Showing posts with label வெறியின் அடிப்படையில். Show all posts
Showing posts with label வெறியின் அடிப்படையில். Show all posts

Thursday, July 12, 2012

வெறியின் அடிப்படையில்

* ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இனவெறியாகுமா?'' என ஒருவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வினவினார். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் ""இல்லை! மாறாக மனிதன் தன் சமுதாயத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்குத் துணை புரிவது தான் இனவெறியாகும்'' என்றார்கள்.

* ""எவன் அநீதியான விஷயத்தில் தன் சமுதாயத்தினருக்கு உதவி புரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவனைப் போன்றவனாவான். அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழ்வான்'' (நபிகள் நாயகம்)

* (நீதி செலுத்துங்கள்! அது) உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது.

* (இன, மத, மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அதற்காகப் போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். 

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!