Showing posts with label கேவலம். Show all posts
Showing posts with label கேவலம். Show all posts

Saturday, March 6, 2010

கேடு கெட்ட சாமியாரும்,சகோதரியின் உள்ளக் கிடைக்கையும்...

கேடு கெட்ட இந்த சாமியாரின் ஈன செயல்களை,அந்த அசிங்கம் பற்றி பீஸ் ட்ரெயினில் ஏன் வெளியிட்டீர்கள் என ஆதங்கப்பட்டு,ஆத்திரப்பட்டு ஒரு சகோதரி லறீனா A.H. சாடியிருந்தார்.'பீஸ் ட்ரெயின்' என்று அருமையானதொரு பெயரை வைத்துக் கொண்டு இந்தமாதிரி கேடுகெட்ட செய்திகளைப் பிரசுரிக்காதீர்கள்.என்று.

அந்த சகோதரியின் மனக்கிடக்கை புரிகிறது.குரானும்-ஹதீசும் இயம்பும் உன்னத செய்திகள் உலா வரும் இத் தளத்தில் சாக்கடைகள் பற்றி எழுதியது தவறுதான்,அதற்காக மன்னிக்கவேண்டுகிறேன்,மனம் வருந்துகிறேன்.

ஆனால் ஒன்று சகோதரி,"எல்லாம் வல்ல அல்லாஹ்,அவர்களை-அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் அவர்களை இது போன்று கேவலப்படுத்தி,உண்மை எது,பொய் எது என உலகுக்கு அம்பலப்படுத்துகிறான்".

இந்து சகோதர-சகோதரிகள் சீர் தூக்கிப் பார்த்து,சத்தியம் எது என புரிந்து - இனிய மார்க்கம் இஸ்லாம் நோக்கி வருவீர்களேயானால் அது உங்களுக்கே நலமாக இருக்கும்.

தன் உள்ளக்கிடக்கையை பகிர்ந்து கொண்ட சகோதரிக்கு மிக்க நன்றி.அல்லாஹ் அருள் புரிவானாக.

Tuesday, March 2, 2010

த்தூ!

பிரபல தமிழக சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள அவருடைய பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

அந்த வீடியோ காட்சியில் ஆசிரமம் போல் காணப்படும் அங்கு சாமியாரும் நடிகை ரஞ்சிதாவும் ஒரு அறையில் உள்ளனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதை தொடர்ந்து விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் வீடியோ காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்த செய்திகள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, கடலூர் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் நித்தியானந்தா சாமியாரின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து அங்கு ஒட்டப்பட்டு இருந்த அவரின் படங்களை கிழித்தெறிந்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாமியாரின் படத்தை கிழித்தவர்கள், நித்யானந்த சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரின் ஆசிரமத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!