி சகோதரர்களை வேண்டுகிறோம்.அல்லாஹ்விற்காக இறை இல்லம் கட்டுபவர்களுக்கு,அல்லாஹ் சுவனத்தில் மாளிகை ஒன்று கட்டுகிறான் என்பது ஹதீஸாகும்.

பள்ளிவாசல் கட்ட இடம் வாங்கவும்,கட்டவும் ரூபாய் 50,0000.00 என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, AL-MADRASATHUL DHEENIYATH ( Regd)NO.12,Halls Road, Kilpauk, CHENNAI-600010 என்ற இடத்தில் தொழுகை நடைபெற்று வருகிறது,ஆனால்- 25 நபர்கள் மட்டுமே தொழ இடம் உள்ளது,இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய மக்கள் தொழ வேண்டும் என்றால்,அதற்கு பெரிய பள்ளியாக கட்டினால் மட்டுமே முடியும்.தாராளமாக உதவுங்கள்,இன்ஷா அல்லாஹ்,அதை பன் மடங்காக்கி இம்மையிலும்,மறுமையிலும் தருவான்,ஆமீன்.

மேலும் விவரங்களுக்கு,

saibudeen 91-9841045673

kilpauk muslim welfare association

தகவல்:சைபுதீன்,அதிரை.

Monday, November 2, 2009

பாருங்கள்,பார்க்கத் தூண்டுங்கள்.

மும்பையில் அல்லாஹ்வின் அருளால்,பீஸ் கான்பரன்ஸ் தொடங்கி நடந்துவருகிறது,அந்த நிகழ்ச்சிகள் யாவும் பீஸ் டிவி மூலம் நேரடி ஒளி பரப்பாகவும் காண்பிக்கப்படுகிறது.சுமார் 30 நாடுகளிலிருந்து அழைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.மேற்கொண்டு விபரம் அறிய
http://peaceconference.in/index.htm இந்த தளம் சென்று விபரங்கள் அறியலாம்.மேலும் டாகடர் ஜாகிர் நாயக் அவர்களின் இணைய தளமான http://irf.net/ சென்றும் அறிந்துகொள்ளலாம்.நீங்கள் பார்ப்பதோடு,உங்கள் மாற்று மத நண்பர்களையும் பார்க்கத்தூண்டுங்கள்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!