Sunday, February 7, 2016

போலித் தொப்பிகள்

போலித் தொப்பிகள்

அது ஒரு இஸ்லாமிய மேடை.தமிழ் இலக்கியம்,மற்றும் முஸ்லிம்களின் தமிழுக்கான தொண்டு பற்றி பலர் பேசிக் கொண்டிருந்தனர்.மேடையில் இருந்த எல்லாரும் மற்ற மதங்களின் இதிகாசங்களைப் பற்றி விலா வரியாக அலசிக் கொண்டிருந்தனர்.

இஸ்லாம் பற்றி அல் குரானும்,ஹதீசும் என்ன சொல்கிறது என அவர்கள் பேசவில்லை,அல்லது தெரியவில்லை.மற்றபடி,அவர்கள் தங்களை எல்லாரும் இலக்கியவாதிகள் என பாராட்ட வேண்டும் என்ற நோக்கில்,இப்படி இதிகாசங்களைப் பற்றி பீற்றிக் கொண்டிருந்தனர்.பெயர்கள் எலாம் இஸ்லாமிய பெயர்கள்,ஆனால் பிரசங்கமோ - இஸ்லாத்திற்கு சம்பந்தம் இல்லாமல்.

அந்தக் கூட்டத்தில் இருந்த முபாரக் மட்டும் எரிச்சல் பட்டுக்  கொண்டிருந்தான்.என்னே அறிவீனம்?ஏன் இப்படி செய்கிறார்கள்.இதற்கு இஸ்லாமிய மேடைகள்தான் கிடைத்ததா?இதே போன்றுதான்,சிலர் பிலாகுகளில் இதே போன்று,செய்து கொண்டிருக்கிறார்கள்.அல்லாஹ்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.எடுத்து சொன்னாலும் திருந்துவார் இல்லை. ம்ஹூம்.
இவைகள் எல்லாமே தவறான போக்கு கொண்டவைகள் என சுட்டிக் காட்டினால்,கண்டு கொள்வது கூட இல்லை.மேடை பேச்சாளர்களும் சரி,பிளாக் எழுத்தாளர்களும் சரி,என்ன செய்வது.அவர்களுக்கு அவர்களுடைய மேடைகளும்,இணைய பிலாகுகளும் தான் முக்கியமாகப் போய்விட்டது.

சரி,இந்த முறையும்,மேடை ஏறி,அவருடைய பேச்சு தவறு என சொல்லிப் பார்ப்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும் பாய்.

வ அலைக்கும் சலாம்

என்ன பாய்,நல்லா இருக்கீங்களா?

அல்ஹம்துலில்லாஹ் ,நான் நல்ல இருக்கேன் நீங்க?

இருக்கேன் பாய்,அல்ஹம்துலில்லாஹ்
ஒரு சந்தேகம் பாய்,கேட்கலாமா?

என்ன சந்தேகம்,தாராளமா கேளுங்கோ?


இப்போ நீங்க பேசினீங்களே,இதுக்கும் இஸ்லாத்துக்கும் எதுனா சம்பந்தம் உண்டா?அல்லாஹ்வைப் பத்தி மத்தவங்க உவமானம் சொல்லுவாங்க,அத நம்ம எப்படி சொல்ல முடியும்.
இப்படி பேசுவது மிகப் பெரும் பாவம் இல்லையா?அவங்க இப்படி சொல்வதுக்கும்,இஸ்லாமிய கருத்துக்கும் சம்பந்தமில்லை,இஸ்லாமியக கருத்து என்பது குர் ஆனும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொன் மொழிகளும் மட்டுமே என்று சொல்லி மக்களுக்கு புரியவைப்பதை விட்டு விட்டு,அந்த இதிகாசங்களைப் பற்றியே பேசுகின்றீர்களே ,இது சரியா?

அது வந்து,நாமெல்லாம்,மதச் சார்பற்ற நாட்டில் இருக்கிறோம்,மேலும் நம் தமிழ் மொழியில் உள்ள இலக்கியத்தில் உள்ளதை சொன்னேன்,அது தப்பா?(அது தப்பு என்றால்,நான் படித்த இலக்கியம் பற்றி மற்றவர்கள்  தெரிந்து கொள்ள வேண்டாமா?).

என்ன பாய்,அப்படி என்றால்,எம் மதமும் சம்மதம் என்கிறீர்களா?இஸ்லாத்தை மட்டுமே அல்லாஹ் அங்கீகரித்துக் கொண்டான் என்று உங்களுக்கு தெரியாதா?தமிழ் தான் பெரிது என்றால்,அது அழிந்து போகக் கூடியது,இறைவனைப் பற்றி,இலக்கியங்கள் தப்பும் தவறுமாக போதிக்கின்றன.ஆனால் அல்லாஹ்,நித்திய ஜீவன்,என்றுமே அழியாதவன்.எனவே,அவனைப் பற்றி குரானும்,ஹதீசும் எப்படி போதிகின்றனவோ ,அப்படி அல்லவா பேசவேண்டும்.

தயவு செய்து,திருக் குரானின்,3:83 திரு வசங்களை புரட்டிப் பாருங்கள்.

இனியாவது ,மேடையில் பேசினாலும்,பிலாகுகளில் எழுதினாலும்,அல்லாஹ் இருக்கிறான் என்பதை மறந்து விடாமல்,பேசுங்கள்,எழுதுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

முபாரக் விறு விறுவென நடந்தான்.இன்ஷா அல்லா,இனி சரியாகிவிடும் என்ற எண்ணத்தில்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!